செந்துருவை சேரலாம் செந்தழிழ்லை பாடலாம்
இந்திரனைப் போல் வாழந்துண்டு இருக்கலாம்,
மந்திரம்சேர் வெற்பகத்தையூடுஅருத்தவேலவர்க்கு

முன்பிறந்த கற்பகத்தை கை தொழுதார் கால்

இரண்டு உலகங்கள்

பொதுவாக இரண்டு உலகங்கள் இருக்கின்றன. ஒன்று நமது கண்ணுக்குப் புலன் ஆகின்ற உலகம்.மற்றோன்று நமது கண்களுக்கு புலன் ஆகாத உலகம்.நமது செவி புலனுக்கு அப்பாற்பட்ட ஒலி நிறைந்த உலகம்.
இதனில் சீன ஞானிகள் நாடைமுறைக்கு வாழ்க்கைக்கு உபயோகமான விஷயங்களைக் கூறுவார்கள்.ஆனால் இந்திய ஞானிகள் பொரும்பாலும் இல்லத ஒன்றை புரியாத ஒன்றைப் பற்றி சொல்லப்போனால் நடைமுறை வாழ்வை தாண்டிய ஆன்மிக உலகைப் பற்றி அதிகம் சிந்திப்பார்கள்.
அவ்வப்போது நாம் வாழ்வில் எதிர்பாரதா அதிசியங்கள் நிகழ்கின்றன.எப்படி நிகழ்கின்றன என்று நமக்குப் புரிவதில்லை. நாமோ காரண காரியத்தினால் இயக்கப்படும் உலகில் வாழ்ந்து வருகிறோம்.காரணகாரியம் இல்லாமல் அதிசியம் போல்  திடிரெண்டு சில நிகழ்ச்சிகள் நிகழ்கின்றன.அவை நமக்கு அதிசியமாக தோன்றுகின்றன.அதாவது காரணகரியத்திற்கு  அப்பாற்பட்ட ஒர் உலகம் இருக்கிறது.
நாம் வாழும் அன்றாட உலகம் காரண காரியத்தால் இயக்கப்படுகிறது.உதாரணமாக திருவண்ணமலைக்கு செல்லுவது என்றால் 200 கிலோ மீட்டர் தொலைவு என்று தூரத்தைக் குறிப்பிடுகிறோம். பஸ்சில் போவதென்றால் நான்கு மணி நேரம்  ஆகும்.(அதாவது மணிக்கு 60 கி.மீ வேகம்) என்று காலத்தை கூறுப்பிடுகிறோம்.இஃது புலன்களுக்கு உட்பட்ட உலகம்.மறு பக்கம் புலனாகத உலகம் ஒன்று இருக்கிறது. இது காலம் தூரம் கடந்த புலனாகத ஒர் உலகம். நம்மை சுற்றி இயங்கிக்கொண்டுயிருக்கிறது.
அமெரிக்க நாட்டில் எட்கார்கேசி என்றொரு போட்டோ படம் எடுப்பவர் இருந்தார்.அவரிடம் ஒரு அபாரதிறமை இருந்தது.ஹிப்னடிச நிலையில் தன்னை எடுத்து சென்று பிறரது பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு சொல்லக்கூடிய அபாரதிறமை இருந்தது. 1950 வாக்கில்தான் அவர் காலமானர்.சுமார் 30 வருடங்கள் அவர் தீர்த்து வைத்த பிரச்சனைகளை விவரங்கள் எல்லாம் இன்று அவரது நூலகத்தில் இருக்கின்றன.
உதாரணத்திற்கு 1910 ஆண்டு கல்கத்தாவில் ஒர் உயர் நீதிமன்ற நீதிபதி இருந்தார்.வெள்ளைக்காரர்  பெயர் ஜான் உட்ராப். அப்போது முதல் உலகமாகயுத்தம் நிகழ்ததுகொண்ட்யிருந்தது.லண்டனில் உள்ள அவர் குடும்பத்தாருடன் அவருக்குத் தொடர்பு விட்டுப் போயிற்று.யுத்தத்தினால் தன் குடும்பம் என்னாஅயிற்று என்று மிகவும் கவலைப்பட்டர் உட்ரப். அங்கு வந்த எட்கார்கேசி என்ற பெரியவர் அவர் நிலையைக் கண்டு அவருக்கு உதவமுன் வந்து ஒரு தனி அறையில் ஒரு அரை மணி நேரம் இருந்து பின் வெளியே வந்து உங்கள் குடும்பதினர் அனைவரும் நலம். நலமுடன் இருக்கின்றனர் என்றார்.உட்ரப்புக்கு நம்ப முடியவில்லை என்றாலும்,மகிழ்சி. யுத்தம் நின்றபின் அவர் வீட்டாரிடம் இருந்து கடிதம் வந்தது. நலம் என. உட்ரப்புக்கு ஆச்சிரியமாயிருந்தது. லண்டனுக்கும் கல்கத்தவுக்கு உள்ள தொலைவு என்னவாயிற்று?  லண்டனுக்கு கல்கத்தாவில் இருந்து கணநேரத்தில் போகமுடியும் என்றால் காலம் என்னவாயிற்று.?.....இப்படி நாட்டைக்கடந்து காலத்தை கடந்து ஒரு மனிதர் பிரச்சனை காரணத்தை சொல்லி தீர்வும் சொல்ல முடித்தது என்று ஆச்சரியப்பட்டார்.
இவ்வுலகில் எல்லாமே இரட்டை நிலையில் இருக்கின்றன. இந்த இரட்டைத் தன்மையைத்தான் திருவள்ளுவர் இருவேறு உலகத்து இயர்க்கை என்றார். உலக இயற்பில் இருவகை நிலைகளை நாம் பார்கிறோம்.
அவ்வப்போது வேறோரு உலகம் இருப்பதையும் நாம் உணர்கிறோம்.அங்கே காரணம் இல்லாமல் காரியங்கள்  நிகழ்கின்றன.
ஒரு சக்கரத்தில் முப்பத்திரெண்டு கால்கள் கூடுகின்றன மையத்தில் இருக்கும் இல்லாத இடம்தான் சக்கரத்தை உருளஸ் செய்கிறது. களி மண்ணைக்கொண்டு பானை செய்கிறோம் அதில் இல்லதா இடத்தில்தான்  சோறு பொங்குகிறது.அதாவது பானையின் கீழ் அரிசி அதனுடன் தண்ணீர். சோறு பொங்குவதோ கீழ் இல்லாமல் மேலும் இல்லாமல் இடையில் சோறு பொங்க்குகிறது.
ஆகவே இல்லாத இடத்தை உபயோகிப்பதன் மூலம் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வதின் மூலம் இருக்கிற இடத்தை இடத்தை நாம் முழுமையாக நிறையப் பலன் பெறுமாறு உபயோகிக்கலாம்.இவ்வுலகில் சரிவார நன்கு வாழவேண்டுமானால் நாம் அந்த இல்லாத இடத்தையும் புலனாகத உலகந்தையும் உபயோகிக்க வேண்டும்.
ஆகவே காலம் கடந்த ஒரு நிலை, நமது புலனுக்கு அப்பாற்பட்ட ஒர் உலகம் இயங்குகிறது. கால மூன்றையும் கடந்தாய் வாழி! என்று பாரதியார் பாடுகிறார்.
ஞானி லாட் சூ சொல்கிறார் பற்றற்ற பற்றுடன் மனைவி மக்களுடம் உறவாடு,பற்றற்ற பற்றுடன் உன் சொத்து சுகங்களூடன் உறவு கொள்,இல்லத இடத்தை உபயோகித்து கொள், புலன் ஆகாத உலகின் விதிகள் உன் புவி உலக வாழ்வை ஆளட்டும். நீ அற்புதமாக வாழ்ந்து விடு,தனக்கும், பிறருக்கும் இந்த உலகத்திற்குமாக என்று சொல்கிறார்.
புலன் ஆகாத உலகை,உலகின் மையத்தை அந்த மூலப் பொருளை எப்படி கண்டுபிடிப்பது?. ஒரு கவிஞன் எழுதுகிறான்
"உன்னைத்தேடி நான் சுற்றி,சுற்றி ஓடிக்கொண்டுயிருக்கிறேன். நீயோ நடுவில் அமர்ந்து  என்னைப் பார்த்துக் கண் சிமிட்டிக் கொண்டுயிருக்கிறாய்." என்றான்.
"பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகி
பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமில்லாப் பெருமையினை
கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை
வேதங்கள் தொழு தோற்றும் விளங்கவே தில்லை கண்டேனே"
என்று மாணிக்க வாசகர் கூறுகிறார்.
சுருங்க கூறின் இறைவனை  சோதிப் பிழம்பாக நின்று சதா காலமும் திருத்தாண்டவமாடிக் கொண்டுயிருக்கும் ஆத்ம ஜோதியை தில்லை சிறுவாசல் எனப்படும் புருவ மத்தியில் கண்டு கொண்டேன் என்கிறார் மாணிக்கவாசகர்.
புலண்களுக்கு புலப்படாத இந்த ஆன்மா-ஜீவன் எப்படி கண்டார் என்று சொல்லியிருக்கிறார். அதை தெரிந்து புரிந்து கொண்டால்  மேலான ஒன்றும் இல்லை.
பின் வரும் அந்தியாத்தில் இல்லத இடத்தை எப்படி உபயோகிப்பது என்பதை பார்போம். அதை எப்படி புலன்களால் அறியமுடியாதை எப்படி உணரமுடியும் அதனால் என்ன பயன் என்பதையும் பார்க்கலாம்.


மூச்சின் இடைவெளியை கவணித்தல்
இரண்டு மூச்சுக்கு இடையில் ஏற்படுகிறது. மூச்சை  உள்ளே இழுத்து, பிறகு வெளியே விடும்பொழுது,ஏற்படும் அந்த இடைவெளியில் அந்த தெய்விகதன்மை யிருக்கிறது.
உங்கள் மூச்சு உள்ளே வரும்பொழுது,அதைக் கவனிக்கவும்,அது திரும்பி வெளியே செல்லும் அந்த  ஒரு கண நேரத்திலேயோ., இல்லை அந்த கண நேரத்தின் ஆயிரம் பாகத்தில் ஒரு பாகத்திலேயோ,எந்த மூச்சு ஓட்டமும் இருக்காது.அப்பொழுது அங்கு ஒர்  இடைவெளி ஏற்படும்.பிறகுதான் மூச்சு திரும்பி வெளியே செல்ல ஆரம்பிக்கும்..அதாவது மூச்சு உள்ளே வந்து ,சிறிது இடைவெளிவிட்டு,வெளியே செல்ல ஆரம்பிக்கிறது. அதைப்போல,வெளியே சென்ற மூச்சு,திரும்பி வரும்சமயம்,அதில் ஒர் இடைவெளி ஏற்படுகிறது.அந்த இடையில் மூச்சே இருக்காது.அந்த இடைவெளியில்,அதாவது ஒன்றும் அற்ற நிலையில்,அந்தத் தெய்விகத்தன்மை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.அதாவது இரண்டு செயலுக்கும் இடையில்,ஒரு செயலற்ற ஒரு இடைவெளியில் அது நிகழ்கிறது.
ஏனெனில், நீங்கள் மூச்சு விடாத அந்த சிறிய வினாடி நேரந்தில்,நீங்கள் இந்த உலகத்தில் ஒர் அங்கமாக இல்லை.அதாவது, நீங்கள் இந்த உலகத்தில் இல்லை.இதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.நீங்கள் மூச்சு விடாதபொழுது,நீங்கள் இறந்தற்கு சமம்தான்.அந்த சிறு விநாடி நேரத்தை யாரும் கவணிப்பது கிடையாது.
சாதாரணமாக,மூச்சு உள்ளே வருவது என்பது,நீங்கள் பிறப்பதற்குச்சமம்.அது வெளியே செல்லுவது என்பது இறப்பதற்கு சமம்,ஆகவே,ஒரு மூச்சு முழுமை அடையும்பொழுது,நீங்கள் பிறந்து,இறக்கிறீர்கள்.இப்படி,மாறி,மாறி பிறந்து,இறந்து கொண்டேதான் இருக்கிறீர்கள்.
இந்த இடைவெளியை,நீங்கள் மிகவும் விழிப்பாக,கவனமாக பார்க்கவேண்டும்..அது ஆரம்பத்தில் அவ்வளவு சுலபம் இல்லை.,ஆனால் அதில் மிகுத்த ஆர்வத்துடன் இருந்தால் அதை அறிந்து கொள்ளலாம்.அதை அறிந்து கொண்டால்,வேறு எதுவும் தேவை இல்லை.
இது மிக மிக எளிய தியானமுறை.இதை விட எளியமுறை வேறு எதுவும் இருக்க முடியாது.அதற்காக,நீங்கள் எந்த மூச்சு பயிற்சியும் மேற்கொள்ள வேண்டியதில்லை.எப்பொழுதும்போல் சாதாரணமாக மூச்சை உள்ளே இழுத்து,வெளியே விட வேண்டும்.அவ்வளவுதான்.
உண்மையை அறிவது இவ்வளவு எளிதானதா?. ஆமாம் ஏனெனில், உண்மை பிறப்பதும் இல்லை,இறப்பதும் இல்லை.அது எங்கும், எதிலும்,எப்பொழுதும் வியாபித்திருப்பது.அதற்கு ஆரம்பமும் இல்லை,முடிவும் இல்லை.ஆகவேதான்,அது பிறப்பும்,இறப்பு அற்ற உங்கள் மூச்சின் இடைவெளியில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.
ஆகவே,முயற்சி செய்யுங்கள்,ஆரம்பத்தில் பல தடவை தவற விடுவீர்கள்.மனம் தளர வேண்டாம்.ஒரு நாள்,அந்த நிலையை அறிந்து கொள்வீர்கள்.ஏனெனில், அது எப்பொழுதும் அங்கேதான் இருக்கிறது.ஆனால், உங்களிடத்தில்தான் மாற்றம் தேவை.நீங்களும் முழுவிழிப்பு நிலையில் அதை அணுகவேண்டும்..இதை எப்படி அணுக முடியும்.
முதலில், உங்கள் மூச்சு உள்ளே வருவதை,கவனமாகப்பார்க்கவும்.வேறு எதிலும் கவனம் வைக்ககூடாது.அதனுடைய ஒவ்வொருநிலையையும் உற்று கவனிக்கவும்.அது உங்கள் மூக்கின் உள் பாகத்தைத் தொடுவதை உற்று கவனிக்கவும்.அதனுடனேயே,உள்ளே செல்லவும்.நீங்களும்,உங்கள் மூச்சும் ஒன்றாக உள்ளே செல்லுகிறீர்கள்.நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுக்கள்.உங்கள் மூச்சுக்கு முன்போ,அல்லது பின்போ நீங்கள் செல்லக்கூடாது.மூச்சுடன் இணைந்து  செல்லவும்.உங்கள் மூச்சும்,பிரஞ்சையும் ஒன்றாக கலந்து செல்லட்டும்.அப்பொழுதுதான் நீங்கள் அந்த ஒன்றும் அற்ற
இடைநிலையை உணர முடியும்.இது மிகவும் எளிதானதுதான்.ஆனால் விழிப்போடு கூடிய பயிற்சி தேவாய்.
மூச்சுடன் எப்படி இயைந்து உள்ளே செல்லுகிறீர்களோ,அதைப்போல அதனுடங்கலந்து வெளியே வரவும்.முதலில் ஏதோ ஒன்றில் கவனம் செலுத்தவும்.பிறகு இரண்டிலும் மாறி மாறி இணைந்து செல்லலாம்.
புத்தர்,தன் வாழ்க்கையில் இதைத்தான் கடைப் பிடித்து பூர்ண ஞான நிலையை அடைந்தார்.ஆகவே,இதற்கு "புத்தர் முறை" என்று பெயரிட்டார்கள்.புத்திஸ்ம் சொற்படி இதற்கு பெளத்தர்கள் பெரும்பாலும் இந்த முறையைத்தான் கடைப்பிடிக்கிறார்கள்.
நீங்ககள் இந்த மூச்சு பயிற்சியை,பிரக்ஞையோடு மற்றும் விழிப்புணர்வோடு செய்தால்,ஒரு நாள் உங்களையறியமேலயே,நீங்கள் அந்த இடைவெளியை  அடைவீர்கள்.அது தான் உங்கள் சொந்த வீடு.தெய்வீகம் நிறைந்தது.


யோகம்

கர்மயோகம்,பக்தி யோகம், இராஜயோகம் ஆகியவைகளில் கவனம் மேற்கொள்ளும் எவரும் கடைசியாக ஞான யோகத்தில் வந்தே தீரவேண்டும் என்பது உலக நியதி.ஞான யோகத்தில் மட்டும் முக்தி சித்திக்கிறது.மற்ற மூன்றுயோகங்களும் சித்தியடைய மனதை ஒருமுகப்படுத்தும் முயற்சியே ஆகும். எவ்வளவுக்கெளவு மனதை ஒரு முகப் படுத்துகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு வலிமையை, சக்தியை ஒருமுகப்படுத்த முடியும் என்பதே உண்மையாகும்.
அவ் உண்மைகளை பகவான் பகவத் கீதையில் சொல்கிறார்.
"வெளி உலக நாட்டத்தைத் துறந்து, பார்வையை புருவ்ங்களின் மத்தியில் நிலை நிறுத்தி,நாசிகளின் வழியாக இயங்கும் உள் மூச்சு, வெளிமூச்சு இவைகளை சமப்படுத்தி புலன் கள் ,உள்ளம்,அறிவு இவைகளைஅடக்கியாண்டு ஆசை,பயம்,கோபம் ஆகியவைகளை  நீக்கி சித்தியிலேயே முற்றும் நோக்கம் கொண்டவன் எவனோ அவன் முழுவதும் மோட்சம் அடைந்தவன்.
-பகவத்கீதை அத்தியாயம் 5ல் 27, 28 வது சுலோகம்.
எந்த ஒரு சாஸ்திர அப்பியாகத்தை விரும்பினாலும் அதற்குண்டான ஆரம்பப் பிரயத்தனங்களும்,அனுஷ்டானங்களும் சில விதிகளூம் இருப்து உண்மை.ஆகவே இந்திரியங்களைக் கட்டுக்குள் அடக்கி மனதைவென்று உடலின் உள்ளே  உயிராய்  மேவி நிற்கும் ஆன்மா இறைவனுடன் இரண்டரக் கலந்து ஐக்கியமாதலே முக்தி பதம் ஆகும்.அப்போது பேரின்பம் பிறக்கும்.. இதற்கு அடிகோல்வதே குண்டலினி யோகப் பயிற்சியாகும்.இப்பயிர்சியின் வெற்றி மூலம் உயர்ந்த ஆன்மிக அனுபவங்களை பெறலாம்.இக்குண்டலினி யோகப்பயிற்சி உச்சந்தலையில் உள்ள  சகஸ்ராத்திலுள்ள சிவத்துடன் ஐக்கியம் ஆதலே மோட்சம். புவியில் மானிடப் பிறவி தவிர ஏனைய பிறவிகளுக்கு மோட்சம் என்பது கிடையாது.மோட்சத்தை அடைய நிரந்திர ஸ்திரமான ஆனந்த நிலையை அடைய வேண்டும். எல்லவற்றையும் மனதிலிருந்து ஒதிக்கி ஸ்திரமான் ஆனந்த நிலையை அடைய குண்டலி யோகம் உதவுகிறது.
(உடல்) இந்த ஜடமாயிருக்கின்ற குது விளக்கில் கர்மமான வாயுவாயிருக்கின்ற எண்ணைய் நிறைத்து அதில் மனமாயிருக்கிற திரிபோட்டு ஆத்மாவாயிருக்கிற தீபத்தால் எரித்து கொண்டுயிருப்பதே இக் காணப்படுகின்ற உலகம்.. அதவாது குத்து விளக்கின் மேல் தட்டிலிருந்து திரி எரித்து சுடர் எவ்விதம் பிரகாசிக்கின்றாதோ அவ்விதமே இந்த ஜடமாக இருக்கின்ற விளக்கின் மேல் தட்டிலிருந்து மனதின்  வழியாக பஞ்ச துவாதிகளான மெய்,வாய்,மூக்கு,செவி என்னும் ஐந்து திரிகாளக எரிந்து கொண்டு யிருகின்ற சுடர்தான் காணப்படுகின்ற உலகம்.
ஆத்மாவுக்கு சகுணம் ,நிற்குணம் என்ற இரண்டு அவஸ்தைகள் உண்டு.சகுனத்தில் களங்கம் உண்டாகிற போது முக்குணங்கள் ஆன சாத்வீகம்,இராஜசம், தாமசம் உண்டாகிறது.நிற்குணமான அதாவது களங்கமில்லாமை உண்டாகும் போது ராஜவேஷம் இல்லாமல் அமைகிறது.அப்போது  எந்த குணமும் அடைவதுயில்லை.அதாவது மனதினுடைய உற்பத்தி ஜீவனிலிருந்ததாகும். உப்பானது உப்புத்தண்ணீரிலிருந்து உண்டாகி பின் அதிலேயே லயப்படுவது போல மனமானது ஜீவனிலிருந்து உண்டாகி பின் ஜீவனிலேயே லயப்பட்டு ஜீவன் மட்டும் ஆகிறது.அதனால் தான் நித்திரை செய்யும் போது காணவோ,கோட்கவோ,அறியவோ முடிவதில்லை. ஆகவே நிற்குணம் நாம் உறங்கும் பொழுதுள்ளதாகும்.அப்போது தன்னிலே இருக்கின்ற ஆன்மா தண்ணில் அடங்கி நிற்குணம் ஆகிறது.எப்போது உறக்கம் நீங்கி தன்னுடைய சக்தி வெளியே பரவுகிறதோ(ஆன்ம ஆற்றல்-உயிற் ஆற்றல்) அப்பொழுது  சகுணம் ஆகிறது.அப்பொழுதாகும் மூன்று குணங்களும் தண்ணில் உண்டாவது.அதனால்தான் சிருஷ்டி,ஸ்திரி,சம்ஹாரதிகள் தண்ணிலிருந்து உற்பத்தியாகிறது.அதாவது தன்னிலிருந்து உண்டான ராகத்துவேஷாதிகளால் ஜீவனை அழியஸ் செய்வது பாவம். பாவம் என்பதற்கு அதோகதி என்பது பொருள்.அதாவது ஜீவ சக்தி ஜம் புலன் கள் வழியாக போய் அழிந்து கொண்டுயிருப்பது பாவம்.
தன்னிலிருந்து பாவங்களான ராக்த்துவேஷ காமக் குரோத கொட்ட செய்கைகள் உண்டாகமால் சலித்துக் கொண்டிருக்கிற வாயு (உயிர் ஆற்றல்) தன்னிலிருந்து வெளியே போகாமல் தன்னுள் கீழும் மேலுமாய் சுதாகதம் செய்து தன் சிரஸ்சில் இருக்கின்ற ஆன்மா சேர்ந்து மேல் கதியாகி உயரும்போது- புண்ணியம்  உயர்ந்து மேல் பதவியானபோது ராஜாவாகிறது. அவரே ஈஸ்வரர் (ஆன்மா). இதற்குத்தான் ராஜா பிரதியஷதேவதா(கண்கண்ட தெய்வம்) என்று சொல்லப்படுகிறது.
"ஜீவனொடுக்கம் பூதவொடுக்கம் தேறவுதிகும்
பர ஞான திப் விளக்கம் காண எனக்குள்ல் சீதள
பத்ம நீதருவாயே".
என உள்ளமும் உயிரும் உருக உணர்த்தும் அருணகிரி நாதரின் கருத்தும் இதுவே.ஜீவ சக்தியாகிய வாவு ஒடிங்கினால் ஐம்பூதங்களும் அடங்கும். அப்போதுதான் பர ஞானம் சித்திக்கும் என்பது அருணகிரி நாதரின் வாக்கு.
"அல்லற்படுமோ ரொன்பது பெருவாசல்
ஆரூமறிவார்கள் அறியார்களோருவாசல்
சொல்லப்படு தில்லைஸ் சிறு வாசற்படி மீதே
சூழும் பலகராணதிகள் வாழும் மணிவாசல்
தில்லைப்பதியருகே யடையாள மெலையாகும்
சேருங்கனி கானும் பசி தீரும் புறந்தோடும்
சொல்லப்பட்டு மல்லற்பல நூல் கற்றதனாலே
சின்ஞ்சிறு வாசல் புகலாமோ சொல் மனமே."
அல்லவை தருகின்ற அருவருக்கதக்க எப்பொழுதும் மலம் சேறுகின்ற இவ்வுடலுள்ள ஒன்பது பெரிய வாசல்களை நாமெல்லொரும் அறிவோம். ஆனால் எல்லாக் கரணாதிகளும் வாழும் எல்ல உயிர்கட்கும் வீடு பேற்றினையளிக்கும் குறுகிய புருவ மையமாகிய திருச்சிற்றம்பல வாசால் எணப்படும் பத்தாவது வாசலை யாரும் அறிய மாட்டார்கள். இவ் வாசல் திறந்திருந்தால்தான் ஒருவன் பரம ஞானியாக முடியும்.இதையே இயேசுநாதர் "தட்டுங்கள் திறக்கப்படும்" என்கிறார்
ஞானக்கண் :-
கண்ணால் பார்பதும், காதால் கேட்பதும்,மூக்கால் முகர்வதும் அற்று அஸ் செயல்களை நெற்றியிலிருந்து பார்த்து கேட்டு முகர்ந்து வர அம்மூன்று புலங்களும் வெளிச்செயல் அற்றுப்போகும்.அதலால் நெற்றியை முப்பால் என் கிறார் மாணிக்கவாசகர்.
அவ் மூன்று பொறிகளையும் சேர்க்கும் நரம்புகள் நெற்றியில் சந்திப்பதால் நெற்றி மையம்.முச்சந்தி என்று சொல்லப்படுகிறது
"காரப்பா நரம்பென்ற விழுது வட்டம்
கபாலத்தில் முக்கூறாய் சுழுமுனையாச்சு"
என்ற காகபுசண்டரின் பாடலிலும் சுழுமுனை எனும் ந்ற்றி மைய்யம் முப்பெரும் சக்திகள் கூடும் இடம் எனக் குறிப்பிட பட்டுள்ளது கவணிக்கத்தக்கது.அந்த இடமே தன்னை அதலினின்முதற் படி என்பதை "முப்பாழ் கடந்தப்பாழ்..... முதற் பாழ்."
ஞானக்கண் எண்ணும் புருவமத்தியில் வெளியில் இருந்து வரும் சப்தங்களை கிரகித்து வாங்கி நிறுத்தி உணர ஆரம்பித்ததும் அதனால் பொறிகள் என்கிற ஐந்து புலங்களான மெய்,வாய்,கண்,மூக்கு, செவியின் செயல்கள் நிற்று விட்டதால் தன்னைப்பற்றியிருந்த  பயமும்,வீண் சந்தேகங்க்களும் அகன்
றன. இத்தகைய தன்மையும் ஞான நெறியில் நின்றதனால் தன்னிடம் முன்பிருந்த ஆடம்பரங்களும் வீண் ஆசாரங்களும் அகன்ற வியப்பையும்,நீராடல்,நிறனிதல் உடல் சுத்தஞ்செய்யல் ஆகிய உபசாரங்களும் தன்னை விட்டு ஒடி மறைந்ததைக் கண்டு வியப்படைந்ததாக கூறுகிறார் மாணிக்கவாசகர்.
முக்திதரும் ஞான மொழியாம் புலம்பல் சொல்ல
அத்திமுகவந்தான் அருள் பெறுவாதெக்காலம்.
மனமே நீ இந்த ஐந்து புலன் களை அடக்கி முக்தி தரும்  ஞான மொழி என்னும் வித்தையை சுத்தி முகம் என்கிற நெற்றியிடத்திலே அது வ்ந்து நீ அருள் பெறுவது எக்காலம் என்கிறார்.
'ஆக்காரம் உள்ளடக்கி ஐம் புலனை சுட்டறுத்துக் தூங்காமல் தூங்கி சுகம் பெறுவதெக்காலம்."
மனமே நீ உனது ஐந்து புலங்களால் உண்டாக்கிய ஆங்காரத்தை உணர்ந்து அறி வென்றும் கனலால் அதை சுட்டு எரித்து புலங்கள் யாவும் வெளிச்செயல் படாது அது உள்ளேயே செயல் பட்டுக் கொண்டு தூங்காமல் தூங்கி அதில் வரும் இன்பத்தை உணர்ந்து நீ அனுபவித்து சுகம் பெறுவதெக்காலம் என்கிறார்.
"நீங்காச்சிவயோக நிந்திரை கொண்டேயிருந்து
தேங்காக் கருணை வெள்ளந்தேக்குவது  எக்காலம்."
மனமே நீ அந்த மெய்க்கண் என்னும் புருபமதியில் நின்று அங்கு உள்ளதை வெளிமறவாது  அதை உணர்ந்து அதில் உருகி வரும் அமுதத்தை உண்டு களிப்பது எப்போது என்கிறார். இவ்வாராக பத்திரகிரியார் கூறுகிறார்.
"வின்னுக்குள் வெளியிருள் மாற்றி -அதில்
வேதாந்த மூல விளக்கினை போற்றி
கண்ணுக்குள் மணியாகத் தோன்றிட வருங்
காரணமான கடவுளைப் போற்றி."
"வின் என்பது நெற்றி நடுவாகும் அதை சூழ்ந்துள்ள பஞ்ச புதங்கள் என்றும் பொறிகள் வெளிப் பாசங்களால் மூடப்பட்டு இருண்டு கிடந்தன. அந்த ப் பாசங்களை அகற்ற மூல பொருளேன்னும் மூல விளக்கை மேலே ஏற்றி புருவ மத்தியில் அதை வைத்து அங்கே அறிவு என்னும் சுடரால் உணர்ந்து
ஏற்றினால் பஞ்ச பூதங்க்களை மூடிக் கிடந்த இருள் இதனால் விலக்கப்பட்டு அவை தூய ஒளி பெறுகின்றன என்றும்.
அத்தகைய சக்தி அங்கே வளர்ந்து அது ஒளிவிட்டுத் திகழும். அத்தகைய சக்திதான் உன்னைக் கடைத் தேற்றக் காரணமான கடவுளாகும். எனினும் அத்தகைய கடவுளை சதாகாலமும் நினைத்து அங்கே உணர் என்பதையே குண்னக்குடியார் சொல்கிறார்.