செந்துருவை சேரலாம் செந்தழிழ்லை பாடலாம்
இந்திரனைப் போல் வாழந்துண்டு இருக்கலாம்,
மந்திரம்சேர் வெற்பகத்தையூடுஅருத்தவேலவர்க்கு

முன்பிறந்த கற்பகத்தை கை தொழுதார் கால்

உயிர் இனங்களின் வேறுபாடு


"வேதக் காட்சிக்கும் உபநிடத்துச்சியில் விரித்த
போதக் காட்சிக்கும் காணலன்  புதியரில் புதியன்
மூதத்கார்க்குமூ தக்கவன் முடிவிற்கு முடிவாய்
ஆதிக் காதியாய் உயிர்குயிராய் நின்ற அமலன்"
 (மறைகளாலும் அறியப்படாத தலைவர், பதிஞானம் இல்லாதவர்களுக்கு அறிய முடியாத சிற்பரவஸ்துவாகிய முருகப் பெருமான் சிறிய பாலகம் என்று பகர்ந்தாலும் சிறிய ஒர் ஆலம் வித்தில் எந்த விருஷம்யாவும் ஒடுங்கியிருந்து தோன்றியவாறுபோல, எல்லாப் பொருளூம் முன்னானில் அவரிடத்தினாலும் தோன்றின.அவர் வேதங்களின் ஞானத்திற்கும்,உவநிடதங்களின் ஞானத்துக்கும் கானுவதற்கு அறியவர். புதியவர்க்குப் புதியர். முதியர்க்கு முதியர். முடிவுக்கு முடிவாய் முதலுக்கு முதலாய் உயிர்க்கு உயிராய் நின்ற நின்மலர்.)
உயிர் இனங்களில்  என்ன வேறுபாடு இருக்கிறது ஜீன் அமைப்பில் :-
ஜீன்களின் எண்ணிக்கை குணாதியங்களை நிர்ணயிப்பதில்லை என்றும்.ஜீங்கள் அமைக்கப்பட்டு இருக்கும் விதம் தான் வேறு பாடுகளை ஏற்படுத்துகின்றன.. மனிதனை விட சில பயிர்களூக்கு அதிக எண்ணிக்கையிலான ஜீன்கள் இருப்பது ஏற்கன்வே தெரிந்த விஷயம்தான். நெல் பயிர்க்கு 50,000 ஜீன்கள் உண்டு.ஆனால் மனிதனுக்கு 30,000 முதல் 40000 ஜீன்கள்தான் உண்டு.எனினும் சிறப்பான வரிசைத் தொடரில் ஜீன்கள் அமைக்கப்பட்டதே மனிதனின் சிறப்புத் தன்மைக்கு காரணம்.உயிரிணங்கள் வாழும் சூழ்நிலைகளும் ஜீங்களீன் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.குரங்க்கில் இருந்து வந்த மனிதன். மனிதனும் ,மனிதகுரங்கும் 50 லட்சம் ஆண்டுகள் வெவ்வேறு சுழலில் வாழ்ந்ததால் அவற்றின் ஜீங்கள் அமைப்பில் சில வேறுபடுகள் நிச்சியம் கணப்படுகிறது என்று விஞ்கானி அஜித்வர்க்கி கூறுகிறார்.மனிதனுக்கும், மனிதகுரங்குக்க்கும் 98.7% ஜீன்கல் ஒரே விதமாக காணப்படுகிறது.1.3% வித்தியாசம் எப்படி இவ்வளவு வேறுபாடுகளை மனிதனுக்கும், குரங்கிற்குஏற்பட்டுள்ளது என்பது வியக்கத்தக்கதாக இருக்கிறது.
நுரையிரம்,மற்றும் ரத்தத்திள் உள்ள ஜீன்களின் அமைப்பில் எவ்விதமான வேறுபாடும் காணப்படாது.மூளையில் உள்ள ஜீன்கள் அமைப்பில்தான் வேறுவிதமாக காணப்படுகிறது. மனிதகுரங்கயும்,குரங்குகளையும் பார்த்தால் ஒரே விதமான ஜீன்கல்  அமைப்பு உள்ளதை கவணிக்கலாம்.குரங்குகளின் ரத்தம் கல்லிரல் போன்ற உறுப்புகளின் ஜீன் அமைப்பும் மனிதனின் கல்லிரல் மற்றும் ரத்தம் போன்றவற்றின் ஜீன் அமைப்பும் ஒரே விதமாக அமைந்துள்ளன.
மனித குரங்குகளின் ஜீன் அமைப்பு ஒன்றுக்கொண்று ஒரே விதமாகவும். மனிதர்களின் ஜீன் அமைப்பு  ஒன்றுக்கொண்று வித்தியாசமாகவும் காணப்படுகிறது.ஆகவே மனிதக் குரங்கிற்கும்,மனிதனுக்கும் ஏறக்குறைய ஒரே எண்ணிக்கையிலான ஜீன் என்று அழைக்கப்படும்  மரபுப்பண்பு உயிர்மம் இருந்தாலும் அவை வித்தியாசமான முறையில்  அமைக்கபட்டததுதான் மனிதனுக்கும்,குரங்குக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை தீர்மானிக்கிறது.
உயிர் இனங்களில் கணப்படும் ஒற்றுமை :-
இறைவன் அண்ட சராசங்களையும் படைந்து அவைகளை இயக்கியும் வருகிறான். சகல கிரகங்களும் -சூரியன்,சந்திரன் உட்பட புவணங்களும் அண்டங்களூம் ஒன்றுடன் ஒன்று மோதி சிதறுண்டு போகாமல் இயற்கைப் பரிமாணம் ஒன்றையும் ஏற்படுத்தினார்.(natural law)அதாவதுதான் படைந்த அண்டங்கள் ஒவ்வொன்றிக்குள்ளும் ஒருவித காந்த சக்தியை உண்டு பன்னி அதன் முலம் ஒவ்வொருகிரகமும் தத்தம் நிலை குறித்த பிரமாணப்படி சுழன்ரு வரவும் ஒன்றுடன் ஒன்று மோதாமலும் இருக்கவும் அற்புதமான வழி முறைகளை வகுத்துள்ளார்.
மேலும் பூமியில் உள்ள உயிருள்ள,உயிரற்றவைகளூம் ஒன்று ஒன்று சார்ந்து இருக்குமாறு படைந்தார்.பொதுவாக எல்லா உயிர் இனங்களிலும் உள்ள ஒற்றுமையைக் காண்போம்.
instinct என்ற வார்த்தைக்கான நேரடிப் பொருளை அறிய வேண்டி அகராதியைப் புரட்டினால் கீழ் கண்டவாறு கூறப்பட்டுள்ளதைக் காணலாம்.
தானாக அல்லது இயல்பாக முன் அனுபவம் ஏதுமின்றி பிறர் கூறாமல் செய்யப்படும் ஒர் உந்துதல்.உதாரணமாக பிறந்த கண்று தானாகவே எழுந்து தாய்ப்பசுவின் மடியை நோக்கிஸ் சென்று பால் குடிப்பது,மீன் குஞ்சுகள் பிறந்த உடனே நீந்துவது ஆகியவைகளைஸ் சொல்லலாம்.
அனைவருக்கும் பொதுவான உள்ளுணர்வுகள் மூன்று என்று நம் முன்ணோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவையாவன
1.instnct for self preservation :- தனைத்காத்துக் கொள்ளுல்,தன்முனைப்பு,தனித்துஸ் செயல்பட்டு உண்ணுதல், உறைதல் முதலியவைகளில் தன்னிச்சையாக செயல் படுதல் எனக் கொள்ளலாம்.
2.instinct for reproduction: தன் வம்சம் இவ்வுலகில் தொடர எதிர்பார்புடன் இனைந்து தன்னைப் போன்ற ஒர் உயிரை உருவாக்குதல்.இஸ் செயலில் ஒர் இன்பம் ஜீவர்களூக்கு கிடைப்பதனால் இவ்வித உண்ர்வு பல முனைகளில் வகிக்கிறது
3.herding instinct : இணைந்துவாழும் உந்துதலால் உண்டாகும் உள்ளுணர்வு.இதன் மூல காரணம் பாதுகாப்பு உணர்வு உண்டாகும் உள்ளுணர்வு
மேற்கண்டவைகளில் முதலாவது உள்ளுணர்வில் முன்வந்து நிற்பது உண்ணுதல் ஆகும். பசி இருக்கிறதோ,இல்லையோ பிறந்தவுடன் கன்று தட்டுத்தடுமாறி நின்று தன் தாயின் மடியில் பால் குடிக்க செல்லும்.
பச்சிளம் குழந்தையின் வாயில் தாயின் மார்பு பட்டவுடன் வாயை சப்பும். அதே வேளையில் தாயின் மார்புகளில் உள்ள உணர்ச்சி நரம்புகள் பாலை சுரந்து குழந்தை அதைக் குடிக்க அனுமதிக்கின்றன.இவ்வித உண்மைகள் அனைத்து ஜீவராசிகளூக்கும் பொருந்தும்.இதற்கு முன் அனுபமோ, பிறர் அறிவுறுத்தலோ வேண்டியது இல்லை.
இரண்டாவது வகை உள்ளுணர்வின் நோக்கம் சந்ததி உண்டாக்குவதாகும்.இவ்வித உணர்வு உயிர்களின் தொகை பெருகுவதற்கான வாய்பே ஆகும். இவ்விதமான உள்ளுணர்வு ஒரு ஜீவனுக்கு எப்போது தோன்றுகிறது என்று பார்த்தால்  தாயின் கர்பத்தில் உருவாகிறது என்று  ஆய்வாளர்கள் கூறுகின்றனர்..திருமூலாரும் இதையே வலியுருத்துகிறார்.
மூன்றாவது வருவது குழுவாக வாழ விரும்பும் உள்ளுனர்வு. இதன் மூலகாரணம் பாதுகாப்பு உணர்வு,பாலுணர்வு,துனை தேடல் உணவு தேடல் முதலியவற்றுடன் கூட்டமாக வாழும்  உணர்வு உள்ளத்தில் அலைமோதும்.ஒரே இன மிருகங்கள் கூட்டமாக வாழ்வதை காணலாம்.
இறைவன் படைப்பில் இவ் உள் உணர்வு தன்மையில் எல்லா உயிர்களும் ஒரே மாதிரியாக உள்ளவையாக படைந்தான். இவ் உள் உணர்வில் தோன்றும் செயல்கள்யாவும் பிறக்கும் போதே எல்லா உயிர்களூக்கும் உடன் அமைந்ததாக இருக்கிறது.