உயிர் என்பதை ஒரு நுண்ணிய துகளாக, ஆற்றல் துகளாக வைத்துக் கொண்டீர்களேயானால், அப்படி எண்ணிறந்த கோடனக் கோடித் துகள்கள் சேர்ந்து ஒருங்கே ஒருதொடராக, கோர்வையாக இயங்கி கொண்டுயிருக்கிறது.அதைஸ் சூக்கும சரீரம் என்று சொல்கிறோம்.அந்த சூக்கும் சரீரம் உடலில் இயுங்கிக் கொண்டிருக்கிறபொழுது ஒவ்வொரு உயிர்த்துகளிலிருந்தும் தற்சுழலால் ஒர் அலை உண்டாகிறது.உயிர்துகள் அத்தனையும் சேர்ந்து அளிக்கும் அந்த அலைப் பெருக்கத்தை உயிர் ஆற்றல்-அழுத்தம் (Bio-magnetism) என்று சொல்கிறோம். இந்த அலை அழுத்தம் ,உடல் ஆற்றலாகவும் மனஅற்றலாகவும் செயல் படுகிறது.