இந்த மனதில் யான் என்னும் தலைவன் ஆகிறான். காமம்,கர்வம் ,பேராசை,வீண் பெருமை,பிடிவாதம் என்னும் இருட் கருவிகளைக் கைக் கொண்டு கலகம் விளைவிப்பான்.மேலும் சாதுரியம்,கோணலும், தந்திரமும்,வஞ்சகம் பொருந்திய அவர்களூம் உடையவன்.முடிவற்ற மாறுதலுக்கும் குறைதல்களுக்கும் இடம் கொடுக்கிறவன். இதன்பால் உள்ளவர்கள் மதி மயங்கியிருப்பவர் போல் ஓரே சமயத்தில் ஒவ்வோர் உலக அவாக்களையும் திருப்தி செய்து கொள்ளலாம் என்று நினைக்கின்றனர்.மேலும் இதைப் பற்றிக் கொண்டுயிருக்கும் காலையில் உங்கள் மார்கத்தில் ஒயாத கஷ்டங்கள் சேர்ந்து கொண்டுயிருக்க்கும்.,துண்பங்களும்,துக்கங்களும் ஆசா பாசங்களும் நாம் அடையும் பலன்களாகயுருக்கும்.யான் என்னும் கண்கள் மூலமாகப் பார்த்து கொண்டிருக்கும் காலத்தில் மெய்ப்பொருள் (ஆன்மா) ளின் அழகைக் காண முடியாது..நீங்கள் வீண் பெருமைக்காரர்களாயிருப்பின்,நீங்கள் ஒவ்வொன்றையும் உங்களுடைய சொந்த வீண் பெருமையாகிய வர்ணத்தைப் பூசிக் காண்பீர்கள்.நீங்கள் காமிகளாக இருந்தால்,உங்களுடைய சுகமும் மனமும் காமப்புகையாலும் சுடர்களாலும் மூடப்பட்டுயிருக்கும். அவற்றின் மூலமாக ஒவ்வொன்றும் விகாரப்பட்டுத்தோன்றும்.நீங்கள் கர்வம் உள்ளவர்களாகவும்,உங்கள் அபிப்பிராயமே சிரி என்று கொள்கிறவார்களாகவும் இருந்தால் உங்கள் அவிப்பிராயங்களின் பெருமையும் சிறப்பையும் தவிர வேறு ஒன்றையும் பிரபஞ்சம் முழுவது நீங்கள் பார்கக மாட்டீர்கள். யான் என்பதால் அடிமைப் படுதல் பட்டுக் கோபம் வீண்பெருமை,பிறர்மீது குற்றஞ்சாடல் முதலிய துர்குணங்களுடையவர்களாய் தம்முடைய சொந்த இனந்தவர்,மதம்,மொழி,ஜாதி எனஒரே கோட்பட்டில் இருந்து அதுவே உண்மை என்றும் மற்றவர்களூடையயதுயாவும் பொயென்றும் நம்புவார்கள்.
நீங்கள் இதுவரையில் விடாமல் பற்றிக் கொண்டிருந்த அவாக்களும், பசிகளும்,விருப்பங்களும்,அவிப்பிராயங்களும் ,சுருங்கிய எண்ணங்களூம்,துவேஷ்ங்களூம் உங்களிடம் இருந்து நீங்க வேண்டும். இனிமேல் ஒருபொழுதும் உங்களை அடிமைப்படுத்தாமல் இருக்கட்டும்.இந்த யான் என்பதை விடுதல் புறப்பொருள்களைத்துறத்தல் மாத்திரம் அன்று,அஃது அகம்பாவத்தையும் அகப்பொய்யையும் துறத்தலுமாம்.வீணன உடைகளை விடுதல் செல்வங்களின் அவாவைதுறத்தல், பொறியின் பங்களின் ஆசையை அடக்குதல்.
விஞ்யானம் முழுக்க முழுக்க மனதை மையமாக வைத்து கணக்கு,தர்க்கம்,பகுத்தறிவு மூலமாக செயல் படுகிறது. இந்த மனம் என்பது தர்க ரீதியானது.தர்க்கம் என்பது ஒரே நேர்கோட்டில் செல்வது. ஆகவே மனத்தின் செயல்பாடு ஒரே நேர்கோட்டில்தான செல்லும். அது ஒன்றையேதான் நம்பும், மாறுபட்ட இரண்டு தன்மைகளை அது ஒருக்காலும் ஏற்காது.
மனம் அமைதியையும் ஒய்வையும் விரும்பினால் அது வாழ்வில் ஏற்படும் சப்தங்களையும்,இரைச்சல்களையும் புறக்கணித்து விட்டு காட்டுக்கோ அல்லது இமயமலையை நோக்கியோ செல்லத் துடிக்கும்.அங்கு சென்றபின் சில நாட்களில் பறவைகளின் சப்தங்களும் காற்றின் மிகமொல்லிய ஒசையும் துன்பத்தைக் கொடுக்கும்.இப்படி மனம் ஒருதலைப் பட்சமான காரியத்தையே விரும்பும்.இப்படி மாறுபட்ட தன்மையை புறக்கணித்து இமயமலைக்கு ஒடும் ஒருவன் அங்கு சென்ற சிறுது நாளில் மிகவும் சோர்வாகவும் அலுப்புடனும்தான் காணப்படுவான்;. அவன் எவ்வளவுக்கெவளவு அமைதிய மட்டும் விரும்புகிறானோ அவ்வளவுக்களவு இறந்தவன் போல் ஆகிவிடுவான். ஏனெனில் அவனுக்கு வாழ்வோடு இயைந்து செல்ல முடியவில்லை.மாறுபட்ட தன்மையின் சாவாலை ஏற்றுக்கொள்ளும் தைரியம் இல்லை.
ஒர் சன்னியாசி மனம் அமைதியை நாடி ஒரு குகைக்கு சென்று தனிமையில்யிருந்தார்.பலநாட்கள் சென்றன. சஞ்சலம் தீர்த்தது. மனம் அமைதியாகிவிட்டதாக உணர ஆரம்பித்தார். காட்டைவிட்டு ஊருக்குள் வந்தான். அவ் தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை.அப்பொழுது ஒருவீட்டின் முன் கதவில் உள்ள நாதாங்கியை பிடித்து கொண்டு (தாழ்பாள்) ஆட்டிக்கொண்டிருந்தது. அதிலிருந்து சப்தம் வர செய்து கொண்டுயிருத்தது. இஃது ஒரு குழத்தை செய்யும் இயற்கையான செயல்தான். ஆனல் அவ் சப்தத்தை சன்னியாசியால் சகித்துகொள்ளமுடியவில்லை. ஏன் இவ் சிறு குழந்தை இப்படி சப்தத்தை ஏற்படுத்துகிறது. இச்சப்தம் பெரும் துண்பத்தை விளைவித்தது சன்னியாசிக்கு.குழந்தை ஏன் இப்படி நாதங்கியை ஆட்டி ஒலி எழுப்புகிறது எனதன் காதைப் பொத்திக்கொண்டார். இதிலிருந்து காட்டில் தனிமையில் இருந்து தன் மனதை மிகவும் பலவீனப்படுத்தி வந்துள்ளார் என்பது தெரிகிறது.இவ் மன பலவீனம் உலக வாழ்க்கைக்கு ஏற்றது அல்ல. மேலும் அமைதியில் இன்னொரு வகையுண்டு. அது கல்லறை அமைதி அது இறப்புக்கு சமம்.அது எந்த உயிரோட்டமும் இல்லத அமைதி. அவனது மனம முழுமையாக ஒரு நிலையில், நிலைப்பொற்றுவிடும். அதில் எந்த அசைவும் இருக்காது. இப்படி ஒருவர் இறப்புக்கு சமமான அமைதியில் இருந்தால் அந்த அமைதி அற்தமற்றது. அதனால் முடிவில் அடையப்போவது ஒன்றும் இல்லை.
ஆகவே உயிரோட்டமுள்ள வாழ்வில் நீங்கள் சக்திமயமாக இருக்கும்பொழுது,அமைதி நிலை ஏற்பட வேண்டும். அந்த அமைதி நிலைதான் அர்த்தமுள்ளது. இதில் ஏற்படும் அமைதியின் தன்மை, அந்த இறப்பு நிலையில் ஏற்படும் அமைதிக்கு முற்றிலும் மாறுபட்டது. இது மிகவும் அர்த்தம் உடையது.இதுஒருக்காலும் அலுப்பு தரக்கூடியது அல்ல.இரண்டு மாறுபட்ட தன்மைகளின் நடுமையத்தில் (balace) ஏற்படும் நிகழ்ச்சி இது. இதைஉயிரோட்டமுள்ள அமைதி என்றும் அழைக்கலாம்.
இந்த அமைதியில் வாழ்பவன் ஒரு சந்தையிலும் மற்றும் இமயலையிலும் வாழ முடியும்.அப்பொழுது சந்தையின் இரைச்சலையும் அனுபவிப்பான். இந்த இமயமலையின் அமைதியையும் அனுபவிப்பான். இந்த இரண்டுக்கும் ஒரு மையத்தன்மையை தன் உள்ளே ஏற்படுத்திக்கொண்டு அதில் அமதியாக இருப்பான்.
ஆகவே சக்தியை மாற்றி நல்ல முறையில் மேம்படுத்திக் கொள்வது எப்படி?.