இனி மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் என்றால் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். எதனால் மனம் ஆக்கப்பட்டுயிருக்கிறதோ அதற்குச்சித்தம் என்று பெயர்.ஒரு குளம இருக்கிறது என்று வைத்து கொள்வேம்.அது சலனமின்றி,அசையாமல் இருக்கிறது. ஒருவன் அதற்குள் ஒரு கல்லை எறிந்தால் என்னவாகிறது?. முதலில் அந்த நீர்ப்பரப்பில்ல் கல் தாக்கியதால் ஒர் அடிகொடுக்கப்படுகிறது. இரண்டாவதாக தண்ணீரில் ஒரு அதிர்வு உண்டாகி அலை அலையாக புறப்படுகிறது. சித்தத்தை இந்த க் குளத்திற்கு ஒப்பிடுவோம். புறப் பொருள்களே அதில் எறியப்படும் கற்கள்.புலங்களால் நுகர்ச்சி எற்பட்ட உடனே அது இந்திரியங்கள் மூலம் மனதை அடைந்து ஒர் அதிர்வு உண்டாகிறது.இந்த அதிர்வே மனம்.இந்த அதிர்வுக்கு எதிர் செயல் ஏற்படுகிறது.அதாவது ஆலோசித்து முடிவு செய்யும் சக்தி, புத்தி எனப்படும். புத்தியுடன் தோன்றி இந்த நுகர்ச்சிகளை அனுபவிக்கும் "நான்" என்னும் உணரும் உணர்சி அகங்காராம் என்று பெயர்.. ஒரு கொசு என் கையின் மேல் உட்காருகிறதென்று வைத்துக் கொள்ளுங்கள்.அந்த உணர்ச்சி என் சித்ததிற்கு கொண்டு போகப்பட்டு,அதில் ஒர் அதிர்வு ஏற்படுகிறது.இதைத்தான் மனொதத்துவ சாஸ்திரப்படி மனம் என்று சொல்கிறோம்.. இதன் பயனாக என் கையின் மேல் ஒரு கொசு உட்கார்ந்திருக்கிறது என்றும், அதை நான் துரத்த வேண்டுமென்று எண்ணம் தோன்றுகிறது.இந்த எண்ணங்களாகிய கற்கள் சித்தமாகிய குளத்தில் எறியப்படுகின்றன். ஒரு குளத்தில் விழக்கூடியவை வெளிஉலகத்திலிருந்தும் வரலாம். அல்லது தன்னுள்ளிருந்தும் வரலாம். இவை அனைத்தும் சேர்த்து அந்த கரணங்க்களன்று பெயர் பெறுகின்றன.