செந்துருவை சேரலாம் செந்தழிழ்லை பாடலாம்
இந்திரனைப் போல் வாழந்துண்டு இருக்கலாம்,
மந்திரம்சேர் வெற்பகத்தையூடுஅருத்தவேலவர்க்கு

முன்பிறந்த கற்பகத்தை கை தொழுதார் கால்

உணர்ச்சிகளும் - மெய்ப்பாடுகளும்


உணர்ச்சிகளும் - மெய்ப்பாடுகளும்


மனிதனின் நடத்தையிலும்வாழ்க்கையிலும் உணர்ச்சிகளும்-மெய்ப்பாடுகளும் பெரும் பங்கு ஏற்கின்றன..நமது வாழ்க்கையே இவையால்தான் இயக்கப்படுகிறது என்று கூறலாம்.உணர்சிகளும்-மெய்ப்பாடுகளும் இல்லாத வாழ்க்கை உண்மையான வாழ்க்கையாக இருக் க முடியாது.உணர்ச்சிகளும்,மெய்ப்பாடுகளுமே நாம் நம்மிடம் ஏற்படுதிக் கொள்கின்றபடியாலும்,உந்துதலும் காரணங்க்களாய் அமைகின்றன.பொதுவாக உணர்ச்சி ஒவ்வொன்றுக்கும் மூன்று இயல்புகள் உண்டு.1.எல்லா உணர்ச்சிகளும் மகிழ்ச்சி அல்லது வருத்தத்தை தரக்கூடிய தன்மையைப் பெற்று இருக்கும்.ஒவ்வொரு உணர்ச்சியும் கிளர்ச்சி ஊட்டக் கூடியதாகவோ அல்லது உணர்ச்சியற்ற மரத்தன்மையை ஏற்படுத்தக் கூடியதாகவோ இருக்கும்.3 உணர்ச்சிகள் சில சமயங்களில் தளர்வையோ அல்லது விறைப்பையோ ஏற்படுத்த வல்லவையாக இருக்கும்
2.
ஒருசெயல் அல்லது நிகழ்ச்சி நடைபெறப்போகிறது என்ற நிலையில் இருப்போமானல் எதிர்பார்க்கும் உணர்ச்சி நம்மிடம் தோன்றும்.அதே போல் நடந்துவிட்ட நிகழ்ச்சி சிரியாக அமையாவிட்டால் நம்மிடம் தளர்வை உண்டுபண்ணலாம்.வருத்தம் நிறைந்த நிகழ்ச்சி நம் முன் மரத்துப்போன தன்மையையும்உணர்ச்சியற்ற நிலையையும் உண்டுபண்ணலாம்ஒவ்வொரு உணர்ச்சியும் உடல் முழுவதும் உணரப்படுவதாகும்.ஆகவே ஒருகூறிப்பிட்ட உறுப்பால் மட்டும் நாம் உணர்வதில்லை.உணர்ச்சி என்பது உள்ளத்தில் உணரப்படும் செயலாகும்.உணர்ச்சிகள் வேகமாக இருக்கவேண்டிய அவசியம் இல்லைஅவை மென்மையானதாகவும் இருக்கலாம்.ஓருவனுடைய உணர்ச்சிகள் அவனுடைய கடந்த கால அனுபவங்கள்,அவன் பெற்றப்பயிற்ச்சி போன்றவற்றின் அடிப்படையில் அமைவதாகும்.ஆகவேதான் ஒருவர்க்கு மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி மற்றவற்க்கு துன்பம் தருவதாக அமைகிறது.மகாபாரதத்தில் நிறைய சாட்சிகள் உண்டு.பாண்டுவின் மைத்தன் அருச்சுனனின் நாடி நரம்பெல்லாம்ம,வீரம் சொறிந்ததாகதான் இருக்கும் அவனுடைய மகன் அபிமன்யு மிகவும் வீரம் உள்ளவன் என்பதில் ஐயம் இல்லைஆனல் போர்கலத்தில் அவனை துரொணர்,துரணாச்சாரியார்,.....போன்ற என்னற்றவர்கள் சூழ்ந்து போரிட்டாலும் அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தான்.அக் களத்தில் அவன் இறப்பு சோகமாக முடிந்தது..இது அர்சுனனுக்குப் பேர் இடியாகவும்,வருத்தம் தரதக்கதாகவும் அமைந்தது.. துரியோதன் கூட்டத்திற்கு மகிழ்சியை தரவல்லதாக அமைந்தது.ஒருவன் வயிற்று வலியை உணருவதாகக் கூறுவதாகக் கொள்/வோம்அவன் வயிற்றில் ஏற்படுகின்ற வலியைத்தான் உணர்ச்சி என்று அறியமுற்படுகிறன்.வலி என்பது துன்பத்தைத் தரவல்லது.அவ்விதமான வயிற்றுவலியால் ஏற்படும் உணர்வானது உடல் முழுவதும் பரவியுள்ளதுஆகவே வயிற்றில் உண்டான வலி துன்பம் நிறைந்த உணர்ச்சியாக உடல் முழுவதும் அறியப்படுகிறது என்று கூறலாம்.ஒவ்வொரு உணர்ச்சியும் உடல் முழுவதும்ம் உணரப்படுவதாகும்ஒருகுறிப்பிட்ட உறுப்பால் மட்டும் நாம் உணர்வதிலைஉணர்ச்சியென்பது உள்ளத்தால் உணரப்டும் செயலாகும்.நமது உணர்ச்சிகளைப் பல வகையாகப் பிரிக்கலாம்மகிழ்வுஇன்பம்,உவகைகளிப்பு போன்றவை ஒருவகையைச்சார்தந்தது இவவை மகிழ்ச்சி என்ற தலைப்பின் கீழ் வருபவைவெறுப்பு,துயரம்,,அதிருப்தி,துன்பம் என்பவை மற்றவகையைச்சார்த்தவை.இவையெல்லாம் வருத்தம் தரக்கூடிய உணர்வைஸ் சேர்ந்தவையாகும்விருப்பம்அவாநம்பிக்கை,போன்றவை இன்னொரு வகையைஸ் சார்ந்தவை.கோபம்,கசப்பு,சீற்றம்,போற்றவை கிளர்ச்சி ஊட்டக்கூடிய் உணர்வைஸ் சார்ந்தவையாகும்இவ்விதமாகநமது அனுபவங்களின் மூலமாக நாம் பல வகையான உணர்ச்சிகளை வெளியிடலாம்.ஆகவே உணர்ச்சிகள் மென்னையானவை.உணர்ச்சிகள் நம்மிடம் நீண்டு நிலைத்திருக்கும்இவை மெதுவாக தோன்றி மெதுவாக மறையும் தன்மையுடையவைஉணர்ச்சிகளின் போது நமது உடலில் எவ்விதமாற்றகள் கிடையாது.உணர்ச்சிகள் தோன்றி மறைந்தவுடன் நம்மிடம் எவ்விதமான மனநிலையும் உருவானதில்லைஉணர்ச்சிள் தெளிவற்ற நிலையில் உள்ளன.ஆகையால் நமது கடந்த கால் அனுபவங்கள் இவற்றுடன் தொடர்புகள் கொண்டுள்ளன என்று கூறலாம்.. மீண்டும் ஞாபகப்படுத்திக்கொள்வோம்.உணர்ச்சிள் நம்மிடம் நீண்டு நிலைத்து இருக்கும்அதனால் நமது மனநிலை அல்லது உள நிலை பாதிப்பு அடைகிறது.உணர்ச்சிகள் தோன்றும் போது நமது உடல் உறுப்புகளில் மாற்றங்கள் எதுவும் நடை பெறுவதில்லைஉணர்ச்சிகள் பொதுவாக தெளிவற்ற நிலையில் தான் நம்மிடம் காணப்படுகிறதுஆகவேதான் ஒருவர் எம் எம்மாதிரியான உணர்ச்சிகளைப் பெற்றிக்கிறார் என்று நம்மால் திட்டவட்டமாக கூற முடிவதில்லை.பொதுவாக மறைகின்றன.. உணர்ச்சிகள் மறைத்தவுடன் நம்மிடம் ஒரு மனநிலையை(மூடுஉண்டுபண்ணுவதிலை.துரத்தில் புள்ளிபோல் கடலில் தெரிவது அக்கடலின் கரையில் இருப்பவர்க்கு அதைப்பார்த்தவுடன் கப்பல் வருகிறது எனக் கூறிவிடுவார்"காரியம் என்னவோ ஒன்றுதான்-ஆனல் பாவனைவேறுபாட்டால் அதில் வேற்றுமை தோன்றுகிறது.அதாவது கங்கையில் இரண்டு பேர் நீராடப்போகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.அவர்களில் ஒருவர் எல்லாம் கங்கைகங்கை என்று கூறுகிறார்களே,. அதில் அப்படி என்னதான் இருக்கிறது.?. இரண்டுபங்கு ஹைட்ரஜன் ஒருபங்கு ஆக்ஜிசன்(பிரணாவாயு); இவ் இரண்டு பாயுக்களையும் சேர்த்து விட்டால் கங்கை (நீர்கிடைத்துவிடப்போகிறதுஇதற்கு அதிகமாய் அதில் அப்படி என்ன இருக்கிறது." என்று சொல்கிறான்மற்றவணோ,"விஷ்னு பகவானது பாத கமங்களிலிருந்து இவள் தோன்றி,சங்கரனது சடைமுடியில் வாசம் செய்கிறாள்ஆயிரக்கனக்கான பிரமரிஷிகளும் ,ராஜரிஷிகளும் இவள் கரையில் தவம் புரிந்திருக்கிறார்கள்.இவள் கரையில் நிகழ்த்துள்ள புண்ணியகாரியங்களுக்கு அளவுயில்லைஆகவே எவ்வளவு புனிதமானவள் என் கங்கைத்தாய்! :என் கிறார்.இந்த பாவனையில் ஆட்பட்ட அவன் கன்கையில் நீராடப்போகிறான்.நீரக-பிரானாவாயுப்பேர்வழியும் அதில் முழுக்குப்போடுகிறான்உடல் துப்புரவு என்ற பயன் இருவர்க்குமே கிட்டிவிட்டது கங்கையில் ஒர் எருது போய் விழுந்தாலும் அதன் உடலும் துப்பவரவென்ற இழித்த பயன் கிட்டியது.ஆனல் மனசின் அழுக்கைக் கழுவுவது எப்படி?. ஒருவனுக்கு உடல் துப்புரவென்ற இழத்த பயன் கிட்டியதுமற்றவனுக்கோ அதோடு சித்த சுத்தியென்ற மதிப்பிடவியலாத பயனும் கைகூடியது"இராமதாசர் இராமாயணம் எழுதிக்கொண்டே எழுதியதைச்சீடர்களூக்குப் படித்து விளங்கிக் கொண்டிருந்தார்அனுமானும் ஒருவர்க்கும் தெரியாமல் கதைகேட்க உட்கார்ந்து இருந்தார்இராமதாசர் கதையைத்தொடர்ந்தார் :"அனுமார் அசோகவனத்தை அடைந்தார்அங்கே வெள்ளை மலர்களைக் க்ண்டார்என்று எழுதினார்இதைக்கேட்டதும் அனுமார் தோன்றி ."நான் வெள்ளை மலர்களைப்பார்க்கவில்லையேசிகப்பல்லவா நான் பார்த்தவை!. நீ எழுதி இருப்பது பிழை.அதை திருத்து," என்றார் சமர்த்தர் "நான் எழுதியிருப்பது சரிதான்.நீங்க்கள் வெள்ளை மலர்களைத்தான் பார்த்தீர்கள் என்றார்.,'போனவன் நான்!. அப்படியானால் நான் சொல்வது பொய்யா!. என்று கேட்டார் இறுதியில் இவ் வழக்கு ஸ்ரீராமசந்திரனிடம் போயிற்றுஅவர்,"பூக்கள் வெள்ளைதான்ஆனால் அனுமனுடைய கண்கள் கோபத்தால் சிவத்து இருந்தமையால் அவருகு வெள்ளை மலர் சிவப்பாகத்தோன்றியதுஎன்றார்.நாம் உலகை எந் நோக்கில் பார்க்கிறோமோ அப்படியே அது நமக்குத் தோன்றும் என்பது இவ் எளிய கதை.மகிழ்சி : தன் மகன் கல்யாணத்தைப் பார்த்து தாய் தந்தையினர் மகிழ்ச்சி வெள்ளத்தில் திகழ்த்தனர்.இன்பம் : கடந்த வாரம் சென்ற கேரளாப் பயணம் மனதிற்க்கு இன்பமாக இருந்தது3களிப்பு :- நான் இளநிலை பட்டத்தில் முதல் வகுப்பு தேறியுள்ளதைப் பார்த்து களிப்பு அடைந் தேன்
உவகை :- என் குடும்பம் சமுதாயத்தில் மிகவும் படித்த குடும்பம் என பிறர் பேசுவது உவகையாக இருக்கிறது.அதிருப்தி :- நேற்று அவன் நான் சொன்னதைஸ் செய்யாமல் மிகவும் தவறான் ஒன்றைஸ் செய்ததைப் பார்த்து அவன் மேல் அதிருப்தி அடைந்தேன்,வெறுப்பு :- அவன் கீழ்த்தரமான காரியத்தைச்செய்துவிட்டான் அவன் மேல் வெறுப்பு வந்து விட்டது.துயரம் : மகன் இறந்ததைக் கண்டு துயரம் கொண்டான்
விருப்பம் : முது நிலை படிப்பதற்க்கு விருப்பமாய் உள்ளென்
நம்பிக்கை ; இவ் போட்டியில் தான் முதல் இடத்தை பிடிது விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.அவா மகள் கலெக்டர் ஆகவேண்டும் எனதாய் விரும்பினாள்
சீற்றம் : தன்னைக் கொல்லவருகிறான் என்று பாம்பு சீற்றம் அடைந்தது.கோபம் : படிப்பை விட்டு ஊர்சுற்றிவந்த மகனைப் பார்த்து தந்தை கோபம் அடைந்தார்.கவலை ;இந்த மழை ஒய்ந்து எப்போதுதான் வீட்டுக்கு செல்வேன் என் சிறுவர் கவலையுடன் இருந்தனர்.




மெய்ப்பாடுகள்


மெய்ப்பாடுகளை  மனவெழுச்சிகள் என்றும் கூறலாம்.மெய்ப்பாடுகளும் நமது உணர்ச்சிகளைப் போல் குறிபிட்ட உடலுப்புக்களால் உணரப்படாமல் உடல் முழுவதும் உணரப்படுகிறன. இந்த நிலைதான் உணர்ச்சிகளையும் மெய்ப்ப்டடுகளையும் பிரித்தறிய முடியாமல் செய்து விடுகிறது. பொதுவாக அச்சம், சினம்,அன்பு போன்ற உணர்ச்சிகள் நிறைந்தவைகளே மெய்ப்பாடுகள் என்றழைக்கலாம்.மெய்ப்பாடுகள் காட்டற்று வெள்ளம் போன்ற வேகம் நிறைந்தவை. மெய்பாடுகளின் போது உடலில்  பல்வேறு மாற்றங்கள் தோன்றும்போது நமது உடலில் கலக்கம் அல்லது கொந்தளிப்பு உண்டாகிறது. இவற்றின்விளைவாய் நமது உடலில் மாற்றங்களும், அடையாளங்களும் தோன்றுகின்றன. உதரணமாக ஒருவன் சினப்படும்போது அவன் பற்க்களைக் கடிக்கிறன். அவன் கண்கள் சிவக்கின்றன, இதயத்துடிப்புப், இரத்த அழுத்தமும் அதிகமாகின்றன.எல்லா மெய்பாடுகளும் உடலுனுள்ளும்,வெளியிலும் பல மாற்றங்களை உண்டுபண்ணும்.
உங்களிடம் எப்பொழுதாவது மகிழ்ச்சி அல்லது ஆனந்தம் அது வெளியிலிருந்து வருவதாக நினைத்துக் கொள்ளாதிர்கள். நீங்கள் ஒரு நெருங்கிய நண்பனை சந்தித்தது  என்னவோ உண்மைதான் அப்பொழுது உங்களிடம் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு காரணம் அந்த நண்பன் தான் என்று சாதரணமாக நினைப்பபீர்கள். ஆனால்,உண்மை அப்படி அல்ல. அந்த மகிழ்ச்சி உங்களிடம் ஏற்கனவே இருக்கிறது. ஆனல் அடக்கமாக இருக்கிறது.அப்பொழுது நீங்க்கள் உங்கள் நண்பனைப் பார்த்ததும் அதுதானே மேலே எழும்புகிறது. அது மேலே எழுபுவதற்கு, உங்கள் நண்பன் உதவி செய்தான் அவ்வளவுதான்.
மகிழ்ச்சி ஒர் உணர்வுக்கு மட்டும் உரியது அல்ல. எல்லாம் உணர்வுகளுக்கும் பொருந்தும். கோபம்,வருத்தம், துன்பம்,துயரம், இப்படியெல்லாவற்றுக்கும் பொருத்தும். பறப் பொருளகள் அனைத்தும் அந்த உணர்வுகளை தூண்டும் கருவிகளாக இருக்கின்றன. இதை நன்றாகப் புரிந்துக் கொள்ளுங்கள். இந்த உணர்வுக்கு அவை காரணமல்ல.உங்கள் நண்பனோ அல்லது மற்ற உலகப் பொருள்களோ,அந்த மகிழ்ச்சிக்கு அல்லது துக்கத்துக்கு ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துகின்றன அவ்வளவுதான். ஆனால் மாற்றம் அனைத்தும் உங்க்களிடம்தான் நிகழ்கின்றன. இந்த உணர்வுள் அனைத்தும் ஏற்கனவே உங்களிடம் மறைந்து இருக்கின்றன.


மேல் நாட்டில் இப்பொழுது ,"சைக்கோ டிராமா" என்ற முறையைப் பின் பற்றுகின்றனர்.
முதலில் ஒருவிளையாட்டு போல உங்களைக் கிண்டல் பண்ணுவார்கள். நீங்களும் அதை அலட்சியம் செய்வீர்கள். பிறகு கொஞ்சம்,கொஞ்சமாக உங்கள் அந்தரங்க விஷயங்களை வெளிப்படுத, வெளிப்படுத்த உங்களுடைய கோபம் உண்மையாகி அது வெடிக்கும் நிலைக்கு வந்துவிடும். உங்கள் மனம் கோபத்தின் உச்சியில் இருந்தால், உங்கள் உடலிலும் அதற்கு ஏற்றார்போல் செயல்படும்.
ஒரு நாடிகன், ஒரு காட்சியில்ல் கோபமாக நடிக்க வேண்டிருப்பதால் ஆரம்பத்தில் அது நடிப்புத்தான் என்ற பிரஞ்சை அவனிடம் இருக்கும் ஆனால் போகப் போக அந்தக் கோபம் அவனை முழுவதுமாக ஆட் கொண்டு விடும்.அப்பொழுது அவனுடைய  கோபம் உடலோடு, மனதோடும் சம்பத்தப்பட்டு முழுமையாக் வெளிப்படும்.அவன், தான் நடிக்கிறோம் என்ற நினைப்பை இழந்துவிடுகிறான்.அப்பொழுது அவனுடைய நடிப்பும் இயற்கையாக் உண்மையாக இருக்கும்.
மெய்பாடுகளின் பண்புகள் :-
மெய்பாடுகள் எப்போது தோன்றுகின்றன?. நமது உடலின் அடிப்படை தேவைகள் மறுக்கப்படுகின்றபோதும்,நமது சுயமரியாதை பாதிக்கப்படும்போதும்  நமக்கு மெய்பாடுகள் தோன்றுகின்றன.மெய்பாடு தோன்றும் போது சிந்தனை என்ற செயல் நடைபெறாமல் போகிறது.அதனால் பகுத்தறிவும் செயல் படாமல் போகிறது. ஒவ்வொருமெய்ப்படுகளும் நமது உடலின் உள்ளேயும், வெளியேயும் பல மாற்றங்களை உண்டு பண்ணும்.
மெய்பாடுகளின்போது நமது உறுப்புகள் தானியங்கு நரம்பு மண்டலம், நாளமில்லாசுரப்பிகள் , இதயம், நுரையீரல் போன்றவைகளில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.மெப்பாடுகள் சக்திவாய்தவை.ஆகவேதான் ஒரு மெய்ப்பாடு தோன்றி மறைந்தவுடன் அது ஒருவிதமான மனநிலையை நம்மிடம் ஏற்படுதிவிட்டு செல்கிறது. அதைத்தான் ஆங்கிலத்தில் மூடு என்று அழைக்கின்றனர்.மெய்பாடுகள் மறைந்ததும் ஏற்படுகின்ற மன நிலை நம்மை மீண்டும் எளிதாக ஒரு சாதாரனதுண்டல் கூட மொய்பாட்டினைப் பெறச்செய்து விடுகிறது.
மெய்பாடுகளின்போது ஏற்படும் மாற்றங்கள் யாவையானது:-
1. முகத்தில் ஏற்படும் மாற்றங்கள் :- முகத்தில் உள்ள கண், மூக்கு, உதடு ஆகிய பாகங்களிலுள்ள தசைகள் மாற்றங்கள் அடைகின்றன. இவை சுருங்கி, விரிந்து பலவித முகபாவங்களை உண்டுபன்னுகிறது.முகத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டே மெய்பாடுகளின் தன்மையை அறியலாம். ஆனால், இவ்வாறு எல்லா சமயங்களிலும் கண்டு கொள்வது கடினம். ஏனனில் மனிதர்கள்  தங்களுடைய மெய்படுகளை வெளியிடுவதில் வேறுபடுகின்றனர்.
2.கைகள் :- மெய்பாட்டின் போது கைகளை நாம் பெரிதும் பயன் படுதுக்கிறோம். சில சமயங்களில் கைகளை ஆட்டியும், மடக்கியும், முறுக்கியும் பல விதமான கைசெய்களை செய்து மெய்பாட்டினன வெளியிடுகிறோம். கைவிரல்களும் மெய்ப்பாட்டின் போது பெரும் மாற்றங்களை அடைகின்றன.
3. குரலில் மாற்ம்:- மெய்பாட்டின் போது குரலில் மாற்றங்கள் நிகழ்கின்றன. சினங்க் கொள்ளும் போது உரத்த குரலிலும், அச்சம் கொள்ளும் போதுபொதுவான குரலிலும் நம்மிடம் ஏற்படுகிறது.மெய்பாடுகளுக்கு ஏற்றவகையில் சந்தர்ப்பம் சூழ்நிலைக்கு எற்றவாறு நமது குரலில் மாற்றங்கள் நிகழ்கின்றன.
4. இதயதுடிப்பு:- மெய்ப்பாடுகளின் போது நமது இதயத்துடிப்பும் மாற்றம் பெருகிறது. இது மெய்ப்பாடுகளுக்கு ஏற்ப அதிகமாகவும், குறைந்தும் மாற்றம் பெறுகிறது.
5. இதயத்துடிப்பு :- நமது இரத்த அழுத்தம் பாதிக்கப்படுகிறது. சினம் ,அச்சம் போன்ற மெய்ப்பாடுகளின் போது இரத்த அழுத்தம் அதிகமாகிறது.அதனால்தான் இதயண்நோய் வாய்ப்படவர்களும்,இரத்த அழுததம் மிகுதியாக இருப்பவர்களும் அடிக்கடி சினப்படுதல் கூடாது என்னும் உணர்ச்சிவசப்படக்கூடாது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
6. அதிகசக்தி :- மெய்ப்பாடுகள் நம்மிடம்தோன்றும்போது மிகுதியான் சக்தியாக நமக்கு கிடைக்கிறது. சான்றாக சாதராணமாக ஒரு மனிதன் 30 மையில் வேகத்தில் ஒடும் சக்தி பெற்றவன் எனக் கொள்வேஅம். அவன் ஆபத்தில் இருக்கும் போது (சிங்க்த்தைப் பார்த்து) 50 மையில் வேகத்தில் ஒடுவான்.இவ்வாறு ஒடுவதற்கு காரணமாக இருப்பது அவனுடைய சக்தியே ஆகும்.
7. இதரமாற்றங்கள் :- நமது உடலில் மின்விசை எதிர்ப்புசக்தி உண்டு. மெய்ப்பாடுகளின் போது இவ் மின்விசை எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதைமின்நோட்டமானி (psychf-falvanoscope) என்னும் கருவியின் துனணக் கொண்டு அறியலாம்.மேலும் மெய்ப்பாடுகளின் போது மயிர்கூச்சறித்தல், வியர்வை பெருகுதல்,நாவறண்டுபோதல் போன்ற மாற்றங்களூம் நிகழ்கின்றன.


உணர்சிகளும் - மெய்ப்பாடுகளும் எவ்வாறு நமது கட்டுப்பட்டில் வைத்துக் கொள்வது என்பதைப்பற்றி மிக விரிவாக கீழே காண்போம்.


வாழ்க்கை என்பது சிக்கல் நிறைந்த மனப் போராட்டமாகும். உயிரும், உடலும் சேர்ந்ததே ஒரு சிக்கல்தானே. அதிலிருந்து உருவாகும் சிக்கல்களே மற்ற சிக்கல்களுக்கும் காரணம். உடலைவிட்டு உயிர் பிரிந்தால் அதோடு அந்த மனிதரின் வாழ்க்கைஸ் சிக்கல்கள் அனைதும் தீர்ந்தது விடுகின்றன. எனினும் சமுதாயக் கூட்டமைப்பில்ல் வாழும் ஒவ்வொரு மனிதனுடைய சிக்கல்களீலும் வேறு பலரும் பின்னப்பட்டு இருக்கின்றனர். ஆதலால் ஒருவர் வாழ்வு முடிந்து அவன் சிக்கல் முடிந்து விட்டாலும் அவனோடு பின்னப்பட்டிருந்தவர்களும் சில புதிய சிக்கல்கள் உருவாகிவிடும்.சிக்கல் இல்லாத வாழ்வு ஒரு மனிதனுக்கு அமையாது. அப்படி அமைந்தாலும் ஏதேனும் ஒரு சிக்கலை உருவாக்கிக் கொண்டு தவிக்கும் வரையில்  எந்த மனிதனும் சும்மா இருக்க மாட்டான்.
'யாதனின் யாதனின் நிங்கியான் நோதல்,
அதனின் அதனின் இலன்"-திருவள்ளூவர்
கவலையானது நினைப்பதற்கும், நடப்பதற்கும் இடையே கானும் முரண்பாடுதான் கவலைக்கு அடிப்படைக்காரணம். உள்ளத்தின் களக்கமாகிய நோய்களும், உயிரின் களக்கமாக விளங்கும் வாழ்க்கைச்சிக்கல்களும் கலவையாக மதிக்கப்படுகின்றன. உடலுக்காயினும், அல்லது மனதிற்காயினும் சிக்கல் வரும் போது அந்தச்சிக்கல்களைச்சந்திக்க போதிய பலமில்லாத மனநிலையைக் கவலை என் கிறோம்.கவலை என்பது ஒருவருரை உள நோய்,தனது இயலாமை உணர்ந்து,நினைந்து அல்லது கற்பித்துக்கொண்டு வருந்தி அமைதி இழந்து இயங்கும் மன நிலைதான் கவலை.
பெரும்பாலும் தன் அறிவில் உள்ள குறைப்பாட்டால்தான் வாழ்க்கை சிக்கல்கள் விழையக் காரணமாகின்றன.அறிவின் குறைபாட்டால் இயற்க்கை நியதி தெரிவதில்லை.செயல் விளைவுத் தத்துவம்  புரிவதில்லை,. தவறு செய்தால் இன்றோ, நானையோ,அறிவிக்கோ, உடலுக்கோ துன்பம் விளையும் என்பது தெரிவதில்லை. இத்தகைய அறியாமையால் செய்த தவறுகளின் காரணமாகப் பெருகிக்கொள்வம். துன்பங்களோ வியாதியாகவும் வாழ்க்கைச்சிக்கல்களாக நம்முன் எழுந்து நிற்க்கிற்றன.
அறிவின் குறைப்பாட்டால் சமுதாய ஒருங்கமைப்பு விதிகள் புரிவதில்லை. பலர் இணைந்த கூட்டுறவு வாழ்வு எனும் சமுதாயத்தின் பராமரிப்புக்கும், காப்புக்கும், மேம்பாட்டுகுமான விதிமுறைகளை அறியாமல் அல்லது அவமதித்து அதன் விளைவாக சந்திக்கும் துன்பங்கள் தாம் வாழ்க்கை சிக்க்ல்களாக மாறுகின்றன. திறமையின்மை, அச்சம் இவையிரண்டும் கவலைகளைப் பெருக்கும் மன நிலைகளாகும்.ஆகவே ஒன்றிக்க ஒன்றாக ஒன்றுபோய் ஒன்றாக வாழ்க்கையில் சிக்கல்கள் வந்து கொண்டுதான் இருக்கும்.