செந்துருவை சேரலாம் செந்தழிழ்லை பாடலாம்
இந்திரனைப் போல் வாழந்துண்டு இருக்கலாம்,
மந்திரம்சேர் வெற்பகத்தையூடுஅருத்தவேலவர்க்கு

முன்பிறந்த கற்பகத்தை கை தொழுதார் கால்

மரணமும் -ஜனனமும் :-

மரணத்துக்கு பின் மனிதனின் நிலை என்ன ?. என்ற கேள்வி எழுந்தது ."அச்திக்யேகே நாயா மஷ்தி திசைக்கே -அவன் இருக்கிறான் என்று சிலரும் ,அவன் போயி விட்டான் என்று சிலரும் கூறுகிறார்கள்.ஏ எமதர்மராஜனே ! இதில் எது உண்மை என்பதை சொல்வாய் .
  "பகவானே , இப்பொழுது எனக்கு வயதோ ஆகிவிட்டது .இன்னும் சிறுது காலத்தில் நான் இறந்து போவேனாயின் நான் செய்யும் இச் சாதனைகளினால் பயன் என்ன ?. என்று கிருஷ்ணரிடம் அருச்சுனன் கேட்டார்.அதற்க்கு பகவான் "மரணம் என்பதற்கு நீண்ட உறக்கம் என்பதே பொருள் என்கிறார்.தூக்கம் தேவையாயிருப்பது போலேவே தான் மரணம்.தூங்கி எழுந்ததும் நாம் மீண்டும் நம் வேலையை செய்ய தொடங்குவதை போல மரணத்துக்கு பிறகும் நம் முந்திய சாதனைகளுக்கும் நமக்கு உபயோகப்படும்.பூர்வ ஜன்மத்தின் பயிற்சி உன்னை தன்னிடம் இழுத்து கொள்ளுகிறது.சிலரது சித்தம் விஷய போகங்களில்  புகுவதே இல்லை .அவர்களுக்குக்கு மோகம் எப்படியிருக்கும் இன்பதே தெரியாது.ஏனெனில் முற்பிறவியில் அதற்கு வேண்டிய சாதனையை செய்து விட்டார்கள் ." 
உறங்குவதற்கும்-சாவதற்கும் உள்ள வேற்றுமையும் ஒற்றுமையும்
 உறங்க போகும் மனிதனுக்கு தனக்கு உறக்கம் என்பது விளங்குகிறது. சாகபோகும் மனிதர்களில் அரிதாக யாரோ சிலர்தாம் தங்களுக்கு மரணம் என்பத்தை உணர்கிறார்கள்.நோயில் படுத்து இருக்கும் பலர் மரணம் வந்துவிடுமோ என்று அஞ்சுகின்றனர். அனால் மரணம் இல்லது அவர்கள் தப்பித்து கொள்கின்றனர்.மரணம் வராது என்று உறுதியாக எண்ணி இருப்பவர்கள் அறியமேலேயே மரணத்துக்கு ஆளாகி விடுகின்றனர்.
தூங்க போகும் மனிதனுக்கு தூக்கம் வருகிறது என்று அஞ்சுவதில்லை .மரணத்துக்கோ சான்றோர் தவிர மற்ற எல்லோரும் அஞ்சுகின்றனர் .மனிதர் மட்டும் அல்ல மற்ற்ற உயிர் இனக்களும் சாக பயப்படுகின்றன .சாகதிருக்கவே எல்லா உயிர் இனக்களும் விரும்புகின்றன.தூங்குகிற மனிதன் திரும்பவம் விழித்து எழுந்து இருக்கிற பொழுதுதான் படைத்துள்ள அதே ஸ்துல உடலுடன் எழுதிருக்கிறான் .அப்படி எழுந்திருப்பதை பற்றி உறுதியாக நம்பிக்கை வைத்து இருக்கிறான் .ஆதலால் தான் இரக்கத்தை விருப்பத்தோடு அவன் வரவேற்கிறான் .செத்த மனிதன் பழைய உடலில்  எழுந்திருப்பதில்லை ,புதிய  உடலை அவன் சிருஷ்டித்து கொள்கிறான்.அப்புதிய உடல் எங்கு எப்பொழுது  எப்படி தனக்கு வந்து அமையும் என்பதை அவன் அறிவதில்லை .
இவ் உலகத்தை பற்றிய ஞாபகம் துங்குபவனுக்கும் இல்லை செத்தவனுக்கும் இல்லை.உலகத்தவர் அடையும் இன்ப துன்பம் .,அவர்கள் செய்யும் போர்டுதல் அல்லது துற்றுதல்,அவர்களுக்கும் லாபம் அல்லது நஷ்டம் துங்குபவனுக்கும் தெரியாது செத்தவனுக்கும் தெரியாது.தன் உடலுக்கு ஒய்வு கொடுத்தல் பொருட்டு ஒரு மனிதன் உறங்குகிறான் தகுதி அற்ற உடலை ஒருவன் விடும்கால் அது மரணம் எனப்படுகிறது காலத்தை பற்றிய அறிவு செத்தவனுக்கும் இல்லை துக்குபவனுக்கும் இல்லை .
உயிர் களுக்கு  வாழ்க்கைக்கு உறிய அனுபவத்தை கொடுப்பதும் அவவைகளை படிப்படியாக உயர்நிலைக்கு எடுத்து செல்வதும் இறைவனுடைய பெரும் திட்டம் ஆகும்.அதற்கு மரணம் முற்றிலும் அவசியம் ஆகிறது ஓர் இடத்தில அஷ்தமமாவது போன்று தென்படும் சூரியன் மற்றொரு இடத்தில் உதயமாகும் சூரியனாக காட்சி கொடுக்கிறது .ஒரு நிலையில் மடியும் உயிர்கள் மற்றொரு நிலையில் மீண்டும் எழுகின்றன.
ஒரு சூழ்நிலையில் வாழ்ந்திடும் உயிர் ஒன்று அதன் நலத்தின் பொருட்டு மரணத்தின் மூலம் மற்றொரு சூழ்நிலைக்கு மாற்றபடுகிறது அப்படி மர்ற்றபட்ட  உயிர் பழைய சூழ்நிலைக்கு வர இயலாததாய் விடுகிறது.பழைய சூழ்நிலை மற்றுவிடுவதலையே அதன்கண் உள்ள பற்றுதல் அதற்க்கு போயி விடுகிறது.ஒவொரு முறையும் பற்றுதலை ஒழித்துக்கொண்டு வருவதாலேயே  உயிர் ஒன்று முன்னேறற்றம் ஏற்படுகிறது.மறதியை உண்டுபண்டுபதற்கே மரணம் அமைந்துள்ளது.இதுவே இறைவனுடைய திட்டம் ஆகும்.
முற்பிறவியில் அவன் ஆற்றிய வினைகள் எல்லாம் அவனுடைய ஆற்றல் திறமையாக அடுத்த பிறவியில் அமைந்து விடுகின்றன முற்பிறப்பில் இசை கற்று இருந்தவனுக்கு இசை ஞானமும் ,கணிதம் கற்றுஇருந்தவனுக்கு கணித ஞானம் இப்பிறவியில் மிக எளிதில் வாயிக்கும்.அனால் பூர்வ ஜன்மத்தில் யாரிடம்  இருந்து தான் அந்த ஞானத்தை எப்படி பெற்றோம் என்ற புள்ளி விவரம்  அவனுடைய அறிவுக்கு எட்டாது மறைத்து வைக்கபடுகிறது.ஜீவன் ஒருவன் புதிய உடலை எடுப்பதின் நோக்கம் பழையவை மறைத்தல் பொருட்டே  ஆகும் .முன்பு வாழ்ந்த வாழ்வின் பயனாக இப்பொழுது கிடைத்து இருக்கிறது.அனால் முன்பு வாழ்ந்த வாழ்வோ முற்றிலும் மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறது.இதுவே இறைவன் திட்டம் .இனி எதிர் காலத்தை பற்றிய உண்மைகள் நமக்கு தெரியாது.அதுவும் மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறது .பிறந்த உயிர் வகைகள் அடுத்த கணபோலுதில் மடியலாம் .அல்லது பல்லாண்டு வாழ்ந்து இருந்து மடியலாம் ,இவ்வேளையில் மரணம்  எவ்வடிவம் எடுத்து வரும் என்று யாருக்கும் தெரியாது .அது மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை பாக்கியமாக கருத வேண்டும் 
ஒரு கருமம் ஒரு ஜென்மத்தை மட்டும் உண்டுபன்னுகின்றதா? பல ஜன்மாக்களை உண்டுபன்னுகின்றதா ?. அநேக கர்மங்கள் சேர்ந்து ஒரு ஜன்மம் கிடைக்க வழி செய்கின்றத ?. அல்லது  அநேக ஜென்மங்களுக்கு வழி செய்கின்றனவா ?
                                 "க வஹனாகர் மனோ கதி .,"
ஆம் கர்மத்தின் பலனை யாரால் அறிந்து கொள்ளமுடியும் ?.அறிந்து கொள்வது சிரமம் ஆனது.-என்று பகவத் கீதையில் பகவான் கண்ணன் உபதேசிக்கிறார் .
ஒரு கர்மாவானது ஒரு ஜன்மதையோ அநேக ஜன்மங்கலையோ கொடுக்கமுடியாது .ஏனெனில் அனதிகலம் தொட்டு பல பல ஜன்மங்களில் சம்பத்தப்பட்ட கர்மங்கள் அளவு கடந்துள்ளது ., இவற்றுள் இன்னும் இன்னும் பலனைதராமல்  எஞ்சி இருக்கும் கர்மச்யம் தவிரவும் மற்றும் இந்த ஜன்மத்தின் கர்மமும் இவை யாவும் சேர்ந்து பலனை கொடுக்க கணக்கில் அடங்க ஜென்மங்கள் தேவைப்படும்.ஆகவே இஃது லோகத்திற்கு  விசுவாசம் குறையும் பொறுமையும் குறையும்.
ஒரு கர்மம் ஒரு ஜென்மத்தை உண்டாக்குவது என்பது பொருத்தமில்லாதது.ஒரு கருமமே அநேக ஜென்மங்களை தருவதனால் மிதமுள்ள பலனை கொடுக்க அவகாசம் இல்லாமல் போகும்.ஆதலால் இதுவும்  பொருத்தம் இல்லாததே.
ஆகவே அநேகே கர்மங்கள் சேர்ந்தே ஒரு ஜென்மத்தை உண்டாக்குகின்றன .எந்த கர்மமும் அடுத்தபடியாய் பலனை தர கூடியதோ அது பிரதானம்  எனப்படும் .எந்த கர்மமும் கொஞ்ச காலம் சென்று  பலனை தரக்குடியதோ அஃது  அவ் ஜன்மதுக்குள் அடங்கியதாகும்.
மரணத்தின் பொது தமது காரியங்களை செய்ய தொடங்கிய கர்மாக்கள் ஒரே நோக்கத்துடன் அந்த மரணத்தை கொடுததுமில்லாமல் அடுத்து வரும்  ஜென்மத்தையும் கொடுக்கின்றன. அந்த  கர்மாயசயத்தால் அந்த ஆயுளில் விஷயா அனுபத்தையும் அடைகிறான்.கர்மாசயமானது ஜன்மம் ,ஆயுள் ,போகம்  இவற்றிக்கு காரணமாகிறது.
1. ஜாதி என்பது பிறப்பு -ஜன்மம் : தேவத்தன்மை -மனுஷியதன்மை -பிராணி -தாவரம்-ஆகியவை 
2. ஆயுள் என்பது -தேகம் -இந்திரியம்-இவற்றின் வெகுகால சேர்க்கை 
3. போகம் என்பது : இந்திரியங்களால் கிடைக்கும் அனுபவம் (ஐம்புலன்)
முந்திய ஜென்மத்தின் கர்மம் இந்த ஜன்மத்தில் தொடர்பு உள்ளவைக்கு நிறைய சான்றுகள் உள்ளன.ஆதாவது ஒரு ஜீவனுக்கு கிடைக்கும் மானிட ஜன்மத்தில் இந்த ஜென்மத்திற்கு கல்பகோடி காலம் முன்னராவது கிடைத்த (முந்திய) மானிட ஜன்ம வாசனைகள்தான் அபிவ்யத்தியை அடைகின்றன.
இந்த பிராணியும் பொதுவாக மரணத்தை அடைய விரும்புவதில்லை.சற்றே நழுவிய உடன் பால் குடிக்கும் பச்சிளம் குழந்தை கூட தனது தாயின் மாங்கல்ய சுத்திரததையோ அல்லது புடவையோ கெட்டியாக பிடித்து கொள்வதை பார்த்து இருக்கிறோம்.இந்த எண்ணத்திற்கு காரணம் மரண பயம் என்றேதான் ஒப்புகொள்ள வேண்டும்.ஆகவே மரணபயம்  என்றே அனிஷ்டஷாதன ஞானமானது அக் குழந்தைக்கு  இப் பிறவியில் அனுபவருபமாக ஏற்பட்டு இருக்க  முடியாது .ஆதலால் இந்த ஞானமானது அனுபவம் உள்ள முந்திய ஜன்மம்  ஒன்றில் இருந்து தான் கட்டாயம் அங்கீகரித்தாக வேண்டும் .ஆம் முந்திய ஜன்மத்திலும்  மரண பயமானது இருந்திருக்கக்கூடும  ஆகையால் அதுவம் மேற்கூறிய முறைப்படி அதற்கு முந்திய ஜன்மத்த்தை கற்பிக்கின்றது .
ஜீவனுக்கு ஜன்ம பரம்பரை என்பது அனாதியானதால் பசு -பட்சி- தேவன் -மனுஷன்  முதலிய  பல ஜென்மங்களை அடைந்து அவற்றுக்குரிய விஷயங்களை  அனுபவித்த ஜீவன் அவற்றின் சம்ஷ்கரங்களையும் அடைந்து இருக்க கூடியமாதலால் அந்த பிறவியை கொடுத்த கர்மதினானேயே  அபிவ்யக்தியை  அடைகின்றன.
அதாவது ஒருவனுக்கு முந்தின பிறவியில் மனிதனாய் இருந்து தனது கர்ம மூலமாக பூனையாய் பிறந்தால் அம்மனித பிறவிக்கு முந்தியே ஏற்பட்டு இருக்ககூடிய பூனை பிறவியில் நேர்ந்துள்ள அவிவியத்தியை அது அடைந்து விடுகிறது. அதாவது எலியை பிடிபதற்கு உறிய சம்ஸ்காரம் இவ்விதம் அந்த ஜன்மாவுக்கு தகுதியான வாசனைகளின் அவிவ்யத்தியை அன்கிகிறபது மட்டும்  நியாயம். ஏனெனில் மானிட ஜன்மத்தில் தேவ்போக வாசனைக்கு அபிவய்க்க்தி உண்டாக மாட்டது .சந்தேகத்திற்கு இடம் இல்லை .
சுகர் -வியாசர  போன்றவர்கள் முன் ஜென்மத்தின் பலனாக இவ் ஜென்மத்தில் மிக பெரிய காரியங்களை செய்ய முடிந்தது.
வாசனைகளுடன் கலந்து அநாதி காலமாய் வந்து கொண்டுயிருக்கும் இந்த சித்தமானது பற்பல முடுசுகளுக்குள்ள மீன் -வலையை போல பல முடுசுகளுடன்  கூடிய விசித்திரமாகவும் மிக விசாலமாகவும் ஆகிறது ..சித்தத்தில்  உள்ள சம்ஸ்காரங்கள் நினைவை உண்டு பன்னகூடியவை .அவை வாசனை எனப்படும்.