மறதி என்பது யாவருக்கும் பொதுவானதே.மறதி என்ற சொல்லில் ஒருவன் தான் முன்பு கற்றவற்றையும் அறிந்தவற்றையும் மறந்து விடுகிறான் அல்லது அவை நினைவில் இருந்து விலகி விடுகின்றன. நாம் பொதுவாக மறதியைக் குறித்து கவலையுறுகிறோம்.ஆனல் மறதியானது ஒரு விதத்தில் நமக்கு நிம்மதியான வாழ்வை தருகிறது.நாம் அன்றாடம் வாழ்வில் நடக்கும் அத்தனை நிகழ்சிகளையும்,அனுபவங்களையும் நினைவில் கண்டோம் அனால் நமது உள்ளம் தெளிவற்ற ஒரு சிலந்தி வலை போன்று காட்சியளிக்கும்.அமைதியான வாழ்வை அடைய ஒருவன் சில சொற்பதனமானவைகளை மறந்துதான் ஆக வேண்டும். ஆகவே மறதி நமக்கு கிடைத்த அனுகூலங்களில் ஒன்று.ஆனால் நாம் நம் வாழ்க்கைக்கு வேண்டியவற்றை மறந்து அல்லல் படுகிறோம்.இதுதான் மறதியாகும்.இதில் சாதாரண நிலை மறதியும்,பிறழ்வான நிலை மறதியும் அடங்கும்
காலக்கடவினால் ஏற்படும் மறதி :- இது பொதுவாக எல்லோரிடமும் காணப்படுகிறது.நாம் பலவற்றைக் கற்கிறோம்.அனுபவங்களைப் பெறுகிறோம்.ஆனல் அவற்றை அடிக்கடி மீட்டறிந்து பார்க்கவிடில் அவற்றை மறந்து விடுகிறோம்.சான்றாக பள்ளியில் பயிலும்போது கணக்கில் வரும் எந்தனையோ சூத்திரங்களைப் பயிலுகிறோம்.அவற்றை இப்போது சொல்ல இயலாது.இதற்கு அவற்றை அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொள்ளாததே அதற்கு காரணம்.காலம் கடக்க,கடக்க அடிக்கடி மீட்டறியாமல் நமது நினைவை விட்டு அகலுகின்றன.
குறுக்கிடு :- எல்லாவற்றையும் மூளையில் நினைவு அலைகளாக படிகின்றன என்பதைப் பார்த்தோம் அல்லது அறிவோம்.எனவே எண்ணற்ற நினைவு அலைகளை நமது சிறிய மூளைதான் பதிந்து வைத்துள்ளது என்று எண்ணும்போது வியப்பு மேலிடிகிறது அல்லவா ?. உதரணமாக மாணவன் ஒருவன் தேர்வுக்கு முந்திய தினம் அமர்ந்து எல்லாப் பாடங்களையும் இரவு முழுவதும் கண் விழித்து படித்து விட்டு தேர்வு சென்று எழுதும்போது எந்த வினவிற்கும் சரியான விடையை அளிக்க இயலாமல் இருப்பான்.ஏனனில் அவன் பலவற்றை ஒரே நேரத்தில் கற்கும்போது நினைவு அலைகள் ஒன்றன் மீது ஒன்றாய் படித்து குறுக்கிடு என்ற செயலில் பாதிக்கப்பட்டு இருக்கும்.
பின்னியக்கத்தடை ;- நாம் முன்பே கற்றவற்றை புதியதாக கற்றவை அழிந்து விடுகிறது என்பதே ஆகும். புதியதாக நம் ஒன்றைக்கற்றால் இதன் விளைவானது நாம்முன்பே கற்றவற்றை அழிது விடுகிறது. இவை பழைய நினைவு அலைகளை செயல்படவிடாமல் நிறுத்தி வைக்கின்றன.தொடர்சியாக நாம் கற்கும்போது புதிதாய் கற்றவற்றை எல்லாம் முன்பு கற்றவற்றை அழித்து விடுகின்றன.இதன் காரணமாக மறதி எற்படுகிறது.
நாம் ஒன்றைக் கற்கும் போது நினைவு அலைகளை உண்டாக்குகிறோம்.இவ்வாறு உருவாக்கப்பட்ட நினைவு அலைகள் படிந்து திடமாக சிறிது அவகாசத்தை எடுத்துக் கொள்கிறது. எவ்வாறு முட்டையிலிருந்து குஞ்சு வர சில நாட்கள் ஆகின்றனவோ அதேபோல் அவைகள் நினைவு அலைகளாக படிந்து திடமாவதற்கு சிறிது நேரம் தேவைப்படுகிறது.இந்நேரமானது நம் செயலில் ஈடுபட்டுயிருக்கும்போது எடுதுக் கொள்ளூம் நேரமாகும்.
மெய்பாடு நிலை :-இக்காரணங்கள் ஏற்பட வழக்கத்திற்கு மாறுபட்ட சூழ்நிலைகளே ஆதாரமாக உள்ளன.இந்நிலை மறதி தீடிரெண்டு ஏற்படும் ஒரு அனுபவத்தால் ஏற்படுகிறது.இவ்வாறு ஏற்படும் மறதிக்கு இரண்டு வகையான காரணங்கள் உண்டு. 1. அகவயக்காரணங்கள் 2. புறவயக்காரணங்கள்.இவற்றில் புறவயக்காரத்திற்கு விபத்து,தலையில் அடிபடுதல்,மூளையில் சதை வளர்தல் போன்றவற்றைப் புறவயக் காரணங்கள் என அழைக்கலாம்.இவற்றின் காரணமாக ஒருவருக்கு மறதி ஏற்படுகிறது. அவர் மருத்துவரை அனுகுவது நல்லது. 2அகவாய் காரணனங்கள் ஒருவரது உள்ளத்தின் காரணமாக அமைகின்றன. ஆழ்ந்த உள்ளமானது நமது நடந்தையில் பெரும் பங்கு ஏற்கிறது என்பது உண்மையே..நாம் கற்றவற்றை ஒரு வினடியில் மறந்து விடுகிறோம்.இதனை அடக்குதல் என அழைக்கலாம்.அடக்குதல் என்ற நிகழ்சிகளில் ஒருவர் தனது பிடிக்காத அனுபவங்களை ஆழ்ந்த உள்ளத்தில் அடக்கி வைத்து விடுகிறான்.இவ்வாறு ஆழ்ந்த உள்ளத்தில் அடக்கப்பட்டவை மீண்டும் அவனது நினைவுக்கு வருவதில்லை. இதை மன டாக்டர் சரி செய்யலாம் .
கீழ்க்கானும் முறைகளைக் கடைப் பிடித்தால் ஒருவன் தனது நிறைவாற்றலைப் பெருக்கிக் கொள்ளலாம்.
1. காலக்கடவினால் ஏற்படும் மறதியைப் போக்க கற்றவற்றை அடிக்கடி மீட்டாய்ந்து பார்க வேண்டும்.இவ்வாறு செய்வதனால் நினைவு அலைகள் மாற்றம் பெறாமல் இருக்கும்.
2. குறுக்கீட்டினால் ஏற்படும் மறதியைப் போக்க கவனமாக கற்றல் வேண்டும்,இடைவெளி அளிப்பது நல்லது.
3. பின்னிலத்தடைப் பற்றி அறிவோம்.இது ஏற்பட்டால் தடுக்க தொடர்சியாகப் பயிலக்கூடாது.ஒய்வு ,இடைவெளி கொடுத்தால் இக்குறையை போக்கலாம்.
4 மொய்பாட்டினால் மறதி ஏற்பட்டால் இதை தவிர்க்க ஒருவர் மெய்ப்பாட்டில் பலியாகமல் இருக்க வேண்டும்.
5.போதை வஸ்துக்களை பயன் படுத்துதல் , மது அருந்துதல்,போன்றவற்றாய் அதிகம் பருகுவதால் நினைவாற்றல் குறையலாம். இவற்றை தவிர்க்க வேண்டும்
6.அடக்குதல் என்ற செயலால் நம்மிடம் பிறழ் நிலை மறதி ஏற்படலாம். ஆகவே இச்செயலை தவிர்த்தால் மறதியைப்போக்கலாம்.
குறுக்கிடு :- எல்லாவற்றையும் மூளையில் நினைவு அலைகளாக படிகின்றன என்பதைப் பார்த்தோம் அல்லது அறிவோம்.எனவே எண்ணற்ற நினைவு அலைகளை நமது சிறிய மூளைதான் பதிந்து வைத்துள்ளது என்று எண்ணும்போது வியப்பு மேலிடிகிறது அல்லவா ?. உதரணமாக மாணவன் ஒருவன் தேர்வுக்கு முந்திய தினம் அமர்ந்து எல்லாப் பாடங்களையும் இரவு முழுவதும் கண் விழித்து படித்து விட்டு தேர்வு சென்று எழுதும்போது எந்த வினவிற்கும் சரியான விடையை அளிக்க இயலாமல் இருப்பான்.ஏனனில் அவன் பலவற்றை ஒரே நேரத்தில் கற்கும்போது நினைவு அலைகள் ஒன்றன் மீது ஒன்றாய் படித்து குறுக்கிடு என்ற செயலில் பாதிக்கப்பட்டு இருக்கும்.
பின்னியக்கத்தடை ;- நாம் முன்பே கற்றவற்றை புதியதாக கற்றவை அழிந்து விடுகிறது என்பதே ஆகும். புதியதாக நம் ஒன்றைக்கற்றால் இதன் விளைவானது நாம்முன்பே கற்றவற்றை அழிது விடுகிறது. இவை பழைய நினைவு அலைகளை செயல்படவிடாமல் நிறுத்தி வைக்கின்றன.தொடர்சியாக நாம் கற்கும்போது புதிதாய் கற்றவற்றை எல்லாம் முன்பு கற்றவற்றை அழித்து விடுகின்றன.இதன் காரணமாக மறதி எற்படுகிறது.
நாம் ஒன்றைக் கற்கும் போது நினைவு அலைகளை உண்டாக்குகிறோம்.இவ்வாறு உருவாக்கப்பட்ட நினைவு அலைகள் படிந்து திடமாக சிறிது அவகாசத்தை எடுத்துக் கொள்கிறது. எவ்வாறு முட்டையிலிருந்து குஞ்சு வர சில நாட்கள் ஆகின்றனவோ அதேபோல் அவைகள் நினைவு அலைகளாக படிந்து திடமாவதற்கு சிறிது நேரம் தேவைப்படுகிறது.இந்நேரமானது நம் செயலில் ஈடுபட்டுயிருக்கும்போது எடுதுக் கொள்ளூம் நேரமாகும்.
மெய்பாடு நிலை :-இக்காரணங்கள் ஏற்பட வழக்கத்திற்கு மாறுபட்ட சூழ்நிலைகளே ஆதாரமாக உள்ளன.இந்நிலை மறதி தீடிரெண்டு ஏற்படும் ஒரு அனுபவத்தால் ஏற்படுகிறது.இவ்வாறு ஏற்படும் மறதிக்கு இரண்டு வகையான காரணங்கள் உண்டு. 1. அகவயக்காரணங்கள் 2. புறவயக்காரணங்கள்.இவற்றில் புறவயக்காரத்திற்கு விபத்து,தலையில் அடிபடுதல்,மூளையில் சதை வளர்தல் போன்றவற்றைப் புறவயக் காரணங்கள் என அழைக்கலாம்.இவற்றின் காரணமாக ஒருவருக்கு மறதி ஏற்படுகிறது. அவர் மருத்துவரை அனுகுவது நல்லது. 2அகவாய் காரணனங்கள் ஒருவரது உள்ளத்தின் காரணமாக அமைகின்றன. ஆழ்ந்த உள்ளமானது நமது நடந்தையில் பெரும் பங்கு ஏற்கிறது என்பது உண்மையே..நாம் கற்றவற்றை ஒரு வினடியில் மறந்து விடுகிறோம்.இதனை அடக்குதல் என அழைக்கலாம்.அடக்குதல் என்ற நிகழ்சிகளில் ஒருவர் தனது பிடிக்காத அனுபவங்களை ஆழ்ந்த உள்ளத்தில் அடக்கி வைத்து விடுகிறான்.இவ்வாறு ஆழ்ந்த உள்ளத்தில் அடக்கப்பட்டவை மீண்டும் அவனது நினைவுக்கு வருவதில்லை. இதை மன டாக்டர் சரி செய்யலாம் .
கீழ்க்கானும் முறைகளைக் கடைப் பிடித்தால் ஒருவன் தனது நிறைவாற்றலைப் பெருக்கிக் கொள்ளலாம்.
1. காலக்கடவினால் ஏற்படும் மறதியைப் போக்க கற்றவற்றை அடிக்கடி மீட்டாய்ந்து பார்க வேண்டும்.இவ்வாறு செய்வதனால் நினைவு அலைகள் மாற்றம் பெறாமல் இருக்கும்.
2. குறுக்கீட்டினால் ஏற்படும் மறதியைப் போக்க கவனமாக கற்றல் வேண்டும்,இடைவெளி அளிப்பது நல்லது.
3. பின்னிலத்தடைப் பற்றி அறிவோம்.இது ஏற்பட்டால் தடுக்க தொடர்சியாகப் பயிலக்கூடாது.ஒய்வு ,இடைவெளி கொடுத்தால் இக்குறையை போக்கலாம்.
4 மொய்பாட்டினால் மறதி ஏற்பட்டால் இதை தவிர்க்க ஒருவர் மெய்ப்பாட்டில் பலியாகமல் இருக்க வேண்டும்.
5.போதை வஸ்துக்களை பயன் படுத்துதல் , மது அருந்துதல்,போன்றவற்றாய் அதிகம் பருகுவதால் நினைவாற்றல் குறையலாம். இவற்றை தவிர்க்க வேண்டும்
6.அடக்குதல் என்ற செயலால் நம்மிடம் பிறழ் நிலை மறதி ஏற்படலாம். ஆகவே இச்செயலை தவிர்த்தால் மறதியைப்போக்கலாம்.
புலன் காட்சியும் & கருத்து கேட்டலும் :-
புலன் உணர்வுகள் அறிவுள்ளதாக மாற, பொருள் சொறிந்ததாக இருக்க வேண்டுமெனில் புலன் காட்சி இன்றியமையாதவையாக் இருக்கிறது.ஆகவே அறிவின் ஆரம்ப நிலை புலன் காட்சி என்று கூட சொல்லாம்.
உதாரணமாக நமது புலன் உறுப்பு (கண்) கொண்டு ஒரு பொருளை பார்கிறோம் (எதாவது ஒரு தூண்டலில் உதாரணமாக பொருள் அசையும் போது புலன் பார்கப் படுகிறது) இங்கு புலன் உணர்வு நடைபெறுகிறது. மற்றைய பொருட்கள் பல இருப்பினும் நாம் நமது ஆர்வத்தை ஒரே ஒரு பொருளிருந்து செலுத்துகிறோம்.உயிர் ஆற்றல் ஆனது அவ் பொருளின் மீது படிந்து நாம் பார்கின்ற பொருளின் பெயர்,தன்மை, போன்றவற்றை கூறுவோம் ஆனால் நமது புலன் உணர்வுக்கான பொருளை வெளிப் படுத்துகிறோம்.ஆகவே புலன் உறுப்புகளின் உணர்வுகள் வெறும் உணர்வுகளாக மட்டும் அல்லாது பொருளுடையவைகளாகவும் மாறுகிறது. இந் நிகழ்சியே புலன் காட்சி எனப்படுகிறது.இதே போல் நம் வழக்கத்திற்கு மாறான புதுமையான தூண்டல் ஒன்றை நாம் சந்திக்கும்போது செய்கின்ற புலன் காட்சியும் முயன்று தவறுதல் முறையானது இடம் பெறுகிறது. சான்றாக புதியதொரு ஒலியை நாம் கேட்பதாகக் கொள்வேம்.முதலில் அவ் ஒலி என்னவென்று தெரியாமல் திகைக்கிறோம்.மிருகத்தின் கர்ஜனையா என்று ஐய்யப்படுகிறோம்.இன்னும் சற்று நேரம் உணர்ந்து கேட்டபின் அல்லது பார்த்து உணர்ந்த பின் அது புகைவண்டி ஒலி எழுப்புகிறது என்று தெரிந்து கொள்கிறோம். அல்லது மற்றவர்களிடம் தாய்,தந்தை, அண்ணன்,தம்பி,அக்காள், தங்கை,ஆசிரியர், நன்பர்கள் அல்லது மற்றவர்கள் செல்ல அல்லது கேட்டு தெரிந்து கொள்கிறோம்.
எந்துண்டலின் மீது ஒருவரது புலன் காட்சி அதிகமாக நடைபெருகிறதோ அத்துண்டலைப் பற்றிய அறிவு அவரிடம் மிகுதியாக காணப்படும்.முதலில் ஒரு பொருளைப் பற்றி மிகுதியாகத் தெரிந்து கொள்வதில்லை. ஆனால் அப் பொருகளுடன் நமக்கு அடிக்கடி தொடர்புகள் ஏற்படும்போது அதைப் பற்றிய விவரங்களையும்,அவற்றிகிடையே உள்ள தொடர்புகளையும் நாம் நன்றாக தெரிந்து கொள்கிறோம். உதாரணமாக அருள்மிகு மீனாட்சி அம்மாள் படத்தை பார்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.அதனைக்கண்டு பரவசம் அடைகிறான். அவ் படத்தை அடிக்கொருதடவை கானும் வாய்பினை பெறும்போது அதன் உயரம் ,அமைப்பு, நிறம்,உருவான காலம், என்பன போன்றவற்றை அறிய முற்படுகிறான். அது என்ன சாயத்தால் பூசப்பட்டுள்ளது. அது இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்றுகூட தனது கருத்துக்களை ஏற்படுதும் திறனையும் பெற்றுவிடுகிறான்.
இதுபோல் மற்ற பொறிகள் ஆனவற்றில் (வாய்,மூக்கு.காது,உடல்)-சுவை,மனம்,ஒலி,மெய் -உணர்வு அகியவைகளை தெரிந்து கொள்கிறோம்.
கருத்துக்கள் உருவாதல்:-
ஒருகுறிப்பிட்ட பொருளுக்கோ அல்லது நிகழ்ச்சிகளுக்கோ பொதுவாக உள்ள இயல்பை அறிவதாகும்.
உணர்ச்சிகளும் - மெய்ப்பாடுகளும்
மனிதனின் நடத்தையிலும், வாழ்க்கையிலும் உணர்ச்சிகளும்-மெய்ப்பாடுகளும் பெரும் பங்கு ஏற்கின்றன..நமது வாழ்க்கையே இவையால்தான் இயக்கப்படுகிறது என்று கூறலாம்.உணர்சிகளும்-மெய்ப்பாடுகளும் இல்லாத வாழ்க்கை உண்மையான வாழ்க்கையாக இருக் க முடியாது.உணர்ச்சிகளும்,மெய்ப்பாடுகளுமே நாம் நம்மிடம் ஏற்படுதிக் கொள்கின்றபடியாலும்,உந்துதலும் காரணங்க்களாய் அமைகின்றன.பொதுவாக உணர்ச்சி ஒவ்வொன்றுக்கும் மூன்று இயல்புகள் உண்டு.1.எல்லா உணர்ச்சிகளும் மகிழ்ச்சி அல்லது வருத்தத்தை தரக்கூடிய தன்மையைப் பெற்று இருக்கும்.ஒவ்வொரு உணர்ச்சியும் கிளர்ச்சி ஊட்டக் கூடியதாகவோ அல்லது உணர்ச்சியற்ற மரத்தன்மையை ஏற்படுத்தக் கூடியதாகவோ இருக்கும்.3 உணர்ச்சிகள் சில சமயங்களில் தளர்வையோ அல்லது விறைப்பையோ ஏற்படுத்த வல்லவையாக இருக்கும்
2.
ஒருசெயல் அல்லது நிகழ்ச்சி நடைபெறப்போகிறது என்ற நிலையில் இருப்போமானல் எதிர்பார்க்கும் உணர்ச்சி நம்மிடம் தோன்றும்.அதே போல் நடந்துவிட்ட நிகழ்ச்சி சிரியாக அமையாவிட்டால் நம்மிடம் தளர்வை உண்டுபண்ணலாம்.வருத்தம் நிறைந்த நிகழ்ச்சி நம் முன் மரத்துப்போன தன்மையையும், உணர்ச்சியற்ற நிலையையும் உண்டுபண்ணலாம். ஒவ்வொரு உணர்ச்சியும் உடல் முழுவதும் உணரப்படுவதாகும்.ஆகவே ஒருகூறிப்பிட்ட உறுப்பால் மட்டும் நாம் உணர்வதில்லை.உணர்ச்சி என்பது உள்ளத்தில் உணரப்படும் செயலாகும்.உணர்ச்சிகள் வேகமாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அவை மென்மையானதாகவும் இருக்கலாம்.ஓருவனுடைய உணர்ச்சிகள் அவனுடைய கடந்த கால அனுபவங்கள்,அவன் பெற்றப்பயிற்ச்சி போன்றவற்றின் அடிப்படையில் அமைவதாகும்.ஆகவேதான் ஒருவர்க்கு மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி மற்றவற்க்கு துன்பம் தருவதாக அமைகிறது.மகாபாரதத்தில் நிறைய சாட்சிகள் உண்டு.பாண்டுவின் மைத்தன் அருச்சுனனின் நாடி நரம்பெல்லாம்ம,வீரம் சொறிந்ததாகதான் இருக்கும் அவனுடைய மகன் அபிமன்யு மிகவும் வீரம் உள்ளவன் என்பதில் ஐயம் இல்லை. ஆனல் போர்கலத்தில் அவனை துரொணர்,துரணாச்சாரியார்,.....போன்ற என்னற்றவர்கள் சூழ்ந்து போரிட்டாலும் அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தான்.அக் களத்தில் அவன் இறப்பு சோகமாக முடிந்தது..இது அர்சுனனுக்குப் பேர் இடியாகவும்,வருத்தம் தரதக்கதாகவும் அமைந்தது.. துரியோதன் கூட்டத்திற்கு மகிழ்சியை தரவல்லதாக அமைந்தது.ஒருவன் வயிற்று வலியை உணருவதாகக் கூறுவதாகக் கொள்/வோம். அவன் வயிற்றில் ஏற்படுகின்ற வலியைத்தான் உணர்ச்சி என்று அறியமுற்படுகிறன்.வலி என்பது துன்பத்தைத் தரவல்லது.அவ்விதமான வயிற்றுவலியால் ஏற்படும் உணர்வானது உடல் முழுவதும் பரவியுள்ளது. ஆகவே வயிற்றில் உண்டான வலி துன்பம் நிறைந்த உணர்ச்சியாக உடல் முழுவதும் அறியப்படுகிறது என்று கூறலாம்.ஒவ்வொரு உணர்ச்சியும் உடல் முழுவதும்ம் உணரப்படுவதாகும். ஒருகுறிப்பிட்ட உறுப்பால் மட்டும் நாம் உணர்வதிலை. உணர்ச்சியென்பது உள்ளத்தால் உணரப்டும் செயலாகும்.நமது உணர்ச்சிகளைப் பல வகையாகப் பிரிக்கலாம். மகிழ்வு, இன்பம்,உவகை, களிப்பு போன்றவை ஒருவகையைச்சார்தந்தது . இவவை மகிழ்ச்சி என்ற தலைப்பின் கீழ் வருபவை. வெறுப்பு,துயரம்,,அதிருப்தி,துன்பம் என்பவை மற்றவகையைச்சார்த்தவை.இவையெல்லாம் வருத்தம் தரக்கூடிய உணர்வைஸ் சேர்ந்தவையாகும். விருப்பம், அவா, நம்பிக்கை,போன்றவை இன்னொரு வகையைஸ் சார்ந்தவை.கோபம்,கசப்பு,சீற்றம்,போற்றவை கிளர்ச்சி ஊட்டக்கூடிய் உணர்வைஸ் சார்ந்தவையாகும். இவ்விதமாகநமது அனுபவங்களின் மூலமாக நாம் பல வகையான உணர்ச்சிகளை வெளியிடலாம்.ஆகவே உணர்ச்சிகள் மென்னையானவை.உணர்ச்சிகள் நம்மிடம் நீண்டு நிலைத்திருக்கும். இவை மெதுவாக தோன்றி மெதுவாக மறையும் தன்மையுடையவை. உணர்ச்சிகளின் போது நமது உடலில் எவ்விதமாற்றகள் கிடையாது.உணர்ச்சிகள் தோன்றி மறைந்தவுடன் நம்மிடம் எவ்விதமான மனநிலையும் உருவானதில்லை. உணர்ச்சிள் தெளிவற்ற நிலையில் உள்ளன.ஆகையால் நமது கடந்த கால் அனுபவங்கள் இவற்றுடன் தொடர்புகள் கொண்டுள்ளன என்று கூறலாம்.. மீண்டும் ஞாபகப்படுத்திக்கொள்வோம்.உணர்ச்சிள் நம்மிடம் நீண்டு நிலைத்து இருக்கும். அதனால் நமது மனநிலை அல்லது உள நிலை பாதிப்பு அடைகிறது.உணர்ச்சிகள் தோன்றும் போது நமது உடல் உறுப்புகளில் மாற்றங்கள் எதுவும் நடை பெறுவதில்லை. உணர்ச்சிகள் பொதுவாக தெளிவற்ற நிலையில் தான் நம்மிடம் காணப்படுகிறது. ஆகவேதான் ஒருவர் எம் எம்மாதிரியான உணர்ச்சிகளைப் பெற்றிக்கிறார் என்று நம்மால் திட்டவட்டமாக கூற முடிவதில்லை.பொதுவாக மறைகின்றன.. உணர்ச்சிகள் மறைத்தவுடன் நம்மிடம் ஒரு மனநிலையை(மூடு) உண்டுபண்ணுவதிலை.துரத்தில் புள்ளிபோல் கடலில் தெரிவது அக்கடலின் கரையில் இருப்பவர்க்கு அதைப்பார்த்தவுடன் கப்பல் வருகிறது எனக் கூறிவிடுவார்"காரியம் என்னவோ ஒன்றுதான்-ஆனல் பாவனைவேறுபாட்டால் அதில் வேற்றுமை தோன்றுகிறது.அதாவது கங்கையில் இரண்டு பேர் நீராடப்போகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.அவர்களில் ஒருவர் எல்லாம் கங்கை- கங்கை என்று கூறுகிறார்களே,. அதில் அப்படி என்னதான் இருக்கிறது.?. இரண்டுபங்கு ஹைட்ரஜன் ஒருபங்கு ஆக்ஜிசன்(பிரணாவாயு); இவ் இரண்டு பாயுக்களையும் சேர்த்து விட்டால் கங்கை (நீர்) கிடைத்துவிடப்போகிறது. இதற்கு அதிகமாய் அதில் அப்படி என்ன இருக்கிறது." என்று சொல்கிறான். மற்றவணோ,"விஷ்னு பகவானது பாத கமங்களிலிருந்து இவள் தோன்றி,சங்கரனது சடைமுடியில் வாசம் செய்கிறாள். ஆயிரக்கனக்கான பிரமரிஷிகளும் ,ராஜரிஷிகளும் இவள் கரையில் தவம் புரிந்திருக்கிறார்கள்.இவள் கரையில் நிகழ்த்துள்ள புண்ணியகாரியங்களுக்கு அளவுயில்லை. ஆகவே எவ்வளவு புனிதமானவள் என் கங்கைத்தாய்! :என் கிறார்.இந்த பாவனையில் ஆட்பட்ட அவன் கன்கையில் நீராடப்போகிறான்.நீரக-பிரானாவாயுப்பேர்வழியும் அதில் முழுக்குப்போடுகிறான். உடல் துப்புரவு என்ற பயன் இருவர்க்குமே கிட்டிவிட்டது கங்கையில் ஒர் எருது போய் விழுந்தாலும் அதன் உடலும் துப்பவரவென்ற இழித்த பயன் கிட்டியது.ஆனல் மனசின் அழுக்கைக் கழுவுவது எப்படி?. ஒருவனுக்கு உடல் துப்புரவென்ற இழத்த பயன் கிட்டியது. மற்றவனுக்கோ அதோடு சித்த சுத்தியென்ற மதிப்பிடவியலாத பயனும் கைகூடியது. "இராமதாசர் இராமாயணம் எழுதிக்கொண்டே எழுதியதைச்சீடர்களூக்குப் படித்து விளங்கிக் கொண்டிருந்தார். அனுமானும் ஒருவர்க்கும் தெரியாமல் கதைகேட்க உட்கார்ந்து இருந்தார். இராமதாசர் கதையைத்தொடர்ந்தார் :"அனுமார் அசோகவனத்தை அடைந்தார். அங்கே வெள்ளை மலர்களைக் க்ண்டார்" என்று எழுதினார். இதைக்கேட்டதும் அனுமார் தோன்றி ."நான் வெள்ளை மலர்களைப்பார்க்கவில்லையே, சிகப்பல்லவா நான் பார்த்தவை!. நீ எழுதி இருப்பது பிழை.அதை திருத்து," என்றார் சமர்த்தர் "நான் எழுதியிருப்பது சரிதான்.நீங்க்கள் வெள்ளை மலர்களைத்தான் பார்த்தீர்கள் என்றார்.,'போனவன் நான்!. அப்படியானால் நான் சொல்வது பொய்யா!. என்று கேட்டார் இறுதியில் இவ் வழக்கு ஸ்ரீராமசந்திரனிடம் போயிற்று. அவர்,"பூக்கள் வெள்ளைதான். ஆனால் அனுமனுடைய கண்கள் கோபத்தால் சிவத்து இருந்தமையால் அவருகு வெள்ளை மலர் சிவப்பாகத்தோன்றியது. என்றார்.நாம் உலகை எந் நோக்கில் பார்க்கிறோமோ அப்படியே அது நமக்குத் தோன்றும் என்பது இவ் எளிய கதை.மகிழ்சி : தன் மகன் கல்யாணத்தைப் பார்த்து தாய் தந்தையினர் மகிழ்ச்சி வெள்ளத்தில் திகழ்த்தனர்.இன்பம் : கடந்த வாரம் சென்ற கேரளாப் பயணம் மனதிற்க்கு இன்பமாக இருந்தது3களிப்பு :- நான் இளநிலை பட்டத்தில் முதல் வகுப்பு தேறியுள்ளதைப் பார்த்து களிப்பு அடைந் தேன்
உவகை :- என் குடும்பம் சமுதாயத்தில் மிகவும் படித்த குடும்பம் என பிறர் பேசுவது உவகையாக இருக்கிறது.அதிருப்தி :- நேற்று அவன் நான் சொன்னதைஸ் செய்யாமல் மிகவும் தவறான் ஒன்றைஸ் செய்ததைப் பார்த்து அவன் மேல் அதிருப்தி அடைந்தேன்,வெறுப்பு :- அவன் கீழ்த்தரமான காரியத்தைச்செய்துவிட்டான் அவன் மேல் வெறுப்பு வந்து விட்டது.துயரம் : மகன் இறந்ததைக் கண்டு துயரம் கொண்டான்
விருப்பம் : முது நிலை படிப்பதற்க்கு விருப்பமாய் உள்ளென்
நம்பிக்கை ; இவ் போட்டியில் தான் முதல் இடத்தை பிடிது விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.அவா ; மகள் கலெக்டர் ஆகவேண்டும் எனதாய் விரும்பினாள்
சீற்றம் : தன்னைக் கொல்லவருகிறான் என்று பாம்பு சீற்றம் அடைந்தது.கோபம் : படிப்பை விட்டு ஊர்சுற்றிவந்த மகனைப் பார்த்து தந்தை கோபம் அடைந்தார்.கவலை ;இந்த மழை ஒய்ந்து எப்போதுதான் வீட்டுக்கு செல்வேன் என் சிறுவர் கவலையுடன் இருந்தனர்.