செந்துருவை சேரலாம் செந்தழிழ்லை பாடலாம்
இந்திரனைப் போல் வாழந்துண்டு இருக்கலாம்,
மந்திரம்சேர் வெற்பகத்தையூடுஅருத்தவேலவர்க்கு

முன்பிறந்த கற்பகத்தை கை தொழுதார் கால்

ஆன்மா

அமைதியை தேடி....................?.
இந்த உடல்-உணர்வின் மூலம் மகிழ்சியை உணர முடியும். இந்த மனம்- எண்ணங்களின் மூலமாக மகிழ்சி அடையமுடியும். இதயம் - அன்பு, மற்றும் கருணை மூலமாக மகிழ்சியடையும்.உயிர்த்தனமையானது பேரமைதியாக உங்கள்  உள்ளே இயங்குகிறது.அந்த பேரமைதிப் பெரும்கடலில் எந்த மாற்றமும் இருக்காது.அதுதான் உங்களது உண்மையான  அமைதி நிலை.அது தான் உண்மையான நீங்கள்.ஆனல் இப்போது செல்லும்  நீங்கள் அல்லது நான் என்பது உங்கள் மனதைத்தவிர வேறல்ல.இது தவறன கொள்கை.ஆகவே அந்த உயிர்த்தன்மை உங்களுக்கு கட்டுப்பட்டது அல்ல.ஆனால் நீங்கள் அதனால் கட்டுப்படுத்த படுகிறேர்கள்.அதுதான் அதனுடைய தனித்தன்மையும்.பெருமையும் ஆகும்.அந்த அமைதி மிகவும் அழமானது.அத்துடன் மிகனுண்மையானதும் கூட.அதில் மனம் சிறிது புகுத்தாலும் அதன் அமைதி தன்மை முழுவதும் கொட்டுவிடும்.அந்த பேரமைதிமைய நிலைதான் உங்களுக்கு உண்மையும்,அன்பு மற்றும் கருணை தைரியம் போன்ற அநேக தன்மைகளை உண்மையாக வாழங்க்குவது.ஏனனில் அதனுடைய ஆற்றல் அளப்பரியது.உங்களுடைய ஆற்றல் மிக்க மனம் அதனால் உண்டாகப்பட்டதுதான்.
இந்த உயிர்த்தன்மையை பொருத்த அளவில் நாமும்,இந்த பிரபஞ்சமும் ஒன்றுதான்.பிரபஞ்சத்தில் எது இயக்கமாக இருக்கிறோதோ,அதுதான் உங்களிடம் இயக்கமாக இருக்கிறது.இந்த உணர்வு உங்களிடம் வளரும் பொழுது ஒரு புல்,இலைகூட உங்களுக்கு அதி அற்புதமாக தோன்றும்.அதை உங்களால் அலட்சிய படுத்தமுடியாது.எந்த விதமான மையமும் இல்லாமல் யாராலேயும் உயிர் வாழ முடியாது.அது ஏற்கனவே உங்களிடம் இருக்கிறது.இயற்கையோ-கடவுளோ கொடுத்த அந்தக் கரு அல்லது சாராம்சம் தான் அந்த மையம்.ஒவ்வொரு சூறாவளிக்கும் ஒருமையம் உண்டு அந்த சூறாவளியின் வெளித்தன்மை எவ்வள்வுக்கெவளவு அமைதியற்று சுழன்று கொண்டு இருக்கிறதோ அவ்வளவுக்களவு அதன் மையம் அமைதியோடு நிலையோடு இருக்கும்.நாம் உள்ளே உள்ள உயிர்ச்சக்தி மேலே கிளம்பி தன் மையத்தை அடையும்பொழுது அதில் எந்த சலனமும் இருக்காது.அதுதான் நாம் ஆத்மீகத்தில் அடையவேண்டிய முடிவான தன்மை.அந்த தன்மையை அடைய நம் உள்ளே மிக ஆழமாக செல்லவேண்டும்.அது வெகு துரத்தில் இருக்கிறது.ஆனல் அதை நாம் இந்தக்கணத்தில் அடையலாம் .ஆனால் அது அவ்வளவு சுலபத்தில் நடக்காது, ஏனெனில் நம் மனம் நமக்கு அதற்கு இடம் தராது.ஆகவேதான் இப்பொழுது அடையமுடியும் என்று சொல்லும்பொழுது அதை நாம் அடைய முடியாது என்றும் செல்ல வேண்டியிருக்கிறது.அது தான் நம் ஆன்மா.
சென்ற நூறு வருடங்களாகஸ் சீர்திருதங்களைப் பற்றியும், லட்சியங்களைப் பற்றியும் வெறும் வெறும் பேச்சுப் பேசிக் கொண்டுயிருக்கிறோம். ஆனல் அவற்றை செயல் முறையில் கொண்டுவர வேலை வரும் போது நம்மை காண முடியவில்லை. இதை கண்டு உலகமே எள்ளி நகையாடுகிறது. சீர்திருத்தம் என்ற பெயரே கேலிக்கூத்தாகி விட்டது. இதற்கெல்லாம் காரணம் என்ன?. இதற்கு மூல காரணம் என்ன?. இதற்கு மூல காரணம் நாம் பலவீனமாயிருப்ப்தே இவை அனைத்துக்கும் காரணம். நம் உடல் பலவீனமாயிருக்கிறது.நம் மனம் பலவீனமாயிருக்கிறது. நம்மிடம் நமக்கு நம்பிக்கை இல்லை. நம் முதுகெலும்பு உடைந்து விட்டது,இப்போது வெறும் புழுக்கள் போல் ஆகிவிட்டோம்.ஏனெனில் நாம் பலவீனர்களாக மிக மிகப் பலவீனர்களாக இருக்கிறோம்.முதலில் நம் உடல் பலவீனம் நமது துண்பங்களில் மூன்றில் இரண்டு பங்க்கு நமது உடல் பலவீனமே காரணமாயிருக்கிறது. நாம் சோம்பேறிகள், நம்மால் உழைக்க முடியவில்லை. நம்மால் சேர்ந்து வாழமுடிவதில்லை. நாம் ஒருவரை ஒருவர் நேசிப்பது இல்லை.நம்மிடம் சுயநலம் நிறைந்து இருக்கிறது.ஒருவருக்கொருவர் சண்டையிடாமலும்,பொறாமைப்படாமலும், மூன்று பேர்கள் சேர்ந்தும் வாழமுடிவதில்லை.புலங்கள் கட்டுக்கடங்காமல் மதம் பிடித்த குதிரை போல் தறிகெட்டு மனம் போனபடி போகிறது. குழந்தைகள் ஒளிமயமான இன்பக்கனவுகளில் மிதப்பதும், பின்னால் அவையனைந்தும் வீண் எனக் காண்பதும், வயதானவர்கள் தங்கள் கடந்த காலத்தை எண்ணி இமாய வலையில் இருந்து வெளியேறிஸ் செல்ல முடியாமல் திண்டாடுவதும். இதுதான் மனித வாழ்க்கையின் இயல்பாக இருக்கிறது.
ஆகவே தற்போது நமக்கு தேவை வலிமை, அளவற்ற வலிமை இதையே உபநிடதங்கள் ஒவ்வொரு பக்கமும் கூறுகின்றன.இந்த மகத்தான  விஷயத்தை நாம் எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
வாழ்கையின் பெரும் பிரச்சனைகளுக்கு பிற நாடுகள் எங்கனம் முடிவு கானும் முயற்சி புறத்தே நிகழ்த்ததோ. அவ்வாறே நமது முன்னோர்களும் தேடினர்.  பிறநாட்டவர் எங்கனம் தங்கள் முயற்சியில் தோல்வி கண்டன்ரோ அங்கனமே நம் நாட்டவரும் தோல்வி கண்டனர். ஆனல் நம் நாட்டவர் அந்துடன் நில்லாமல் வாழ்வின் பெரும் பிரச்சனைகளுக்கும்-பிறப்பு- இறப்பு- பிரசனைகளுக்கும் நமது புலங்களால் இந்த பிரசனைகளுக்கு முடிவு காண முடியாது என்பதை துணிவுடன் கூறினர்.இதையே உபநிடங்கள்
"எங்கே வாக்கும், மனமும் செல்ல முடியாமல் திரும்பி விடுகின்றனவோ, அங்கே பார்வை செல்லாது.பேச்சும்செல்லாது-புலனறிவின் இயலாமையை விளக்கும் வாக்கியங்கள் பல அங்கே உள்ளன."அந்துடன் நிற்காமல் மனிதனின் அக இயல்பை ஆராய்ந்தார்கள். தங்கள் ஆன்மாவிடமே விடை காண விரும்பினார்கள். அகக்கண் கொண்டு தேடினார்கள். வெளியில் தேடுவது பயனற்றது அங்கு எதுவும் செய்ய இயலாது, விடைகான முடியாது என்பதை உணர்ந்தார்கள். ஒளியிளழ்ந்த சடப்பொருளால் உண்மையைக் காட்டமுடியாது என்று தெளிந்தனர்.விடைகண்டனர்.
மேலும அனைந்தும்  ஆன்மாவிலேயே இருக்கிறது என்னும் கோட்பாடே அது. அதாவது ஆன்மாவைத் தூண்டுவது எதுவும் இல்லை. ஆன்மாவே எல்லவற்றையும் தூண்டுகிறது என்பதே அது. சக்கிகள் அனைத்தும் ஆன்மாவிலேயே இருக்கிறது. உண்மையில் அடையவேண்டியது எதுவும் இல்லை. ஒன்றும் இல்லை.அனைத்தும் ஏற்கனவே ஆன்மாவில் உள்ளன என்று யோகி சொல்கிறார்கள். இவற்றை வெளிப்படுத்துவதே நமது செயல்.
வேற்றுமையை உண்டாக்குவது உடலே. ஏற்ற உடலைப் பெற்றதும் இந்த ஆற்றல்கள் வெளிப்படுகின்றன. ஆனல் ஆற்றல்கள் ஏற்கனவே அதில் உள்ளன.நல்ல செயல்களோ, தீய செயல்களோ இயற்கையின் மாறுதல்களுக்கான நேரடிக்காரணம் அல்ல.அந்த செயல்கள் மாறுதல்களுக்குத் தடையாக உள்ளவற்றை நீக்குகின்றன அவ்வளவே. வயலுக்கு நீர் பாயும்போது தடையாக உள்ளவற்றை உழவன் நீக்கும் போது நீர் தானவே பாய்கிறதே. அது போல் ஏரி நீரை வயல்லுக்கு உழவன் பாய்ச்சுவதை உதராணம் காட்டுகிறார். ஏரியில் நீர் நிறைந்துள்ளது. கண நேரந்தில் அது வயலில் பாய்ந்து விடும். அதைத்தடுத்து நிற்பது எது? ஒருமண்கரை அந்த கரையை ஒருபகுதியை உடைந்து விட்டால் போதும் தண்ணீர் வேகமாக ஒடி வயல்களில் பாய்கிறது. இத்தகைய  ஆற்றல் தூய்மையும் நிறைநிலையும் ஆன்மாவிடம் உள்ளன.ஆனல் தடுத்து நிற்பது அதை மூடியுள்ள ஆவரணமே. திரையே. திரையை நீக்கி விட்டால் ஆன்மா தூய்மையாக விளங்க்குகிறது தெரிகிறது.அதன் சக்தி வெளிப்படுகிறது.ஆன்மாவை மறைப்பது நமது மனதின் திரையே.

உடம்பும் இடைவிடாமால் மாறுதல் அடைந்து கொண்டுயிருக்கிறது.மனமும் இடைவிடாமல்  மாறுதல் அடைந்து கொண்டுயிருக்கிறது.எனினும் நாம் மாறாமல் தொடர்ந்து இருக்கிறோம் என்ற உணர்சி நம்மிடம் இருக்கிறது. மாறாத ஒரு பெருள் நம்முள் இருந்து கொண்டு அந்த உணர்சியைக் கொடுக்கிறது.ஒளியின் கிரணங்கள் பல திசைகளிலிருந்து வந்து ஒரு திரை அல்லது சுவர் அல்லது மாறாத வேறு ஒரு பொருளின் மீது விழும்போது மட்டுமே  அவை ஒன்று சேர்ந்து  ஒர் உருவத்தை உண்டாக்க முடியும்.,மனிதனிடம் கானும் இந்த மாறுதல்களுக்கிடையில் இவற்றை ஒன்று சேர்பது எது?.அந்த நிலையான பொருள் மனமாக இருக்க முடியாது. ஏனனில் அதுவும் மாறுதல் அடைந்து கொண்டே இருப்பதை நாம் பார்கிறோம்.உடலும் நிமிடந்துக்கு நிமிடம் மாறுதல் அடைகிறது. ஆதலால் உடலையும் மனதையும் தவிற வேறு எதோ ஒன்று என்றும் மாறததாக நித்தியானந்தமாக, இந்த உணர்சிகளை ஒற்றுமைப் படுத்திகொண்டுயிருக்க வேண்டும். அதைதான் மனிதனின் ஆன்மா என்று சொல்கிறோம்.
இதை (ஆன்மாவை) ஆயுதங்கள் துளைக்காது ., நெருப்பு எரிக்காது.தண்ணிர் நனைக்காது., காற்று உலர்ந்தாது . என்றும் மாறாமல்  எங்கும் நிறைந்ததாக அசையாததாய் மனித ஆன்மா இருக்கிறது இந்த ஆன்மா விபுவாக  எங்கும்  பரவியிருக்கிறது  என வேதாந்தமும்,பகவத்கீதையும் கூறுகின்றன.  கபிலரும் அவ்வாறே கூறுகிறார்.
எந்த ஒரு விஷயமும் முதலில் கண்,செவி முதலான கருவிகள் மூலமாக மனதிற்கு வருகின்றன. மனமானது அதைப் புத்திக்கு அனுப்புகிறது. புத்தி விஷயங்களை புருடனுக்கு அனுப்புகிறது. புருடன் என்பது ஆன்மா. புருடனைத் தவிர மற்றவையாவும் சட வஸ்துக்கள். புருடன் மட்டுமே சித்தரூபன்.ஏனென்றால் அதற்கு அறியும் தன்மை உள்ளது.ஆகவே புருடன் ஒருவனே சித்த ரூபன் மற்றவைஎல்லாம் சட வஸ்துக்கள். மனம் ஆனது புருடன் கையில் உள்ள ஒரு ஆயுதம் போன்றது.புருடன் ஆனவன் அவ்வாயுத்தால் வெளிப் பொருட்களில் நாட்டம் செலுத்தி அவைகளூக்குத்தாவுகிறான். இவ்மனம் எப்பொதும் மாறிக்கொண்டே இருக்கும்.மனம் எதாவது ஒரு இந்திரியத்துடன் சேர்ந்து அதில் கவனமாக இருந்து விட்டால் மற்ற இந்திரியம் மூலம் எந்த விஷயங்கள்வரினும் அவைகளை மனமானது ஒரு போதும் கிரகிக்காது. இம் மனதுக்கு மற்றோரு ஆச்சிரியமான சக்தி உண்டு. அது தன்னைத்தானே சிந்தித்து  அறியும். இதுமட்டும் இன்றி தனக்கு ஆதாரமாய் உள்ள புருடனைப் பற்றியும் ஒருவாறு அறியும். இவ் விஷயங்கள் யாவும் வெளி நாட்டத்தை ஒழித்து மனதை சுகமுகமாய் திருப்பி ஆன்ம தரிசனம் பெற்றவர்களாகிய யோகிகளுக்குத்தான் நங்கு புலப்படும்.அனுபவம் இல்லாதவர்கள் தெரிந்து கொள்வது கஷ்டம். சொல்வதைக் கேட்பது மட்டுமே அவர்களுக்கு எளிதாகும்.சுருங்க கூறின் உயிர் ஆற்றல் வெளிப் பொருள்களை தொடர்பு கொள்வதற்க்கு ஐம்புலன் களையும் பயன் படுத்துகிறது. இதற்கு ஜீவன்  மனமாகிய கருவியை கையில் எடுத்து உலக தொடர்பு வைத்துக் கொள்கிறது.
ஆகவே அஷ்டராகாதிகளான காம குரோதிகளால் தண்ணிலிருந்து அதோ கதியாகப் பஞ்சேந்திரியங்கள் மூலம் வாயு ரூபமாக சலித்து வெளியே சென்று நாசமடைகின்ற எப்போழுதும் சதாகதியாக நடத்தி தன்னுடைய உற்பத்தி ஸ்தானமகின்ற பிரம்மந்திரத்தைத் தட்டித் திறத்து அதில் சேர்கின்றது ஈஸ்வர மதமாகும்.ஈஸ்வரன் =ஈஸ்+வரன் : ஈஸ்= ஆளுதல்.,(காப்பாற்றுதல்) வரன்= வல்லமையுடையவன்., மதம்= ஸ்தாபித்தல். எனவே ஈஸ்வர மதம் என்றால் ஆளுவதற்க்கு வல்லமையுடைய ஜீவனைததான் பிறப்பிடமாகிய புருவ மத்தியில் ஸ்தாபித்தல் அல்லது நிலை நாட்டுதல்.
ஆகவே ஆளுவதற்கு வல்லமையுடையது .ஆளுவதற்க்கு பல்வேறு மத சம்பிரதாயங்கள்,தத்துவங்கள்,கலாசாரங்களை சேர்ந்த  மகாங்களும் ஞானிகளும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட தியான உத்திகளை சொல்கிறார்கள்.ஆன்ம நிலையை அடைய.

ஆக தியானம் என்பது ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டு இருந்தால் அது எப்படிப் பேருண்மையைத் தொட முடியும்?.  இந்த வின எழுவது இயற்கை.ஐம்புலங்களின் பல்வேறு அலைக்கழிப்புகளிலிருந்து மீண்டும் ஆதாரமான ஒரு சக்தியைத் தேடி ஒடிவரும் மனசுக்கு.   தியானத்திலேயே இப்படிப் பல வேறுபாடுகள் இருப்பது மேலும் மருச்சியைத்தான் அளிக்கும். எந்த பாதையை தேர்த்து எடுப்பது என்ற ஐயத்தில் சித்தம் குழம்பி பழைய அலைபாயும் நிலையே மேல் என்று திரும்பி ஒடச்செய்யும்.
எல்லா பாதைகளும் ரோமபுரிக்கே கொண்டு செல்கின்றன என்பது பழமொழி.ரோம் சாம்ராஜ்யத்தின் ஆதிக்க வல்லமையையும் அதிகாரத்தையும் குறிக்கும் பழமொழிதான் அது என்றும் அதில் ரோமபுரி என்ற சொல்லை நீக்கிப் பரபிரமம் என்ற சொல்லை போட்டுவிட்டால் அந்த பழமொழி சரி. ஆம் தியானத்தின் எல்லா பாதைகளும் நம்மை பரம்பொருள் அல்லது மொய்ப்பொருளிடமே அழைத்து செல்கின்றன.



நாம் எங்கு இருக்கிறோம்


வருத்தம்,வேதனை,கண்ணிர், கவலை, வெறுப்பு, விரோதம்,குரோதம் எல்லாம் மனம் முழுக்க நிறைந்து இருக்கிற்றன. சந்தோஷம் மட்டும் ஏழு உலகில் தேடியும் கிட்டாத அபூர்வ பொருளாக இருக்கிறது.நழுவும் கானல் நிராக கைக்குஸ் சிக்காத காற்றாக இங்கே அங்கே இதோ,அதோ என எல்லோருக்கும் போக்கு காட்டுவது சந்தோஷம்.
குழந்தைக்கு சாக்லேட், பள்ளி குழந்தைக்கு ஒரு பென்சில், பதின் பருவத்தில் விளையாட்டு சாமங்கள், மீதிவண்டி , கல்லுரி வயதில் ஊர் சுற்றுதல், திரைப்படம், நாண்பர்கள் கூட்டம், காதல் திருமணம், நடுத்திரவயதில் வீடு, வாகணம்,பண உயர்வு, முதிய வயதில் நிம்மதியான ஒய்வு,இப்படியாக பருவம் தோறும் உருவம் மாறுவது சந்தோசத்தின் இயல்பு.
வாழக்கிடைக்கும் ஒவ்வோரு வினாடியும் சந்தோஷத்தை அடையாளம் கண்டு நழுவ விடாமல் சிக்கெனப் பிடிக்கும் இயல்பு அவசியம். ஒவ்வொரு வினாடியும் பெரும் புதயலைப் போல் சொர்க்க மகிழ்வோடு அனுபவித்து  வாழவேண்டும்.
கண்ணிரும்,கம்பலையும்,அழுகையும்,ஆற்றாமையுமே நிழலாய் நம்மைத் தொடர்ந்தால் தான் என்ன்?.நாம் அவற்றுக்கு அடிமையாகி சேவகம் செய்து அதன் கட்டுப்பாட்டில் -மனநிம்மதி தொலைத்தால் அவை நம்மை வெற்றி கொண்டதாகிவிடும்.
சோகம் என்னைத் தின்றுவிட அனுமதிக்க மாட்டேன்.கண்ணிர் என்னை கொன்றுவிட அனுமதிக்க மாட்டேன்.வருந்தம்,வேதனையும் என்னை வென்றுவிட அனுமதிக்க மாட்டேன் என்கிற மன உறிதியை இயல்பானதாகக் கொண்டால் கண்ணீர் கான்ல் நீராகலாம்.சறுக்கி விழாமல் சாதனைப் படி ஏறலாம்.
தீராத பிரச்சனை என எதுவுமே கிடையாது. தீர்வு இல்லாத துன்பம் என எதுவுமே கிடையாது.பிரளியமே வந்தாலும் கலங்காதிரு மனமே என மனசுக்கு சொல்லித்தரவேண்டும்.துண்பசுழலில் சிக்கினாலும் வருத்த சுழலில் வாழ்ந்தாலும் என்ன? முகத்திலும் கண்ணீறும் ,சிறிப்பும் மனசிலும் துயர சாயம் இல்லாமல் வாழப்பழக்க வேண்டும்.நாளையும் விடியும் என்கிற நிச்சியமான மனோ நிலையைக் கையகளப்படுத்த வேண்டும்.
பிரச்சனைகள் தான் நம் ஆசிரியர்கள்,அவைதான் அனுபவம் என்னும் பொக்கிஷம் தரும் இலவச போதிமரம். அவைதான் பட்டறிவு விதைக்களமாகும்.
துன்பத்துலும் இன்பம் கானுதல். சறுக்காமலும் சந்தோஷம் பேனுதல், இருட்டிலும் வெளிச்ச வேர் தேடுதல் என மனசை பக்குவப்படுத்தலே தவம். காடுமலை ஏறாமல், காஷாயம் குடிக்காமல்,மக்களோடு மக்களாயிருந்து புரிகின்ற தவம் இது.பிரச்சனையைத் தீர்க்க முடியாமல் தப்பித்து தனிமையில் கூடுகட்டாமல் ஜனரஞ்ச வாழ்வில் இருந்து புரிகின்ற தவம் இது.
இன்னமும் சிறப்பான முன்னேற்றம் வேண்டும் என்பதின் கனவு வேறு. லட்சியம் வேறு.உயர்வு வேறு,வாழும் வாழ்வில் சந்தோஷமின்றி,திருப்தியின்றி இருத்தல் என்பது வேறு.
ஆனல் இன்றைய நடைமுறையில் கல்லுரி படிப்புக்கு பின்.சிறகடித்து பறக்கும் நேரம் ,கற்றவற்றை பகிரவோ,கற்றதை வைத்து பணிபுரிவதோ,வேலைதேடவோ,தொடங்கிய  வேளையும் தகுந்த வேளை யில்லை என்பதே உண்மை.இதுஒரு கேள்விக்குறி?. அதைத்தொடர்ந்து கற்றுத் தெரிந்தவர்,தெளிந்தவர் உள்ளத்தில் இழையோடும்  பயவுணர்வு,எதிர்பார்த்தது இல்லாத துன்ப் உணர்வு,பொருள்ளை ஈட்டமுடியாமை இவ் அவல நிலை கண்கூடாக தெரிகிறது . அவரைப் பெற்றவரும் இவைபோன்ற உருத்தலுக்கு ஆளாகாமல் இருக்க முடிவதில்லை.வயிற்ரைக் கட்டி வாயினைக்கட்டி சேர்து வைத்த செல்வத்தை கொண்டு பல்கலைப்பண்டிதனாய் மாற்ற நினைத்த தியாக உணர்வு விழலுக்கு இறைத்த நீரா?.
ஆனல் உண்மையில் கல்வியின் பணியும்,கல்வியின் உள்ளிருக்கும் திறங்களை வெளிக்கொனார்வதுதானே?. கல்வியின் நோக்கம். மானிடரை நிறைவு செய்து அறிவொளி தருவதனால் அவர்கள் நன்மைக்கும் , தீமைக்கும் இடைவெளிகளை அகற்றி வாழபயன் அளிப்பதுதானே?.அக கல்வி என்பது தன்னிலே பயனுற வாழப்பயன் அளிப்பதுதானே?.மாறாக கல்வி என்பது வேலைக்கு ஏற்ற வாய்ப்பு அல்ல. ஆனல் நடப்பது என்ன?. கல்வியின் பரந்து விரிந்த உட் பொருளானது குறுகிய வட்டதிற்க்குள் வைக்கப்படுவதால் வருகின்ற சிக்கல்கள் பெருத்த ஏமாற்ற உண்ர்வுகளுக்கு இட்டு செல்வதால் இருந்த சந்தோஷம் துழைத்து விட்டு நிற்கின்றனர். என்ன அவலம் பாரீர் .........
என்று தனியும் இந்த  அவல நிலை ?...........
பிறந்த இடம், குலப்பெருமை, வாழ்த்த வாழ்க்கை, படித்த படிப்பு, சுற்றிவந்த சுற்றத்தார்.வலையவந்த நட்பு, கற்ற பண்பு, ஆக எல்லாம் உதவாக்கரையாகிவிட்டது.
பொருள் இல்லாருக்கு இவ் உலகம்  இல்லை., அருள் இல்லாருக்கு அவ் உலகம் இல்லை என்பது பழமொழிபோல் பொருள் ஈட்ட தெரியாமல் தினறும் இளைக்ககன் நிலை என்ன?. இனி மறுபடியும் கீதை சென்ன ஆரம்ப நிலைக்குத்தான் வர வேண்டும். அது என்ன?....
இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு " பகவத்கீதையில் சொன்னது போல்-சுதர்மம் கடை பிடித்தல்"..இந்த சுதர்மம் என்றால் என்ன ?. இதை அடைய எங்கும் போகவேண்டியது இல்லை.இது தானகவே கிடைக்ககூடியது..
 நாம் புதிதாக இப்பூமியில்  வரவில்லை. நமக்கு முன் இவ்பரந்த பூமி இருந்தது.பெற்றோர் இருந்தனர்.அண்டை அயலார் இருந்தனர்......... இவ் ஜன சமுத்திரத்தின் இடையில்தான் பிறந்தோம், வளர்ந்தோம். நாம் நம் பெற்றோருக்கு செய்யவேண்டிய கடமை யுள்ளது.சமுதாயத்திற்கு ஆற்றவேண்டிய கடமையுள்ளது. ஆகவே இதுவே சுதர்மம். இந்த கடமை உணர்வு ஒவ்வொரு மனிதனிடம் பிரதிபலிக்க வேண்டும். அப்போது நாம் எங்கு இருக்கிறோம்  என்ற உணர்வு நமக்கு தெரியும்.இதுதான் ஆரம்ப நிலை. இதை முதலில் தேடிக்கண்டு பிடிக்க வேண்டும். எனக்குள் உள்ள உணர்வுதான் தர்மம். அதுதான் சுதர்மம்.நான் என் தம்பி, தங்கைகளுக்க்கு ஆற்ற வேண்டிய கடமை,பொற்றோர்களுக்கு செய்யவேண்டியது என தலை தூக்கும். இது எனக்குள் உள்ள  சுதர்மம் இதைநான் செய்ய  கடமைப்பட்டவன் ஆவேன்.. ஆனல் அதே தர்மம் இன்னெருவருக்கு இருக்க வேண்டும் என்பது இல்லை?. ஏன்னென்றால்  அவன் கூட பிறந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.,தந்தை நிறைய சொத்து சேர்த்து வைத்து இருப்பார். அவன் நிலை வேறு. அவன் சாதாரணமாக அன்றாட தேவைகளை மட்டும் அவன் கவனித்தால் போதும். ஆகவே ஒருவருக்கு இருக்கும் சுதர்மம் இன்னொருவர்க்கு இருக்க வேண்டும் என்பது இல்லை.
மீன்கள் வாழ்வது நீரில் தான். நீர் இல்லாமல் அது ஒரு கணம் கூட இருக்க முடியாது.ஆனால் நீரைவிட பால் உயர்ந்த பொருள். அதற்காக ஏ மீன்களே  நீரைவிட்டு பாலில் வாழுங்கள் என்றால் அதனால் உயிர் வாழமுடியுமா ?.  சூரியன்  அழகாக இருப்பதால் அதன் அருகில் செல்ல முடியுமா? முடியாது. சுட்டு  எரித்து விடும். ஆகவே பிறர்க்கு இருக்கும் சுதர்மம் . நமக்கு இருக்கப்வேண்டிய அவசியம் இல்லை.அடுத்தவரைப்பார்த்து வாழ நினைப்பது அரசனை நம்பி புருஷனை கைவிடுவதுபோல் ஆகும்.


விஞ்யானம்

விஞ்யானம் முழுக்க முழுக்க மனதை மையமாக வைத்து கணக்கு,தர்க்கம்,பகுத்தறிவு மூலமாக செயல் படுகிறது. இந்த மனம் என்பது தர்க ரீதியானது.தர்க்கம் என்பது ஒரே நேர்கோட்டில் செல்வது. ஆகவே மனத்தின் செயல்பாடு ஒரே நேர்கோட்டில்தான செல்லும். அது ஒன்றையேதான் நம்பும், மாறுபட்ட இரண்டு தன்மைகளை அது ஒருக்காலும் ஏற்காது.
மனம் அமைதியையும் ஒய்வையும் விரும்பினால் அது வாழ்வில் ஏற்படும் சப்தங்களையும்,இரைச்சல்களையும் புறக்கணித்து விட்டு காட்டுக்கோ அல்லது இமயமலையை நோக்கியோ செல்லத் துடிக்கும்.அங்கு சென்றபின் சில நாட்களில் பறவைகளின்  சப்தங்களும் காற்றின் மிகமொல்லிய ஒசையும் துன்பத்தைக் கொடுக்கும்.இப்படி மனம் ஒருதலைப் பட்சமான காரியத்தையே விரும்பும்.
இப்படி மாறுபட்ட தன்மையை புறக்கணித்து இமயமலைக்கு ஒடும் ஒருவன் அங்கு சென்ற சிறுது நாளில் மிகவும் சோர்வாகவும்  அலுப்புடனும்தான் காணப்படுவான்;. அவன் எவ்வளவுக்கெவளவு அமைதிய மட்டும் விரும்புகிறானோ அவ்வளவுக்களவு இறந்தவன் போல் ஆகிவிடுவான். ஏனெனில் அவனுக்கு வாழ்வோடு இயைந்து செல்ல முடியவில்லை.மாறுபட்ட தன்மையின் சாவாலை ஏற்றுக்கொள்ளும் தைரியம் இல்லை.
ஒர் சன்னியாசி மனம் அமைதியை நாடி ஒரு குகைக்கு சென்று தனிமையில்யிருந்தார்.பலநாட்கள் சென்றன. சஞ்சலம் தீர்த்தது. மனம் அமைதியாகிவிட்டதாக உணர ஆரம்பித்தார். காட்டைவிட்டு ஊருக்குள் வந்தான். அவ் தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை.அப்பொழுது ஒருவீட்டின் முன் கதவில் உள்ள நாதாங்கியை பிடித்து கொண்டு (தாழ்பாள்) ஆட்டிக்கொண்டிருந்தது. அதிலிருந்து சப்தம் வர செய்து கொண்டுயிருத்தது. இஃது ஒரு குழத்தை செய்யும் இயற்கையான செயல்தான். ஆனல் அவ்  சப்தத்தை சன்னியாசியால்  சகித்துகொள்ளமுடியவில்லை. ஏன் இவ் சிறு குழந்தை இப்படி சப்தத்தை ஏற்படுத்துகிறது. இச்சப்தம் பெரும் துண்பத்தை விளைவித்தது சன்னியாசிக்கு.குழந்தை ஏன் இப்படி நாதங்கியை ஆட்டி ஒலி எழுப்புகிறது எனதன் காதைப் பொத்திக்கொண்டார். இதிலிருந்து காட்டில் தனிமையில் இருந்து தன் மனதை  மிகவும்  பலவீனப்படுத்தி வந்துள்ளார் என்பது தெரிகிறது.இவ் மன பலவீனம் உலக வாழ்க்கைக்கு ஏற்றது அல்ல. மேலும் அமைதியில் இன்னொரு வகையுண்டு. அது கல்லறை அமைதி அது இறப்புக்கு சமம்.அது எந்த உயிரோட்டமும் இல்லத  அமைதி. அவனது மனம முழுமையாக ஒரு நிலையில், நிலைப்பொற்றுவிடும். அதில் எந்த அசைவும் இருக்காது. இப்படி ஒருவர் இறப்புக்கு சமமான அமைதியில் இருந்தால் அந்த அமைதி அற்தமற்றது. அதனால் முடிவில் அடையப்போவது ஒன்றும் இல்லை.
ஆகவே உயிரோட்டமுள்ள வாழ்வில் நீங்கள் சக்திமயமாக இருக்கும்பொழுது,அமைதி நிலை ஏற்பட வேண்டும். அந்த அமைதி நிலைதான் அர்த்தமுள்ளது. இதில் ஏற்படும் அமைதியின் தன்மை, அந்த இறப்பு நிலையில் ஏற்படும் அமைதிக்கு முற்றிலும்  மாறுபட்டது. இது மிகவும் அர்த்தம் உடையது.இதுஒருக்காலும் அலுப்பு தரக்கூடியது அல்ல.இரண்டு மாறுபட்ட தன்மைகளின் நடுமையத்தில் (balace) ஏற்படும் நிகழ்ச்சி இது. இதைஉயிரோட்டமுள்ள அமைதி என்றும் அழைக்கலாம்.
இந்த அமைதியில் வாழ்பவன் ஒரு சந்தையிலும் மற்றும் இமயலையிலும் வாழ முடியும்.அப்பொழுது சந்தையின்  இரைச்சலையும் அனுபவிப்பான். இந்த இமயமலையின் அமைதியையும் அனுபவிப்பான். இந்த இரண்டுக்கும் ஒரு மையத்தன்மையை தன் உள்ளே ஏற்படுத்திக்கொண்டு அதில் அமதியாக இருப்பான்.
ஆகவே சக்தியை மாற்றி நல்ல முறையில் மேம்படுத்திக் கொள்வது எப்படி?.

உயிர்வாழ் மண்டலங்களின் முக்கிய பகுதிப்பொருட்கள் ஆக்சிஜன்,கார்பன்,ஹைட்ரஜன்,நைட்ரஜன், ஆகிய நான்கு தனிமங்களும்,இந் நான்கிற்கு அடுத்த நிலையில் உள்ளவை பாஸ்பரஸ்,கால்சியம்,பொட்டாசியம்,கந்தகம்,சோடியம்,குளொரின் ஆகும்.இவற்றைத்தவிர கீழ்காணும் தனிமங்களும் மிக,மிக குறைந்த அளவில் உயிர்களில் காணப்படுகின்றன. இரும்பு,மாங்கனீஸ்,தாமரம், அயோடின்,கோபால்ட், துத்தநாகம்,சிலினியம்,மாலிப்டினம்,போரியம்,,ஸ்ட்ரான்ஸீயம்,காரியம்,டைட்டானியம்,ரூபிடியம்,லீதியம்,ஆர்சனிக்,புரோமின்,உயிர்வாழ் மண்டலங்களை உருவாக்கும் இத்தனிமங்கள் எந்தவொரு சூழ்நிலை மண்ட்லத்திலும் தொடர்ந்த மறு சுழற்சிக்கு (recycling) உட்படுகின்றன.தனக்குத்தானே உணவூட்டம் பெறுகின்ற தாவரங்களின் முதன்மை உற்பத்தியால்(primary productivity) தோன்றும் பொருட்கள்,உயிரற்ற (abiotic) மற்றும் உயிருள்ள(biotic) தொடர்செயல்களால் ஒரு சுழ்நிலை மண்டலத்திற்குள் சுழன்றுகொண்டே இருப்பதால்தான் ஒரு சுழ்நிலை மண்டலம் நிலைநிறுத்தப்படுகிறது என்பது அறிவியல் உலகம் ஐயம்திரிபற ஏற்றுக்கொண்ட உண்மையாகும்.


உயிர் சக்தி-

உயிர் என்பது ஆன்மா-ஜீவன்- என்று பலவாறாக அழைக்கிறோம். இதன் ஆற்றல் பெறிது.அதை நீங்கள் உண்டாக வில்லை. உண்டாக்கவும் முடியாது.அது நாம் பிறக்கும் போது இருந்து இருக்கிறது.இதைத்தான் இது நாள் வரை மனம் என்று எண்ணியிருந்து கொண்டுயிருகிறேர்கள்.அது தவறு. உயிர் என்பது வேறு.மனம் என்பது வேறு. உயிர் விபுவாக இருக்கிறது. மனம் சற்று வஸ்துவாக இருக்கிறது.
 நீங்கள் தனிமையில் உட்கார்ந்து உங்களிடமே கேள்வி கேளுங்கள்.உங்கள் மனதின் எண்ணங்கள் அனைத்தும் எவ்வளவு தூரம் கடன் வாங்கப் பட்டவை என்றும.அவை எவ்வளவு பொய்மையானது என்பதும் மெல்ல புரிய ஆரம்பிக்கும்.பலப்பல எண்ணங்கள் புற்றீடல் போல் கிளம்பி மேலே வரும். அவற்றை பயப்படமால் அப்படியே பாருங்கள். கவனியுங்கள். இவையெல்லாம் என்கிருந்து வருகின்றன என்று ஆராயுங்கள். அப்பொழுது அவற்றுடைய ஆரம்பம் எங்கே என்பது புரியும். பல கருத்துக்கள்,உங்கள் தாயாரிடம் இருந்து வந்தவையாக இருக்கும். சில கருந்துகள் தந்தையிடம் இருந்தும்,பள்ளி ஆசிரியர்கள், நண்பர்கள் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும்.,இதையெல்லாம் கவணியுங்கள்.
இவற்றில், எதுவுமே உங்களுடையதாக இருக்காது என்பதை அறிந்து ஆச்சிரியப்படுவீர்கள்! ஒருசதவீதம் கூட இருக்காது!  உங்களைப் பற்றிய அடையாளம் இதுவென்றால் இதைப்பற்றி சொல்ல என்ன இருக்கிறது?. நாம் பிறரிடமிருந்து சேகரிக்கும் அபிப்பிராயம் ஒரு தனித் தகுதியை (personality). உண்டாக்கும்.இந் தனித்தகுதி என்பது சமூகம் அங்கீகரித்தது, அது பொய்மையை அடிப்படையாக கொண்டது.
இந்த சமூகம் எப்படி பொய்மையில் வளர்ந்து வந்திருக்கிறது என்பதை ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய தாயார்,தகப்பனார் மற்றும் உறவினர்கள் எல்லாம் இந்த சமூகப் பொய்மையில் அடிமையாக வாழ்ந்தவர்கள், அதைப்போலவேதான் அவர்களது தாயார், தகப்பனார் மற்றும் உறவினர்கள் அனைவரும் அடிமையாக வாழ்ந்தார்கள்.இந்த அடிமைத்தனத்தைதான் உங்களுடைய பொற்றோர்கள்,உங்களிடம் திணிக்க முற்ப்டுகிறார்கள்,நாளை இதைத்தான்,நீங்கள் உங்கள் பிள்ளையிடம் திணிக்கப்போகிறீர்கள்.ஏனனில் இந்த உலகம் போட்டியும்,பொறமையும் நிறைந்தது.நீங்கள் எப்பொழுதும் போராடும் தன்மையில் இல்லாவிட்டால் எப்படியும் முன்னேற வேண்டும்,ஜெயிக்க வேண்டும் என்ற குணம் பெற்று இருக்காவிட்டால்,உங்களால் இந்த உலகத்தில் நல்ல விதமாக வாழமுடியாது என்று உங்களூடைய நாகரிக படிப்பும்,மனநல வைத்தியர்களும் வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.உங்கள் மனம் வலுவுற்றதாக,எதையும் எதிர்க்கும் தன்மையில் இருக்க வேண்டும்..சிறிய வயதில், நீ உன் வகுப்பில் முதன்மையாக வரவேண்டும் என்று அடிக்கடி ஊக்கப்டுத்துவதாக எண்ணி அவர்களது அகங்காரத்தை வலுப்ப்டுத்துகிறோம்.நீங்கள் மிகவும் அடக்கமானவராக இந்த அகங்காரம் இல்லாமல் இருந்தால் இந்த உலகம் உங்களை மூலைக்கு தள்ளிவிடும்.
இப்படி ஒரு சமூகம் பொய்மையிலும்,மூடக் கொள்கையிலும்,மற்றும் அடிமைத்தனத்திலும் வாழையடி வாழையாக சென்று கொண்டுயிருந்தால், ஒரு தனிமனிதன் தன்னைப்பற்றி உணமையாக எப்பொழுது எப்படி அறித்து கொள்வது?.
நல்ல அறிவுள்ள, புத்திசாலிமிக்க பெற்றோர்கள் இந்த போலியான அடையாள அட்டையைப் பற்றித் தெளிவாக,நம் குழத்தைகளுக்கு உரிய வயதில் எடுத்து சொல்வார்கள்,அது அவசியம் அவர்கள் ஆமாம் இது போலியானதுதான்.உங்களை இந்த உலகத்துக்கு அடையாளம் காட்டதான் இதை தற்காலிகமாக வழங்கி இருக்கிறோம்.,ஆனால் இதுவே உண்மையள்ள இது ஒரளவுக்குத்தான் உதவியாக இருக்கும். உண்மையில் உங்களது தனிப்பட்ட அடையாளத்தை நீங்களேதான் உங்கள் உள்ளே சென்று கண்டுபிடிக்கவேண்டும்.அதுதான் உங்களது உண்மையான அடையாளம் என்று தெளிவாக சொல்லவேண்டும்.
உங்கள் உண்மையான தன்மையை நீங்கள் உங்கள் உள் உணர்வாக புரிந்து கொள்வதுதற்கான ஒர் ஏற்பாடுதான் தியானம்.அதனுடன் தான்  நீங்கள் பிறந்தேர்கள்.உங்கள் மனதை உண்டாக்கியது போல் அதை நீங்கள் உண்டாக்கவில்லை உண்டாக்கவும் முடியாது.அதை நீங்கள் இப்பொழுது தேடிக்கண்டுபிடிக்க வேண்டும்.
நீங்கள் உங்கள் உள்ளே செல்லும் யாத்திரை என்பது அந்த தனிமையைத் தேடி செல்லும் யாத்திரைதான்.அப்பொழுது நீங்கள் யாரையும், எந்த கொள்கை கோட்பாடுகளையும்,மத சட்ட திட்டங்களையும் உங்களுடன் எடுத்து செல்ல முடியாது. உங்கள் அன்பிற்கு உரிய மனைவி அல்லது காதலி கூட உங்களுடன் வர முடியாது. நீங்கள் எப்பொழுது உள்ளே செல்ல  காலடியை எடுத்து வைக்கிறீர்களோ அப்பொழுது உங்களூடிய வெளிதொடர்பு அனைத்தும் உங்களை விட்டு அகலுகின்றன.உண்மையில்,இந்த உலகமே மறைந்து விடுகிறது.இந்த உலகம் பொய் என்று அர்த்தம் இல்லை. இதில் உள்ள ஒவ்வொரு பொருளூம் உண்மையே. ஆனால்,தியானத்தில் ஆழ்ந்து தன் உள்ளே செல்பவனுக்கு,இந்த உலகம் மறைந்து விடும்.அந்த ஆழ்ந்த அமைதியான நிலையில்,இந்த உலக உருவங்களோ அல்லது சப்தங்களோ ஊடுருவ முடியாது. ஆனால்,அந்த அமைதியான நிலைக்கு நீங்கள் செல்ல,உங்களுக்கு மிகவும் தைரியம் வேண்டும்.அந்த ஆழமான அமைதியில் இருந்து அந்தபேராணந்தம் சொர்க்கம் அனைந்தும் வெளிப்படுகின்றன.அதுதான் கடவுள் தன்மை அனுபவம்.
உங்கள் உள்ளே உள்ள உயிர்ச்சக்தி மேலே கிளம்பி,தன் மையத்தை அடையும்பொழுது,அதில் எந்த சலனமும் இருக்காது.அதுதான் நீங்கள் ஆத்மீகத்தில் அடைய வேண்டிய முடிவான தன்மை.அந்தன்மையை அடைவதற்கு தியானம் மிகவும் அவசியம் .ஓஷோ அவர்கள் தியானம் என்ற புத்தகத்தில் விரிவாக எளிமையாக பல தியான முறைகளை சொல்லியிருக்கிறார்.


மாணிடராய் பிறப்பது அறிது:-

"அரியது கேட்கின் வரிவடிவோலோய்
அரிதரிது மானிடராதல் அரிது
மானிடராயினும் கூன் குருடு செவிடு
பேரு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்..."
"ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயத்த காலையும்
ஞானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்வர் ஆயின்
வானவர் நாடு வழிதிறந்திடுமே."
                                 -ஓவையார்
அரியது எது?. எது கேட்கும் நீண்ட கூர்மையான வேலினை உடையவனே!. அரிது அரிது மக்காய்ப் பிறப்பது அரிது., மக்களாய் பிறந்தாலும் கூன்,குருடு,செவிடு, நீங்கிப் பிறப்பது  மிகவும் அரிது.இத்தகைய குறைபாடுகள் நீங்கிப் பிறந்தபோதும் மெய்யறிவையும்,கல்வியையும் விரும்புதல் அரிது.அவ் மெய்யறிவுக் கல்வியும் அடைந்த போது ,தானமும் தவமும் செய்வது அரிது,தானமும்,தவமும் ஒருமனதாகஸ்செய்வரானால் அவருக்கு தேவர் உலகின் வாயில் (கதவுகள்) என்றும் திறந்திருக்கும்.
தமிழ் மூதாட்டி, தமிழ்க் கிழவி என்று பலவாரக பாராட்டப் பேறும் ஓவையார் தமிழகத்துப் பெண்பால் புலவர் ஆவார்.அவர் பாடிய பாடல்கள் தனிப் பாடல்கள் ஆயினும் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று என்று உணரலாம்.
அரிது,அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்று நமது சித்தர்களூம் ஞானிகளும் கூறியுள்ளனர்.
மனிதன் என்படதே ஒரு குட்டிப்பிரபஞ்சம்(mini universal) என சோவியத் விஞ்ஞானக் கழக தலைவர் கூறியிருக்கிறார்.மேலும் பிரபஞ்ச ரகசியங்கள்  நாங்கள் அரிய முற்பட்டோம்..அப்போது எங்களுக்கு எங்களுக்கு சரியான விவரங்கள் கிடைக்கவில்லை.ஆகவே மனிதர்களை ஆராய்ந்து பார்க்க ஆரம்பித்தோம்.. மனித ஆற்றல்கள் மிக அற்புதமானது என்று தெரியவந்தது.அதன் மூலமாக கூடுவிட்டு கூடுபாய்தலை தெரிந்து பயன்படுத்தினோம் (astral tavel). எங்கள் தரைக் கட்டுப்பாட்டில் இருந்து விண்வெளிக் கப்பல் உள்ளவர்களுக்கு டெலிபதி மூலமாக சுலபமாக அனுப்பியும்,பதிலும் பெற்றோம்.பிறர் மனதில் உள்ள இரகசியங்களையும் தெரிந்து கொள்ளமுடிந்தது.உருவ மாற்று வித்தையையும் தெரிந்து கொண்டோம்.இதிலிருத்து மனிதனின் 40% ஆற்றலைக் கண்டு பிடித்து விட்கடோம்..இன்னும் 60% ஆற்றலைக் கண்டு பிடிக்கும் முயற்சி நடந்து வருகின்றன என்று மனதின் அற்புதங்களை பற்றி கூறியுள்ளார்.
அறிவியில் ஆனது சில கட்டுப்பாடுகளையும், விதிகளையும்,திட்டங்களையும் கொண்டுள்ளது.ஆனல் இவைகளுகு அப்பாற்பட்டும் சில நிகழ்சிகள்,அனுபவங்கள் நடக்கின்றன.நம்முடைய பகுத்தறிவுக்கு அவைகளை கொண்டு வர முடியவில்லை என்பதால் அதனை நிராகரிக்க முடியாது.இவ்வாறு ஆன நிகழ்வுகளை ஏழு பிரிவுகளாக பிரிக்கிறோம்.
1.Premonitary dreams :- எதிர் காலத்தில் நடக்கப்போவதை முங்கூட்டியே அறியும் வகையில் தோன்றும் கனவுகள்-உதரணமாக பழைய சரித்திர சான்றுகள்-வீரபாண்டிய கட்டபொம்மன் போர்க்கு செல்லும் முன் திருமதி வீரபாண்டியன் கண்ட கணவு ...."போகாதே,போகாதே, என் கணவா,பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்......." திரைப்பட வாயிலாக  எல்லோரும் அறிந்த ஒன்றுதான் என்று தான் கணவனுக்கு நேரும்  விபத்தை விவரிக்கிறாள். இதே போல் கண்ணகியின் கால் சிலம்பு விற்று மாற்று தொழில் நடந்த மதுரையில் பொற்கொல்லரிடம்  செல்லும் போது அவர்கள் தங்கி யிருந்த இடையர் குல இடத்தில் பல அற்றாடம் நடை முறையில் இல்லாத நிகழ்வுகள் நடந்தன மாடு கத்திற்று-கன்று முரன்பாடாக இருந்தது.தயிர் திரிந்தது ......... என வேண்டாத நிகழ்வுகள் அனைந்தும் நடந்தன.
2.mental telephy :- பிறர் மனதில் இருப்பதையும் பேச்சு மற்றும் சைகைகள் இல்லாமல் மவுனத்திலேயே அறிந்து கொள்ளூம் ஆற்றல்.
3.divination :- வருவது காட்டும் குறி நன்னிமித்தம் என்னும் ஆற்றல் -தன் இரத்த சம்பத்தம் உள்ளவர்கள் இறப்பதாக உணர்தல்.அது உண்மையாக இருக்கும்.
4.Mediumship:-கண்ணால் காணமுடியாத ஆற்றல்களோடு உரையாடல் சாதாரணமாக ஊடகமாக செயல்பட்டுள்ளது.இது சாதாரணாமாக நிருபனம் செய்யப்பட்டுள்ளது. வீட்டில் மொழிகி கோலம் போட்டு,உமி பரப்பி அதன் மேல் ஸ்டவ் -(அடுப்பு) வைத்து  பக்கத்தில்  விளக்கு ஏற்றி வழிபட்டு கேட்டல் அடுப்பு நகரும் சக்தி உண்டு.நகர்ந்து உமியில் எழுதிக் காட்டும். அல்லது  ஒரு அட்டையில்  (a to z) and (1 to 9 and 0) and yes or no  aஆகிய கட்டங்களை நிறப்பி .அவ் அட்டையின் மேல் ஒரு மூடி வைத்து எதிரும் புதிருமாக இருவர் அமர்ந்து மூடியின் மேல் ஒரு விரலை வைத்து இவ் வழியாக செல்லும் ஆவிகளை கூப்பிட்டு டப்பாவினுள் நுழைய செய்து வேண்டினால் டப்பாமூடி நகரும். அது ஒவ்வொரு எழுத்தாக போய் நிற்க்கும்.அதை கூட்டி படித்தால்  நாம் கேட்ட கேள்விக்கு ஒரு வார்த்தையில் பதில் இருக்கும்.
5.appantious :- கற்பனை உருவம் ,உருஒளித்தோற்றம் ,இறந்தவர் உருவில் வந்து கனவில் வழிகாட்டுதல் போன்ற நிகழ்சிகள் சில சமயம்  அப்பா,அம்மா....... இறந்தவர்கள் வழிகாட்டுவதாக் நிகழ்வுகள்  தெரியலாம்.
6.Materialization :-உருவனங்களாக தோன்றசெய்தல் -சாயிபாபா  ஞானிகள் செய்து காட்டிய நிகழ்வுகள்,
7.dollergeists:- பேய் வீடு என்று சொல்லப்படுகின்ற இடங்களில் இருந்து  அனுமானுசமான சப்தங்கள் கேட்பது ,பொருள்கள் தானாக நகருதல்,கதவுகள் தானாக தட்டப்படுதல் ,யாரோ காதில் வந்து சொல்வது போல் நிகழ்வுகள் நடக்கலாம்
இவ்வாறான நிகழ்வுகளின் மீது நம்பிக்கை கொள்வது பல்லாயிரம் ஆண்டுகளாக நிலவி வருகிறது.மனதில் எழும் கற்பனைகளுக்கும், நிகழ்வுகளுக்கும் இடையே உள்ள தூரம் மிகவும் குறைவாக உள்ளது.கனவுகள்யாவும் உண்மை என்பதோடு அவை வர விருக்கும் செயல்களை முன் கூட்டியே அறிவிக்க கூடியதாகவும் இருக்கின்றன.
எனவேதான் சிக்மெண்டு ப்ராய்சு என்னும் உளவியல் ஆய்வாளர் ஆழ் மனதை அறிய உதவும் ராஜ வீதியே கனவு என்னும் அதன் வெளித்தோற்றத்தையும் உள்ளடக்கத்தையும் ஆராய்வது அவசியம் என்கிறார்.


உயிர் சக்தி மையம்:

தூல உடலையும் சூக்கும உடலையும் இனைத்து ஆறு ஆதாரங்கள் எணப்படும் உயிர் சக்தி மையங்கள் ஆன வட்டங்கள் உள்ளன அவையாவன
1.மூலாதாரம் 2. சுவாதிஷ்டானம் 3.மணிபுரம் 4.அனாஹதம் 5. விசுத்தி 6. ஆக் ஞா சக்ரம்
1. மூலாதாரம் :   மண்  -  கால் எலும்புகள் இரண்டும்,கதிரெலும்பும் கூடும் ஆண்குறி என்ற மர்மஸ்தானத்திற்கும் குதத்திற்கும் நடுவே குண்டலி வட்டமாய் வட்டத்திற்குள் 4 இதழ்களூக்குள்ள ஒரு மலர் வட்டமாய் கடம்பம் பூ போல அமைந்து இருக்கும். இவை மூலாதரம் என்று பெயர்.
இதன் நடுவில் பிரணவ ஒங்கார எழுத்து ஒலி ஒலிக்கும். 4 இதழ்களில் "வ","ஸ",ஸ்ரீ, "ஷ" எழுத்து ஒலிக்கும்.
எண்டோக்கான் சுரப்பி  அதாவது சிறுநீரகம், மூத்திரைப்,முதுகு தண்டு இதன் கட்டுப்பாட்டில் உள்ளது.
2.சுவாதிஷ்டானம் :  அக்கினி - மூலாதரத்திற்கு 2 விறற்கட்டை மேல் உள்ளது. இது 6 இதழ் கமலம்.நாற்சதுரம். அச்சதுரத்துள் நடுவே 6 இதழ் கமலம்.
இதன் நடுவில் -"ந்"  ஆறு இதழ்களில் ப3,ப4,ம,ய,ர,வ எழுத்து ஒலிக்கும்.
எண்டோக்கரான் சுரப்பி ஆணின் விதைகள்-உடல் உறவு திறன் மையம் , அதன் உணர்வுகள்-(ஜனனேந்திரியத் திறன்)
3.மணிபூரகம் :-        சுவாத்திஷ்டனத்திற்கு எட்டு விறகட்டை மேலே தொப்புளின் இடத்தில் பத்து இதழ் கமலம் .
நடுவில் பஞசாசரத்தின் "ம" .  மூன்றாம் பிறை வடிவம்.உ,உ2 உ3,உ4,ண,த,த2,த3,த4, ந,ப,ப2  ஆகியவை ஒலிக்கும்.
வயிறு ,கல்லிரல்,மண்ணிரல்,பித்தப்பை,யை சார்ந்தது
அட்ரினல் என்னும் நாளமில்லா சுரப்பி(இரத்தத்தில் சக்கரை அளவு உயர்த்துவது.

4.அனாஹதம் :- - வாயு- மணிபூரகத்திற்க்கு 10 விரற்கட்டை மேல் இதய மைய கமலம். 12 இதழ். முக்கோணம்.நடுவில் பஞ்சசக்கரம்.
நடுவில் "சி" .12 இதழ் ஒலிக்கும். க,க2,க3,க4,க்,ச,ச2,ச4,ஞ,ட,ட2
தைமஸ் எண்டோக்ரைன் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில். இதயம் ,பம்புசம்,கல்லிரல்,இரத்த சுழச்சி மண்டலம்.
5.விசுத்தி :- ஆகாயம் -அனாஹதத்திற்கு மேலே நெஞ்சுக்குழியில் உள்ளது. அறுகோணம்.16 இதழ்கமலம். அகரம் முதல் அ என்ற எழுத்து ஒலிக்கும்.
பஞ்ச சக்கரத்தில் "வ" என்ற எழுத்து .
தைராட் -தொண்டை-அதன் கீழ் பகுதி
6. ஆக்ஞா சக்கரம் :- விசுத்திகு மேலே புருவமையம் இடத்தில் உள்ளது. அறைவட்ட மூன்றிதழ் கமலம் -மனோதத்துவம்.
ஹ,ஹா,ஸ என்ற எழுத்து ஒலிக்கும் . நடுவில் 'ய்".
மூளை மையத்தில் உள்ள பிட்யூடர்- சுரப்பி-.ஜீவ அனுக்கள் பெருகும் இடம்.. தானியங்க்கு உறுப்புகள் செயல் திறன் -(இரத்தம்-மூச்சு குழல்)

இதைத்தவிர இன்னும் ஓன்று  உள்ளது . அது தலையாதது. அது தான் சஹஸ்சாரம்.
சஹஸ்சாரம் - பிரம கமலத்தில் மூலதாரதிற்கு நேர் மேல்-புருவமையத்திற்கு மேல் நடுவில் ஆயிரம் இதழ் விரிந்து உள்ளது.
இங்கு மேலான எழுத்து ஒலிக்கும் . இந்த இடத்தில் நம் உயிர் நிலையான ஆன்மா கால் அங்குலம் அளவில் இருக்கிறது.