செந்துருவை சேரலாம் செந்தழிழ்லை பாடலாம்
இந்திரனைப் போல் வாழந்துண்டு இருக்கலாம்,
மந்திரம்சேர் வெற்பகத்தையூடுஅருத்தவேலவர்க்கு

முன்பிறந்த கற்பகத்தை கை தொழுதார் கால்

ஸம்ஸ்காரம் :


ஸம்ஸ்காரம் :


நம் உயிர் சக்தியானது மனதின் மூலம் உடலில் உள்ள ஐம்பொறிகளையும் இயக்கி வெளிபுற பொருள்களையும்,அகத்தூண்டல்களாலும் தன் ஆற்றலை பயன் படுத்தி மனதின் பதிவேட்டில் அவ் பொருட்களை, நிகழ்சிகளையும் பதிவு செய்து கொள்கிறது.மானிட வாழ்க்கை பல ஸம்ஸ்காரங்கள் பொருந்தியதாய் உள்ளது. நம் மூலமாய்  எண்ணிலடங்காத காரியங்கள் நடந்து கொண்டே யிருக்கின்றன. நாம் அவைகளை கணக்கிட தொடங்குவோமாயின்  அதற்கு ஒரு முடிவேயிராது.இருபத்திநாங்கு மணி நேரத்தில் நடைபெறும் காரியங்களை மேலெழுத்த வாரியாய்ப் பார்த்தாலும் அவைகளின் தொகை எவ்வளவு அதிகமாகும் என்கிறீர்கள்?. உணவருந்துதல்-உறங்குதல்-நடத்தல்- சுற்றுதல்- வேலை செய்தல்- எழுதுதல்-பேசுதல்-படித்தல்- ஆகிய இவைகளைத் தவிர பல வகைக் கணவுகளும்-விருப்பு-வெறுப்புகளும்-மான அவமானங்களும்-இன்பதுன்பங்களும்-என்று எண்ணிலடங்காத வகையில் அவை கணப்படும்.அவை அனைத்தும் ஸ்ம்ஸ்காரங்களும் நம் மனதில் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.ஆகையால் வாழ்க்கை என்பதென்ன வென்று ஒருவர் எண்ணக் கேட்பாராயின் நான் அதை ஸ்ம்ஸ்காரங்களின் தொகுதி என்றே விளக்குவேன்.ஸம்ஸ்காரம் நல்லது, தீயது என்ற இருவகையாயுள்ளது.இரண்டின் விளைவுகளும் மனித வாழ்க்கையில் ஏற்படுவன.
உயிர் சக்தி புலன் கள் மூலம் பிற இயக்கத்தோடு தொடர்பு கொள்ளும் போது தனது நிலையில் எழுச்சி அடைந்து தனது உடல் இயக்கத்திற்கும்,தொடர்பு கொள்ளும் பொருள்களுக்கும் அல்லது நிகழ்சிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அழுத்தமாக,ஒளியாக,சுவையாக,மணமாக உணர்கிறது. இந்த உணர்சிகளை ஒப்புவமையால் காலம்,தூரம்,கணிப்புக்கு எண்ணுதல் என்ற சொல் குறிப்பாகி அதுவே  எண்ணம்  என்று வழக்கப்பெறுகிறது. உயிர் சக்தியின் இயக்கவிளைதான் எண்ணம்.அது அறியும் திறன் உடையதால் அறிவென்றும் பேசப்படுகிறது.ஆகவே உயிர் சக்தி எழுச்சியால் மனம் செயல் படுதல் என்பது உறுதியாகிறது.3.
மனம் இயங்கிக் கொண்டுதான் இருக்கும். அதுதான் அதன் இயல்பு,அதுதான் அதன் தன்மை,அதுதான் அதன் இயற்கை.அதாவது எண்ணங்கள் பிறத்து கொண்டுதான் இருக்கும்,ஒன்றன் பின் ஒன்றாக பிறந்து வளர்ந்து மற்றொண்டுக்கு தன் இடத்தைக் கொடுது விட்ட சென்று கொண்டுதான் இருக்கும்.
அமரர் வாசு கண்ணன் அவர்கள் எழுதிய உள் மன ஆற்றல் நூலில் மனதை மூன்று பிரிவாக பிரிக்கிறார். 1.புறமனம் என்றவெளிமனம்.2.உள்மனம் 3 ஆழ்மனம் அல்லது அடிமனம்.
வெளிமனம் :- இந்த வெளிமனமானது நாம் தினமும் தூங்கி எழுந்தது முதல் தூங்க் செல்லும் வரையிலான  பல செயல்கள் வெளிமனம் மேற்பார்வையிலேயே நடைபெறுகிறது. நமது வாழ்கையில் அன்றாட செய்கிற உழைப்பு-பிழைப்பு,மற்றும் நமது சுற்றுப்புற சுழ்நிழைக்கேற்ப நாம் நடந்து கொள்ளும் நடத்தை,பேச்சு,உண்பது-உடுப்பது வரை உள்ள சகல காரியங்களும் உணர்வின் பொருட்டு நமது எண்ணதின்  அடிப்படையில் valindary organs துனைகொண்டு நடைபெறும். இக் காரியங்கள் எல்லாம் வெளிமனத் தொடர்பால் நடக்கிறது.
நாம் உறங்கி எழுந்ததும்,படுக்கைய விட்டு நகர்வது-மற்றும் பல்துலக்குவது முதல் ஆரம்பமாகும் அன்றாட வேலைகள் ஆன உண்பது முதல் உடுப்பது வரையுள்ள செயல்களை செய்து முடிக்க நாம் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.இயந்திரம் போல் அன்றாட வேலைகள் தொடர்சியாக நடைபெறும்.
இவ் வேளைகளை வெளிமனம் ஐம்புலங்கள் வழியாக மென்மையாகவே இயக்குகிறது.பாற்பசை யிருக்கும் இடம், பாத்தூரும் இருக்கும் இடம்.துணிமணிகள் இருக்கும் இடம்  ஆகியவற்றை ஐம் புலன் கள் வழியாக கண்டு உணர்ந்து,ஐம்புலங்கள் மூலமாக எல்லாம் நடைபெறுகிறது
இப்போது மணியைப் பார்கிறோம் மணி ஒன்பது பத்துமணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும், அல்லது முக்கிய நபரை பத்து மணிக்குள் காண வேண்டும் என்ற நிலையில் இருக்கும் போது"ஐயோ" நேரம் ஆகிரதே, விரைவில் செல்ல வேண்டும் என வெளிமனம் சிறகு அடித்து பறக்கிறது. அவ்வளவு தான்,அவ்வளவுதான் நம் செயல் பாடுகளில் உடனே எத்தை வேகம் ,பரபரப்பு எற்படுகிறது. விழுந்து அடித்துக் கொண்டு கையில் கிடப்பதை பையில் திணித்து கொண்டு பஸ்சை பிடிக்க ஒடுகிறோம். இச்செயல்களை சிறிது எண்ணிப்பார்த்தால் நமது வெளிமனதின் செயல்கள் புரியும்.நேரமாகிவிட்டதைக் கண்ணால் கண்டமனம் விரைவில் புறப்பட மூளைக்கு உத்திரவிட்டு மூளையின் உதவியால் நரம்பு மண்டலத்தை விரைவாக இயக்க திணித்து விடுகிறது. இவைகளை நாம் தானே செய்கிறோம் என்று எண்ணாமல் நமது வேலைகளை துரிதப்படுத்தியது எதுவென சிந்தித்தோம் ஆனல் ஒரளவு வெளிமனதைப் புரிந்து கொள்ள முடியும்.




சித்தத்திலுணடாகும் விருத்திகள் :-ப்ரமாண்ம் :- பிரமை என்பது இதுவரை எதனாலும் அறியப்படதா தத்துவத்தை விஷயமகக் கொண்ட அறிவே எதனால் அது உண்டாகின்றதோ அது பிரமாணம் எனப்படும்.அத்தகையப் பிராமாணத்தின் ஸாமான்ய ல க்ஷ்ணத்தின் உட்பிரிவை மட்டும் பதஞ்சலி இங்கு கூறியிருக்கிறார்.
1.
 ஸ்ரீ ராமபிரான் தன் தம்பியிடம் அனுமனைப் பற்றிக் கூறுவதை கேளுங்கள்
தம்பி இந்த அமைச்சன்(அனுமன்அழகான குரலில் பேசும் திறமை உடையவன்.இனிய சொற்களை அன்புடன் பேசவல்லவன்வேதத்தை நண்கு கற்று உணர்ந்தவன்இவன் ஒரு சொல்லைக் கூட தவறாகப் பயன்படுத்தவில்லைஅவன் நிறையவே பேசினான்.சொற்குற்றமோ,பொருள் குற்றமோ அவன் பேச்சில் இல்லை.புருவத்தின் நெரிப்பிலோ நெற்றியின் அசைவிலோஎதையும் தவறாக இவண் உணர்த்திக் காட்டவில்லைஇவன் பேச்சுஇதயத்தின் ஆழத்திலிருத்து வருவது தெளிவாவும்தடுமாற்றம்இன்றி நடுக்குரலில் பேசுகிறன்இவன் பேசுவதைக் கேட்டாலேமனதிற்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறதுஇத்தகையஅமைச்சனை உடைய மன்னன் தான் எடுத காரியத்தில் எல்லாம்வெற்றி பெறுவது உறிதியன்றோ! "இவையே நேரடி சாட்சியம்அல்லது உணர்தல் என்பதகும்.இவை பிரமாண்த்தின் முதல்பிரதியட்சம் எனப்படும்ஆகவே இந்திரியங்கள் வாயிலாகவிஷயத்தை நாடுகிறது சித்தம்இந்திரியங்களுடன் சேர்த்தேஅதற்க்குப் பரிணாமம் உண்டாகிறது..பிரமாணம் (அளவீடுகள்அல்லது இலட்சியம்)- இதனால் பொருள்கள் மற்றும் மதீப்பீடுகள்மனதால் அளவிடப்பட்டு அறியப்படுகினறன.பொறிகள் ஒருவரைநமக்கு கெட்டவராகத் தோன்றுவதும் நல்லவராகத் தோன்றுவதும்இந்த மனநிலைக் காரணமாகத்தான்ஒருவரைப்பார்க்கும் போதுநாம் அவரை மட்டுமோஅவருடைய செய்கையை மட்டுமோபார்த்து எடை போடுவது இல்லைஅவர்களுடைய செய்கைஅவர்இருக்கும் சூழ்நிலையை வைத்து அவரை நாம் எண்ணிப்பார்க்கிறோம்உதரணமாக எடுத்துக்கொள்வோம்நமது கண்முன்னே ஒருவர் "ஹரே ராமாஹரே கிருஷணாஎன்றுஎழத்துக்கள் பதிக்கப்பட்ட மஞ்சள் நிறப்போர்வையைப் போர்த்திக்கொண்டு செல்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள் அவர் ஒருபக்திமான் என்று நாம் நினைக்ககூடும்அதுதான் இயற்கைஅவர்போர்த்திக் கொண்டுள்ள போர்வையின் சூழ்நிலையை வைத்து நமதுமன நிலைவுணர்வு அவ்வாறு நினைக்கத் தூண்டுகிறது.உண்மையை ஆராய்ந்து பார்த்தால் அவர் அந்தப் போர்வையைதன்னுடைய தீய செயலை மறைக்கும் போர்வையாக வெளிவேஷத்திற்காகவும் போர்த்தியிருக்கலாம்உண்மை அவருக்குமட்டும் தெரித்துயிருக்கலாம்அல்லது அந்தப் போர்வைஅவருடைய பக்கது வீட்டுககாரருடையதாக இருக்கலாம்,தங்களுடைய வீட்டில் மறத்து வைத்துஸ் சென்ற போர்வையைதனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் வேடிக்கையாகப்போர்த்திக் கொண்டு சென்று திரும்பிக் கொடுக்கவும் போய்க்கொண்டிருக்கலாம்இதைப் போல் மஞ்சள் காமாலை தோஷமுள்ளஒருவருடைய கண்ணுக்கு அவர் பார்த்த பொருள்கள் எல்லாம்மஞ்சளாகத் தெரியும் ஆனால் அந்தப் பொருள் மஞ்சளாகத்தான்இருக்கவேண்டும் என்பதில்லை.


கவனம்


நாம் ஒரு இடத்தில் இருக்கும் போது நம்மை பல்வேறுதூண்டல்கள் தாக்குகின்றனநமது புலனுறுப்புக்கள்
அனைத்தும் தூண்டப்படுகின்றனஇருப்பினும் நாம் பல்வேறு தூண்டல்களுக்கும் ஒரே சமயததில் பதில் அளிக்க முடியாதுநாம்நமக்கு விரும்பிய சூழ்நிலைகளில் வேண்டிய தூண்டலைத்தேர்ந்தெடுத்து துலக்கல் புரிகிறோம்இதனையே நாம் கவனம்என்று பொதுவாக அழைக்கலாம்.கவனம் என்ற சொல் நமக்குப்புதியதல்லநாம் எல்லோரும் இச்சொல்லை அடிக்கடிஉபயோகப்படுத்தி வருகிறோம்உதரணமாக ஆசிரியர் பாடம்கற்பிக்கும் போது மாணவர்கள் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறர்கள்மாணவர்களும் ஆசிரியர் கூறுபவற்றைகூர்த்து கவனிக்கிறார்கள்.இவ்வாறு இவர்கள் வகுப்பறையில்இருக்கும்போது வகுப்பறையினுள்ளும்வகுப்பறைக்கு வெளியிலும்பல்வேறு தூண்டல்கள் இருப்பதை உணர்கிறார்கள்அவை எல்லாம்அவர்களைக் கவரும் பொருட்டு தாக்குகின்றன.. இருப்பினும்,மாணவர்கள் ஆசிரியர் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருப்பர்.மாணவர்கள் தங்களது கவனத்தை ஆசிரியர் மீதுசெலுத்துகின்றனர்இதை கவனக்குவியல் எனஅழைக்கலாம்.மற்றதூண்டல் யாவும் அவர்களுது கவனத்தின்விளிம்பில் இருக்கின்றன என்று கூறலாம்..அவை எப்போதுவேண்டுமென்றாலும் அவர்களது கவனத்தைக் கவரலாம்.ஒருவன்ஒரே சமயத்தில் பல்வேறு தூண்டல்களால் தாக்கப்படுகிறான்.அவற்றில் ஒன்றை அவன் தேர்ந்தெடுத்து அதன் மீது தனதுஆர்வத்தைஸ் செலுத்துகின்றான்இதனையே நாம் கவனம் என்று அழைக்கிறோம்இச் செயலில் அவனது உள்ளமானது ஒருதூண்டலின் மீது ஒருமுகப்படுத்தப்படுகிறதுநமது கவனமும்ஆர்வமும் இணைந்துதான் செயல்படுகின்றன்ஒன்றுஇல்லையெனில் மற்றது இருக்காதுஆகவே மனிதன் ஒருவன்,செயல் ஒன்றில் ஈடுபடும் போது அவனது கவனமும்,ஆர்வமும்இயைந்து செயல்படுகின்றனஅவற்றைப்பிரிக்கமுடியாது.


கவனத்தின் தன்மை :-கவனம் நமது வாழ்வில் பெரும்பங்கு ஏற்கிறது,சாலையில் நடக்கும் போது கவனம் இல்லையெனில் விபத்துக்களைச் சந்திக்க வேமண்டியுள்ளதுகவனக்குறைவு பெரும் பொருள் இழப்புக்கு ஏதுவாகிறது.
1.
 கவனம் நமதுபுலன் உணர்வுப் பாகுபாட்டுத் திறனை அதிகரிக்கிறது.இதனால் பல்வேறு தூண்டல்களுக்கு நடுவே தமக்கு வேண்டியவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றை நன்கு அறியஆராய வழி ஏறபடுகிறது,கவனத்தின் மூலமாக பல பொருட்களைப் பற்றிய அறிவு ஏற்பட ஏதுவகிறது.
2.
 கவனம் நமது சக்தியை ஒருமுகப்படுத்தி மிச்சப்படுத்துகிறது,உதரணமாக ஒருவன் நீலநிறத்தில் பருத்தி ஆடை ஒன்று வாங்க நினைத்தால் அவன் கடைவிதியில் நாடத்து கொண்டிருக்கும்போது துணிக்கடைகளில்தான் அவனது கவனம் முதலில் செல்லுகிறது.மற்றைய கடைகளின் மீது அவனது கவனம் செல்லுவதில்லைமேலும் துணிக்கடை ஒன்றில் நு
3.
 4
 கவனத்தின் மூலமாக ஒருவனது நினைவு வளர்ச்சி அடைகிறது.ஒருவன் கடந்தகால அனுபவங்களை நங்கு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமெனில் அவனுக்கு கவனம் இன்றியமையாததாக உள்ளதுகவனம் இருப்பின் ஒருவன் தனது அனுபவங்களை எளிதில் மீட்டறிந்து செயல்படஏதுவாகிறதுஇதனால் நமது நினைவாற்றல் விருத்தியடைகிறது.
5. 
அடுததபடியாக கவனம் நமது திறனை அல்லது திறமையை வளர்க்க உதவுகிறது,நெருக்கடி நிலமைகளை ச் சமாளிப்பதற்கு கவனம் உதவுகிறது,. ஒட்டப்பத்தையம்மோட்டார் சைக்கிள் பந்தையம் போன்றவற்றில் எந்த விளையாட்டு வீரர் மிகவும் கவனத்துடன் செயல்படுகின்றாறேர் அவரே வெற்றி பெறுகிறார்.கவனமில்லாதவர்கள் போட்டிகளிலும்வாழ்க்கையிலும் வெற்றி பெருவதிலை.