"பிறப்புக்கும், இறப்புக்கும் அப்பாற்பட்டதாக, எல்லையற்றதாக, ஒப்பற்றதாக, பிரபஞ்சம் அனைத்தையும் எல்லாப் பங்க்கங்களிலும் மூடியிருக்கும் மகா பிரளயம் போன்றதாக ஆனால் எந்தவிதமான அசைவும் இல்லாமல், பூரண அமைதியாக, எந்தவிதமான சந்தேகங்களும், சஞ்சலங்களும் இல்லாததாக இருக்கின்ற இத்தகைய பிரமம் சமாதியில் ஆழ்ந்து இருக்கும் ஞானியின் இதயத்தில் பிரகாசிக்கிறது.
-விவேகசூடாமணி-408-410
ஆதிகாலம் முதற்கொண்டு மனிதன், தனது சரீரப் பசிகளுக்கும், விருப்பங்களூக்கும் இடையில், லெளதிக நிலையற்ற பொருள்களைப் பற்றிக் கொண்டிருக்கிற காலத்தில் தனது சரீர வாழ்க்கையின் அளவுபட்ட நிலையில்லாத ,தோற்ற மாத்திரையான தன்மையை எப்பொழுதும் உள்ளுர உணர்ந்து கொண்டும்,தனது ஞான நேரங்களில் இறைவனை அடைவதற்கு முயன்று கொண்டும்.,அவ் இறைவனை அடைந்து அமைதியுறுவாதாகக் கண்ணீரோடு கோரிக்கொண்டும் இருக்கின்றான்.
உலக இன்பங்கள் உண்மையானவையென்றும்,திருப்தி தரத்தக்கவையென்றும் வீனாக நினைத்துக்கொண்டிருக்கும் காலையில்,துன்பமும்,துக்கமும் தமது பொய்மையும்,திருப்தியற்ற தன்மையும் அவனுக்கு இடைவிடாமல் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்றன..உலகப் பொருள்களில் பூரண திருப்தியைக் காணலாமென்று நம்புவதற்கு எப்பொழுதும் முயன்று கொண்டிருக்கையில், இந்த நம்பிக்கைக்கு விரோதமாகத் தன்னுடைய அகத்தின் பிடிவாதமான எதிர்ப்பை உணர்ந்து கொண்டிருக்கிறான்..,அவ் எதிற்பு அவனுடைய ஆவசியமான மரணத்தன்மையினை மறுப்பதாகவும்,மறணமற்ற, நித்தியமாயுள்ள அகண்ட இறைவனிடத்தில் மாத்திரம் நிலையான திருப்தியையும், இடையுறாத சாந்தியையும் அவன் காணகூடுமென்பதை ரூசுப்படுத்துவாதாகவும் இருக்கிறது.
ஆகவே ஆண்டவனிடமிருந்து ஒதிங்கி விலகும் வாழ்க்கையால் ஒரு பயனும் இல்லை.அப்படிப் பட்ட வாழ்க்கையில் மனநிம்மதியோ, சந்தோஷமோ ஏற்படாது.இந்த அண்டத்திலும் ஒரு ஒழுக்கு முறை இருக்கிறது. உலகில் உள்ள ஒவ்வொரு உயிரையும்,வஸ்துவையும் இயக்குகின்ற, மாற்ற முடியாத ஒரு நியதி இருக்கிறது. அது ஒரு கண்மூடித்தனமான நியதி அல்ல. ஏனெனில் அப்படிப்பட்ட நியதி எதுவும் உயிர்கள் செயலாற்றுவதைக் கடுப்படுத்த முடியாது,எல்லா உயிர்கள் மீதும் ஆட்சி நடத்துகிற இந்த நியதிதான் இறைசக்தி.வார்த்தையால் விவரிக்க முடியாத ஏதோ ஒரு அதிசய சக்தி,உலகில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் வியாபித்து நிற்கிறது.கண்ணால் காண முடியாதிருந்தும் தன்னை உணரும்படி செய்கின்ற இந்த சக்திதான் நமது புலங்களால் அறியக்கூடிய பொருள்களூக்கு முற்றிலும் வேறுபட்டுள்ள காரணத்தால் எந்த வகையிலும் நிருபிக்கப்பட முடியாத இவ் இறைசக்திதான் முற்றிலும் புலங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.
இரவில் மென்மையாக விழும் பனித்துளிகள் எப்படித் தாவரங்கள் வாழத் துணை செய்கின்றாதோ, அப்படியே இந்த தெய்விக சக்தி உயிரிணங்களின் நன்மைக்காக உலகமெங்கும் பரவி நிற்கிறது.
உலகெங்கும் வியாபித்திற்கும் இந்த இறைசக்தி உலகிற்கு அனுகூலமானதா?. தீயதா?. என்றால் இது கலப்பற்ற நன்மை அளிப்பது என்றே தோன்றுகிறது, ஏனெனில் மரணத்திற்கு மத்தியிலேயே உயிர் இருப்பதையும், அசாத்தியத்திற்கு இடையே சத்தியம் இருப்பதையும், இருட்டின் மத்தியில் ஒளி இருப்பதையும் காணமுடிகிறது.
மனிதன் புற உலகில் தேடும்போது இறைவனைப் பற்றிய அற்புதமான கருத்துக்களையும்,இயற்கை அழகின் உயர்ந்த நுகர்சியையும் அவன் பெற்றான்.புற உலக ஆராய்சியிலிருந்து மிக உன்னதமான கருத்துக்கள் கிடைத்தன என்பது உண்மைதான்.
"ஸத்யமேவ ஜயதே நான்ருதம்! ஸ்த்யேன பந்தாவீததோ
தேவயான."
வெல்வது உண்மையே., உண்மையற்றதல்ல., உண்மை,உண்மை என்ற நன்மை மட்டுமே பின் பற்ற வேண்டும் என்று அத்வைதம் போதிக்கிறது.
ரிக்வேத சமஹிதையில் சொல்லப்பட்டிருக்கும் மிக ஆழகான வர்ணனைகள் இதுவரை எழுப்பட்டதில் அவை மிகவும் அற்புதம் வாய்ந்தவை. ஆனால் எல்லையற்ற பரம்பொருளை எல்லைக்குட்பட்ட மொழியின்மூலம் தெரிவிக்கவே அதில் முயற்ச்சி செய்யப்பட்டுயிருக்கிறது..எல்லையற்ற அந்த பரம்பெருளை இடம்,காலம் என்ற வரம்புக்குட்பட்ட பொருள்களால் நுகரப்பட்டதன் அனுபவம்,அதில் கொடுக்கப்பட்டுயிருக்கிறது.
இதுவே ஞான காண்டத்தில் வேறு விதமாக காண்கிறோம்.முதலில் மக்கள் வெளி இயற்கையிலிருந்து பிரபஞ்சத்தின் உண்மைகளை அறிய முயன்றார்கள். அதாவது வெளி உலகிலிருந்தே வாழ்க்கையின் இரகசியங்களை அறிய முயன்றார்கள்.இந்த கருத்து சிறந்ததுதான். ஆனால் பெருமைக்கு ஏற்றவகையாக இருக்க வில்லை.
ஆனால் அக உலக ஆராச்சியோ இன்னும் அழகாக, ஆழமான,மிகவும் உன்னதமான, மகத்தான கருத்துக்களை காண மனித இனத்திற்கு அளித்திருக்கின்றது.
வேதங்களின் கர்ம காண்டப் பகுதியில் இறைவனைப்பற்றிய கருத்துக்கள் இருக்கின்றன. அனைத்து உயிரினங்களுக்கும் மேலாக இருந்து, அனைந்தையும் ஆக்கி,காத்து,அழிக்கும் இறைவனைப் பற்றி மிகவும் அற்புதமாம விதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
"அவனே அனைத்துமாக இருக்கிறான்..அவன் ஒருவனே உண்மை" என்ற கருதுதான் அது.
அனால் உபநிடங்கள் "தத்வமஸிஸ்வேதகேதோ-ஏசுவேத கேது,நியே அது- என்று செல்லப்பட்டுயிருக்கிறது. அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் அந்தப் பொருளே மனித ஆன்மாவினுள்ளும் இருக்கிறது. எனத் தெளிவுபடுத்தப்படுகிறது. சந்தேகம் சிறிதும் இன்றி மிகத் தெளிவான,தைரியமான மொழியில் இது அறியுறுத்தப்படுகிறது.. இந்த மகத்தான உண்மையினை உபநிடங்கள் எந்த விதமான பயமும் இல்லாமல் உலகிற்கு எடுத்துரைக்கின்றன.
வேதத்தின்கருதுஆனதுஊனுடம்புஉணர்வில்லாததும்,உயிர் உணர்வுடையதுமாய் வேறுபட்டுயிருக்கின்றபடியால் உடம்பினுள் உயிர் தங்கி வாழ்க்கை நடத்தும் பொருட்டு உயிர்ப் பொருளாகிய கூறு நிலம், நீர்,நெருப்பு,காற்று,விண் என்ற ஐம்பூதங்களையும் அதன் கண் விழியும் பொருள்களை இறைவன் படைந்தான்.இவ் உயிரியல் உலகம் ஒரு நெறியில் வழுவாமல் இயங்கினால் அன்றி உயிர்கள் தமது வாழ்க்கையை இனிது நடத்தலாகாமையால் அவற்றின் ஒவ்வோர் அனுவிலும் கலந்து ஒன்றாய் இறைவன் நின்று அவை உயிர்களுக்குப் பயன் அளித்து நிற்குமாறு செய்தார். இவ்வாறு இறைவன் அருளால் வாழும் மக்கள் உடலும், அதன் உள்ளேயிருக்கும் மனம் முதலிய கரணங்களும் வாய் முதலிய பொறிகளூம் துனைபுரிய வினை செய்து அதனால் விளையும் பயங்களை நுகர்ந்து வாழ்கின்றன..வினைசெய்து அதனால் விளையும் பயன்களை நுகர்ந்தே தீர வேண்டும் என்பது ஏன்? அதனை நுகர்வதால் உயிர்கள் எய்தும் பயன் யாது?. பயனை நுகர்ந்தால் இன்றி வினை முற்றுப் பெறாதாகையால் வினைப்பயனை உயிர்கள் நுகர்ந்தே தீர வேண்டியிருக்கிறது. மேலும் உலகயில் வினை வகையில் உயிர்க்கு விளக்கமும், பயன் நுகர்ச்சியால் ஒய்வும், மயக்கமும் எய்துகின்றன. பின்பு இவ் இரண்டும் மேற்செய்யக் கடவ வினைகளை செய்வதற்கு ஆக்கமும்,ஊக்கமும் விளைவிக்கின்றன. இவ்வாறு வினைகள் காரண காரியத்தொடர்சியாய் உயிரைப் பிணித்து ஒய்வும்,மயக்கமும் தந்து வினையின் பயனால் உடல் கெடுவதால்,அவ்வினை செய்யும் பொருட்டு இறப்பும்,பிறப்பும் எய்துமாறு இறைவனால் அமைக்கப்பட்டுருப்பதால், அவ்வினைத் தொடர்பு நீங்கும் பொருட்டு இறைவன் தாழ் அடி சேர வேண்டும் என இயம்பினர் சான்றோர்கள்.
ஆனால் உயிர்கள் தம்மை வினையால் கட்டுப்படுத்திக் கொணடு உய்தி பெற மாட்டாது கலக்கமுறுகின்றன.உயிர்கள் வினை செய்யும் பொருட்டு விதி வசத்தால் ஆட்படு நினைத்த பயன் கிட்டாமல் மனம் நொத்தன. விதியைக் கண்டு அஞ்சினர்.
இந்த விதியைப் பற்றி பர்த்ரு ஹரி முனிவர் ஒரு சிறுகதையின் மூலம் விளக்கியுள்ளார்.
ஒரு பாம்பாட்டிகையில் ஒரு யவனமான பாம்பு ஒன்று சிக்கியது. அதன் வீரியம்,அதன் துடிப்பு ஆனது அவனுக்கு கட்டுக்கு அடங்கவில்லை. ஆகவே அதன் வீரியத்தை குறைக்கும் பொருட்டுட் ஒரு பெட்டியில் வைத்து பட்டினி போட்டு வைத்தான். சில நாட்களுக்குள் தன் வசப்படும் என நினைத்தான்.அதன்பின் அதைவைத்து நல்ல வருவாய் ஈட்டலாம் என மனம் லாயித்துயிருந்தான். சில நாட்கள் சென்றன.அவ் பாம்பு ஆனது உணவு இன்றி மிகவும் மெலிந்து,வலிவுகுன்றி துடிப்பு அடங்கி வீரியம் குன்றி மிகவும் மோசமான நிலையில் நிற்கதி அற்றுயிருந்தது. இனிபிழையோம் எனமனம் வருந்தியிருந்தது.அச்சமயத்தில் அவ் வழியாக சென்ற ஒரு பெரும் எலியானது மிகவும் பசியுடன் அவ்பொட்டியை பார்த்து நமக்கு உணவு இதில் அடங்கியிருக்கும் என எண்ணி அவ் பாம்பு பெட்டியை துளையிட்டு உள் புகுந்தது.. ஆனால் உள்ளே உள்ள பாம்பு இருக்க கண்டு பயம் கொண்டு அஞ்சி நின்றது. அச்சமயத்தை பாம்பு தனக்கு சாதகமாக பயன் படுத்தி அவ் எலியை சாப்பிட்டு,அவ் எலி யிட்ட துளையின் வழியாக வெளியே தப்பி விட்டது. ஆக பாம்பாட்டி ஒரு விதமாக நினைத்தது நடக்கவில்லை. உயிர் பிழைப்போம் என மறத்த பாம்பு எலியை தின்றுவிட்டு பிழைத்து விட்டது. உணவு கிடையாமல் பாம்பு பெட்டிக்குள் உணவு கிட்டும் என எண்ணிய எலி மாய்ந்தது.ஆனல் எல்லாஉயிர்களும் தனக்கு உண்டான கருமத்தை செய்தது. இஃது விதியின்செயலால் வேறுவிதமாக நடந்து விட்டது.இந்த விதியின்
வினைக்கு அஞ்சவேண்டாம்.,சிற்றறிவுடைய உயிர்களால் செய்யப்படும் செயல் அவை. எல்லாம் வல்ல இறைவன் திருவருள் நின்முன் அழிந்தொழியும்.
மனிதனுக்கு அச்சம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.சிறிது கண் மூடியதும் பாம்பு வந்து கடித்து விடுமோ ,திருடர் வந்து தாக்குவரோ என்ற அச்சம் இருந்து வரும்.,மனிதன் தலை மாட்டில் ஒரு தடியை வைத்து தூங்குகிறான் .எதற்காக என்று கேட்டால் பக்கத்தில் இருப்பது நல்லது.திருடன், கிருடன் வந்தால் ...... என்கிறான். அட அப்பாவி ! திருடன் அந்த தடியை எடுத்து உன் தலையில் போட்டால் என்னவாகும்?.அவன் தடி கொண்டுவர மறந்துபோய் இருந்தால் உதவும் என்று முன்கூட்டிய சித்தமாய் வைத்து இருக்கிறாய் போலும்.யாருடைய தைரியத்தில் தூங்கு கிறாய் ! இச் சமயத்தில் இறைவன் கையில் இருக்கிறாய்.நீ விழித்து எழுந்தால் அல்லவா உன்னை பாதுகாத்து கொள்ள? உறக்கத்தில் உன்னை பாதுகாப்பவர் யார்?.
நான் ஏதோ ஒரு சக்தியை நம்பி துங்குகிறேன் .எந்த சக்தியின் நம்பிக்கையில் சிங்கம், பசு முதலிய பிராணிகள் உறங்குகின்றனவோ அதை நம்பி நானும் உறங்குகின்றேன்.சிங்கத்துக்கும் உறக்கம் வருகிறது.உலகதிநிடமே பகைமை பூன்டுள்ளமையால் ஒவ்வொரு கணமும் பின்னால் திரும்பி திரும்பி பார்த்துகொண்டிருக்கும்.சிங்கம் துன்கவே செய்கிறது.இந்த சக்தியிடம் நம்பிக்கை இல்லையானால் சில சிங்கங்கள் தூங்கவும் வேறு சிங்கங்கள் விழித்து காவல் செய்யவும் அவை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டி இருக்கும்.
ஓநாய்,முதலிய துஷ்ட பிராணிகளும் உறங்குகின்றனவோ சிஷ்டி எங்கும் வியாபித்துள்ள அதே சக்தியின் மடியில் நானும் தூங்கி கொண்டு இருக்கிறேன் .தாயின் மடியில் குழந்தை கவலை இல்லாமல் தூங்குகிறது.அப்போது உலகின் சக்கரவர்த்தியே தூங்குவது போல்தான் அது தூங்குகிறது.
நீங்களும் நானும் சிருஷ்டி எங்கும் வியாபித்துள்ள அந்த தாயின் மடியில் இதே வகையில் அன்பும் நம்பிக்கையும் அறிவும் கொண்டு உறங்கும் பயிற்சியை பெற வேண்டும்.
எந்த சக்தியின் அடிபடையில் என் இல்வாழ்க்கை முழுமையும் நடந்து கொண்டுயிருகிறதோ அதை நான் மேன்மேலும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.அந்த சக்தியில் எனக்கு எவ்வளவு அதிக நம்பிக்கை தோன்றுமோ.அவ்வளவு அதிக பாதுகாப்பு எனக்கு ஏற்படும்.எனக்கு அந்த சக்தியின் அனுபவம் அந்த அளவுக்கு அதிகமாகுமோ அந்த அளவுக்கு நான் வளர்சியுருவேன்.
ஆம் இந்த இறைசக்தி ஒரு பொருள் அல்ல.இதை முதலில் தெளிவாக மனதில் பதிய வைத்து கொள்ளவேண்டும்.அப்படி இருந்தால் விஞ்கானாம் விட்டு வைத்து இருக்காது.இறை சக்தி என்பது உயிர் இயக்க முழுமை.இந்த நேரத்தில் அது முழுமையாக இயங்குகிறது.அது ஒரு பொருளில் மட்டும் இயங்குவது இல்லை.இந்த பிரபஞ்சம் அனைத்திலும் அது முழுமையாக செயல்படுகிறது.ஆகவேதான் விஞ்கனாம் அதை புரிந்துகொள்ளமுடியவில்லை.அகவே விஞ்கானத்தால் ஒருக்காலும் பிரிந்து கொள்ளவும் முடியாது.உணரத்தான் முடியும்.
ஆகவே தொட்டதெல்லாம் பொன்னாகும் ஸ்பர்ஷ் வேதியை போலும்,காமுதேனுவைபோலும் இருக்கும் இந்த சத்தியத்தை எவ்வாறு உணருவது?. ஒரு மனதான அப்பியாசத்தால் மூலமும் வைரயகத்தின் மூலமும் அடையலாம் என்று பகவத் கீதை கூருதிறது.
ஆம் ஐம்புலன்களுக்கு அப்பாலான ஒரு நிலையில் இதை அறிவதுதான் சாத்தியம் ஆகும்.புலன்களின் அறிவானது நமக்கு எவ்வளவுதான் உண்மையாக தோன்றினாலும் பொரும்பாலான சந்தர்பங்களில் உண்மை அற்றதாகவும் எமற்ரகுடியதகவும் இருக்கிறது.புலன்களால் எதை கானுகின்றோமோ அது தவறுதலாக இருக்கிறது.வெளி சட்சியக்களால் இது நிருபிக்கபடவில்லை.இறைவன் தங்களுக்குளே இருக்கிறார் என்பதை உணர்தவர்களின் குணமும் நடத்தையும் பரிசுந்தம் அடைந்துவிடுவத்தின் மூலமே இது நிருபிக்கபடுகிறது.
ஆகவே வேதம் நியே அது என்று சொல்லப்பட்டு இருக்கிறது.அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கும் அந்த பொருளே மனித ஆன்மாவிலும் இருக்கிறது. என தெளிவு பட கூறுகிறது.நம் உள்ளத்தினுள் நாம் ஆழ்ந்து செல்ல செல்ல பலவிதமான உயர்ந்த அனுபவங்களை பெற முடியும்.இவை அனைத்தையும் தாண்டி சென்றேர்கனால் கடைசியில் நம் உண்மை நிலையை உணர முடியும்,.அதுதான் மேட்சாம் அல்லது விடுதலை எனப்படும்.