செந்துருவை சேரலாம் செந்தழிழ்லை பாடலாம்
இந்திரனைப் போல் வாழந்துண்டு இருக்கலாம்,
மந்திரம்சேர் வெற்பகத்தையூடுஅருத்தவேலவர்க்கு

முன்பிறந்த கற்பகத்தை கை தொழுதார் கால்

மனம் என்றால் என்ன


மனம் என்பது எப்போதுமே  நிலையற்று அலை பாய்ந்து கொண்டுயிருக்கும்போது எவ்வாறு நிரந்தரமான ஒன்றாக இருக்கமுடியும்.?. மனம் என்பது கட்டுக் கடங்காமலும், பிடிவாதம் கொண்டதாகவும், வலிமையாகவும் தன் விருப்பபடி நடப்பதாகவும், காற்றைப் போல் கட்டுப் படுத்தக் கடினமானதாகவும் உள்ளது.
இதற்கு கிருஷன பரமாத்மா பதில் கூறுகிறார்." அர்சுனா சந்தேகமின்றி மனம் என்பது அலைபாய்வதாகவும்,கட்டுப்படுத கடினமானதாகவும் உள்ளது. ஆனால் தொடர்ந்த பயிற்சியின் மூலம்(அப்பியாசம்) ஆசையிலிருந்து விடுபடுபதன் மூலம்(வைராக்யா) அதைப் பயிறுவிக்க முடியும். தனது மனதை கட்டுப்படுத்த முடியாத ஒரு மனிதன் மெய்ப் பொருளை பெறுவது கடினம். இவ் மொய்ப் பொருளான இறைவனை நோக்கி செல்லும்  பயணத்திற்கு பா பாதைகள் (மார்கங்கள்) உண்டு. செயலாக்கம்முள்ள மனிதன் கர்மயோகத்தின் மூலம் உணர்சி பூர்வமான மனிதனின் பக்தி,அன்பு மூலம் பகுத்தறிவுள்ள  மனிதன் ஞான மார்க்கத்தின் மூலம், அல்லது சிந்திகிற மனிதன் யோக மார்க்கத்தைப் பின் பற்றுகிறான். சுருக்கக்கூறின் எவன் ஒருவன் தனது மனதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தனது தெய்வீகமான ஆன்மாவை உணர்கிறான்.
ஆகவே மனம்தான் புலங்களின் அரசன். தனது மனம் புலன்கள் ,விழைவுகள், எண்ணம் மற்றும் பகுத்தறிவு இவற்றை வெற்றி கொண்டுள்ள ஒரு மனிதன் மனிதருள் அரசன். பிரபஞ்ச உலகுடன் இனையத்தகுதியனவன். அவனுள் உள்ளார்ந்த ஒளி உள்ளது.
மனம் நிலை படாமல் கவனசிதறல்களும், தடைகளும் இருப்பதற்கு கீழ்கண்ட காரணங்கள்யாகும்.
1.வியாதி 2. பணிசெய்வதற்கு உண்டான மனநிலை இல்லாமல் இருத்தல். 3.சந்தேகம்-முடிவு எடுக்க இயலாமை.4. அலட்சியம் அல்லது உணர்வு அற்ற நிலை.5. சோம்பல் 6.  புலன் உணர்வுக்கு கட்டுப்ட்கு இருத்தல்.7.பொய்யான நிறுபனமற்ற அறிவு,மாயை 8. எண்ணங்களிந்தொடர்சி அல்லது ஒருமுகப்படுத்துதல் இல்லாமல் இருத்தல் 9. நீண்ட பயிற்சிக்கு பின் பெறப்பட்ட ஒருமுக நிலையை தக்க வைத்து கொள்ள இயலாமை. 10. துக்கம் -வேதனை அல்லது துயரம் 11. நம்பிக்கை இழப்பு 12. உடல் நடுக்கம்  அல்லது தடுமாற்றம் 13.சுவாச தடுமாற்றம்.
இவ்துன்பதற்கு மாற்று-தனிநபரின் (ஜீவாத்மா) உடலில் உள்ள பிராணா பிரபஞ்ச ஆன்மாவின்  அண்ட சுவாசத்தின் ஒரு பகுதியாகும். பிரானாயாமப் பயிற்சியின் மூலம் அண்ட சுவாசத்தோடு, தனி நபரின் சுவாசத்தை இணங்க செய்யும் ஒரு முயற்சி பிரானாயாமம் ஆகும்.