விரிந்து பரந்த வானம்,
நமது கால் அடியிலும் வானம்,நமக்கு மேலேயும் வானம்,நட்சத்திரங்களுக்கு அப்பாலும் வானம்,எப்பக்கம் திரும்பினாலும் வானம்-வானம்.அதன் ஆரம்பம் எங்கே ?.முடிவு எங்கே ஒருவரும் விடைகான இயலவில்லை.எவ்வகையிலும் கணக்கிட்டு சொல்வதற்கு இயலவில்லை.எவ்வகையிலும் கணக்கிட்டு சொல்வதற்கு இயலாத அளப்பரிய பெரு வெளியில் அனாதி இயற்கையாகவே நிரம்பியுள்ளது.ஆகாயம்-வான்-விண் எனப்படுகிறது.இதுவே ஐம்பூதங்களுக்கும் முதலாம் பூதமாகும்.இது மிக நுண்ணியதாய் அதி சூச்சுமாயிருந்தாலும்,கட் புலனாகாத கானக் கூடாததாய் உள்ளதாயும்,அதன் இருப்பு விளங்காமையால் ஆகாய பூதமென்று இல்லை என்பர் சிலர்.
இன்று நாம் காணும் சூரியனைப்போல் பல் ஆயிரம் ஓளி சிந்தும் விண் மீண்கள் பரவெளியில் படர்ந்து உள்ளது.விண் மீண்கள்,நட்சத்திரங்கள்,துனைக்கோள்கள் என அண்டத்தில் இருக்கிறது.நாம் பார்க்கும் சூரியன்,அதற்கு உட்பட்ட கிரகம்,வான்நட்சத்திரம் மட்டும் அல்லாது அதற்கு மேலும் ஆகாயம் அதற்கும் மேலும் விண் மீன் கூட்டம்,ஒளி சிந்தும் நம் சூரியனைப்போல் கூட இருக்கலாம் என விஞ்கானிகள் யூகிக்கின்றனர்.அதற்கு அப்பாலும் ஆகாயம்-ஆகாயம். அதன் அடி,நுனியார் அளப்பார்.
ஒன்று :-இன்று நாம் காணும் சூரியனை போல் பல் ஆயிரம் ஒளி சிந்தும் விண்மீன்கள் பரவெளியில் படர்ந்து உள்ளது.வின்மீன்கள், நட்சேத்திரங்கள்,துணைகோள்கள் என அண்டத்தில் இருக்கின்றன.நாம் பார்க்கும் சூரியன் அதற்கு உட்பட்ட கிரகம் ,வான் நட்சேதரம் மட்டும் அல்லாது அதற்கு மேலும் ஆகாயம் ,அதற்கு மேலும் வின் மீன் கூட்டம் ,ஒளி சிந்தும் நாம் சூரியனை போல் இருக்கலாம் என விஞ்ஞானிகள் யுகிகின்றனர் .அதற்கு அப்பாலும் அப்பாலும் ஆகாயம்...ஆகாயம் ...அதன் அடி நுனி யார் அளப்பார் .
ஆகவே பற்றுவதற்கு எதுவும் இல்லாத வானம் நாம் பர்த்துகொண்டுயிருக்கும் வின் பிரபஞ்ச வெளியில் ஒரு சிறிய பகுதியைத்தான் ,வெளிநிரைந்தவன் ,,பொருள் ஏகமயதோன்ரினும் அது முற்றிலும் அணு செறிவுடைய நுண் நிலை பொருளாகும் .ஆகவே பிரபஞ்ச வெளியிலுள்ள எல்லா பொருள்களும் மின் காந்த அலைகளை வெளிபடுதுகின்றன.அதற்குள் இருகின்ற மூலபொருள்கள் அணுக்கள் -எலக்ட்ரன் -இன்னும் மிக சிறிய பல்வேறு துகள்கள் ஆகியவை நுண்ணிய கண்களுக்கு புலபடதவையகவே இருக்கிறது .ஒரு வின் அணுவில் அகம் ,புறம் ,இடை ஆகிய முக்கூரும் உள்ளது .இவ் வின் அணுவில் அகமாயிருபதும் அதை சூழ இடைநிளையையிருபதும் இவ் அகம் நிறைந்துள்ள அருட்பெருஞ் சக்தியே .அவ்வாறு விளங்க காரணமாய் இருப்பதை நம் கருணை வள்ளல் அருளிய திரு அருட்பாவில்
"விண்ணினுள் விண்ணாய் விண் ஒரு விண்ணாய்
அண்ணி நிறைந்த அருட் பெருஞ்சோதி என்னும்
விண்ணறு விண்ணாய் விண்ணிலை விண்ணாய்
அண்ணி பயக்கும் அருட்பெரும்ஜோதி "
என்று அருட்பெரும்ஜோதி வள்ளலார் பெருமையுடன் விண்ணின் உயர்வை விளம்பினர்.அண்ணி நிறைந்தது என்றால் நெருங்கி சொறிந்து நிரம்பிய என்பது பொருள் ஆகும் .
மேலும் பிரபஞ்சம் முழுவதும் ஒருவித காந்த சக்ஹி நிறைந்தது காணப்படுகிறது .இக் காந்தம் பிரபஞ்சம் என்று சொல்லபடுகிறது இஃது கேலக்ஷி ஆகாயம் முழுவதும் காணபடுகிறது .இக் காந்த துகள்கள் கண்களுக்கு புலப்பட்டது .அதன் உருவம் கிட்டத்தட்ட நெல் போன்றது
ஒரு நெல் அளவில் கிட்டத்தட்ட சுமார் ஆயிரகனக்கனான அணுக்கள் அடங்கிவிடும் அது சதா எந்நேரமும் இரவு பகல் நேரத்திலும் சுற்றி திரிந்து கொண்டு இருக்கின்றன.அங்கும் இங்கும் அலை பாய்ந்து கொண்டு இருந்தாலும் ஒன்றை ஒன்று மோதாமல் ,ஒன்றை ஒன்று கவர்த்து இழுத்துக்கொண்டும .நெருங்கும்போது விலகி கொண்டும் அனந்த கூதடிகொண்டுஇருக்கிறது .இந்த காந்த அலைகள் விண்வெளி முழுவதும் பரவி இருப்பதோடு அதன் உற்பத்தி ஸ்தானம் "பால் வெளி "(மில்கிவே) என்று சொல்ல படுகின்ற இடம் .(மரணத்துக்கு பின் உயிர் இருக்கும் இடம் ).இந்த பால்வெளி சங்கு சக்கரம் போன்று வட்டமாக நெருப்பு பொறிகளை வாரி இறைத்து கொண்டு தன்னை தானே சுற்றி கொண்டுயருகிறது .
இந்த பால்வெளியின் தீசுடர் இருந்து வ்ள்ளமென வெளியேறிவந்த இந்த காந்த அணுக்களில் ஒரு துகல்தான் நமது உயிர் -உடலின் கருவாகும்
இந்த காந்த அணுக்களின் ஒரு துகள் கரு உற்பதியகும்போது அடி மூலையில் அடிக்கலாம் ஆகிறது.இதுவே ஜீவாத்மா -ஜீவன்-உயிர்-ஆவி -ஆன்ம -என்று அழைக்கிறோம்..இவ் விளக்கம் மூலம் மனித ஜீவன் ஆகிய உயிர்க்கும் வின் வெளிக்கும் தொடர்பு உண்டு என்பதை ஆறியலாம்.
........ஆகாயமாகி நின்று அண்ணிப்பான்தாழ் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
நமச்சிவாய வாழ்க -நாதன்தாள் வாழ்க
........என திருவாசகத்தில் மாநிக்கவாசகபெருமன் பாடியுள்ளார்.
இவ் வெளி நிறைந்து நிலை கொண்டு இருக்கின்ற விண்அணுக்கள் ஓவொன்றும் அருட் பெரும் ஜோதியின் விளக்கமும் செயலும் ஆதி முதலே இருந்து வருவது தெரிகிறது
"அண்டப்பகுதியின் உண்டைபிறக்கும்
நூறொரு கோடியின் மேற்பட்ட விரிந்தான் "- திருவாசகம்
வான் வெளியில் கோடிகணக்கான உலகங்கள் காணப்படுகின்றன.தெரியாத அண்டங்கள் இருகின்றனஎன்றும் .வின் விரிந்து கொண்டே போகின்றன என்றும் அறிகர்கள் கூறுகின்றனர
மேலும் இரவில் நாம் விண்ணில் காண்கின்ற நட்செதிரங்ககள் வெறும் ஒளி புள்ளிகள் அல்ல. அவை பிரமாண்ட வடிவம் கொண்டவை .இன்று நாம் காணும் சூரியனை போல் பல ஆயிரம் ஒளி சிந்தும் விண் மீன்கள் பரவெளியில் படர்ந்து உள்ளது.விண்மீன்கள் ,நட்சத்திரம் ,துணைகோள்கள் அண்டத்தில் இருக்கிறது
எந்த ஒரு நட்செதிரதிலும் உட்புற வெப்பம் மிக கடுமையாக பல மில்லியன் டிகிரி அளவில் இருக்கும்.வெளிப்புற வெப்பம் அந்த அளவுக்கு கடுமையாக இருக்காது .மைய பகுதியில் வெப்பம் அதிகம் என்பதுடன் அழுத்தமும் கடுமையாக இருக்கும் .
சூரியனும் மற்ற நட்செதிரங்கள் பெரிதும் ஹைட்ரஜன் வாயுவினால் ஆன உருண்டைகள் .ஹைட்ரஜன் அணு என்பது மையத்தில் ஒரு ப்ரோடானை பெற்றுள்ளது.அதை ஒரு ஏலேக்ட்ரான் சுற்றிகிறது .சூரியன் நட்செதிரங்கள் மைய பகுதியில் உள்ள கடும் வெப்பம் காரணமாக ஏலேக்ட்ரோன்கல் பியித்து கொண்டு போய்விடும்.அப்போது ஹைரஜன் அணு ஒன்றுடன் ஒன்று சேரும் (இதுவே அணு சேர்கை அணு சேர்க்கையின் பலனாக சக்தி வெளிப்படும் .சூரியனில் ஒவ்வாறு வினாடியும் அறுபது கோடி டன் ஹைட்ரஜன் .) இதுவே அணு சேர்க்கையின் விளைவாக மைய கருவில் இரண்டு புரட்டான்கலை கொண்ட ஹிலியம் (அணு எண் இரண்டு ) அணுக்கள் தோன்றுகின்றன.அதாவது ஹைட்ரஜன் அணுக்கள் ஹிலியம் என்ற வேறு அணுக்கள் முலமாக மாறுகின்றன .அனால் ஹைட்ரஜன் அணுக்கள் ஹிலியமாக மாறுவதுடன் அனுசெற்கை நின்று விடுவதில்லை
மையத்தில் பெரும் பகுதி ஹிலியமாக மாறியபின் ஹிலியம் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து கார்பன் அணுக்கள் (ஆறு புரட்டான் )உண்டாகுகின்றன . பிறகு கார்பனும் ஹிலியமும் இன்று சேர்ந்து ஆக்சிஜன் அணுக்கள் தோன்றுகின்றன .இரண்டு கார்பன் அணுக்கள் சேர்ந்து மங்கநிஷம் அணுவாக மாறிக்கொண்டு இருக்கும் .இவ்விதம் தொடர்ந்து அணு சேர்கை நிகழ்வதின் மூலமாக நட்சத்திரம் ஒன்றின் மைய கருவில் ஹிலியம் முதல் இரும்பு வரையிலான பல வகை அணுக்கள் தோன்றும் .
சூரியன் போன்ற நட்செதிரங்களில் இரும்பு வகையிலான மூலங்கள் தோன்றியபின் அணு சேர்கை நின்றுவிடும் .இரும்பு அணுதான் இவ்வித அணு சேர்க்கையின் கடைசி கட்டம் .இரும்பு அணுக்கள் சேர்ந்து வேறு அணுக்கள் உண்டாக வாயிப்பு இல்லை .ஆகவே இரும்பு உற்பத்தியுடன் அணு சேர்கை நின்று விடுகிறது
இரண்டு :- சூரியனை விட ஐம்பது அல்லது நுறு மடங்கு பெரிதாக உள்ள நட்செதிரங்களில் உள்ள அணுக்கள் வேறு வகையில் நடைபெறுகின்றன .அதாவது அணுக்கள் உற்பத்தி வேறு வகையில் நடைபெறுகிறது . அதாவது அணுக்கள் நியுட்ரானை விழுங்கும்போது வேறு முலகங்கள் உண்டாகுகின்றன .பெரிய நட்செந்திரங்களில் மையத்தில் தனி நியுட்ரான்கல் நிறையவே இருக்கும் எலக்ட்ரான்களை இழந்த நிலையில் உள்ள அணுக்கள் ஒன்றுடன் இந்த நியுட்ரான் மோத நேர்ந்தால் அணு கருவுடன் அது சேர்ந்து கொள்ளும் .இதன் விளைவாக அந்த அணு கரு நிலையற்றதகிவிடும் .அப்போது அந்த நியுட்ரான் சிதைவுஉற்று புரோடானாக மாறிஒரு எலெக்ட்ரானை வெளியே தள்ளும் .அவ்வித நிலையில் அந்த அணுவின் அணு எண் மாறுகிறது.அதாவது புரடான்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரிக்கிறது.அது வேறு மூலமாக மாறுகிறது .
முன்று :- பிரண்டனமான நட்செத்ரிரங்கள் ஒரு கட்டத்தில் வெடித்து சிதறும்.இதை சுப்பர் நோவா என கூறுபிடுவது உண்டு .அஃது அபூர்வமாகத்தான் நிகழ்கிறது.இவ்விதம் வெடிக்கும்போது பயங்கர வெப்பம் தோன்றுகிறது .அத்துடன் அங்குள்ள அணுக்கள் மீது கடும் அதிர்சி தாக்குதல் நிகழ்கிறது .அதன் விளைவாக அணுக்கள் மீது அதி வேகத்தில் நியுட்ரான் மோதும் .அப்போது தனி ஒரு அணு பல நியுட்ரான் கலை உட் கவர்கின்றன .இதன் காரணமாக அதிக எண்களை கொண்ட அதாவது அதிக எடை கொண்ட முலகங்கள் உண்டாகிகின்றன .இப்படி உண்டாகும் அணுக்களில் தங்கம்,யுரொனியம் ,முதலியன் அடங்கும் .
ஹிலியம் முதல் யுரொனியம் வரை மூலகங்கள் அனைத்தும் பல கட்டங்களில் ஹைட்ரஜன் இருந்தும் வயுவுளிருந்தும் தான் உண்டகிகின்றன .
இரண்டாம் தலைமுறை நட்சத்திரம் :- நட்செதிரங்கள் மையத்தில் உருவாகின்ற புது புது அணுக்கள் உள்ளிருந்து பொங்கி எழுவது போல அவ்வப்போது மேற்புறத்து வந்து பின்னர் அண்டவெளியில் பரவும் .அண்டவெளி துசியுடன் கலந்து மேகங்களாக உருவாகும் .இவை நமக்கு தலைக்குமேல் தெரிகின்ற மேகம் அல்ல .இஃது கோடான கோடி கிலோ மீட்டர்க்கு அப்பால் இருப்பவை .ஒரு கட்டத்தில் ஒன்று திரண்டு சுழல ஆரம்பிக்கும் .பிறகு ஈர்ப்பு சக்தியின் விளைவாக ஒன்று சேர்ந்து மொத்தையாகும் .பிரண்டனமான உருண்டையனபிறகு வேகமாக சூழ தொடங்கும் .அக்கட்டத்தில் ஈர்ப்பு சத்தியானது அந்த உருண்டையின் மையத்தில் உள்ள பொருளை பயங்கரமான அழுத்ததில் அமுக்கும்.அதன் விளைவாக அந்த உருண்டையின் மையத்தில் பல மிலியன் டிகிரி அளவுக்கு வெப்பம் தோன்றும் .அந்த வெப்பத்தில் அணுசேர்க்கை தொடங்கும் .அக்கட்டத்தில் அது முதல் தடவையாக நட்செதிரமாக பிரகாசிக்க ஆரம்பிக்கும் இஃது இரண்டம் தலை முறை நட்சத்திரம் என்றும் கூறுவதுண்டு .
சூரியன் இப்படியாகத்தான் ஒரு நட்செதிரமாக தோன்றியது .சூரியன் தோன்றும் பொது பூமியும் தோன்றியது .நமது உடலில் உள்ள அணுக்கள் உட்பட பூமியில் உள்ள அணுக்கள் அனைத்தும் ஏதோ ஒரு கால கட்டத்தில் அண்டவெளியில் நட்செதிரங்களில் தோன்றியவையே .அனால் நுண்ணிய அனுவகட்டும் பிரமாண்டமான நட்சத்திரம் ஆகட்டும் இவை அனைத்தும் வியக்கத்தக்க ஒரு ஒழுங்கு ,ஒரு கணக்கு உள்ளது .