செந்துருவை சேரலாம் செந்தழிழ்லை பாடலாம்
இந்திரனைப் போல் வாழந்துண்டு இருக்கலாம்,
மந்திரம்சேர் வெற்பகத்தையூடுஅருத்தவேலவர்க்கு

முன்பிறந்த கற்பகத்தை கை தொழுதார் கால்

மனம்


சிந்தனை
மனிதன் மிருகங்கலிருந்து எவ்வாறு வேறுபடுகிறன்?. அவன்எவ்வாறு அவைகளை விட உயர்ந்தவனாகக்கருதப்படுகிறான்?.இவையெல்லாம் அவனுக்கு கிடைப்பதற்க்குஅவனுடைய சிந்திக்கும் திறனும்,பகுத்தறிவும் தன்மையுமேகாரணமாக உள்ளன.சிந்தனை மனிதனால் செய்யப்படும் ஒருசிக்கலான செயலாகும்அவனது சிந்தனைகள் மூலமானஅவனுடைய மற்றைய செயல்கள் பாதிக்கப்படுகின்றன.சிந்தனை ஒர்உயர் நிலை செயலாகும்.சிந்தனை எப்போது தோன்றுகிறது:-இவ்வினாவே நம்மைஸ் சிந்திக்கத்தூண்டுகிறது அல்லவா?.நாம்எப்போது பிரச்சனைகளைச்சந்திக்கிறோமமோ அப்போதெல்லாம்சிந்தனை புரிகின்றேர்ம்.நாம் புதுமையான சுழ்நிலையைஸ்சந்திக்கும் போது சிந்திக்க ஆரம்பிக்கின்றேர்ம்.. நாமது வாழ்வின்லட்சியத்தை எவ்வாறு அடைவது என்ற வினா நாம் முன்எழும்போதெல்லாம் நாம் சிந்தனை புரிகின்ரிறேர்ம்.நாம்எதிர்க்கொள்கின்ற சிக்களைத் தீர்க்க முயலும் போது சிந்தனைப்புரிகின்றேர்ம்நாம் நமது பிரச்சனைக்கு தீர்வுகாணசிந்தனைபுரிகின்றேர்ம்.சிந்திப்பதை ஏன் கலையாக எடுத்துக்கொள்ளவேண்டும்:-கலையின் பொதுபண்புசுருக்கமான ஆற்றல்செலவிடப்படும்ஆற்றல் குறையக் குறைய கலை சுலபமாகப்புரிந்து கொள்ளப்படுகிறது.சிந்திப்பதை ஒரு கலையாகவேஎடுத்துக்கொள்ளலாம்சிந்திக்கும் கலையென்பது ஒருவர் சிந்திக்கும்முறை பற்றியதுஒவியம் வரையும் ஒவியக் கலைஞர் ஒருவர்தமது ஒவியங்களில் தமக்கே உரியமுத்திரைகளைப்பதிப்பார்.அவரது ஒவியங்களைத்தொடர்ந்து பார்த்துவருபவர்க்கு அவர் கையாளும் உந்திகள் சட்டென்றுபுலப்பட்டுவிடும்.கோடுகள்,வளைவுகள்,வண்ணம்......இவற்றைக்கொண்டே அவர் கையொப்பமிடவில்லை எனினும் இதுஇன்னார் வரைந்த ஒவியம் என்று எடுத்த எடுப்பில்பரிச்சியம்முள்ளவர்கள் கூறிவிடுவார்கள்.இதுபோல் எமுந்துதுறையிலும் இது மகரிஷி...அமரர் கல்கி...சண்டல்யன் என அவர்கள்எமுதிய நூல்களில் சில பக்கங்களளை படித்தால் நாம் தெரிந்துகொள்ளாலாம்.அவர்களுடைய எழுத்து முத்திரை அவ் புத்தகத்தில்பதிக்கப்பட்டுயிருக்கும்.இதே விதமாக சிந்தனையிலும்ஒவ்வொருவருக்ககும் உரிய தனிபாணி என்பது உண்டு.அந்தபாணியில் முதலில் கவனிக்க வேண்டியது அந்த சிந்தனையில்எவ்வளவு குறைந்த அள்வு மன ஆற்றல்செலவிடப்பட்டுயிருக்கிறது என்பதுதான்.சிந்தனைக்குத்தேவையானது
சிந்தனைக்கு தேவையான அம்சம் இரண்டு அவையாவன 1.நரம்புமண்டல அமைப்பு 2. மனோ நிலையாகும்.நரம்புமண்டலம்களைத்திருந்தால் சிந்தனை களைத்து வெளி வரும்.இரண்டாவதாகமனேர்நிலைஅதிகதுக்கம்அதிக பரவசம்,காமம்,மோகம்,செருக்கு,வஞ்சகம்சினம் அகிய சூறாவளிகளில் சுழலும் சமயத்தில்சிந்தனையும் சீர்கேடுகளை தாங்கிவரும்.ஒருநிலையில்லாமல் மனம்பிண்ணமாகிவிடும்.சிந்தனையும் உவர் மண்ணில் தோன்றியஉப்புநீர்போல அந்த தீயசீர் கேடுகளைத்தாங்கிவரும்.பிண்ணமானமனம் களைப்புற்ற நரம்பு மண்டலத்தின் மீது தொழில்படும்போதுவரும் சிந்தனை எப்படி இருக்கும்?. சீர்கெட்டுஸ் சிதறி சின்னாபின்னமாக இருக்கும்.ஆகவே பின்னமானதை விட்டு தெளிவானசிந்தனை முழமனமும் உறுதியான நரம்பு மண்டலத்தின் மீதுசெயல்பாடுபுரிவதால் வரும் வெளியீடு ஒருவர் சிந்தனைதெளிவாகவும்,சுருக்கமாகவும் அமைவது உறுதி.சிந்தனைநலமானதாக அமைய வேண்டும் ஏன்?.தெளிவான சிந்தனை மட்டும்போதுமா?. போதாது அது நலமாகவும் அமையவேண்டும்எதுசரியான சிந்தனையோ அதுதான் நலமானதுஇந்த சரியானசிந்தனை சிந்திப்பவருக்கும் அவர் சார்ந்திருக்கும் இந்த முழுஉலகிற்கும் நலம்,ஒத்திசைவுஉருபடியான பயன்வாழ்வைப்போற்றிக் காக்கும் பண்பு இத்தனையும் வழங்கும்சிந்தனைநலமாகசரியாக அமைய ஆதார சக்தியுடன்ஜீவன்-ஆத்மா)தொடர்பு இருப்பின் சிந்தனை நலமாகசரியாக அமையும்.
சிந்தனைக்கு மூக்கண் நிலை இன்றியமையாதது ஏன்?.ஆகவேநாம்முன்பு கண்ட நரம்பு மண்டலம்மனோ நிலை,ஆதாரசக்தி(ஜீவன்)தொடர்பு ஆகிய முக்கண்கள் அவசியம்நாம்சிந்திப்பதற்கு இவற்றில் ஏதாவது ஒன்று தொடர்பு இல்லையெனில்மற்றவை வீண்மழை எந்த நிலத்தில் பொய்கின்றதோ அந்தமண்ணு உகந்து மழைநீர் மாறிவிடும்.செம்மண் நிலத்தில் பெய்யும்மழை சென்நீர் ஆகவும்கரிசல் மண்ணில் பெய்யும் மழைநீர் கருநீர்ஆகவும்தான் தெரியும்அதுபோல் நரம்பு மண்டலம்பாதிக்கப்பட்யிருப்பின் அதற்க்கு உண்டான பலவீனமானசிந்தனையும்மனோநிலை பாதிக்கப்பட்டுயிருப்பின் அதற்குஉண்டான சிந்தனையும்ஆதாரசக்த்தியுடன் தொடர்பு இல்லாதசிந்தனை நல்ல நலமில்லாத சிந்தனையாகவும் இருக்கும் என்பதில்ஐயம் இல்லை.
சாங்கியம்என்பதற்கு தத்துவம் அல்லது சாத்திரம் என்பது பொருள்., "யோகம்என்பதற்கு கலை என்று அர்த்தம்."" ஆகவே யோகியர் வல்லவர் வாழ்க்கைக் கலைதனில்"....என்று சான்று பகர்கிறார்.கீதையிலும் சாங்கியம்,யோகம்-சாத்திரம்,கலை ஆகிய இரண்டும் பொதித்துள்ளன.சாத்திரம் மட்டு மாயின் அது வெறும் மனக்கோட்டையாகவேதான் இருக்கும்சங்கித சாத்திரத்தைப் புரிந்துகொண்டு விட்டபோதிலும் வாயைத் திறந்து பாடும் திறமை இல்லாவிட்டில் நாதபிரம்மத்தை நம்மால் உருவாக்கவியலாதுஆகவே தத்துவங்களுடன் கலையையும் புரிந்த் கொள்ள வேண்டும்.


ஆகவே சிந்தனைக்கு நரம்பு
நமது நரம்பு
மனிதனின்
1. பெருமூளை :- நினைவாற்றல் -புத்திக்கூர்மை2.சிறு மூளை :-உடலின் அசைவிகளை ஒருங்கினைக்கிறது.
3. முகுளம் :- இது மூளைக்குஸ் செல்லும் -வரும்
செய்திகளை அனுப்பும் இணைப்புபாலமாக
இருக்கிறது இருந்து ஒன்பது கிளை நரம்புகள் நேரிடையாகவெளிப்பட்டு முதுகுத்தண்டில்பிண்ணிக்கிடக்கின்றன.முதுகுத்தண்டில் இருந்து 32 சின்ன நரம்புகள்வெளியேறி உடம்பெங்க்கும் பரவிக்கிடக்கின்றனசித்தர்களின்வாக்குபடி 72,000 நரம்புகள் உள்ளன.
மூளையில்
இந்த நரம்புகள் ஒவ்வெண்ரும் ஒவ்வெரு காரியங்களைநிறைவேற்றுகின்றனஇதை மூளை நரப்புகள் எனக் கூறலாம்.
உடம்பில்
சித்தர்கள் கணக்குப்படி உடலில் 72,000 ஆயிரம் நாடிகள் (நரம்பு)=உள்ளனஅவை 1. இடக்கலை-இடப்பால்நரம்பு-2.பிங்களை-வலப்பால்நரம்பு 3.சுழுமுனைநரம்பு 4.புருடன்-உள்நாக்குநரம்பு5.காந்தாரி வலக்கண் நரம்பு 6. அத்தி இடக்கண் நரம்பு7.அலம்புடை வலதுசெவிநரம்பு 8. சங்கினி-இடதுசெவிநரம்பு.9.எருவாய் நரம்பு.இவற்றினுள்1.பெரு நரம்பு -11000 சிறுநரம்பு18000
2.பெரு நரம்பு-7000 சிறுநரம்பு 12000
3. பெரு நரம்பு-1000 சிறு நரம்பு2000
4. பெரு நரம்பு-1000 சிறுநரம்பு 3000
பெருநரம்பு - 6000 சிறு நரம்பு 7000
அகமொத்தம்
நரம்பு
தலமை நரம்பு மண்டலம் என்பது மனிதனின் மூளை-தண்டுவடம்எண்ணற்ற நரம்புகளைக் கொண்டதாகும்-இதுதான்ஏஎல்லாச்செயல்களையும் கட்டுப்படுத்திவருகிறது.ஆகவே
நரம்புகளின்
உதரணமாக
எழுதும்போது சிந்தனை கலந்த யோசனையை வழங்கும்செயலைச்செய்வது முன் முளையே செய்கிறது.மற்றும் எழதும்வேலையைச்செய்து கொண்டிருப்பது நடுமூளை ஆகும்அடிமூளைஇவ்விரண்டும் ஒழுக்காக செயல்படுகிறதா?. எனக்கண்கணிக்கிறது..
இப்போது நமக்கருகே ஒரு ரூபாய் நாணயம் ஒன்று மேசையில்இருந்து நமக்குத்தெரியாமலெயே நமது செய்கையினால்தள்ளப்பட்டு "கணீர்என்று சப்தத்துடன் தரையில் விழுகிறது.நாணயத்தின் மூலமாக எழுந்த ஒலி காதின் மூலமாக முதலில்முன்மூளைக்குச்செல்கிறதுஉடனே முன் மூளை தனதுவேளையான எழுதுவதை நிறுத்திவிட்டு அவ்கணீர்.
 நாம்எழுதிக்கொண்டுயிருக்கிறோம்நமது கவணம் முழுவதும்எழுத்திலேயே பூர்ணமாக நிலைத்து நிற்கிறதுநாம் எழுதும்போதுநடக்கும் காரியங்க்களுக்கு மூளையும் அதன் பாகங்க்களும் காரணகர்த்தாவாக இருக்கிறதுஇந்த மூளையின் நினைவு ஆற்றல்,செயல்திறமை எல்லாம் மனதிடம் இருந்தே பெறுகிறது.மிகுந்தசக்திவாய்த்தது மூளைதான் என்று தோன்றினாலும்கூடஉண்மையில் மூளையை இயக்கும் அத்தனை காரியங்களும்மனம்தான்.மனதின் விருப்பத்தைப் பொறுத்தே மூளைசெயல்படுகிறது.
 தொகுப்பே மூளையாகும்.
 மண்டலத்தின் பணி :-
72,000 நரம்புகள் உள்ளன.
 எந்த பாகத்தில் இருந்தாவதுமூளைக்குச்செய்தி போகவேண்டுமாயின் மேற்சொன்ன நரம்புகளின்வழியாக செல்கின்றன.அதுபோல் மனதின் மூலமாக உடல் இயங்கம்நடைபெற இவ் நரம்புகளின் முலமாகத்தான் செயலபடவேண்டும்.
மண்டை ஓட்டைத்திறந்து பார்த்தால் மனிதமூளை பாகங்கள் பழுப்புநிறந்தோடு வெள்ளை நிறமும் கலத்து காணப்படுகிறது.இம்மூளையின் பாகங்களில் லட்சக்கணக்கான நுண்துகள்கள் கொண்டதசையின் பாகங்கள்,மெல்லிய நரம்புநுனிகள் ஏராளமாகக்காணப்படுகிறதுஇந்த மூளையை மூன்று விதமாக பிரிக்கலாம்.
மண்டலத்தின் அமைப்பு :-
 சிரசில் உள்ள மூளையானது ஜீவன்நிற்கும் ஸ்தலமாகவும்-மனம் தனக்கு வேண்டிய உயிர் ஆற்றலைஅடிமுளையில் இருக்கும் ஜீவனிடம் இருந்து பெறுகிறதுஆகவேமனம் எக்காலத்திலும் தனியாக இயங்கக்கூடிய ஒன்றாகத்தான் அதுதிகழ்கிறது.மனதின் எண்ணங்க்களை செயல்படுதும்அலுவலராகத்தான் மூளை செயல்படுகிறதுநம் சரீரத்தில் உள்ளஒவ்வொரு உறுப்பும் நரம்புகளின் மூலம் மூளையுடன்இணைக்கப்பட்டுள்ளதுஇவ்விதமாக சரீரத்தில் உள்ள ஒவ்வொருபகுதியையும் மூளையின் உதவியால் ஆட்சிச்செய்துவருவது நமதுமனம்தான் என்பதில் ஐயம் இல்லை.
 மண்டலத்தின் அமைப்பு-அதன் பணி-நாடி சுத்தி செய்முறை..................ஆகியவை பற்றிகாண்போம்.
 முக் கண் அவசியம் என முன் அத்தியாயத்தில்பார்தோம்.அவையாவன அதில் முதன்மையானது நாரம்பு மண்டலஅமைப்பு.-மனோ நிலை -ஆதார சக்தியுடன் தொடர்புஆகியவையாகும்இதில் நரம்பு மண்டலம் பற்றி விரிவாககாண்போம்.
 இதுவரை சிந்தனைக்கு உண்டான சாத்திரத்தைப்பற்றிதெரிந்து கொண்டோம்இவ் தத்துவத்தை தெரிவதால் பயன் யாது?.இதைவாழ்க்கையில் நடை முறையில் ருசிக்கவைக்க எந்த கலையைநாம் அனுசரிப்பதுஅக் கலைதான் யாது?."



சிந்தனைத்துளிகள் :-மனம் பந்தங்களிலிருந்து விடுபட்டால் ஒழியசிந்தனைகள் சுதந்திரம் பெறாதுபந்தம் என்றல் உடல்அனுபவிக்கும் உணர்வுகள்அவை கிட்டாமல் போன ஏக்கங்கள்அல்லது நினைத்தவை மாறிவிட்ட வெறுப்புகள் என சிந்திக்கின்றனமனசில் ஏற்படும் முறுக்குகள்தான்.சில சமயம் சிந்தனையின் செல்வாக்கேகூட நாம் இப்படி சிந்தித்துவிட்டோம்இது நம் சிந்தனைஎனவே இதற்க்கு நாம் கட்டுப்பட்டவர்கள் என்ற ஒரு பந்தத்தைஏற்டுத்துவிடும்.இதுவும் ஒரு வகை ஊளைச்சல்தான்இதிலிருந்துமீளவேண்டும்ஆற்றல் மிக்க சுதந்திர சிந்தனைக்குவித்திடவேண்டும்.நமது மன முதிச்சிக்கும் பரிணாம வளர்ச்சிக்கும்ஏற்ற விதத்தில் சிந்தனை அமைய வேண்டும்இதனால் 1.சிந்திப்பவருக்கும் நலம். 2) அவரது சூழ்நிலையில் ஒர்ஒத்திசைவான நயம் பரவுதல் . இவை இரண்டும் நல்லசிந்தனையில் இருக்க வேண்டும்.கலைப்பண்பு அற்ற சிந்தனை தறிகெட்டு ஒடும்.பயனற்ற சிந்தனைகெட்ட சிந்தனைபலவீனமானசிந்தனைதிசை திருப்பும் சிந்தனை,சீரழிந்த சிந்தனை இவை நம்வளர்ச்சிக்கு தடை.கட்டுத்திட்டமற்ற சிந்தனை கலைப் பாங்க்குள்ளசிந்தனையாக மாற்றினாலொழிய நாம் மேன் மேலும் வளர்ச்சிபெறுதல் இயலாது.நரம்பு மண்டலம் களைத்திருந்தால் சிந்தனனகளைத்து வெளிவரும்மனோநிலை - அதிக துக்கம்அதிக இன்பம்,அதிய பரவசம்காமம்,மோகம்,செறுக்கு,வஞ்சகம்சினம் ஆகியசூறாவளிகளில் சுழலும் சமயத்தில் சிந்தனையும் உவர் மண்ணில்தோன்றிய உப்பு நீர் போல அந்தச்சீர்கேடுகளைத் தாங்கிவரும் மனம்பிண்ணமுற்றிபதன் சின்ங்கள்.சிந்தனை கலாபூர்வமாக தெளிவாகசுருக்கமாக ஆற்றல் மிக்கதாக அமைவதோடு உருபடியானசிந்தனையாகவும் இருக்கவேண்டும்.மனதில் பயம்,கோபம்,ஏமாற்றம்போன்றவை இருந்தால் எண்ணங்களின் சக்தி மிகவும்குறைவாகத்தான் இருக்கும்.நமக்குள் தோன்றும் இது போன்றஉணர்வுகளால் உந்தப்படும் போது பொதுவாகவும் நிதானமிழந்துவிடுகிறோம்என்ன செய்கிறோம் என்று தெரியாமல் சிலநேரங்களில் தவறான வார்த்தைகளை பேசி விடுகிறோம்,தவறானசெயல்களிலும் இறங்கிவிடுகிறோம்பின்னர் வருத்தப்ப்டுகிறோம்.இப்படி இல்லாமல் நம் மனதிலிருக்கும் தேவையற்றஎண்ணங்களை அகற்றித்தூய்மையான் எண்ணங்களை நிறைதுஅமைதியான மனநிலையை அடைவதின் மூலம் நிச்சயம்பிரச்சனைகளைஸ் சமாளிக்க முடியும்.சிலர் எத்தனையோபயிற்சிகளில் கலந்து கொண்டாலும் வாழ்க்கையில் முன்னேறாமல்இருக்கிறார்கள்பயிற்ச்சிகளில் கலந்து கொண்டால் மட்டும்வாழ்க்கையில் வெற்றி பெற முடியாதுமுதலில் நம் கடமையைஅடைவதற்குதன்னுடைய எண்ணத்தையும்சொல்லையும்நம்பிக்கையாக மாற்றி செயலைத்திவிரமாக உழைக்க வேண்டும்.அப்போதுதான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்ஏனெனில்ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்திறமைகளும் , ஆற்றலும் உண்டு.பயிற்சிகள் கொடுத்து எந்த ஆற்றலையும் திறமையையும்உடலுக்குள் திணிக்கமுடியாதுஏற்கனவே எல்லா ஆற்றலும்திறமைகளும் நமக்க்குள் இருக்கின்றனஅவற்றை தடுக்கும்தடைகள் மட்டும் நீக்கினால் போதும்ஆற்றல் வெளிப்படத்தொடங்கிவிடும்.நம் ஆற்றலைத் தடுக்கும் தடைகளை நீக்குவதற்குநம் மனோ பயிற்சி அவசியம்.எப்படி வாழவேண்டும் எனஆசைப்படுகிறீகளோ அந்த வாழ்க்கையை உங்களது மனதில் படம்பிடியுங்கள்இந்த லட்சியம்தான் முக்கியம்மேலும் பயன்தருவதாயும்ஆக்கபூர்வமாகவும் இருக்க வேண்டும்சிந்திப்பதற்காகஎடுக்கப்பட்ட சக்திநேரம் செலவாகிறதுஉருப்படியான பயன்தராவிட்டால் காலம் வீண்செலவான் சக்தியும் வீண்.சிலர்உட்கார்ந்து தொடர்ந்து சிந்திந்துக்கொண்டிருப்பார்கள்.எண்ணச்சங்கிலி ஒன்றன் பின்ஒன்றாகத்கோர்த்துக்கொண்டே போகும்அன்றாடவாழ்வில் எந்தஉருப்படியான் மாற்றத்திற்க்கும் அது வழிவகுக்காது.அவர்கள் பகற்கனவு காண்பவர்கள் ஆகி மனம் இடைவிடாது சிந்தித்ததால் செயல்இழத்துவிடுகிறது.. அவர்களின் சொந்த வாழ்வின் முக்கியமானகட்டங்களில் ஏற்படும் திருப்பங்க்களில் அவர்கள் பலவீனர்களாக்நிற்பார்கள்.விழிப்புடன் செயலாற்றவோ,சட்டென தீர்மானம்எடுக்கவோ அவர்கள் வலுவிழந்துகாணப்படுகின்றனர்.உருப்படியின்றியோசித்து,யோசித்துச்சுற்றித்திரிந்த மனம் வேறுஎன்னஆகும்.இப்படித்தான் ஒரு திட்ட வட்டத்தன்மையின்றி வாழ்க்கைஸ்சக்தியை வீணாக்குதலலும் தோல்வியை சுமந்து தள்ளப்படும்.எதுஉருப்படியான சிந்தனை?. மனம் ஒரு விருப்பத்தை நிறைவேற்றஎழுபும் எண்ண அலைதான் சிந்தனைஅந்த எண்ண் அலைஒழுங்கான வளர்ச்சி பெற்று செயலாகப்பரிணாமம்அடையவேண்டும்.சிந்தனை குழந்தையாகவே நின்ரு விடுவதுஇயற்கையல்லஅது வளர வேண்டும்.வளர்த்து உருப்படியானவிருப்பம் நிறைவேறியும் அது செயலாக முழுமையாக்கவேண்டும்.குழந்தைகுழந்தையாகவே நிற்பது ஒருகோளாறு.அத்துடன் ஒரு குழந்தை போதாது என்று குழவிப்பருவத்தைக் கடக்கவே முடியாத நூற்றுக்கனக்கானலட்சக்கணக்கான சிந்தனைகளை ஈன்று கொண்டே செல்வதுமாபெரும் கோளாறு.

"
சித்தத்தின் ஒருமுனைப் பாங்கின் ஆற்றல் எவ்வவு பெரிது:-உலகநடவடிக்கைகளிலும் சித்தத்தின் ஒருமுனைப் பாங்கு இருத்தல்அவசியம்உலக நடவடிக்கைகளிலும் சித்தத்தின்ஒருமுனைப்பாங்கு தேவைப்படுகிறதுஉலக நடவடிக்கைக்குதேவையான குணங்கள் வேறுபரமாதத்திற்குத் தேவையானவைவேறு என்பதல்லாஉலக நடவடிக்கைச்சுத்தி செய்தல் என்பதுதான்பரமார்த்தம் என்பதுஎத்தகைய காரியமாயுனும் அதனால் வரும்புகழும்அவமானமும்., வெற்றிதோல்விகளும் உங்கள் மனதின்ஒருமுனைப் பாங்குபொறுத்திருக்கிறது.வியபாரம்-விவகாரம்-சாத்திர ஆராய்ச்சிஅரசியல்ராஜதந்திரம் ஆகிய எதை எடுத்துக் கொண்டாலும் அதில்கிடைக்க கூடிய வெற்றி அவற்றில் ஈடுபடுவோரது சித்தத்தின்ஒருமுனைப் பாங்கு பொறுத்தே அமையும்.நெப்போலியனைப்பற்றிசொல்வதுண்டுஅவன் யுத்தத்திற்கு வேண்டியஏற்பாடுகளையெல்லாம் செய்து முடித்துவிட்டானாயின்போர்க்களத்திலேயே கணித தத்துவங்களை ஆராய்வதில் முனைந்துவிடுவானாம்கூடாரங்களில் குண்டுமாரி பொழிந்துகொண்டிருக்கும்,வீரர்கள் மடிந்து கொண்டிருப்பார்கள்., ஆனால்நெப்போலியனது சித்தம் தான் கணிதத்திலேயே ஆழ்ந்து நிற்கும்.நெப்போலியனது சித்தத்தின் ஒருமுனைப்பாங்க்கு மிகவும்உயர்ந்தது."உமர்கலிபாவைப்பற்றியும் இவ்வாறுசொல்வதுண்டு.போர்க்கிடையில் பிராத்தனை நேரம் வந்தவுடன்அவர் அங்கேயே (போர்களத்திலேயே)சித்தத்தை ஒருமுகப்படுத்திக்கொண்டுமண்டியிட்டுப் பிராத்தனைபுரியத்தொடங்கிவிடுவாரம்.அவரது சித்ததின் ஒருமுனைப்பாங்க்குகாரணமாகயாருடைய வெட்டுண்டு மடிகிறார்கள் என்பதும்அவருக்கு தெரியாதாம்."பக்கிரி ஒருவனுக்கு உடலில் அம்பு ஒன்றுபாய்ந்து விட்டதுஅதனால் அவனுக்குமிகுந்த வேதனைஉண்டாயிற்றுஅக்காலத்தில் குளோரோபாம் போன்றநினைவைப்போக்கும் மருத்து அக்காலத்தில் வரவில்லை.மிகவும்சிக்கலான நிலமை.அவ் அம்பை புடுங்க்கும்போது வேதனைஇன்னும் அதிகமாகும்.ஆகவே மாலை பிராத்தினை நேரத்தில்அவனது சித்ததின் ஒருமுனைபாங்குயிருக்கும் போது அம்பைஎடுத்தனர்.அம்பை பிடிங்க்கி எடுத்ததே அவனுக்குதெரியவில்லை.ஒருமுனைப்பாங்க்கு எவ்வளவு ஆற்றல் உள்ளதுஎன்பது தெரிகிறது.உலக நடவடிக்கையிலும் சரிபரமாத்திலும் சரி.சித்ததின் ஒரு முனைப் பாங்கு இல்லையேல் வெற்றி கிட்டுதல்அரிது என்பது கருத்துசிததத்தின் ஒருமுனைப் பாங்குஇருக்குமாயின் திறமையில் ஒருபொழுதும் குறைவிராது

ஒரு 60 வயது கிழவனாயிருந்த போதிலும் வாலிவனைப் போன்றஉற்ச்சாகம் , திறமையும் உன்னிடத்தில் காணப்படும்.. மனிதனுக்குவயது ஆகஆக முதுமை ஏற,ஏற அவன் மனம் அதிக உறிதிபொற்றுக்கொண்டே வர வேண்டும்.பழத்தைப்பாருங்கள்முதலில்அது பசுமையாய் இருக்கிறது., பிறகு பழுத்து அழுகிக் காய்த்துவிடுகிறது.. ஆனால் அதே சமயத்தில் உள்ளேயுள்ள விதைகொட்டியாகிக் கொண்டே வருகிறது.. வெளியிலுள்ள இவ்வுடல்நழுவி விழுத்துவிடும்.ஆனால் வெளியிலுள்ளது பழத்தின்முக்கியமான பாகுதி அல்ல.அதன் சாரமான பகுதிஅதன் ஆன்மா-அதன் விதையேஇதே விஷயம்தான் உடலைப் பற்றியும்உடல்முதுமை அடைந்து கொண்டுயிருந்தபோதிலும் ஞாபகசக்திவளர்ந்துகொண்டும் அறிவு மேன்மேலும் ஒளிபெற்றுக் கொண்டும்இருக்க வேண்டும்,. ஆனல் அவ்வாறு நடப்பது இல்லை.ஆகவேஒருமுனைப்பாங்க்கு இல்லையேல் கைகூடாது.மனதைஒருமுகப்படுத்தல் என்பது என்ன ?

கவனம்



ஸம்ஸ்காரம் :


நம் உயிர் சக்தியானது மனதின் மூலம் உடலில் உள்ள ஐம்பொறிகளையும் இயக்கி வெளிபுற பொருள்களையும்,அகத்தூண்டல்களாலும் தன் ஆற்றலை பயன் படுத்தி மனதின் பதிவேட்டில் அவ் பொருட்களை, நிகழ்சிகளையும் பதிவு செய்து கொள்கிறது.மானிட வாழ்க்கை பல ஸம்ஸ்காரங்கள் பொருந்தியதாய் உள்ளது. நம் மூலமாய்  எண்ணிலடங்காத காரியங்கள் நடந்து கொண்டே யிருக்கின்றன. நாம் அவைகளை கணக்கிட தொடங்குவோமாயின்  அதற்கு ஒரு முடிவேயிராது.இருபத்திநாங்கு மணி நேரத்தில் நடைபெறும் காரியங்களை மேலெழுத்த வாரியாய்ப் பார்த்தாலும் அவைகளின் தொகை எவ்வளவு அதிகமாகும் என்கிறீர்கள்?. உணவருந்துதல்-உறங்குதல்-நடத்தல்- சுற்றுதல்- வேலை செய்தல்- எழுதுதல்-பேசுதல்-படித்தல்- ஆகிய இவைகளைத் தவிர பல வகைக் கணவுகளும்-விருப்பு-வெறுப்புகளும்-மான அவமானங்களும்-இன்பதுன்பங்களும்-என்று எண்ணிலடங்காத வகையில் அவை கணப்படும்.அவை அனைத்தும் ஸ்ம்ஸ்காரங்களும் நம் மனதில் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.ஆகையால் வாழ்க்கை என்பதென்ன வென்று ஒருவர் எண்ணக் கேட்பாராயின் நான் அதை ஸ்ம்ஸ்காரங்களின் தொகுதி என்றே விளக்குவேன்.ஸம்ஸ்காரம் நல்லது, தீயது என்ற இருவகையாயுள்ளது.இரண்டின் விளைவுகளும் மனித வாழ்க்கையில் ஏற்படுவன.
உயிர் சக்தி புலன் கள் மூலம் பிற இயக்கத்தோடு தொடர்பு கொள்ளும் போது தனது நிலையில் எழுச்சி அடைந்து தனது உடல் இயக்கத்திற்கும்,தொடர்பு கொள்ளும் பொருள்களுக்கும் அல்லது நிகழ்சிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அழுத்தமாக,ஒளியாக,சுவையாக,மணமாக உணர்கிறது. இந்த உணர்சிகளை ஒப்புவமையால் காலம்,தூரம்,கணிப்புக்கு எண்ணுதல் என்ற சொல் குறிப்பாகி அதுவே  எண்ணம்  என்று வழக்கப்பெறுகிறது. உயிர் சக்தியின் இயக்கவிளைதான் எண்ணம்.அது அறியும் திறன் உடையதால் அறிவென்றும் பேசப்படுகிறது.ஆகவே உயிர் சக்தி எழுச்சியால் மனம் செயல் படுதல் என்பது உறுதியாகிறது.3.
மனம் இயங்கிக் கொண்டுதான் இருக்கும். அதுதான் அதன் இயல்பு,அதுதான் அதன் தன்மை,அதுதான் அதன் இயற்கை.அதாவது எண்ணங்கள் பிறத்து கொண்டுதான் இருக்கும்,ஒன்றன் பின் ஒன்றாக பிறந்து வளர்ந்து மற்றொண்டுக்கு தன் இடத்தைக் கொடுது விட்ட சென்று கொண்டுதான் இருக்கும்.
அமரர் வாசு கண்ணன் அவர்கள் எழுதிய உள் மன ஆற்றல் நூலில் மனதை மூன்று பிரிவாக பிரிக்கிறார். 1.புறமனம் என்றவெளிமனம்.2.உள்மனம் 3 ஆழ்மனம் அல்லது அடிமனம்.
வெளிமனம் :- இந்த வெளிமனமானது நாம் தினமும் தூங்கி எழுந்தது முதல் தூங்க் செல்லும் வரையிலான  பல செயல்கள் வெளிமனம் மேற்பார்வையிலேயே நடைபெறுகிறது. நமது வாழ்கையில் அன்றாட செய்கிற உழைப்பு-பிழைப்பு,மற்றும் நமது சுற்றுப்புற சுழ்நிழைக்கேற்ப நாம் நடந்து கொள்ளும் நடத்தை,பேச்சு,உண்பது-உடுப்பது வரை உள்ள சகல காரியங்களும் உணர்வின் பொருட்டு நமது எண்ணதின்  அடிப்படையில் valindary organs துனைகொண்டு நடைபெறும். இக் காரியங்கள் எல்லாம் வெளிமனத் தொடர்பால் நடக்கிறது.
நாம் உறங்கி எழுந்ததும்,படுக்கைய விட்டு நகர்வது-மற்றும் பல்துலக்குவது முதல் ஆரம்பமாகும் அன்றாட வேலைகள் ஆன உண்பது முதல் உடுப்பது வரையுள்ள செயல்களை செய்து முடிக்க நாம் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.இயந்திரம் போல் அன்றாட வேலைகள் தொடர்சியாக நடைபெறும்.
இவ் வேளைகளை வெளிமனம் ஐம்புலங்கள் வழியாக மென்மையாகவே இயக்குகிறது.பாற்பசை யிருக்கும் இடம், பாத்தூரும் இருக்கும் இடம்.துணிமணிகள் இருக்கும் இடம்  ஆகியவற்றை ஐம் புலன் கள் வழியாக கண்டு உணர்ந்து,ஐம்புலங்கள் மூலமாக எல்லாம் நடைபெறுகிறது
இப்போது மணியைப் பார்கிறோம் மணி ஒன்பது பத்துமணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும், அல்லது முக்கிய நபரை பத்து மணிக்குள் காண வேண்டும் என்ற நிலையில் இருக்கும் போது"ஐயோ" நேரம் ஆகிரதே, விரைவில் செல்ல வேண்டும் என வெளிமனம் சிறகு அடித்து பறக்கிறது. அவ்வளவு தான்,அவ்வளவுதான் நம் செயல் பாடுகளில் உடனே எத்தை வேகம் ,பரபரப்பு எற்படுகிறது. விழுந்து அடித்துக் கொண்டு கையில் கிடப்பதை பையில் திணித்து கொண்டு பஸ்சை பிடிக்க ஒடுகிறோம். இச்செயல்களை சிறிது எண்ணிப்பார்த்தால் நமது வெளிமனதின் செயல்கள் புரியும்.நேரமாகிவிட்டதைக் கண்ணால் கண்டமனம் விரைவில் புறப்பட மூளைக்கு உத்திரவிட்டு மூளையின் உதவியால் நரம்பு மண்டலத்தை விரைவாக இயக்க திணித்து விடுகிறது. இவைகளை நாம் தானே செய்கிறோம் என்று எண்ணாமல் நமது வேலைகளை துரிதப்படுத்தியது எதுவென சிந்தித்தோம் ஆனல் ஒரளவு வெளிமனதைப் புரிந்து கொள்ள முடியும்.




சித்தத்திலுணடாகும் விருத்திகள் :-ப்ரமாண்ம் :- பிரமை என்பது இதுவரை எதனாலும் அறியப்படதா தத்துவத்தை விஷயமகக் கொண்ட அறிவே எதனால் அது உண்டாகின்றதோ அது பிரமாணம் எனப்படும்.அத்தகையப் பிராமாணத்தின் ஸாமான்ய ல க்ஷ்ணத்தின் உட்பிரிவை மட்டும் பதஞ்சலி இங்கு கூறியிருக்கிறார்.
1.
 ஸ்ரீ ராமபிரான் தன் தம்பியிடம் அனுமனைப் பற்றிக் கூறுவதை கேளுங்கள்
தம்பி இந்த அமைச்சன்(அனுமன்அழகான குரலில் பேசும் திறமை உடையவன்.இனிய சொற்களை அன்புடன் பேசவல்லவன்வேதத்தை நண்கு கற்று உணர்ந்தவன்இவன் ஒரு சொல்லைக் கூட தவறாகப் பயன்படுத்தவில்லைஅவன் நிறையவே பேசினான்.சொற்குற்றமோ,பொருள் குற்றமோ அவன் பேச்சில் இல்லை.புருவத்தின் நெரிப்பிலோ நெற்றியின் அசைவிலோஎதையும் தவறாக இவண் உணர்த்திக் காட்டவில்லைஇவன் பேச்சுஇதயத்தின் ஆழத்திலிருத்து வருவது தெளிவாவும்தடுமாற்றம்இன்றி நடுக்குரலில் பேசுகிறன்இவன் பேசுவதைக் கேட்டாலேமனதிற்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறதுஇத்தகையஅமைச்சனை உடைய மன்னன் தான் எடுத காரியத்தில் எல்லாம்வெற்றி பெறுவது உறிதியன்றோ! "இவையே நேரடி சாட்சியம்அல்லது உணர்தல் என்பதகும்.இவை பிரமாண்த்தின் முதல்பிரதியட்சம் எனப்படும்ஆகவே இந்திரியங்கள் வாயிலாகவிஷயத்தை நாடுகிறது சித்தம்இந்திரியங்களுடன் சேர்த்தேஅதற்க்குப் பரிணாமம் உண்டாகிறது..பிரமாணம் (அளவீடுகள்அல்லது இலட்சியம்)- இதனால் பொருள்கள் மற்றும் மதீப்பீடுகள்மனதால் அளவிடப்பட்டு அறியப்படுகினறன.பொறிகள் ஒருவரைநமக்கு கெட்டவராகத் தோன்றுவதும் நல்லவராகத் தோன்றுவதும்இந்த மனநிலைக் காரணமாகத்தான்ஒருவரைப்பார்க்கும் போதுநாம் அவரை மட்டுமோஅவருடைய செய்கையை மட்டுமோபார்த்து எடை போடுவது இல்லைஅவர்களுடைய செய்கைஅவர்இருக்கும் சூழ்நிலையை வைத்து அவரை நாம் எண்ணிப்பார்க்கிறோம்உதரணமாக எடுத்துக்கொள்வோம்நமது கண்முன்னே ஒருவர் "ஹரே ராமாஹரே கிருஷணாஎன்றுஎழத்துக்கள் பதிக்கப்பட்ட மஞ்சள் நிறப்போர்வையைப் போர்த்திக்கொண்டு செல்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள் அவர் ஒருபக்திமான் என்று நாம் நினைக்ககூடும்அதுதான் இயற்கைஅவர்போர்த்திக் கொண்டுள்ள போர்வையின் சூழ்நிலையை வைத்து நமதுமன நிலைவுணர்வு அவ்வாறு நினைக்கத் தூண்டுகிறது.உண்மையை ஆராய்ந்து பார்த்தால் அவர் அந்தப் போர்வையைதன்னுடைய தீய செயலை மறைக்கும் போர்வையாக வெளிவேஷத்திற்காகவும் போர்த்தியிருக்கலாம்உண்மை அவருக்குமட்டும் தெரித்துயிருக்கலாம்அல்லது அந்தப் போர்வைஅவருடைய பக்கது வீட்டுககாரருடையதாக இருக்கலாம்,தங்களுடைய வீட்டில் மறத்து வைத்துஸ் சென்ற போர்வையைதனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் வேடிக்கையாகப்போர்த்திக் கொண்டு சென்று திரும்பிக் கொடுக்கவும் போய்க்கொண்டிருக்கலாம்இதைப் போல் மஞ்சள் காமாலை தோஷமுள்ளஒருவருடைய கண்ணுக்கு அவர் பார்த்த பொருள்கள் எல்லாம்மஞ்சளாகத் தெரியும் ஆனால் அந்தப் பொருள் மஞ்சளாகத்தான்இருக்கவேண்டும் என்பதில்லை.


கவனம்


நாம் ஒரு இடத்தில் இருக்கும் போது நம்மை பல்வேறுதூண்டல்கள் தாக்குகின்றனநமது புலனுறுப்புக்கள்
அனைத்தும் தூண்டப்படுகின்றனஇருப்பினும் நாம் பல்வேறு தூண்டல்களுக்கும் ஒரே சமயததில் பதில் அளிக்க முடியாதுநாம்நமக்கு விரும்பிய சூழ்நிலைகளில் வேண்டிய தூண்டலைத்தேர்ந்தெடுத்து துலக்கல் புரிகிறோம்இதனையே நாம் கவனம்என்று பொதுவாக அழைக்கலாம்.கவனம் என்ற சொல் நமக்குப்புதியதல்லநாம் எல்லோரும் இச்சொல்லை அடிக்கடிஉபயோகப்படுத்தி வருகிறோம்உதரணமாக ஆசிரியர் பாடம்கற்பிக்கும் போது மாணவர்கள் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறர்கள்மாணவர்களும் ஆசிரியர் கூறுபவற்றைகூர்த்து கவனிக்கிறார்கள்.இவ்வாறு இவர்கள் வகுப்பறையில்இருக்கும்போது வகுப்பறையினுள்ளும்வகுப்பறைக்கு வெளியிலும்பல்வேறு தூண்டல்கள் இருப்பதை உணர்கிறார்கள்அவை எல்லாம்அவர்களைக் கவரும் பொருட்டு தாக்குகின்றன.. இருப்பினும்,மாணவர்கள் ஆசிரியர் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருப்பர்.மாணவர்கள் தங்களது கவனத்தை ஆசிரியர் மீதுசெலுத்துகின்றனர்இதை கவனக்குவியல் எனஅழைக்கலாம்.மற்றதூண்டல் யாவும் அவர்களுது கவனத்தின்விளிம்பில் இருக்கின்றன என்று கூறலாம்..அவை எப்போதுவேண்டுமென்றாலும் அவர்களது கவனத்தைக் கவரலாம்.ஒருவன்ஒரே சமயத்தில் பல்வேறு தூண்டல்களால் தாக்கப்படுகிறான்.அவற்றில் ஒன்றை அவன் தேர்ந்தெடுத்து அதன் மீது தனதுஆர்வத்தைஸ் செலுத்துகின்றான்இதனையே நாம் கவனம் என்று அழைக்கிறோம்இச் செயலில் அவனது உள்ளமானது ஒருதூண்டலின் மீது ஒருமுகப்படுத்தப்படுகிறதுநமது கவனமும்ஆர்வமும் இணைந்துதான் செயல்படுகின்றன்ஒன்றுஇல்லையெனில் மற்றது இருக்காதுஆகவே மனிதன் ஒருவன்,செயல் ஒன்றில் ஈடுபடும் போது அவனது கவனமும்,ஆர்வமும்இயைந்து செயல்படுகின்றனஅவற்றைப்பிரிக்கமுடியாது.


கவனத்தின் தன்மை :-கவனம் நமது வாழ்வில் பெரும்பங்கு ஏற்கிறது,சாலையில் நடக்கும் போது கவனம் இல்லையெனில் விபத்துக்களைச் சந்திக்க வேமண்டியுள்ளதுகவனக்குறைவு பெரும் பொருள் இழப்புக்கு ஏதுவாகிறது.
1.
 கவனம் நமதுபுலன் உணர்வுப் பாகுபாட்டுத் திறனை அதிகரிக்கிறது.இதனால் பல்வேறு தூண்டல்களுக்கு நடுவே தமக்கு வேண்டியவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றை நன்கு அறியஆராய வழி ஏறபடுகிறது,கவனத்தின் மூலமாக பல பொருட்களைப் பற்றிய அறிவு ஏற்பட ஏதுவகிறது.
2.
 கவனம் நமது சக்தியை ஒருமுகப்படுத்தி மிச்சப்படுத்துகிறது,உதரணமாக ஒருவன் நீலநிறத்தில் பருத்தி ஆடை ஒன்று வாங்க நினைத்தால் அவன் கடைவிதியில் நாடத்து கொண்டிருக்கும்போது துணிக்கடைகளில்தான் அவனது கவனம் முதலில் செல்லுகிறது.மற்றைய கடைகளின் மீது அவனது கவனம் செல்லுவதில்லைமேலும் துணிக்கடை ஒன்றில் நு
3.
 4
 கவனத்தின் மூலமாக ஒருவனது நினைவு வளர்ச்சி அடைகிறது.ஒருவன் கடந்தகால அனுபவங்களை நங்கு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமெனில் அவனுக்கு கவனம் இன்றியமையாததாக உள்ளதுகவனம் இருப்பின் ஒருவன் தனது அனுபவங்களை எளிதில் மீட்டறிந்து செயல்படஏதுவாகிறதுஇதனால் நமது நினைவாற்றல் விருத்தியடைகிறது.
5. 
அடுததபடியாக கவனம் நமது திறனை அல்லது திறமையை வளர்க்க உதவுகிறது,நெருக்கடி நிலமைகளை ச் சமாளிப்பதற்கு கவனம் உதவுகிறது,. ஒட்டப்பத்தையம்மோட்டார் சைக்கிள் பந்தையம் போன்றவற்றில் எந்த விளையாட்டு வீரர் மிகவும் கவனத்துடன் செயல்படுகின்றாறேர் அவரே வெற்றி பெறுகிறார்.கவனமில்லாதவர்கள் போட்டிகளிலும்வாழ்க்கையிலும் வெற்றி பெருவதிலை.


மறதி

மறதி என்பது யாவருக்கும் பொதுவானதே.மறதி என்ற சொல்லில் ஒருவன் தான் முன்பு கற்றவற்றையும் அறிந்தவற்றையும் மறந்து விடுகிறான் அல்லது அவை நினைவில் இருந்து விலகி விடுகின்றன. நாம் பொதுவாக மறதியைக் குறித்து கவலையுறுகிறோம்.ஆனல் மறதியானது ஒரு விதத்தில் நமக்கு நிம்மதியான வாழ்வை தருகிறது.நாம் அன்றாடம் வாழ்வில் நடக்கும் அத்தனை நிகழ்சிகளையும்,அனுபவங்களையும் நினைவில் கண்டோம் அனால் நமது உள்ளம் தெளிவற்ற ஒரு சிலந்தி வலை போன்று காட்சியளிக்கும்.அமைதியான வாழ்வை அடைய ஒருவன் சில சொற்பதனமானவைகளை மறந்துதான் ஆக வேண்டும். ஆகவே மறதி நமக்கு கிடைத்த அனுகூலங்களில் ஒன்று.ஆனால் நாம் நம் வாழ்க்கைக்கு வேண்டியவற்றை மறந்து அல்லல் படுகிறோம்.இதுதான் மறதியாகும்.இதில் சாதாரண நிலை மறதியும்,பிறழ்வான நிலை மறதியும் அடங்கும்
காலக்கடவினால் ஏற்படும் மறதி :-  இது பொதுவாக எல்லோரிடமும்  காணப்படுகிறது.நாம் பலவற்றைக் கற்கிறோம்.அனுபவங்களைப் பெறுகிறோம்.ஆனல் அவற்றை அடிக்கடி மீட்டறிந்து பார்க்கவிடில் அவற்றை மறந்து விடுகிறோம்.சான்றாக பள்ளியில் பயிலும்போது கணக்கில் வரும் எந்தனையோ சூத்திரங்களைப் பயிலுகிறோம்.அவற்றை இப்போது சொல்ல இயலாது.இதற்கு அவற்றை அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொள்ளாததே அதற்கு காரணம்.காலம் கடக்க,கடக்க அடிக்கடி மீட்டறியாமல் நமது நினைவை விட்டு அகலுகின்றன.
குறுக்கிடு :- எல்லாவற்றையும் மூளையில் நினைவு அலைகளாக படிகின்றன என்பதைப் பார்த்தோம் அல்லது அறிவோம்.எனவே எண்ணற்ற நினைவு அலைகளை நமது சிறிய மூளைதான் பதிந்து வைத்துள்ளது என்று எண்ணும்போது  வியப்பு மேலிடிகிறது அல்லவா ?. உதரணமாக மாணவன் ஒருவன் தேர்வுக்கு முந்திய தினம் அமர்ந்து எல்லாப் பாடங்களையும் இரவு முழுவதும் கண் விழித்து படித்து விட்டு தேர்வு சென்று எழுதும்போது எந்த வினவிற்கும் சரியான விடையை அளிக்க இயலாமல் இருப்பான்.ஏனனில் அவன் பலவற்றை ஒரே நேரத்தில் கற்கும்போது நினைவு அலைகள் ஒன்றன் மீது ஒன்றாய் படித்து குறுக்கிடு என்ற செயலில் பாதிக்கப்பட்டு இருக்கும்.
பின்னியக்கத்தடை ;- நாம் முன்பே கற்றவற்றை புதியதாக கற்றவை அழிந்து விடுகிறது என்பதே ஆகும். புதியதாக நம் ஒன்றைக்கற்றால் இதன் விளைவானது நாம்முன்பே கற்றவற்றை அழிது விடுகிறது. இவை பழைய நினைவு அலைகளை செயல்படவிடாமல் நிறுத்தி வைக்கின்றன.தொடர்சியாக நாம் கற்கும்போது புதிதாய் கற்றவற்றை எல்லாம் முன்பு கற்றவற்றை அழித்து விடுகின்றன.இதன் காரணமாக மறதி எற்படுகிறது.
நாம் ஒன்றைக் கற்கும் போது நினைவு அலைகளை உண்டாக்குகிறோம்.இவ்வாறு உருவாக்கப்பட்ட நினைவு அலைகள் படிந்து திடமாக சிறிது அவகாசத்தை எடுத்துக் கொள்கிறது. எவ்வாறு முட்டையிலிருந்து குஞ்சு வர சில நாட்கள் ஆகின்றனவோ அதேபோல் அவைகள் நினைவு அலைகளாக படிந்து திடமாவதற்கு சிறிது நேரம் தேவைப்படுகிறது.இந்நேரமானது நம் செயலில் ஈடுபட்டுயிருக்கும்போது எடுதுக் கொள்ளூம் நேரமாகும்.
மெய்பாடு நிலை :-இக்காரணங்கள் ஏற்பட வழக்கத்திற்கு மாறுபட்ட சூழ்நிலைகளே ஆதாரமாக உள்ளன.இந்நிலை மறதி தீடிரெண்டு ஏற்படும் ஒரு அனுபவத்தால் ஏற்படுகிறது.இவ்வாறு ஏற்படும் மறதிக்கு இரண்டு வகையான காரணங்கள் உண்டு. 1. அகவயக்காரணங்கள் 2. புறவயக்காரணங்கள்.இவற்றில் புறவயக்காரத்திற்கு விபத்து,தலையில் அடிபடுதல்,மூளையில் சதை வளர்தல் போன்றவற்றைப் புறவயக் காரணங்கள் என அழைக்கலாம்.இவற்றின் காரணமாக ஒருவருக்கு மறதி ஏற்படுகிறது. அவர் மருத்துவரை அனுகுவது நல்லது. 2அகவாய் காரணனங்கள் ஒருவரது உள்ளத்தின் காரணமாக அமைகின்றன. ஆழ்ந்த உள்ளமானது  நமது நடந்தையில் பெரும் பங்கு ஏற்கிறது என்பது உண்மையே..நாம் கற்றவற்றை ஒரு வினடியில் மறந்து விடுகிறோம்.இதனை அடக்குதல் என அழைக்கலாம்.அடக்குதல் என்ற நிகழ்சிகளில்  ஒருவர் தனது பிடிக்காத அனுபவங்களை ஆழ்ந்த உள்ளத்தில் அடக்கி வைத்து விடுகிறான்.இவ்வாறு ஆழ்ந்த உள்ளத்தில் அடக்கப்பட்டவை மீண்டும் அவனது நினைவுக்கு வருவதில்லை. இதை மன டாக்டர் சரி செய்யலாம் .
கீழ்க்கானும் முறைகளைக் கடைப் பிடித்தால் ஒருவன் தனது நிறைவாற்றலைப் பெருக்கிக் கொள்ளலாம்.
1. காலக்கடவினால் ஏற்படும் மறதியைப் போக்க கற்றவற்றை அடிக்கடி மீட்டாய்ந்து  பார்க வேண்டும்.இவ்வாறு செய்வதனால் நினைவு அலைகள் மாற்றம் பெறாமல் இருக்கும்.
2. குறுக்கீட்டினால் ஏற்படும் மறதியைப் போக்க கவனமாக கற்றல் வேண்டும்,இடைவெளி அளிப்பது நல்லது.
3. பின்னிலத்தடைப் பற்றி அறிவோம்.இது ஏற்பட்டால் தடுக்க தொடர்சியாகப் பயிலக்கூடாது.ஒய்வு ,இடைவெளி கொடுத்தால் இக்குறையை போக்கலாம்.
4 மொய்பாட்டினால் மறதி ஏற்பட்டால் இதை தவிர்க்க ஒருவர் மெய்ப்பாட்டில் பலியாகமல் இருக்க வேண்டும்.
5.போதை வஸ்துக்களை பயன் படுத்துதல் , மது அருந்துதல்,போன்றவற்றாய் அதிகம் பருகுவதால் நினைவாற்றல் குறையலாம். இவற்றை தவிர்க்க வேண்டும்
6.அடக்குதல் என்ற செயலால் நம்மிடம் பிறழ் நிலை மறதி ஏற்படலாம். ஆகவே இச்செயலை தவிர்த்தால் மறதியைப்போக்கலாம்.

புலன் காட்சியும் & கருத்து கேட்டலும் :-

புலன் உணர்வுகள் அறிவுள்ளதாக மாற, பொருள் சொறிந்ததாக இருக்க வேண்டுமெனில் புலன் காட்சி இன்றியமையாதவையாக் இருக்கிறது.ஆகவே அறிவின் ஆரம்ப நிலை புலன் காட்சி என்று கூட சொல்லாம்.
உதாரணமாக நமது புலன் உறுப்பு (கண்) கொண்டு ஒரு பொருளை பார்கிறோம் (எதாவது ஒரு தூண்டலில் உதாரணமாக பொருள் அசையும் போது புலன் பார்கப் படுகிறது) இங்கு புலன் உணர்வு நடைபெறுகிறது. மற்றைய பொருட்கள் பல இருப்பினும் நாம் நமது ஆர்வத்தை ஒரே ஒரு பொருளிருந்து செலுத்துகிறோம்.உயிர் ஆற்றல் ஆனது அவ் பொருளின் மீது படிந்து நாம் பார்கின்ற பொருளின்  பெயர்,தன்மை, போன்றவற்றை கூறுவோம் ஆனால் நமது புலன் உணர்வுக்கான பொருளை வெளிப் படுத்துகிறோம்.ஆகவே  புலன் உறுப்புகளின் உணர்வுகள் வெறும் உணர்வுகளாக மட்டும் அல்லாது பொருளுடையவைகளாகவும் மாறுகிறது. இந் நிகழ்சியே புலன் காட்சி எனப்படுகிறது.இதே போல் நம் வழக்கத்திற்கு மாறான புதுமையான தூண்டல் ஒன்றை நாம் சந்திக்கும்போது செய்கின்ற புலன் காட்சியும் முயன்று தவறுதல் முறையானது இடம் பெறுகிறது. சான்றாக  புதியதொரு ஒலியை நாம் கேட்பதாகக் கொள்வேம்.முதலில் அவ் ஒலி என்னவென்று தெரியாமல் திகைக்கிறோம்.மிருகத்தின் கர்ஜனையா என்று ஐய்யப்படுகிறோம்.இன்னும் சற்று நேரம் உணர்ந்து கேட்டபின்  அல்லது பார்த்து உணர்ந்த பின் அது புகைவண்டி ஒலி  எழுப்புகிறது என்று தெரிந்து கொள்கிறோம். அல்லது மற்றவர்களிடம் தாய்,தந்தை, அண்ணன்,தம்பி,அக்காள், தங்கை,ஆசிரியர், நன்பர்கள் அல்லது மற்றவர்கள் செல்ல அல்லது கேட்டு தெரிந்து கொள்கிறோம்.
எந்துண்டலின் மீது ஒருவரது புலன் காட்சி அதிகமாக நடைபெருகிறதோ அத்துண்டலைப் பற்றிய அறிவு அவரிடம் மிகுதியாக காணப்படும்.முதலில் ஒரு பொருளைப் பற்றி மிகுதியாகத் தெரிந்து கொள்வதில்லை. ஆனால் அப் பொருகளுடன் நமக்கு அடிக்கடி தொடர்புகள் ஏற்படும்போது அதைப் பற்றிய விவரங்களையும்,அவற்றிகிடையே உள்ள தொடர்புகளையும் நாம் நன்றாக தெரிந்து கொள்கிறோம். உதாரணமாக அருள்மிகு மீனாட்சி அம்மாள் படத்தை பார்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.அதனைக்கண்டு பரவசம் அடைகிறான். அவ் படத்தை அடிக்கொருதடவை கானும் வாய்பினை பெறும்போது அதன் உயரம் ,அமைப்பு, நிறம்,உருவான காலம், என்பன போன்றவற்றை அறிய முற்படுகிறான். அது என்ன சாயத்தால் பூசப்பட்டுள்ளது.  அது இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்றுகூட தனது கருத்துக்களை ஏற்படுதும் திறனையும் பெற்றுவிடுகிறான்.
இதுபோல் மற்ற பொறிகள் ஆனவற்றில் (வாய்,மூக்கு.காது,உடல்)-சுவை,மனம்,ஒலி,மெய் -உணர்வு அகியவைகளை தெரிந்து கொள்கிறோம்.
கருத்துக்கள் உருவாதல்:-
ஒருகுறிப்பிட்ட பொருளுக்கோ அல்லது நிகழ்ச்சிகளுக்கோ பொதுவாக உள்ள இயல்பை அறிவதாகும்.

உணர்ச்சிகளும் - மெய்ப்பாடுகளும்

மனிதனின் நடத்தையிலும்வாழ்க்கையிலும் உணர்ச்சிகளும்-மெய்ப்பாடுகளும் பெரும் பங்கு ஏற்கின்றன..நமது வாழ்க்கையே இவையால்தான் இயக்கப்படுகிறது என்று கூறலாம்.உணர்சிகளும்-மெய்ப்பாடுகளும் இல்லாத வாழ்க்கை உண்மையான வாழ்க்கையாக இருக் க முடியாது.உணர்ச்சிகளும்,மெய்ப்பாடுகளுமே நாம் நம்மிடம் ஏற்படுதிக் கொள்கின்றபடியாலும்,உந்துதலும் காரணங்க்களாய் அமைகின்றன.பொதுவாக உணர்ச்சி ஒவ்வொன்றுக்கும் மூன்று இயல்புகள் உண்டு.1.எல்லா உணர்ச்சிகளும் மகிழ்ச்சி அல்லது வருத்தத்தை தரக்கூடிய தன்மையைப் பெற்று இருக்கும்.ஒவ்வொரு உணர்ச்சியும் கிளர்ச்சி ஊட்டக் கூடியதாகவோ அல்லது உணர்ச்சியற்ற மரத்தன்மையை ஏற்படுத்தக் கூடியதாகவோ இருக்கும்.3 உணர்ச்சிகள் சில சமயங்களில் தளர்வையோ அல்லது விறைப்பையோ ஏற்படுத்த வல்லவையாக இருக்கும்
2.
ஒருசெயல் அல்லது நிகழ்ச்சி நடைபெறப்போகிறது என்ற நிலையில் இருப்போமானல் எதிர்பார்க்கும் உணர்ச்சி நம்மிடம் தோன்றும்.அதே போல் நடந்துவிட்ட நிகழ்ச்சி சிரியாக அமையாவிட்டால் நம்மிடம் தளர்வை உண்டுபண்ணலாம்.வருத்தம் நிறைந்த நிகழ்ச்சி நம் முன் மரத்துப்போன தன்மையையும்உணர்ச்சியற்ற நிலையையும் உண்டுபண்ணலாம்ஒவ்வொரு உணர்ச்சியும் உடல் முழுவதும் உணரப்படுவதாகும்.ஆகவே ஒருகூறிப்பிட்ட உறுப்பால் மட்டும் நாம் உணர்வதில்லை.உணர்ச்சி என்பது உள்ளத்தில் உணரப்படும் செயலாகும்.உணர்ச்சிகள் வேகமாக இருக்கவேண்டிய அவசியம் இல்லைஅவை மென்மையானதாகவும் இருக்கலாம்.ஓருவனுடைய உணர்ச்சிகள் அவனுடைய கடந்த கால அனுபவங்கள்,அவன் பெற்றப்பயிற்ச்சி போன்றவற்றின் அடிப்படையில் அமைவதாகும்.ஆகவேதான் ஒருவர்க்கு மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி மற்றவற்க்கு துன்பம் தருவதாக அமைகிறது.மகாபாரதத்தில் நிறைய சாட்சிகள் உண்டு.பாண்டுவின் மைத்தன் அருச்சுனனின் நாடி நரம்பெல்லாம்ம,வீரம் சொறிந்ததாகதான் இருக்கும் அவனுடைய மகன் அபிமன்யு மிகவும் வீரம் உள்ளவன் என்பதில் ஐயம் இல்லைஆனல் போர்கலத்தில் அவனை துரொணர்,துரணாச்சாரியார்,.....போன்ற என்னற்றவர்கள் சூழ்ந்து போரிட்டாலும் அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தான்.அக் களத்தில் அவன் இறப்பு சோகமாக முடிந்தது..இது அர்சுனனுக்குப் பேர் இடியாகவும்,வருத்தம் தரதக்கதாகவும் அமைந்தது.. துரியோதன் கூட்டத்திற்கு மகிழ்சியை தரவல்லதாக அமைந்தது.ஒருவன் வயிற்று வலியை உணருவதாகக் கூறுவதாகக் கொள்/வோம்அவன் வயிற்றில் ஏற்படுகின்ற வலியைத்தான் உணர்ச்சி என்று அறியமுற்படுகிறன்.வலி என்பது துன்பத்தைத் தரவல்லது.அவ்விதமான வயிற்றுவலியால் ஏற்படும் உணர்வானது உடல் முழுவதும் பரவியுள்ளதுஆகவே வயிற்றில் உண்டான வலி துன்பம் நிறைந்த உணர்ச்சியாக உடல் முழுவதும் அறியப்படுகிறது என்று கூறலாம்.ஒவ்வொரு உணர்ச்சியும் உடல் முழுவதும்ம் உணரப்படுவதாகும்ஒருகுறிப்பிட்ட உறுப்பால் மட்டும் நாம் உணர்வதிலைஉணர்ச்சியென்பது உள்ளத்தால் உணரப்டும் செயலாகும்.நமது உணர்ச்சிகளைப் பல வகையாகப் பிரிக்கலாம்மகிழ்வுஇன்பம்,உவகைகளிப்பு போன்றவை ஒருவகையைச்சார்தந்தது இவவை மகிழ்ச்சி என்ற தலைப்பின் கீழ் வருபவைவெறுப்பு,துயரம்,,அதிருப்தி,துன்பம் என்பவை மற்றவகையைச்சார்த்தவை.இவையெல்லாம் வருத்தம் தரக்கூடிய உணர்வைஸ் சேர்ந்தவையாகும்விருப்பம்அவாநம்பிக்கை,போன்றவை இன்னொரு வகையைஸ் சார்ந்தவை.கோபம்,கசப்பு,சீற்றம்,போற்றவை கிளர்ச்சி ஊட்டக்கூடிய் உணர்வைஸ் சார்ந்தவையாகும்இவ்விதமாகநமது அனுபவங்களின் மூலமாக நாம் பல வகையான உணர்ச்சிகளை வெளியிடலாம்.ஆகவே உணர்ச்சிகள் மென்னையானவை.உணர்ச்சிகள் நம்மிடம் நீண்டு நிலைத்திருக்கும்இவை மெதுவாக தோன்றி மெதுவாக மறையும் தன்மையுடையவைஉணர்ச்சிகளின் போது நமது உடலில் எவ்விதமாற்றகள் கிடையாது.உணர்ச்சிகள் தோன்றி மறைந்தவுடன் நம்மிடம் எவ்விதமான மனநிலையும் உருவானதில்லைஉணர்ச்சிள் தெளிவற்ற நிலையில் உள்ளன.ஆகையால் நமது கடந்த கால் அனுபவங்கள் இவற்றுடன் தொடர்புகள் கொண்டுள்ளன என்று கூறலாம்.. மீண்டும் ஞாபகப்படுத்திக்கொள்வோம்.உணர்ச்சிள் நம்மிடம் நீண்டு நிலைத்து இருக்கும்அதனால் நமது மனநிலை அல்லது உள நிலை பாதிப்பு அடைகிறது.உணர்ச்சிகள் தோன்றும் போது நமது உடல் உறுப்புகளில் மாற்றங்கள் எதுவும் நடை பெறுவதில்லைஉணர்ச்சிகள் பொதுவாக தெளிவற்ற நிலையில் தான் நம்மிடம் காணப்படுகிறதுஆகவேதான் ஒருவர் எம் எம்மாதிரியான உணர்ச்சிகளைப் பெற்றிக்கிறார் என்று நம்மால் திட்டவட்டமாக கூற முடிவதில்லை.பொதுவாக மறைகின்றன.. உணர்ச்சிகள் மறைத்தவுடன் நம்மிடம் ஒரு மனநிலையை(மூடுஉண்டுபண்ணுவதிலை.துரத்தில் புள்ளிபோல் கடலில் தெரிவது அக்கடலின் கரையில் இருப்பவர்க்கு அதைப்பார்த்தவுடன் கப்பல் வருகிறது எனக் கூறிவிடுவார்"காரியம் என்னவோ ஒன்றுதான்-ஆனல் பாவனைவேறுபாட்டால் அதில் வேற்றுமை தோன்றுகிறது.அதாவது கங்கையில் இரண்டு பேர் நீராடப்போகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.அவர்களில் ஒருவர் எல்லாம் கங்கைகங்கை என்று கூறுகிறார்களே,. அதில் அப்படி என்னதான் இருக்கிறது.?. இரண்டுபங்கு ஹைட்ரஜன் ஒருபங்கு ஆக்ஜிசன்(பிரணாவாயு); இவ் இரண்டு பாயுக்களையும் சேர்த்து விட்டால் கங்கை (நீர்கிடைத்துவிடப்போகிறதுஇதற்கு அதிகமாய் அதில் அப்படி என்ன இருக்கிறது." என்று சொல்கிறான்மற்றவணோ,"விஷ்னு பகவானது பாத கமங்களிலிருந்து இவள் தோன்றி,சங்கரனது சடைமுடியில் வாசம் செய்கிறாள்ஆயிரக்கனக்கான பிரமரிஷிகளும் ,ராஜரிஷிகளும் இவள் கரையில் தவம் புரிந்திருக்கிறார்கள்.இவள் கரையில் நிகழ்த்துள்ள புண்ணியகாரியங்களுக்கு அளவுயில்லைஆகவே எவ்வளவு புனிதமானவள் என் கங்கைத்தாய்! :என் கிறார்.இந்த பாவனையில் ஆட்பட்ட அவன் கன்கையில் நீராடப்போகிறான்.நீரக-பிரானாவாயுப்பேர்வழியும் அதில் முழுக்குப்போடுகிறான்உடல் துப்புரவு என்ற பயன் இருவர்க்குமே கிட்டிவிட்டது கங்கையில் ஒர் எருது போய் விழுந்தாலும் அதன் உடலும் துப்பவரவென்ற இழித்த பயன் கிட்டியது.ஆனல் மனசின் அழுக்கைக் கழுவுவது எப்படி?. ஒருவனுக்கு உடல் துப்புரவென்ற இழத்த பயன் கிட்டியதுமற்றவனுக்கோ அதோடு சித்த சுத்தியென்ற மதிப்பிடவியலாத பயனும் கைகூடியது"இராமதாசர் இராமாயணம் எழுதிக்கொண்டே எழுதியதைச்சீடர்களூக்குப் படித்து விளங்கிக் கொண்டிருந்தார்அனுமானும் ஒருவர்க்கும் தெரியாமல் கதைகேட்க உட்கார்ந்து இருந்தார்இராமதாசர் கதையைத்தொடர்ந்தார் :"அனுமார் அசோகவனத்தை அடைந்தார்அங்கே வெள்ளை மலர்களைக் க்ண்டார்என்று எழுதினார்இதைக்கேட்டதும் அனுமார் தோன்றி ."நான் வெள்ளை மலர்களைப்பார்க்கவில்லையேசிகப்பல்லவா நான் பார்த்தவை!. நீ எழுதி இருப்பது பிழை.அதை திருத்து," என்றார் சமர்த்தர் "நான் எழுதியிருப்பது சரிதான்.நீங்க்கள் வெள்ளை மலர்களைத்தான் பார்த்தீர்கள் என்றார்.,'போனவன் நான்!. அப்படியானால் நான் சொல்வது பொய்யா!. என்று கேட்டார் இறுதியில் இவ் வழக்கு ஸ்ரீராமசந்திரனிடம் போயிற்றுஅவர்,"பூக்கள் வெள்ளைதான்ஆனால் அனுமனுடைய கண்கள் கோபத்தால் சிவத்து இருந்தமையால் அவருகு வெள்ளை மலர் சிவப்பாகத்தோன்றியதுஎன்றார்.நாம் உலகை எந் நோக்கில் பார்க்கிறோமோ அப்படியே அது நமக்குத் தோன்றும் என்பது இவ் எளிய கதை.மகிழ்சி : தன் மகன் கல்யாணத்தைப் பார்த்து தாய் தந்தையினர் மகிழ்ச்சி வெள்ளத்தில் திகழ்த்தனர்.இன்பம் : கடந்த வாரம் சென்ற கேரளாப் பயணம் மனதிற்க்கு இன்பமாக இருந்தது3களிப்பு :- நான் இளநிலை பட்டத்தில் முதல் வகுப்பு தேறியுள்ளதைப் பார்த்து களிப்பு அடைந் தேன்
உவகை :- என் குடும்பம் சமுதாயத்தில் மிகவும் படித்த குடும்பம் என பிறர் பேசுவது உவகையாக இருக்கிறது.அதிருப்தி :- நேற்று அவன் நான் சொன்னதைஸ் செய்யாமல் மிகவும் தவறான் ஒன்றைஸ் செய்ததைப் பார்த்து அவன் மேல் அதிருப்தி அடைந்தேன்,வெறுப்பு :- அவன் கீழ்த்தரமான காரியத்தைச்செய்துவிட்டான் அவன் மேல் வெறுப்பு வந்து விட்டது.துயரம் : மகன் இறந்ததைக் கண்டு துயரம் கொண்டான்
விருப்பம் : முது நிலை படிப்பதற்க்கு விருப்பமாய் உள்ளென்
நம்பிக்கை ; இவ் போட்டியில் தான் முதல் இடத்தை பிடிது விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.அவா மகள் கலெக்டர் ஆகவேண்டும் எனதாய் விரும்பினாள்
சீற்றம் : தன்னைக் கொல்லவருகிறான் என்று பாம்பு சீற்றம் அடைந்தது.கோபம் : படிப்பை விட்டு ஊர்சுற்றிவந்த மகனைப் பார்த்து தந்தை கோபம் அடைந்தார்.கவலை ;இந்த மழை ஒய்ந்து எப்போதுதான் வீட்டுக்கு செல்வேன் என் சிறுவர் கவலையுடன் இருந்தனர்.


மெய்ப்பாடுகள்

மெய்ப்பாடுகளை  மனவெழுச்சிகள் என்றும் கூறலாம்.மெய்ப்பாடுகளும் நமது உணர்ச்சிகளைப் போல் குறிபிட்ட உடலுப்புக்களால் உணரப்படாமல் உடல் முழுவதும் உணரப்படுகிறன. இந்த நிலைதான் உணர்ச்சிகளையும் மெய்ப்ப்டடுகளையும் பிரித்தறிய முடியாமல் செய்து விடுகிறது. பொதுவாக அச்சம், சினம்,அன்பு போன்ற உணர்ச்சிகள் நிறைந்தவைகளே மெய்ப்பாடுகள் என்றழைக்கலாம்.மெய்ப்பாடுகள் காட்டற்று வெள்ளம் போன்ற வேகம் நிறைந்தவை. மெய்பாடுகளின் போது உடலில்  பல்வேறு மாற்றங்கள் தோன்றும்போது நமது உடலில் கலக்கம் அல்லது கொந்தளிப்பு உண்டாகிறது. இவற்றின்விளைவாய் நமது உடலில் மாற்றங்களும், அடையாளங்களும் தோன்றுகின்றன. உதரணமாக ஒருவன் சினப்படும்போது அவன் பற்க்களைக் கடிக்கிறன். அவன் கண்கள் சிவக்கின்றன, இதயத்துடிப்புப், இரத்த அழுத்தமும் அதிகமாகின்றன.எல்லா மெய்பாடுகளும் உடலுனுள்ளும்,வெளியிலும் பல மாற்றங்களை உண்டுபண்ணும்.
உங்களிடம் எப்பொழுதாவது மகிழ்ச்சி அல்லது ஆனந்தம் அது வெளியிலிருந்து வருவதாக நினைத்துக் கொள்ளாதிர்கள். நீங்கள் ஒரு நெருங்கிய நண்பனை சந்தித்தது  என்னவோ உண்மைதான் அப்பொழுது உங்களிடம் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு காரணம் அந்த நண்பன் தான் என்று சாதரணமாக நினைப்பபீர்கள். ஆனால்,உண்மை அப்படி அல்ல. அந்த மகிழ்ச்சி உங்களிடம் ஏற்கனவே இருக்கிறது. ஆனல் அடக்கமாக இருக்கிறது.அப்பொழுது நீங்க்கள் உங்கள் நண்பனைப் பார்த்ததும் அதுதானே மேலே எழும்புகிறது. அது மேலே எழுபுவதற்கு, உங்கள் நண்பன் உதவி செய்தான் அவ்வளவுதான்.
மகிழ்ச்சி ஒர் உணர்வுக்கு மட்டும் உரியது அல்ல. எல்லாம் உணர்வுகளுக்கும் பொருந்தும். கோபம்,வருத்தம், துன்பம்,துயரம், இப்படியெல்லாவற்றுக்கும் பொருத்தும். பறப் பொருளகள் அனைத்தும் அந்த உணர்வுகளை தூண்டும் கருவிகளாக இருக்கின்றன. இதை நன்றாகப் புரிந்துக் கொள்ளுங்கள். இந்த உணர்வுக்கு அவை காரணமல்ல.உங்கள் நண்பனோ அல்லது மற்ற உலகப் பொருள்களோ,அந்த மகிழ்ச்சிக்கு அல்லது துக்கத்துக்கு ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துகின்றன அவ்வளவுதான். ஆனால் மாற்றம் அனைத்தும் உங்க்களிடம்தான் நிகழ்கின்றன. இந்த உணர்வுள் அனைத்தும் ஏற்கனவே உங்களிடம் மறைந்து இருக்கின்றன.

மேல் நாட்டில் இப்பொழுது ,"சைக்கோ டிராமா" என்ற முறையைப் பின் பற்றுகின்றனர்.
முதலில் ஒருவிளையாட்டு போல உங்களைக் கிண்டல் பண்ணுவார்கள். நீங்களும் அதை அலட்சியம் செய்வீர்கள். பிறகு கொஞ்சம்,கொஞ்சமாக உங்கள் அந்தரங்க விஷயங்களை வெளிப்படுத, வெளிப்படுத்த உங்களுடைய கோபம் உண்மையாகி அது வெடிக்கும் நிலைக்கு வந்துவிடும். உங்கள் மனம் கோபத்தின் உச்சியில் இருந்தால், உங்கள் உடலிலும் அதற்கு ஏற்றார்போல் செயல்படும்.
ஒரு நாடிகன், ஒரு காட்சியில்ல் கோபமாக நடிக்க வேண்டிருப்பதால் ஆரம்பத்தில் அது நடிப்புத்தான் என்ற பிரஞ்சை அவனிடம் இருக்கும் ஆனால் போகப் போக அந்தக் கோபம் அவனை முழுவதுமாக ஆட் கொண்டு விடும்.அப்பொழுது அவனுடைய  கோபம் உடலோடு, மனதோடும் சம்பத்தப்பட்டு முழுமையாக் வெளிப்படும்.அவன், தான் நடிக்கிறோம் என்ற நினைப்பை இழந்துவிடுகிறான்.அப்பொழுது அவனுடைய நடிப்பும் இயற்கையாக் உண்மையாக இருக்கும்.
மெய்பாடுகளின் பண்புகள் :-
மெய்பாடுகள் எப்போது தோன்றுகின்றன?. நமது உடலின் அடிப்படை தேவைகள் மறுக்கப்படுகின்றபோதும்,நமது சுயமரியாதை பாதிக்கப்படும்போதும்  நமக்கு மெய்பாடுகள் தோன்றுகின்றன.மெய்பாடு தோன்றும் போது சிந்தனை என்ற செயல் நடைபெறாமல் போகிறது.அதனால் பகுத்தறிவும் செயல் படாமல் போகிறது. ஒவ்வொருமெய்ப்படுகளும் நமது உடலின் உள்ளேயும், வெளியேயும் பல மாற்றங்களை உண்டு பண்ணும்.
மெய்பாடுகளின்போது நமது உறுப்புகள் தானியங்கு நரம்பு மண்டலம், நாளமில்லாசுரப்பிகள் , இதயம், நுரையீரல் போன்றவைகளில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.மெப்பாடுகள் சக்திவாய்தவை.ஆகவேதான் ஒரு மெய்ப்பாடு தோன்றி மறைந்தவுடன் அது ஒருவிதமான மனநிலையை நம்மிடம் ஏற்படுதிவிட்டு செல்கிறது. அதைத்தான் ஆங்கிலத்தில் மூடு என்று அழைக்கின்றனர்.மெய்பாடுகள் மறைந்ததும் ஏற்படுகின்ற மன நிலை நம்மை மீண்டும் எளிதாக ஒரு சாதாரனதுண்டல் கூட மொய்பாட்டினைப் பெறச்செய்து விடுகிறது.
மெய்பாடுகளின்போது ஏற்படும் மாற்றங்கள் யாவையானது:-
1. முகத்தில் ஏற்படும் மாற்றங்கள் :- முகத்தில் உள்ள கண், மூக்கு, உதடு ஆகிய பாகங்களிலுள்ள தசைகள் மாற்றங்கள் அடைகின்றன. இவை சுருங்கி, விரிந்து பலவித முகபாவங்களை உண்டுபன்னுகிறது.முகத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டே மெய்பாடுகளின் தன்மையை அறியலாம். ஆனால், இவ்வாறு எல்லா சமயங்களிலும் கண்டு கொள்வது கடினம். ஏனனில் மனிதர்கள்  தங்களுடைய மெய்படுகளை வெளியிடுவதில் வேறுபடுகின்றனர்.
2.கைகள் :- மெய்பாட்டின் போது கைகளை நாம் பெரிதும் பயன் படுதுக்கிறோம். சில சமயங்களில் கைகளை ஆட்டியும், மடக்கியும், முறுக்கியும் பல விதமான கைசெய்களை செய்து மெய்பாட்டினன வெளியிடுகிறோம். கைவிரல்களும் மெய்ப்பாட்டின் போது பெரும் மாற்றங்களை அடைகின்றன.
3. குரலில் மாற்ம்:- மெய்பாட்டின் போது குரலில் மாற்றங்கள் நிகழ்கின்றன. சினங்க் கொள்ளும் போது உரத்த குரலிலும், அச்சம் கொள்ளும் போதுபொதுவான குரலிலும் நம்மிடம் ஏற்படுகிறது.மெய்பாடுகளுக்கு ஏற்றவகையில் சந்தர்ப்பம் சூழ்நிலைக்கு எற்றவாறு நமது குரலில் மாற்றங்கள் நிகழ்கின்றன.
4. இதயதுடிப்பு:- மெய்ப்பாடுகளின் போது நமது இதயத்துடிப்பும் மாற்றம் பெருகிறது. இது மெய்ப்பாடுகளுக்கு ஏற்ப அதிகமாகவும், குறைந்தும் மாற்றம் பெறுகிறது.
5. இதயத்துடிப்பு :- நமது இரத்த அழுத்தம் பாதிக்கப்படுகிறது. சினம் ,அச்சம் போன்ற மெய்ப்பாடுகளின் போது இரத்த அழுத்தம் அதிகமாகிறது.அதனால்தான் இதயண்நோய் வாய்ப்படவர்களும்,இரத்த அழுததம் மிகுதியாக இருப்பவர்களும் அடிக்கடி சினப்படுதல் கூடாது என்னும் உணர்ச்சிவசப்படக்கூடாது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
6. அதிகசக்தி :- மெய்ப்பாடுகள் நம்மிடம்தோன்றும்போது மிகுதியான் சக்தியாக நமக்கு கிடைக்கிறது. சான்றாக சாதராணமாக ஒரு மனிதன் 30 மையில் வேகத்தில் ஒடும் சக்தி பெற்றவன் எனக் கொள்வேஅம். அவன் ஆபத்தில் இருக்கும் போது (சிங்க்த்தைப் பார்த்து) 50 மையில் வேகத்தில் ஒடுவான்.இவ்வாறு ஒடுவதற்கு காரணமாக இருப்பது அவனுடைய சக்தியே ஆகும்.
7. இதரமாற்றங்கள் :- நமது உடலில் மின்விசை எதிர்ப்புசக்தி உண்டு. மெய்ப்பாடுகளின் போது இவ் மின்விசை எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதைமின்நோட்டமானி (psychf-falvanoscope) என்னும் கருவியின் துனணக் கொண்டு அறியலாம்.மேலும் மெய்ப்பாடுகளின் போது மயிர்கூச்சறித்தல், வியர்வை பெருகுதல்,நாவறண்டுபோதல் போன்ற மாற்றங்களூம் நிகழ்கின்றன.

உணர்சிகளும் - மெய்ப்பாடுகளும் எவ்வாறு நமது கட்டுப்பட்டில் வைத்துக் கொள்வது என்பதைப்பற்றி மிக விரிவாக கீழே காண்போம்.

வாழ்க்கை என்பது சிக்கல் நிறைந்த மனப் போராட்டமாகும். உயிரும், உடலும் சேர்ந்ததே ஒரு சிக்கல்தானே. அதிலிருந்து உருவாகும் சிக்கல்களே மற்ற சிக்கல்களுக்கும் காரணம். உடலைவிட்டு உயிர் பிரிந்தால் அதோடு அந்த மனிதரின் வாழ்க்கைஸ் சிக்கல்கள் அனைதும் தீர்ந்தது விடுகின்றன. எனினும் சமுதாயக் கூட்டமைப்பில்ல் வாழும் ஒவ்வொரு மனிதனுடைய சிக்கல்களீலும் வேறு பலரும் பின்னப்பட்டு இருக்கின்றனர். ஆதலால் ஒருவர் வாழ்வு முடிந்து அவன் சிக்கல் முடிந்து விட்டாலும் அவனோடு பின்னப்பட்டிருந்தவர்களும் சில புதிய சிக்கல்கள் உருவாகிவிடும்.சிக்கல் இல்லாத வாழ்வு ஒரு மனிதனுக்கு அமையாது. அப்படி அமைந்தாலும் ஏதேனும் ஒரு சிக்கலை உருவாக்கிக் கொண்டு தவிக்கும் வரையில்  எந்த மனிதனும் சும்மா இருக்க மாட்டான்.
'யாதனின் யாதனின் நிங்கியான் நோதல்,
அதனின் அதனின் இலன்"-திருவள்ளூவர்
கவலையானது நினைப்பதற்கும், நடப்பதற்கும் இடையே கானும் முரண்பாடுதான் கவலைக்கு அடிப்படைக்காரணம். உள்ளத்தின் களக்கமாகிய நோய்களும், உயிரின் களக்கமாக விளங்கும் வாழ்க்கைச்சிக்கல்களும் கலவையாக மதிக்கப்படுகின்றன. உடலுக்காயினும், அல்லது மனதிற்காயினும் சிக்கல் வரும் போது அந்தச்சிக்கல்களைச்சந்திக்க போதிய பலமில்லாத மனநிலையைக் கவலை என் கிறோம்.கவலை என்பது ஒருவருரை உள நோய்,தனது இயலாமை உணர்ந்து,நினைந்து அல்லது கற்பித்துக்கொண்டு வருந்தி அமைதி இழந்து இயங்கும் மன நிலைதான் கவலை.
பெரும்பாலும் தன் அறிவில் உள்ள குறைப்பாட்டால்தான் வாழ்க்கை சிக்கல்கள் விழையக் காரணமாகின்றன.அறிவின் குறைபாட்டால் இயற்க்கை நியதி தெரிவதில்லை.செயல் விளைவுத் தத்துவம்  புரிவதில்லை,. தவறு செய்தால் இன்றோ, நானையோ,அறிவிக்கோ, உடலுக்கோ துன்பம் விளையும் என்பது தெரிவதில்லை. இத்தகைய அறியாமையால் செய்த தவறுகளின் காரணமாகப் பெருகிக்கொள்வம். துன்பங்களோ வியாதியாகவும் வாழ்க்கைச்சிக்கல்களாக நம்முன் எழுந்து நிற்க்கிற்றன.
அறிவின் குறைப்பாட்டால் சமுதாய ஒருங்கமைப்பு விதிகள் புரிவதில்லை. பலர் இணைந்த கூட்டுறவு வாழ்வு எனும் சமுதாயத்தின் பராமரிப்புக்கும், காப்புக்கும், மேம்பாட்டுகுமான விதிமுறைகளை அறியாமல் அல்லது அவமதித்து அதன் விளைவாக சந்திக்கும் துன்பங்கள் தாம் வாழ்க்கை சிக்க்ல்களாக மாறுகின்றன. திறமையின்மை, அச்சம் இவையிரண்டும் கவலைகளைப் பெருக்கும் மன நிலைகளாகும்.ஆகவே ஒன்றிக்க ஒன்றாக ஒன்றுபோய் ஒன்றாக வாழ்க்கையில் சிக்கல்கள் வந்து கொண்டுதான் இருக்கும்.

அறிவீனர்கள்

 நவீன உளவியல் ஆய்வின் மூலம் மனிதர்களிடம் உள்ள உளவியல்(உளப்பண்பு) வேறுபாடுகள் அனைத்தும் ஆராயப்பட்டுள்ளன.அறிவு நிலையில்-சராசரி நிலையில் இருத்து கீழ் இடம் பெற்றுருப்பவர்களை அறிவீனர்கள் என்றும், சராசரி மக்கள் நடத்தும் வாழ்வினை மேற்கொள்ள இயலாத நிலையில் உள்ளவர்கள் என்றும் குறிப்பிடலாம்.இவர்தம் நுன் அறிவு அவ்வளவு திறம் வாய்ந்தது இல்லை.சராசரி நிலையை அடைய முடியாதவர்கள்.அறிவீனர்கள் பித்தன்,தனிப்பேதை,பேதை எனப் பிரிக்கலாம். அதற்கு அடுதத படியாக இருப்பவர்கள் சராசரி நிலைக்கு சற்றுமேம்பட்ட நிலை கொண்டவர்கள்.இவர்களுடைய எண்ணிக்கை குறைவு.இவர்களை மேதைகள், மகா மேதைகள் என குறிப்பிடலாம்.
பித்தன் :-
அறிவீனர்களிலேயே மிகவும் கீழான அறிவு நிலை பெற்றவர்கள்,பித்தன். இவர்களால் தன் அன்றாட தேவைகளைக் கூட அறிந்து பூர்த்தி செய்து கொள்ள இயலாது.மிகச்சாதாரண ஆபத்துகளில் இருந்து கூட தன்னைக் காத்து கொள்ளும் ஆற்றல் அற்றவர்கள். தன் தேவைகளை அர்த்தமற்ற ஒலிக்குறிகளால் வெளியிடும் இவர் அச்சம் என்பதை அறியாதவர்கள்.எவ்வித வேலையும் கற்றுக் கொள்ள இயலாத இவர்க்கு 1 முதல் 10 வரை என எண்ணக்கூடிய திறமை இராது.அறிவீனம் ஏற்பட மூல காரணங்கள் பல இருக்கலாம்.அவற்றுள் சிறு வயதில் தலமை நரம்பு மண்டலத்தில்  ஏற்படும் இடையுறு.தாய் தந்தையரிடம் இருந்து பிறப்பினால் பெறும் அறிவீனம். சுரப்பிகளின் இயக்கயின்மை போன்ற சில காரணங்களை முதன்மைப்படுத்தி கூறலாம்.
இவர்களை குணப்படுத்துவது என்பது இன்றய விஞ்கான வளர்ச்சியில் சாத்தியம் சிறிது இருந்தாலும்,நிறைய பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது. சராசரியனவர்கள் எப்படி செய்ய இயலும்..அன்பும், பரிவும் காட்டித்தனி கவணம்,தனிப்பயிற்சிகளும் அளிக்க வேண்டும்.பெற்றோரும் மற்றவர்களும் இவர்களிடம் பாதுகாப்பும் அன்பும் செலுத்தி நல் வாழ்வை நல்கவில்லையெனில் இவர்கள் சமுதாய விரோதிகளாகவும், குற்றவாளிகளாகவும் மாறிவிடக்கூடும்.
தனிப் பேதை :-
இவர்கள் பித்தர்களைவிட சற்று அறிவு மிக்கவர்கள் இவர்கள் சுமார் 3-7 வயது வரை உள்ள குழத்தைகளின் நுண்ணரிவு திறனையொத்த உளத்திறமை பெற்றவர்கள்.தாமகவே எவ்வித வேலையும் செய்யும் திறன் அற்றவர்கள்.இவர்கள் பேசக் கற்று இருப்பார்கள் அனால் எழுத இயலாதவர்கள். இவர்கள் திறம்பட்டவர்களின் மேற்பார்வையின் கீழ் சில உபயோகமான வேலைகளைச்செய்யலாம்.ஆயினும் இவர் பிறர் உதவு இன்றி உண்ணவும்,உடுக்கவும் கூடத்திறமையற்றவர்களாய் இருப்பர்.இவர்கள் கல்வி அறிவுபெற தகுதிகஅற்றவர்கள்.தானகவே பேசிக்கொள்ளும் குணம் பெற்ற இவர்கள் மிகச்சாதராண அபாயங்களில் இருந்தும் தம்மை காப்பாற்றிக் கொள்ளும் திறமையுடையவர்கள். இவர்கள் தனிப்பட்ட பள்ளி,விடுதிகளில் மூலம் பண்படுத்தி பாதுகாத்தால் சற்று நிம்மதியான வாழ்வினை மேற் கொள்ள வாய்ப்புகள் உள்ளன.
பேதை :_
இவர்கள் சுமார் 8-10 வயதுவரை உள்ள குழத்தைகளின் நுண்ணரிவுனைப் பெற்றிருப்பர்.ஆயின் தனிப்பேதை,பித்தன் ஆகியவர்களைவிட இவர்கள் நுண்ணரிவுத்திறன் சிறிது மேன்பட்டவர்கள்.ஆனல் சாதாரண வாழ்கை மேற்கொள்ள தையல்,மரவேலை போன்றவற்றைத் திறம்பட செய்வர்.தம் அன்றாட தேவைகளைத் தாமே பூர்த்தி செய்து கொள்வர்.இவர்கள் வாழ்க்கை மேம்பட அக்கரை உள்ளவர்களின் மேற்பார்வை இன்றியமையாததாகும்.எனினும் இவர்கள் கல்வி தகுதி பெறதகுதி அற்றவர்கள்.


மனம் எண்ணங்களின் உருவாக்கம் ஆகும்.எண்ணங்கள் நுண்மையாகவும் மாறிக்கொண்டே இருப்பவையாகவும் இருப்பதால் இவற்றை கட்டுபடுத்துவது கடினம்.ஒரு கட்டுப்பாடுள்ள மனதால் நன்கு பாதுகாகப்பட்டுள்ள ஒரு எண்ணம் மகிழ்ச்சியை தருகிறது..ஒரு கருவியின் உயர்ந்த பயனைப் பெறுவதற்கு,அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்ளவேண்டும்.மனம் எண்ணமிடுவதற்கான ஒரு கருவி.எனவே அது எப்படி வேலை செய்கிறது என்று கண்டு கொள்வது அவசியம்.
1. மனோசக்திகள் சிதறுண்டு, ஒழுங்கின்றி கவனிக்கப்படாத நிலையில் உள்ளன.இங்கு மனம் பொருள்களை நாடி ஏங்குகிறது.. இதை கஷிப்தநிலை என்று பெயர்.
2.மூட நிலையில் மனம் முட்டாள்தனமாகவும்,மந்தமாகவும்,அறிவிலியாகவும் உள்ளது.அது குழப்பமுற்று தனக்கு எனன வேண்டும்  என்றே தெரியாமல் உள்ளது


3..மனம் கலக்கமுற்று கவனச்சிதறல்களால் பாதிக்கபட்டுள்ளது.இங்கு ஒரு நபரின் முயற்சியின் பலன்களை ரசித்து அனுபவிக்கும் திறன் உள்ளது.ஆனல் விருப்பங்கள் கட்டுப்படுத்தப்பட்டு வழிநடத்தபடாமல் உள்ளன. இது விகஷிப்தநிலை.


4..மனம் மிகவும் நன்கு கவனித்தபடியும்,மனதின் திறன்கள் ஒரு தனிப்பொருள் அல்லது ஒரு புள்ளியுல் ஒருமுகப்படுத்தப்பட்டும் இருக்கின்றன.இதற்கு எகாக்ரம் என்று பொயர். (ஏக-ஒன்று,ஆக்ர-முதன்மையாக)
இதில் உயர்ந்த அறிவு திறனைகொண்டுள்ளார்.அவர்க்கு தனக்கு என்னவேண்டும் என்று மிக சரியாக தெரிந்து இருப்பதால் தனது நோக்கத்தை அடைவதற்கு தனது சக்தி அனைத்தையும் பயன்படுத்துகிறார்..சில சமயம் பிறரின் பாதிப்பை பற்றி கவலைப்படாமல் தான் விரும்பிய பொருளை அடைய இரக்கமின்றி பின் தொடர்வது என்பது அதிகமான துயரத்தை உண்டு பண்ணக்கூடும்.பெரும்பாலும், விரும்பிய பொருள் கிடைத்தாலும்கூட ஒரு கசப்பு சுவையே எஞ்சி நிற்கும்.ஒரு ஏகாக்ர நபர் மிகவும் அகங்காரம் கொண்டு இருப்பதற்கான ஆபத்தும் உள்ளது.புலன்கள் கட்டுப்பாடின்றி திரியும் போது மனமும் அதைப் பின் பற்றுகிறது..அவை ஒரு மனிதனின் மதிப்பீடுகளை மங்கஸ் செய்து புயலடிக்கும் கடல் மேலே அலை மோதும் கப்பலை போல அவனை மிதக்கவிட்டு விடுகின்றன. ஒரு கப்பல் நேர்பாதையில் சாயாமல் செல்ல சிரியான அடிப்பாரம் தேவை. கப்பலை சிரியாக வழி நடந்தி செல்ல மாலுமிக்கு ஒரு விண்மீன் தேவை.ஏகாக்ர நபர் தனது மனதை சமநிலையில் வைத்து எப்போதுமே சரியான திசையில் செல்வதற்கு நான், எனது என்ற உணர்வு மறைந்தாலொழிய அவர் மகிழ்ச்சியை அறியமாட்டார்.


5. இங்கு மனம்(மன்ஸ்) அறிவு(புத்தி) மற்றும் தான் (அகம்காரம்) எல்லாமே  கட்டுப்படுத்தப்பட்டு . இந்த எல்லா திறங்களும் இறைவனுக்கு அவருடைய பணிக்காவும், பயனுக்காகவும்  அர்பணம் செய்து விடப் ப்டுகின்றன.இங்கு நான்  எனது என்ற உணர்வுகளுக்கு இடமில்லை


மனதின் ஒட்டுமொத்த அமைப்பைய் குறிப்பது சித்தம். இது மூன்று பிரிவுகளைக்