செந்துருவை சேரலாம் செந்தழிழ்லை பாடலாம்
இந்திரனைப் போல் வாழந்துண்டு இருக்கலாம்,
மந்திரம்சேர் வெற்பகத்தையூடுஅருத்தவேலவர்க்கு

முன்பிறந்த கற்பகத்தை கை தொழுதார் கால்

வாசி

சுவாசத்தின் சக்தி :-
வாசி என்னும் சக்தி (காற்று) யைப்பற்றி உபநிட கருத்து ஆனது
அஜபா ஜபதோ நித்யம்
புனர் ஜன்மன;வித்யதே
அஜபா நாம காயத்ரி
யோகினாம் மோட்ச தாயின்
அஸ்யா சங்கல்ப மாத்ரேன
தரபாபோ ப்ரமுஸ் சதே
அனணயா சதுர்ஷம் வித்யா
நணையா சதுர் ஷோ ஜபா
அணையா சதுஷம் புண்யம்
நபூதோ நப விஸ்யதி
 அதாவது இந்த காயத்ரியை -பேசாத மந்திரந்தை யார் ஜெபிக்கிறார்களோ அவர்களுக்கு மறு பிறப்பில்லை. இந்த மகா மந்திரம் யோகியருக்கு மறு பிறப்பில்லை.இந்த மகா மந்திரம் யோகியருக்கு வீடு பேற்றினையளிக்க வல்லது.
இம் மகா மந்திரத்தை மனம் நினைத்த மாத்திரத்தில் மனிதன் பாபங்களில் இருந்து விடுதலை அடைகிறான்.இதற்கு மேலானதொரு வித்தை இல்லை.ஜபமில்லை.இதன் முன் இதற்கு மேலானதொரு புண்ணியம் உண்டானதில்லை. இனிமேல் உண்டாகப் போவதுமில்லை என்று உபநிடதம்  கூறுகிறது.
இதை யார் பின் பற்றுகிறார்களோ அவர்கள்தான் அந்தணர்கள் என்று உபநிடம் மேலும் கூறுகிறது.
எல்லா மதத்தின் உண்மை ஞானிகளும் இத்தகைய சித்த நெறி மூலம்தான் ஞானத்தைப் பெற்றுள்ளார்கள். இஸ்லாம் மதத்தில் உள்ள சுபிசமும் (sufism) கிறிஸ்துவமும் இதற்கு விதிவிலக்கல்ல.
தமிழ் நாட்டில் வாழ்ந்த பல மகாங்களும், சித்தர்களும்,பீர் முகமது சாகிபு,மஸ்தான் சாகிபு,புனித சேவியர் போன்றவர்களும் ஏனைய மாகன்களூம் இந்த வாசியோக நெறியைப் பின்பற்றித்தான் சித்தியடைந்தார்கள் என்று அவர்கள் பாடல்களில் இருந்து தெரியவருகிறது.
வாசி என்னும் ஜீவ சக்தியாகிய வாயுவை கொண்டுள்ள அப்யாசத்தைத் தெரிந்தவனே  ஆத்திகல்.அல்லாதவன் நாத்திகனாவான்.
காற்று மண்டலத்தில் பரவிக் கிடக்கும் மின்காந்த அலைகள்,உயிர்ச்சக்திகள், பிராண  சக்திகள் மற்றும் பஞ்ச பூதங்களும் காற்று மண்டலத்திலேயே வியாவித்திருக்கிறது.
காற்றை உணர்வது மிகச்சுலபம். ஏனெனில் நாம் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். மாதாவின் கர்பத்தில் இருந்து பிறந்து பூமிக்கு வந்ததும் தொப்பிள் கொடியை துண்டித்தும் உலக சுவாசத்தை புதிய ஜீவன் சுவாசிக்க ஆரம்பித்து, இறக்கும்போது தான் அந்த காற்று வெளியேறும்.
இது தான் பிறவியின் ரகசியம். பிறப்பு இறப்பின் தத்துவம். நாணயத்தின் ஒருபக்கம் பிறப்பு,மறுபக்கம் இறப்பு என்று இந்நிகழ்சி உலகில் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டே இருக்கிறது. சுவாசத்தை வெளியே விட்டதும் உடல் தானாக சுவசத்தை உள்ளே இழுத்துக் கொள்கிறது என்பதை முக்கியமாக தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் சுவாசம் விடுவதும் இல்லை.சுவாசத்தை உள்ளே இழுப்பதும் இல்லை.ஆனால் உடலில் உள்ள ஜீவாத்மாதான் சுவாசத்தை வெளியேற்றியும் சுவாசத்தை உள்ளே இழுத்தும் நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
சுவாசத்தை முழுவதுமாக வெளியேற்றி விடுங்கள். நீங்கள் சுவாசத்தை உள்ளே இழுக்க எந்த முயற்சியும் செய்யாதீர்கள். சில நொடிகளில் சுவாசம் தானாக உள்ளே இழுப்பதை உணர்வீர்கள். தூக்கத்தில் சுவாசத்தை நமது ஆத்மாதான் நடத்திக் கொண்டிருக்கிறது.
நாம் ஒவ்வொரு விநாடியும் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறோம்.காற்றை வெளியே விட்டும், உள்ளே இழுத்தும் வாழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒவ்வோர் இரவும் தூக்கத்தில் இருந்து காலை விழித்து கொள்கிறோம். இல்லாவிட்டால் அடுத்த ஜன்மாவில்தான் விழிப்போம்.
இப்படியாக உலகில் உள்ள ஜீவராசிகளையும்,உயிர் இனங்களையும் 84  லட்சம் யோனி பேத்ங்களையும் வாழ வைத்துக் கொண்டிருப்பது காற்றுதான்.
மனித இனங்களுக்கு பிராண வாயுதான் முக்கியமாக சுவாசிக்க தேவைப்படுகிறது. உலகைப் படைத்த இறைவன் நமக்கு தங்கு தடையின்றி பிராண வாயு கிடைக்கவும் வழி செய்து வைத்து இருக்கிறார்.
தாவர வர்க்கங்கள் கரியமில வாயுவை கிரகித்துக் கொண்டு பிராண வாயுவை வெளியேற்றுகிறது.ஜீவன்கள் உலகில் வாழ இறைவன் கருனையால் இந்த சுவாசங்கள் மனித இனத்துக்கு தாராளமாகக் கிடைக்கும் படியும் மனித இனம் வெளியே விடும் காரியமில வாயுவால் மனித  இனம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தாவர வர்க்கங்கள் புல்,பூண்டு முதல் பெரிய விருட்சங்கள் வரை பூமியில் மனிதர்கள் விடும் கரியமில வாயுவை எற்றுக் கொண்டு நமக்குத் தேவையான பிராணவாயுவை வெளியேற்றிக் கொண்டிருக்கிறது.
இதை விஞ்ஞான பாடத்தில் படித்து இருப்பீர்கள் ஆகவே மனிதர்கள் வாழ எவ்வளவு அக்கறை இறைவன் கொண்டிருக்கிறான் என்பதை இதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.
எதுவும் அவன் செயல்படிதான் நடக்கிறது. நாம் செயலில் எதுவும் நடைவபெறுவதில்லை. நாம் ஒரு கருவிதான்.
நம்மை உள்ளே இருந்தும் வெளியே இருந்தும்  இயக்கி வைக்கிறான்.
காற்று ரூபத்தில் இத்தகைய நிகழ்ச்சி நடைபெறுகிறது..இதுதான் வாழ்வு.
காற்று தவிர ஏனைய பூதங்களான நிலம்-நெருப்பு-நீர்-ஆகாயமாகிய சக்திகள் காற்றுடன் கலந்தே நமக்கு கிடைக்கிறது.ஆனால் அவற்றை நாம் உணரமுடியாது.
காற்று இல்லாமல் உலகம் இயங்க முடியாது.ஜீவராசிகள் வாழ முடியாது. நாம் உயிருடன் இருக்க முடியாது.
இன்றைய நாகரிக உலகில் தண்ணீர் இறைக்கும் பம்பு செட் கூட காற்று அடைத்துக் கொண்டால்  இயங்குவதில்லை.
காற்று இல்லாவிட்டால் வாகனங்கள் இயங்க முடியாது என்பது எல்லோரும் தெரிந்ததே.
தினசரி இருபத்திநான்கு மணி நேரமும் சுவாச ஒட்டம் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது நம்மிடம்.
நாம் கோபப்படும்போது குப்பென்று இரத்தம் மேலே ஏறி பெருமூச்சு விடுகிறோம். ஒடும்போது பெருமூச்சு விடுகிறோம், மலை ஏறும் போது பெருமூச்சு விடுகிறோம்.ஆண்,பெண் சங்கமத்தின்போது பெருமூச்சு விடுகிறோம்.இந்த சமயங்களில் மட்டும் பெருமூச்சு விடுவதை உணர்கிறோம்.மற்ற சமயங்களில் நாம் சுவாசிப்பதை கவனிப்பது கிடையாது.
குறைந்த அளவு சுவாசமே உள்ளே போய் வருவதால் நமது நுரையிரல்களுக்குத் தேவையான பிராணவாயு கிடைப்பதில்லை.
சாரசரி மனிதனின் நுரையீரலில் 15 % இயங்குகிறது. மற்ற இடங்களில் நுரையீரலீல் கரியமில வாயுதான் அடைத்திருக்கிறது, என்கிறார்கள்.
நாம் சுவாசிகும் காற்றில் பிராணவாயு இருக்கிறது. இந்த பிராணவாயு நுரையீரலுக்குச்சென்று அங்கு வரும் இரத்தத்தை சுத்தம் செய்து இரத்ததில் உள்ள அசுத்தங்களை வெளியே விடும். சுவாசத்தில் கரியமில வாயு வெளியேறுகிறது. ஆகவே நாம் அதிகமான காற்றை உள்ளே இழுக்கும் போது அந்தக் காற்றில் உள்ள அதிகமான பிராணவாயுவினால் அதிக இரத்ததை நுரையீரலில் சுத்தம் செய்ய முடிகிறது. அதனால் இருதயத்துக்கு சுத்த இரத்தம் கிடைக்க சுவாசம் வழி செய்கிறது.
இப்பொழுது இருதய இயக்கத்தைப் பற்றி கொஞ்சம் விவரமாக தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். நமது இருதயமானது இரத்த நாளங்கள் வழியாக இரத்தத்தை சரீரம் முழுவதும் பரவச்செய்து ஆங்காங்கே உள்ள கழிவுகளை எடுதுக் கொண்டு திரும்பவும் அசுத்தங்களுடன் நுரையீரல் வழியாக வந்து அங்கே நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பிராண வாயுவினால் சுத்தம் செய்யப்பட்டுத்தான் இருதயத்துக்கு செல்கிறது.
இருதயத்தில் இருந்து இரத்தம் வெளியேறுவதற்கும்,உள்ளே வருவதற்கும் தனித்தனி வழிகள் இருக்கிறது.போகும் வழி ஆர்ட்டரீஸ் என்னும் இரத்த நாளங்கள் வழியாக சரீர முழுவதும் பாய்ந்து திரும்ப ஆங்காங்கே உள்ள  அசுத்தங்களுடன் வென்ரிகிள்ஸ் என்னும் இரத்த நாளங்கள் வழியாகத்திரும்பி வந்து சுத்தமாக்குவதற்காக நுரையீரலுக்குள் வந்து சேருகிறது. நுரையீரலில் இலட்சக்கணக்கான காற்று பைகள் இருக்கிறது.அங்கே அந்தப்பைகளில் கிடைக்கும் பிராணவாயுவினால் இரத்ததின் அசுத்தங்கள் நீக்கப்பட்ட பிறகு இருதயத்துக்குள் சுத்த இரத்தமாகச்செல்கிறது.
ஆகவே இரத்தத்தை சுத்தம் செய்ய அதிக பிராண வாயு தேவைப்படுகிறது. நாம் சுவாசத்தை குறைவாகவே இழுத்துவிட்டு வருவதால் நுரையீரலுக்கு குறைந்த அளவில்தான் பிராணவாயு கிடைக்கிறது.அதனால்முழுமையாக எல்லா நுரையீரல் பைகளுக்கும் பிராணவாயு கிடைப்பதில்லை.அதனால் இரத்தம் முழுமையாக சுத்தப்படுத்தப்படாத நிலையிலேயே இருதயத்துக்குள் சென்றுவிடுகிறது.
இதனால் பல வியாதிகளுக்கு நாம் ஆளாக நேரிடுகிறது.
ஆகவே,யோக மார்க்கத்தில் சுவாசத்தை அதிக அளவு உள்ளே இழுத்து நிறுத்து வெளியேற்றும்போது அதிக பிராணவாயு நுரையீரலுக்கு கிடைத்து அதிகமாக இரத்தம் சுத்தமாகி இருதயத்திற்கு போகிறபடியால் வியாதிகள் வராமல் தடுக்கும்  சக்தியினை இரத்தத்தில் உள்ள ஜீவ அணுக்கள் பெறுகிறது.
இரத்தத்தில் அதிகமாக ஜீவ அணுக்கள் பிராண சக்தியை உறிச்சி இயங்க்குவதால் உடலை நண்கு  பராமரித்து நோயை தடுக்கும் சக்தி அந்த ஜீவ அணுக்களுக்குக் கிடைக்கிறது.
இருதயம் 'லப்-டப்' என்ற சப்தத்துடன் துடி துடித்துக் கொண்டிருக்கிறது.அழுத்தி விடுதல் 'லப்-டாப்' என்ற ஓசையை ஏற்படுத்துகிறது. சுருங்கியும் விரிந்தும் ஓசை உண்டாகிறது. சுருங்கியும் விரிந்தும் செயல்படும்போது இருதயத்தில் இந்த 'ல்ப்-டாப் ஓசை  உண்டாகிறது.
உடம்பில் எந்த இடத்தில் நாடியை பரிசோதித்துப் பார்த்தாலும் அந்த இடத்தில் இந்த துடிப்பை உணரலாம்.விட்டுவிட்டு நாடி துடிப்பை உணரலாம்.
சாதாரணமாக இருதயமானது ஒரு நிமிடத்துக்கு 75 துடிப்பு துடிப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.ஒரு துடிப்புக்கு இருதயம் 2 1/2 அவுன்சு  இரத்தத்தை வெளியேற்றுவதாகச்சொல்கிறார்கள். அந்தக் கணக்குப்படி ஒருநிமிடத்துக்கு 75 தடவை துடிப்பதால் 75க்ஷ்2 1/2=187 1/2 அவுன்சு இரத்தம் இருதயத்தில் இருந்து ஒரு நிமிடத்துக்கு வெளியேறிக் கொண்டிருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.அப்படியானல் 24 மணி நேரத்தில் எவ்வளவு இரத்தத்தை இருதயம் வெளியேற்றுகிறது என்று  கணக்கிட்டுப் பாருங்கள்.
ஆகவே, நாம் ஆரோக்கியமாக வாழ நல்ல சுத்தமான இரத்த ஒட்டம் தேவை.அதற்கு அதிக காற்றை  நாம் சுவாசிக்க வேண்டும்.அப்போதுதான் காற்றில் இருக்கும் பிராண வாயு அதிக இரத்தத்தை நுரையீரலில் சுத்திகரிக்க முடியும்.
புறப்பட்டுப் புக்குத்திரிகின்ற வாயுவை
நெறி ப்படவுள்ள நின்மலமாக்கில்
உறுப்புச்சிவக்கும் உரோமங்களுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே
உள்ளே இருந்து புறப்பட்டு வெளியே வந்து மீண்டும் உள்ளே  புகுந்து திரிகின்ற பிராண வாயுவை மூச்சு பயிற்ச்சி முறைப்படி தடுத்து உள்ளே நிறுத்தினால் உடல் செந்நிறமாகும். நரை மாறி முடிகளுக்கும் காயசித்தி ஆகும்.
வாயுவை உள்ளே இழுப்பது பூரகம். அதை உள்ளே நிறுத்துவது கும்பகம் ஆகும். கும்பித்த வாய்வை வெளியே விடுவது சிரேசமாகும். இடக்கலை என்பத் சந்திர நாடியாகிய இடது நாசியாகும்.பிங்கலை என்பது சூரிய நாடி என்கிற வலது நாசியாகும். சுழுமுனை அக்கினி எனப்படும்.வாயு அடக்கினால் வாழ்நாள் வளரும்.
பதினாலு மாத்திரையில் நான்கு மாத்திரை உள்ளேயும் பாக்கி பன்னிரெண்டு மாத்திரை வெளியேயும் ஒடிக்கொண்டிருக்கும். அந்தப்பன்னிரெண்டு மாத்திரையும் அகத்தில் அடங்கும்படி பிராணாயாமம் செய்து வந்தால் காயசித்தி ஆகும். அவ்வாறு பிராணாயாமம் செய்யாது பிராண சக்தியை வீணே கழியவிடுவதால் ஆயுட்காலம் குறைகிறது.சுவாசபந்தம் நீடிக்க ஆயுள் நீடிக்கும்.
ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பகம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத்திரண்ட திரேசகம்
மாறுதல் ஒன்றிங்கண் வஞ்சகமாமே
இடது மூக்கு வழியாக 16 மாத்திரை அளவு மூச்சுக் காற்றை உள்ளே இழுப்பது பூரகமாகும்.64 மாத்திரை அளவு  உயிர்ப்புச்சக்தியை அடக்குதல் கும்பமாகும் . பின்னர் வலது மூக்கின் வழியாக 32 மாத்திரை காற்றை வெளியே விடுதல் ரேசகமாகும்.
இதுபோல சுவாசத்தை இடது நாசியில் 16 மாத்திரை இழுத்து 64 மாத்திரை உள்ளே நிறுத்தி 32 மாத்திரை சுவாசத்தை வலது நாசியில் வெளியே விடவும்.
பின்னர் வலது நாசியின் வழியாக 16 மாத்திரை சுவாசத்தை உள்ளே இழுத்து 64 மாத்திரை சுவாசத்தை உள்ளே நிறுத்தி 32 மாத்திரை சுவாசத்தை வலது நாசி வழியாக வெளியே விட்டும் மாறி மாறி 16-64-32 என்று பூரக கும்பக ரேசகம் செய்து வரவேண்டும்.
இதுதான் காற்றைப் பிடிக்கும் கணக்காகும்.இந்தக் கணக்குப்படி ஒரு நாழிகைக்கு மனிதனின் சராசரி சுவாசம் 360 ஆகிறது.(2 1/2 ம்ணி நேரம் = ஒரு நாழிகை) அதாவது 60 நாழிகைக்கு  =ஒரு நாளைக்கு 21,600 சுவாசம் ஒடுகிறது (360 X 60=21,600) .
அதாவது ஒரு நிமிடத்திற்கு 15 சுவாசம் உள்ளே வெளியே நடக்கிறது..60 நிமிடம் கொண்ட ஒரு மணி நேரத்திற்க்கு 900 சுவாசம்  நடைபெறுகிறது. 24 மணி நேரத்துக்கு 24x900=21,600 சுவாசம் ஒடிக்கொண்டிருக்கிறது.
உடலில் உள்ள ஒவ்வோர் ஆதாரஸ் சக்கரத்துக்கும் சுவாச அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
1.மூலாதார சக்கரத்துக்கு   -600
2.சவாதிட்டான சக்கரத்துக்கு-6000
  (நிலம் -பிருத்திவி)
3.மணிபூரக சக்கரத்துக்கு-6000
  (அப்பு-நீர்)
4.அநாகத சக்கரத்துக்கு -6000
  (தீ- தேயு)
5. விசுத்தி சக்கரத்துக்கு -1000
  (காற்று)
6. ஆக்ஞா சக்கரத்திற்கு-1000
  (வான்- ஆகாசம்)
  நாதாந்தம்  -----------------1000
 ஆகமொத்தம்           21,600 சுவாசங்கள்.
பொதுவாக மனிதன் விடும் மூச்சுக் காற்று நாசியுல் 12 அங்குலம் புறப்பட்டு 4 அங்குலம் சுழன்று 8 அங்குலம்தான்மீண்டும் தான் நின்ற இடத்தில் தாக்குகிறது.இதனால் ஒரு நாளில் 7,200 சுவாசம் வீணாகப் பாய்ந்து 14,400 சுவாசம் மட்டுமே உள்ளே புகுகிறது..21,600சுவாசங்கள் சிரிவர ஆறு ஆதாரங்களுக்கும் பாய மனிதன் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம்.அவ்வாறு வாழ்வதற்கே மேற்கூறிய காற்றைப் பிடிக்குங்கணக்கு பற்றி திருமந்திரம் கூறுகிறது.ஆனால் இது பற்றிய மொய்யுணர்வை எல்லாம் குருவிடம் உபதேசம் பெற்றே செய்ய வேண்டும்.
ஆகவே இந்த நுட்பங்களையெல்லாம் நமது யோகிகள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
பிராணன் உள்ளில் அடங்கினால் ஐம்பூதங்களும் தனகுள் அடங்குகிறது.ஆசை தொடர்புகளும் அற்றுவிடுகிறது.

"பத்தோடிரு கலையாகிய பனிரண்டில் நாலும்
பாழ்போகிட மீண்டே வரும்பதியின் கலை நாலும்
பெற்றோடிவதிங்கேறிய பேர்மைந்தனைக் கண்டு
பேசும் நிலையோடும் உறவாகிப் பிணக்கற்றாய்

கற்றோருடன் கற்றோமெனும் வித்தாரமுமற்றாய்
கானற் புனலோகப் படிமானத் தையுமற்றாய்
சித்தோடிரு சித்தாகிய சிற்றம்பல மீதே
சேர்ந்தாய் குறைதீர்தாய் இனிவாழ்வாயிரு மனமே"
கீழ் நோக்கிஸ் செல்கிற நாங்கு அங்குல சுவாசகதியை உள்ளே இருக்கின்ற  எட்டங்குலத்துடன் சேர்த்து கொல்லன் துருத்தி கொண்டு ஊதுவது போல உள்ளில் கூடி ஊதினால் ஒவ்வோர் அங்குலமாம அடங்கிப் பின் சுழு முனைப்பூட்டைத் திறந்து பிரமரந்திரியத்தில் பிரவேசித்து பிராண் அபானங்கள் ஒன்றுபட்கு பன்னிரெண்டு அங்குலமும் ஒரே  கதியாகி இதிகாசத்தில் சிதம்பரத்தில் ஆத்ம ஜோதியாகிற நடராஜனின் தாண்டவத்தைக் கண்டபின் ஞானமில்லாத ஜீவ சமுதாயம் உயிர்பெற்று எழுகிறது. அதாவது ஞானத்தை அடைகிறது.


நா என்ற பொறி :

நாம் தின்னும் பண்டங்களின் ருசியை நமக்கு தெரிவுப்பது நாக்கு.பேசுவதற்க்கும் உணவு பொருள்களை வாயில் அரைப்பதற்கும்  நாக்கு உதவுகிறது நாக்கின் மேல் பகுதி சொரசொரபாக இருக்கிறது. இதில் உருண்டை வடிவத்தில் பல சிறு அரும்பு களைக் காணலாம். அவை சுவை அரும்புகள் என்ப்படும்.அவை நாக்கின் அடிப்பகுதியிலும்,நுனிப்பகுதியிலும் ஒரங்களிலும் அதிகமாகக் காணப்படுகின்றன.சுவை அரும்புகள் நாக்கின் மேல் உள்ள ஜவ்வில் ஏராளமாக அமைத்துள்ளன.ஒவ்வொரு சுவை அரும்புகளும் நரம்பிலிருத்து வரும் நார்கள் இருக்கும் பொருள்கள் உமிழ் நீரில் கரைத்து சுவை அரும்புகளில் பட்டவுடன் அங்குள்ள நரம்பு நார்கள் மூளைக்கு செய்தியை அனுப்புகிறது.அறு சுவை இனிப்பு,புளிப்பு,கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, உறைப்பு(காரம்) என்று  நாம் சொல்கின்றோம்.ருசி என்பது பெரும்பாலும் வாசனையை பொருத்து இருக்கிறது. சளி பிடித்து இருக்கும் போது பண்டங்களின் ருசி நமக்கு தெரிவதில்லை. ஏனெனில் மண நரம்புகள் வரை பொருள்களின் துகள்கள் செல்வதில்லை. காது ,தாடை, நாக்கு இவற்றுக்குக் கீழே இரண்டு ,இரண்டு சுரப்பிகளாக மொத்தம் ஆறு சுரபிகள் இருக்கின்றன. இவை உமிழ்நீர் சுரப்பிகள் எனப்படுகின்றன. இங்கு உமிழ் நீர் சுரக்கிறது.
நாக்கின் அடிப்பகுதியில் அடிநாக்கு மூடிபோன்றதோர் அமைப்பு உள்ளது.குறூத்தெழும்பினால் அனது,சளி சவ்வினால் மூடப்பட்டி இருப்பது விரலை வாயினுள் விட்டுப்பார்த்தால் அது இருப்பதை உணரலாம். சாப்பிடாமல் சாதாரணமாக இருக்கும்போது அடிநாக்கு மேற்புறம் தூக்கியபடி இருக்கிறது.,மூச்சுக்காற்று குரல்வளை வழியாகக் காற்றுக்குழாய்கள் சென்று நுரையிரல்களை அடைகிறது.உணவு செல்லும்போது மட்டும் இந்த அடி நாக்கு காற்றுக் குழாயை மூடிக் கொண்டு விடுகிறது. மேலும் உள் அன்னமும் சற்று உயர்ந்து மூக்குத் துவாரங்களை மூடி விடுகிறது. நாம் சாப்பிடும்  உணவு காற்று குழாய்க்குள் போய்விடாமல் இருக்க வேண்டும் அல்லவா?.
அடி நாக்கிற்கு மேலாக உள் நாக்கு என்றும் சதை பகுதி திரை மாதிரி தொங்கி கொண்டிருக்கிறது. இது உள் அன்னத்தின் இருபக்கங்க்களிலும் டான்சில் கள் எனப்படும் சதை பகுதிகள் காவற்காரர்களைப் போல் இருக்கின்றன. வெளியிலிருத்து உட் பக்கம் செல்லும் நுண்னுயிர்களை டான்சிகால்கள் தடுத்து விடுகின்றன.
காற்று குழாயின் தொடக்கத்தில் குரல் வலை இருக்கிறது. இங்குதான் இரண்டு மெல்லிய ஜவ்வுகள் காற்றுக் குழாயின் குறுக்கு மட்டத்தில் அமைக்கக்ப்பட்டு இருக்கின்றன.இவை குரல் நாண்கள் எனப்படும். வெளியில் இருந்து குரல் நாண்கள் இடை வழியாகக் காற்று செல்லும்போது அவை அசைவதால் ஒலி உண்டாகிறது. குரல் நாண்களுடன் இனைந்துள்ள  பல தசைகளை அசைப்பதால் நாண்களை நீலமாகவோ,குட்டையாகவோ நெருக்கமாகவோ  விலகியிருக்கும்படியாகவோ செய்வது முடியும்.
அடுத்தபடியாக வாயில் இருக்கும் பற்றளைப் பற்றி தெரிந்துகொள்வோம். பொதுவாக மேல்ததாடையில் பதினாறும் கீழ்த்தாடையில் பதினாரும் ஆகமொத்தம் முப்பதிரேண்டுகள் இருக்கின்றன.சிலர்க்கு  வாய் எல்லாம் பல் ஆக இருக்கும்.சிரித்து மகிழ்வதற்கு கூறிப்பிடவில்லை.உண்மையாகவே பற்கள்ல் ஒர் ஒழுக்கம் இல்லாது பல வரிசைகளில் வாய் முழுவதும் இருக்கும்.
பற்கள் வெட்டுப்பற்கள்,கோரைப்பற்கள், கடைவாய் பறகள், என் மூன்று வகைப்படும்.கடைவாய் பற்களை  அரைக்கும் பற்கள், குழைக்கும் பற்கள்  எனப் பிரிபதும் உண்டு.ஒவ்வொரு தாடையிலும் 4 வெட்டுப்பற்கள், 2கோரைப்பற்கள் 4 அரைக்கும்பற்கள் 6 குழைகும் பற்கள் இருக்கின்றன.உணவு பொருள்களை கடிக்கவும் துண்டிக்கவும் வெட்டுப்பற்கள் பயன்படுகின்றன.கோரைப்பற்கள் கிழிப்பதற்கு பயன் படுகிறது.கடைவாய் பற்கள் உணவுப் பண்டங்களை நங்கு அரைத்து குழைப்பதற்கு பயன் படுகிறது.பிறந்த குழந்தைக்கு ஆறு அல்லது எட்டு மாதங்கள் ஆனவுடன் பற்கள் மூளைக்கின்றன.கீழ் வரிசையில் நடு இரண்டு வெட்டும் பற்கள் தோன்றியவுடன் குழந்தை கடிப்பதற்கு துரு துரு என்று இருப்பதை பார்த்து இருக்கிறோம்.முதலில் எட்டு முன் பற்கள் தோன்றும்.அதற்குப் பின்னர் தாடையில் இரண்டும் கீழ் தாடையில் இரண்டும்மாக நாங்கு கடைவாய் பற்கள்ல் சுமார் 1 1/2 வயது ஆனவுடன் நாங்கு கோரைப் பற்களும் முளைக்கின்றன. 2 வயது ஆகும்போது மேலும் நாங்குகடைவாய் பற்கள் முளைக்கும். மொத்தம் இருபது பற்கள் இருக்கும். இவை பால் பற்கள் எனப்படும்.7-8 வயது ஆனவுடன் பால்பற்கள் விழத்தொடங்குகின்றன.நிலையான பற்கள்  பிறகு முளைக்கும் கடைசியாக கடைவாய் பல்லை அறிவு அல்லது விவேகப் பல் என்று செல்வதுண்டு,17-18 வயதில் அது முளைக்கும்.
ஆகவே வாய் உணவு உண்பதற்கும், பேசுவதற்கும், பாடுவதற்கும் உபயோகமாக உள்ளது.
மாறி வரும் நவின வாழ்கைக்கு ஏற்ப மக்களின் உணவுப்பழங்கள் பெருத்த மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இயந்திரமாகிவிட்ட மனிதனின் வாழ்க்கை முறைக்கு
ஏற்ப தலை வாழை இலை போட்டுஸ் சாப்பிட நேரம் இல்லாமல் கையில் எது கிடைக்கிறதோ அதை வாயில் துரிதகதியில் அள்ளிபோட்டுக்கொண்டு ஒடுகின்றனர். இன்றைய நவின உலக மனிதர்கள் இதனாலேயே துரித உணவுகங்க்கள் (பாஸ்ட் புட் செண்டர்) புற்றிசல் போல் முளைத்து வருகின்றன. இது தவிர மேலை நாட்டு உணவு வகைகள் ஆன பிஸ்தா,நூடுல்ஸ் உள்ளிட்ட வகைகளிலும் நம்மை ஆக்கிறமித்து வருகிறது.இந்த உணவகங்களில் வினியோகிக்கப்படும் உணவுகளில் சமஸ் சீரான சத்துக்கள் உள்ளதா?.  எனக்கேட்டால் ஏமாற்றமே மிஞ்சும். மேலும் சில உணவகங்களில் அளவுக்கு அதிகமான மசாலாக்களையும்,எண்ணை வகைகளையும் கொழுப்பு சத்துள்ள பொருள்களையும் சாப்பிடும்போது அவை வாய்க்கு நல்ல ருசியாக உள்ளன.ஆனால் உடல் நலத்துக்கு கேடு.
இன்னும் ஒருபடி மேலே சென்று உள்ள  விடுதிகளில் அங்கு உள்ள தொட்டியில் உள்ள மீங்களை காட்டினால் போதும் உடனே அப்படியே உணவக்கிதந்துவிடுகிறார்கள். இதில் குறிப்பாக டிக்கா,ஹரியாளீ,கபாய் ,பாங்காரா போன்ற மீன்வகைகளும் ஒருமுறை சாப்பிட்டால் மீண்டும் சாப்பிட தோன்றும் வகையில் செய்து கொடுக்கிறார்கள். நாவிற்கு ருசியிருக்கிறதோ இல்லையோ உடல் நலத்திற்கு உகந்ததா என்ற கோள்விக்கு எந்த உணவு விடுதியும் பதில் இதுவரை இல்லை.
இன்றைய நாளில் பிறந்த நாள்  பார்டி,புதிதாக வேலை கிடைத்தால் பார்டி ,ஏன் புது ட்ரேஸ் போடால் பார்ட்டி செண்டாப் பார்டி எனபார்டி கலாசாரம் இன்றைய இளைய தலைமுறையினர் அமைதியான ஆராவரம் இல்லாத ஹோட்டலை பெரிதும் விருப்புகின்றனர். நட்புடன் பழகும் ஆண் நாண்பர்கள் எப்போதும் பர்சில் இருக்கும் கிரெடிட் கார்டு போன்றவற்றால் இளம்  பெண்கள் கூட்டமும் சேர்ந்து விடுகிறது..மேலும் இளம் தம்பதியினர், இளைங்கர்கள் ,காதலர்கள் உற்சாகப்படுத்துவதற்கு என்றே தனித்தனி உணவு வகைகள் உள்ளது பார்டி அறைகளும் கட்டி வைத்துள்ளனர்.பார்டிக்காக ஒவ்வொருவரும் கம்பெனி கொடுபதற்காக அவர்கள் உணவு வகை விடுதிகள் உண்டானது.நாகரிக மனப்பான்மையில் நாவில் எதையாவது இப்படி கட்டாயமாக திணித்து கொள்கின்றனர்.