செந்துருவை சேரலாம் செந்தழிழ்லை பாடலாம்
இந்திரனைப் போல் வாழந்துண்டு இருக்கலாம்,
மந்திரம்சேர் வெற்பகத்தையூடுஅருத்தவேலவர்க்கு

முன்பிறந்த கற்பகத்தை கை தொழுதார் கால்

எதைதேடினார்கள் துன்பங்களில் இருந்து விடுதலை அடைய

எதைதேடினார்கள் துன்பங்களில் இருந்து விடுதலை அடைய

சென்ற நூறு வருடங்களாகஸ் சீர்திருதங்களைப் பற்றியும், லட்சியங்களைப் பற்றியும் வெறும் வெறும் பேச்சுப் பேசிக் கொண்டுயிருக்கிறோம். ஆனல் அவற்றை செயல் முறையில் கொண்டுவர வேலை வரும் போது நம்மை காண முடியவில்லை. இதை கண்டு உலகமே எள்ளி நகையாடுகிறது. சீர்திருத்தம் என்ற பெயரே கேலிக்கூத்தாகி விட்டது. இதற்கெல்லாம் காரணம் என்ன?. இதற்கு மூல காரணம் என்ன?. இதற்கு மூல காரணம் நாம் பலவீனமாயிருப்ப்தே இவை அனைத்துக்கும் காரணம். நம் உடல் பலவீனமாயிருக்கிறது.நம் மனம் பலவீனமாயிருக்கிறது. நம்மிடம் நமக்கு நம்பிக்கை இல்லை. நம் முதுகெலும்பு உடைந்து விட்டது,இப்போது வெறும் புழுக்கள் போல் ஆகிவிட்டோம்.ஏனெனில் நாம் பலவீனர்களாக மிக மிகப் பலவீனர்களாக இருக்கிறோம்.முதலில் நம் உடல் பலவீனம் நமது துண்பங்களில் மூன்றில் இரண்டு பங்க்கு நமது உடல் பலவீனமே காரணமாயிருக்கிறது. நாம் சோம்பேறிகள், நம்மால் உழைக்க முடியவில்லை. நம்மால் சேர்ந்து வாழமுடிவதில்லை. நாம் ஒருவரை ஒருவர் நேசிப்பது இல்லை.நம்மிடம் சுயநலம் நிறைந்து இருக்கிறது.ஒருவருக்கொருவர் சண்டையிடாமலும்,பொறாமைப்படாமலும், மூன்று பேர்கள் சேர்ந்தும் வாழமுடிவதில்லை.புலங்கள் கட்டுக்கடங்காமல் மதம் பிடித்த குதிரை போல் தறிகெட்டு மனம் போனபடி போகிறது. குழந்தைகள் ஒளிமயமான இன்பக்கனவுகளில் மிதப்பதும், பின்னால் அவையனைந்தும் வீண் எனக் காண்பதும், வயதானவர்கள் தங்கள் கடந்த காலத்தை எண்ணி இமாய வலையில் இருந்து வெளியேறிஸ் செல்ல முடியாமல் திண்டாடுவதும். இதுதான் மனித வாழ்க்கையின் இயல்பாக இருக்கிறது.
ஆகவே தற்போது நமக்கு தேவை வலிமை, அளவற்ற வலிமை இதையே உபநிடதங்கள் ஒவ்வொரு பக்கமும் கூறுகின்றன.இந்த மகத்தான  விஷயத்தை நாம் எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
வாழ்கையின் பெரும் பிரச்சனைகளுக்கு பிற நாடுகள் எங்கனம் முடிவு கானும் முயற்சி புறத்தே நிகழ்த்ததோ. அவ்வாறே நமது முன்னோர்களும் தேடினர்.  பிறநாட்டவர் எங்கனம் தங்கள் முயற்சியில் தோல்வி கண்டன்ரோ அங்கனமே நம் நாட்டவரும் தோல்வி கண்டனர். ஆனல் நம் நாட்டவர் அந்துடன் நில்லாமல் வாழ்வின் பெரும் பிரச்சனைகளுக்கும்-பிறப்பு- இறப்பு- பிரசனைகளுக்கும் நமது புலங்களால் இந்த பிரசனைகளுக்கு முடிவு காண முடியாது என்பதை துணிவுடன் கூறினர்.இதையே உபநிடங்கள்
"எங்கே வாக்கும், மனமும் செல்ல முடியாமல் திரும்பி விடுகின்றனவோ, அங்கே பார்வை செல்லாது.பேச்சும்செல்லாது-புலனறிவின் இயலாமையை விளக்கும் வாக்கியங்கள் பல அங்கே உள்ளன."அந்துடன் நிற்காமல் மனிதனின் அக இயல்பை ஆராய்ந்தார்கள். தங்கள் ஆன்மாவிடமே விடை காண விரும்பினார்கள். அகக்கண் கொண்டு தேடினார்கள். வெளியில் தேடுவது பயனற்றது அங்கு எதுவும் செய்ய இயலாது, விடைகான முடியாது என்பதை உணர்ந்தார்கள். ஒளியிளழ்ந்த சடப்பொருளால் உண்மையைக் காட்டமுடியாது என்று தெளிந்தனர்.விடைகண்டனர்.
மேலும அனைந்தும்  ஆன்மாவிலேயே இருக்கிறது என்னும் கோட்பாடே அது. அதாவது ஆன்மாவைத் தூண்டுவது எதுவும் இல்லை. ஆன்மாவே எல்லவற்றையும் தூண்டுகிறது என்பதே அது. சக்கிகள் அனைத்தும் ஆன்மாவிலேயே இருக்கிறது. உண்மையில் அடையவேண்டியது எதுவும் இல்லை. ஒன்றும் இல்லை.அனைத்தும் ஏற்கனவே ஆன்மாவில் உள்ளன என்று யோகி சொல்கிறார்கள். இவற்றை வெளிப்படுத்துவதே நமது செயல்.
வேற்றுமையை உண்டாக்குவது உடலே. ஏற்ற உடலைப் பெற்றதும் இந்த ஆற்றல்கள் வெளிப்படுகின்றன. ஆனல் ஆற்றல்கள் ஏற்கனவே அதில் உள்ளன.நல்ல செயல்களோ, தீய செயல்களோ இயற்கையின் மாறுதல்களுக்கான நேரடிக்காரணம் அல்ல.அந்த செயல்கள் மாறுதல்களுக்குத் தடையாக உள்ளவற்றை நீக்குகின்றன அவ்வளவே. வயலுக்கு நீர் பாயும்போது தடையாக உள்ளவற்றை உழவன் நீக்கும் போது நீர் தானவே பாய்கிறதே. அது போல் ஏரி நீரை வயல்லுக்கு உழவன் பாய்ச்சுவதை உதராணம் காட்டுகிறார். ஏரியில் நீர் நிறைந்துள்ளது. கண நேரந்தில் அது வயலில் பாய்ந்து விடும். அதைத்தடுத்து நிற்பது எது? ஒருமண்கரை அந்த கரையை ஒருபகுதியை உடைந்து விட்டால் போதும் தண்ணீர் வேகமாக ஒடி வயல்களில் பாய்கிறது. இத்தகைய  ஆற்றல் தூய்மையும் நிறைநிலையும் ஆன்மாவிடம் உள்ளன.ஆனல் தடுத்து நிற்பது அதை மூடியுள்ள ஆவரணமே. திரையே. திரையை நீக்கி விட்டால் ஆன்மா தூய்மையாக விளங்க்குகிறது தெரிகிறது.அதன் சக்தி வெளிப்படுகிறது.ஆன்மாவை மறைப்பது நமது மனதின் திரையே.

அமைதியை தேடி....................?.
இந்த உடல்-உணர்வின் மூலம் மகிழ்சியை உணர முடியும். இந்த மனம்- எண்ணங்களின் மூலமாக மகிழ்சி அடையமுடியும். இதயம் - அன்பு, மற்றும் கருணை மூலமாக மகிழ்சியடையும்.உயிர்த்தனமையானது பேரமைதியாக உங்கள்  உள்ளே இயங்குகிறது.அந்த பேரமைதிப் பெரும்கடலில் எந்த மாற்றமும் இருக்காது.அதுதான் உங்களது உண்மையான  அமைதி நிலை.அது தான் உண்மையான நீங்கள்.ஆனல் இப்போது செல்லும்  நீங்கள் அல்லது நான் என்பது உங்கள் மனதைத்தவிர வேறல்ல.இது தவறன கொள்கை.ஆகவே அந்த உயிர்த்தன்மை உங்களுக்கு கட்டுப்பட்டது அல்ல.ஆனால் நீங்கள் அதனால் கட்டுப்படுத்த படுகிறேர்கள்.அதுதான் அதனுடைய தனித்தன்மையும்.பெருமையும் ஆகும்.அந்த அமைதி மிகவும் அழமானது.அத்துடன் மிகனுண்மையானதும் கூட.அதில் மனம் சிறிது புகுத்தாலும் அதன் அமைதி தன்மை முழுவதும் கொட்டுவிடும்.அந்த பேரமைதிமைய நிலைதான் உங்களுக்கு உண்மையும்,அன்பு மற்றும் கருணை தைரியம் போன்ற அநேக தன்மைகளை உண்மையாக வாழங்க்குவது.ஏனனில் அதனுடைய ஆற்றல் அளப்பரியது.உங்களுடைய ஆற்றல் மிக்க மனம் அதனால் உண்டாகப்பட்டதுதான்.
இந்த உயிர்த்தன்மையை பொருத்த அளவில் நாமும்,இந்த பிரபஞ்சமும் ஒன்றுதான்.பிரபஞ்சத்தில் எது இயக்கமாக இருக்கிறோதோ,அதுதான் உங்களிடம் இயக்கமாக இருக்கிறது.இந்த உணர்வு உங்களிடம் வளரும் பொழுது ஒரு புல்,இலைகூட உங்களுக்கு அதி அற்புதமாக தோன்றும்.அதை உங்களால் அலட்சிய படுத்தமுடியாது.எந்த விதமான மையமும் இல்லாமல் யாராலேயும் உயிர் வாழ முடியாது.அது ஏற்கனவே உங்களிடம் இருக்கிறது.இயற்கையோ-கடவுளோ கொடுத்த அந்தக் கரு அல்லது சாராம்சம் தான் அந்த மையம்.ஒவ்வொரு சூறாவளிக்கும் ஒருமையம் உண்டு அந்த சூறாவளியின் வெளித்தன்மை எவ்வள்வுக்கெவளவு அமைதியற்று சுழன்று கொண்டு இருக்கிறதோ அவ்வளவுக்களவு அதன் மையம் அமைதியோடு நிலையோடு இருக்கும்.நாம் உள்ளே உள்ள உயிர்ச்சக்தி மேலே கிளம்பி தன் மையத்தை அடையும்பொழுது அதில் எந்த சலனமும் இருக்காது.அதுதான் நாம் ஆத்மீகத்தில் அடையவேண்டிய முடிவான தன்மை.அந்த தன்மையை அடைய நம் உள்ளே மிக ஆழமாக செல்லவேண்டும்.அது வெகு துரத்தில் இருக்கிறது.ஆனல் அதை நாம் இந்தக்கணத்தில் அடையலாம் .ஆனால் அது அவ்வளவு சுலபத்தில் நடக்காது, ஏனெனில் நம் மனம் நமக்கு அதற்கு இடம் தராது.ஆகவேதான் இப்பொழுது அடையமுடியும் என்று சொல்லும்பொழுது அதை நாம் அடைய முடியாது என்றும் செல்ல வேண்டியிருக்கிறது.அது தான் நம் ஆன்மா.