ஒளி
ஜீவராசிகளில் மிகக் கீழ்த்தரமான அமீபா போன்ற உயிர் வகைகளூம் வெளிச்சத்தினால் பாதிக்கப்படுகின்றன.அவற்றிக்கு உடல் பரப்பு முழுவதும் ஒளி உணர்ச்சி இருக்கும்.மண் புழுவை எடுத்துக்கொண்டஒளி உணர்ச்சி பெற்ற கண்ணறைகள் உடல் முழுவதும் ஒழுங்கில்லாதது அமைக்கப்பட்டுள்ளன.வெளிசத்திற்கும், இருட்டுக்கும் உள்ள வேறுபாடு மட்டுமே அவற்றிக்கு தெரியும்..வேறு சில உயிர் வகைகளில் ஒளி உணர்ச்சி பெற்ற கண்ணறைகள் ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே ஒன்று சேர்ந்து இருக்கும். அசையும் பொருள்களின் நிழல் படுவதால் அந்த உயிர் வகைகள் இயக்கத்தை புரிந்து கொள்ளூம், பரப்பு பெரிதாக இருந்தால் அசையும் பொருள்கூடத் தெரியும்.. இன்னும் சற்று மேலான உயிர் வகைகளில் ஒளிக்கதிர்களைக் குவிக்கும் சக்தி வாய்ந்த லென்ஸ் இருக்கிறது.பொருள்களின் தொலைவுக்கு ஏற்ப லென்ஸ் குவிக்கும் ஆற்றலை மாற்றிக் கொள்வதும் மூடியும் வெவ்வேறு நிறங்களைத் தெரிந்து கொள்ளும் ஆற்றலும் சில உயிர்களுக்கு உண்டு. நம்மைப் பொறுத்த வரையிலும் நாம் உணர்ந்து கொள்ளக்கூடிய நிறங்கள் மிகக்குறைவனவை என்று கருதப்படுகிறது.ஒருகால் பறவைகளுக்கும் பார்வைத்திறனும் நிற உணர்ச்சியும் நம்மை விட அதிகமாக இருக்ககூடும். வெளிச்சத்தை நிறையவோ,குறைவாகவோ அனுப்பும் அமைப்புக்களும் நம் கண்களில் இருக்கின்றன. அன்றியும் பொருள்களின் ஆழமும்,திண்மையும் நமக்குத் தெரிகின்றன.
ஒளியென்பது ஒருவகை சக்தி.ஒளி இல்ல்லவிடில் பார்வை என்ற பேச்சுக்கோ இடம் இல்லை. பொருளிலிருந்து ஒளிக் கதிர்கள் கிளம்பி நம் கண்களை அடைகின்றன. நம் கண்களிலுள்ளே ஒளி உணர்ச்சி பெற்ற அமைப்புகள் இருக்கின்றன..அவை ஒளி உணர்ச்சியினால் தூண்டப்பட்டு நம் மூளைக்கு தகவல் அனுப்புகின்றன.மூளைன் ஆனையிட பார்கிறோம்.இவையாவும் கணப்பொழுதில் நிகழ்ந்து விடுகின்றன.ஆகவே நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.எப்பேர்பட்ட கண்களூம் சரிவர அலுவல் செய்ய வேண்டும் என்றால் மூளை வேலை செய்ய வேண்டும்.ஆகவே இந்திரனைப்போல் ஆயிரம் கண்கள் இருந்தாலும் பயன் இல்லை.
உங்கள் உடலிலேயே உங்கள் உடல் சம்பந்தம்படாத வகையில் அமைந்த பொருள் ஒன்று உண்டு என்றால் அது உங்கள் கண்கள்தான். அதாவது பொருள் பொருளற்ற தன்மையை அடைவதுபோல் உங்கள் கண்கள் உங்கள் உடம்பிலேயே இருந்து கொண்டு உங்கள் உடம்பாக இல்லை. இதுஒரு வித்தியாசமான அமைப்புதான்.
உங்கள் கண்கள் திரவம் போல சதா மாறிக்கொண்டே இருக்கும் தன்மையுடையது.அதனுடைய மாறுதலை அதுவே நிற்ணயித்துக் கொள்கிறது. உதாரணமாக உங்கள் மனதில் பால் உணர்வு ஏற்பட்டால் உங்கள் கண்கள் அதை துல்ல்லியமாகக் காட்டும். உங்கள் கண்களை ஒருவன் மிக அமைதியாக கூர்ந்து பார்த்த உங்கள் மனதில் ஒடும் எண்ணங்களை சுலபமாக அறிந்து கொள்ளலாம். அது ஒரு கண்ணாடிபோல் செயல்படுகிறது. நீங்கள் பசியோடு இருந்தால் அதை உங்கள் கண்கள் மூலம் அறியலாம்.
மேலும் உங்கள் கண்கள் எப்போதும் ஒரு பொருளிலிருந்து வேறோன்றுக்கு தாவிய வண்ணமாகவே இருக்கும். தாவுவது என்பது அதன் இயல்பு அது ஒர் ஆற்றைப் போல் மாறிக்கொண்டே இருக்கும். உயிர்த்தன்மையின் வெளிப்பாடே அது.மாறுதல் தான் அதன் இயல்பு.
ஒரு பொருளின் மேல் உங்கள் பார்வையை நிலைப் படுத்தினால் அந்தப் பொருள்ன் பல பாகங்கள் உங்கள் கண்கள் படிவதை உங்களால் தவிர்க முடியாது.
நம் கண்களில் பல பகுதிகள் உண்டு.அவையாவன
1.பாவை அல்லது கண் மணி
2.விழியின் மேல்பகுதி
3.விழி வெண்படலம்
4.கசிவு நீர்ப் பொருள் பகுதி
5.விழி லென்ஸ்
6.கசிவுப் பாகுப் பொருள் பகுதி
7.கண்பந்தை பல திசைகளிலும் இயக்கும் தசைகள்
8.விழித்திரை
9. விழியடிக் கரும்படலம்
10.வழி வெளிப்படலம்
11. பார்வை நரம்பு நார்கள்
12.பார்வை தசை நார்கள்
13.பார்வையை இனைக்கும் தசை நார்கள்
14.விழித்திரையின் மேற்பரப்பு
15 குருட்டு இடம்
16. மஞ்சள் பகுதி
17.மேல் இமை இயக்கும் தசை
18தொங்கும் தோல்
19.பிசிர்த்தசைகள்
20 கிருஷ்னபடலம்
21 மேல் இமை
22 இமை மயிர்கள்.
23 கூம்பு
24 கரு
25 பார்வை நரம்பு மையம்
ஒளிக் கதிர்கள் விழிவெண்படலத்திலூடே போய் பாவை(கண்மணி)-(ஒளிக்கு தக்கவாறு விரியும் சுருங்கும்) வழியாக விழி லென்ஸ் (நாம் கானும் பொருள்கள் இருக்கும் தூரத்தைப் பொறுத்து அதிகமாகவோ,குறைவாகவோ குவிக்கிறது)அடைந்த அதன் பின் வழி வெண்படல்ம் வரை உள்ள கசிநீர் பெருக்கின் வழியாக(ஓளி எளிதாக போகும்) விழித்திரை(போட்டத்தட்டுகன் இதை ஒப்பிடலாம்)அடிப்பகுதியில் உள்ள பார்வை நரம்புகளில் உள்ள கூம்பு (பிரகாசமான வெளிச்சத்தை பார்பதற்கும்,நிறங்களை பார்பதற்க்கும்) கறு (மங்கிய ஒளியில் பார்பதற்கும்)யின் உதவியால் விழித்திரையின் மையத்தில் இருக்கும் மஞ்சள் பகுதியில் வழும்போது ஒரு பொருளை உற்றுக் கவனிக்கமாறும் விழித்திரையின் மேற்பகுதியில் கறுவோ, கூம்போ இல்லாததால் அங்கு ஓளி செல்ல இயலாது ஆகவே அது குருட்டு இடம் என்று அழைக்கிறோம்.ஒளிக்கதிர்கள் அங்கு விழுந்தாலும் ஒளி உணர்ச்சி இருக்காது.
ஆகவே ஆன்மா ஆற்றலில் இருந்து சென்ற ஆற்றால் பொருளை அடைந்து அவ் பொருளிருந்து திருப்பவும் வரும் ஓளிக் கதிர்களை விழிலென்ஸ் குவியசெய்வதனால் தலைகீழாக சிறிய நிஷ பிம்பம் விழித்திரையில் உண்டாகிறது. பிம்பம் தலை கீழாகவும் சிறிதாகவும் இருந்தபோதிலும் மூளை அதை நேரானதாகவும் சம அளவுயுடையதாகவும் நமக்கு தெரிவிக்கிறது.
விழித்திரைக்கும் விழி லென்ஸ்கும் இடையில் உள்ள தூரம் நிலையானது அதை மாற்ற முடியாது ஆனால் விழி லென்ஸ் காண வேண்டிய பொருளின் தூரத்திற்கு தக்கவாறு தனது குவிக்கும் ஆற்றலை மாற்றிக் கொள்கிறது. இதனால் மிகத் தொலைவில் உள்ள பொருளையும் மிக அருகாமையில் உள்ள பொருளையும் பார்க்க முடியும்.
கண்கள் இருந்து இரண்டு பார்வை நரம்புகள் மூளைக்கு செல்கின்றன. மூளை இரண்டு பிம்பங்களையும் கலந்து ஒழுங்கு படுத்தி ஒரே பிம்பமாக நமக்கு காண்பிக்கிறது.
சுருக்ககூறின் வழியின் மேல் பகுது பளபளப்பான் மொல்லிய ஜவ்வு ஒற்றினால் மூடப்பட்டுள்ளது இதில் சிறிய ரத்தகுழாய்கள் படர்ந்து தெரிகின்றன. அதற்கு அடுத்தாற்போல் இருக்கும் அடுக்கிற்கு விழி வெண்படலம் என்று பெயர். அது விழி வெளி படலத்ஹ்டின் தொடர்ச்சியே ஆகும். இதன் வழியாக ஒளி ஊடுருவிஸ் செல்ல முடியும். அதற்கு பின் கருவிழி இதில் நட்ட நடுவில் உள்ள தூவாரம் பாவை அல்லது கண்மணி அதை சுற்றியுள்ள திரை கிருஷ்ணபடலம் ஆகும்.இது விரிந்து சுருக்கும் தன்மையுள்ளது(வெயிலிருந்து திடிரெண்டு வீட்டிற்குள் வந்தவுடன் இருட்டாக தெரிகிறது-சிறிதாக இருந்த பார்வை உள்ளே இருக்கும் குறைவான வெளிச்சத்திற்கு தக்கவாறு விரிந்துக் கொள்ள சற்று நேரம் ஆவதால் இருட்டிவிட்டார் போல் தெரிகிறது.
இந்த கிருஷ்ன படலத்தின் தொடர்ச்சியாக விழி வெளிப் படலத்தை ஒட்டி கண்ணை சுற்றி விழியடி கரும் படலம் இருக்கிறது.இதில் ஏறலமான இரத்த குழாய்கள் செல்கின்றன.
ஒளிக்கதிர்கள் விழி வெண்படலத்தின் ஊடே போய் பாவை வழியாக விழி லென்ஸ் அடைகிறது. இதற்கு பின் விழித்திறை என்னும் பகுதி உள்ளது .இங்கு பார்வை நரம்பு மூலமாக மூளையுடன் இனைக்கப்பட்குள்ளது.
பொதுவாக கண்களின் குறைபாடுகள் ஆனவை
கிட்டப்பார்வை :-(குழி லென்ஸ்) தொலைவிலிருந்து வரும் ஒளிக் கதிர்கள் விழித்திரைக்கு முன்பாகவே கூடி விழும்.இதனால் அருகில் உள்ள பொருள்களை நன்றாக பார்க முடியும் தூரப்பொருள்களை தெளிவாகப் பார்க்க முடியாது
தூரப்பார்வை :-(குவிலென்ஸ்) ஓளிக்கதிர்கள் விழித்திரைக்குப் பின்புறம்தான் சேறுகிறது. இதனால் தூரத்தில் உள்ள பொருள்கள் நன்றாக தெரியும்.அருகாமையில் உள்ள பொருள்கள் தெரியாது.
வெள் எழுத்து :வேண்டி அளவுக்கு பருமனை மாற்றிக் கொள்ள லென்ஸ் சினால் முடியாதபோது(மூக்கு கண்ணடியில் தூரப்பொருள்களைப் பார்க்க மேற்பகுதியும்,அருகில் உள்ள வஸ்துக்களை காண்பதற்கு கீழ் பகுதியில் தேவையான லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது)
சத்து குறைபாடு :- வைட்டமின் 'A" குறைவால் இரவில் கண்பார்வை குறைகிறது.கீரை,பச்சை காய்கறி பால் வெண்ணை கைக்குத்தல் அரிசி பருப்புவகைகள் பழங்கள் மீன் மூட்டை கோதுமை -சத்துள்ள உணவு சேர்க்க வேண்டும்.
மற்ற குறைபாடுகள்க்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது நல்லது
கண்ணிற்கு காயம் ஏற்பட்டால் - நுட்பமான பகுதியிலிருந்து இரத்தக் குழாய்கள் உடைவதால் வலியும் சிரம்மும் ஏற்படும்.ஐஸ் ஒத்தட்டம் கொடுக்கலாம் சிறிது நேரம்சென்
ற பின் இதமான வெண்ணிர் ஒத்தடம் கொடுத்து வைத்தியரிடம் அழைத்து செல்லலாம்.
எச்சரிக்கை : அடிக்கடி தலை வலி வந்தால் கண்பரிசோதனை செய்வது நல்லது.தொடர்ந்து கண்களுக்கு வேலை தரக்கூடாது. பிரகாசமான வெளிச்சத்தில் இருக்கும் போது கறுப்பு கண்ணாடி அனிய வேண்டும்.குருடு-இவர்களுக்கு உண்டான பள்ளியில் சேர்ந்து பயில வேண்டும்.