நவீன உளவியல் ஆய்வின் மூலம் மனிதர்களிடம் உள்ள உளவியல்(உளப்பண்பு) வேறுபாடுகள் அனைத்தும் ஆராயப்பட்டுள்ளன.அறிவு நிலையில்-சராசரி நிலையில் இருத்து கீழ் இடம் பெற்றுருப்பவர்களை அறிவீனர்கள் என்றும், சராசரி மக்கள் நடத்தும் வாழ்வினை மேற்கொள்ள இயலாத நிலையில் உள்ளவர்கள் என்றும் குறிப்பிடலாம்.இவர்தம் நுன் அறிவு அவ்வளவு திறம் வாய்ந்தது இல்லை.சராசரி நிலையை அடைய முடியாதவர்கள்.அறிவீனர்கள் பித்தன்,தனிப்பேதை,பேதை எனப் பிரிக்கலாம். அதற்கு அடுதத படியாக இருப்பவர்கள் சராசரி நிலைக்கு சற்றுமேம்பட்ட நிலை கொண்டவர்கள்.இவர்களுடைய எண்ணிக்கை குறைவு.இவர்களை மேதைகள், மகா மேதைகள் என குறிப்பிடலாம்.
பித்தன் :-
அறிவீனர்களிலேயே மிகவும் கீழான அறிவு நிலை பெற்றவர்கள்,பித்தன். இவர்களால் தன் அன்றாட தேவைகளைக் கூட அறிந்து பூர்த்தி செய்து கொள்ள இயலாது.மிகச்சாதாரண ஆபத்துகளில் இருந்து கூட தன்னைக் காத்து கொள்ளும் ஆற்றல் அற்றவர்கள். தன் தேவைகளை அர்த்தமற்ற ஒலிக்குறிகளால் வெளியிடும் இவர் அச்சம் என்பதை அறியாதவர்கள்.எவ்வித வேலையும் கற்றுக் கொள்ள இயலாத இவர்க்கு 1 முதல் 10 வரை என எண்ணக்கூடிய திறமை இராது.அறிவீனம் ஏற்பட மூல காரணங்கள் பல இருக்கலாம்.அவற்றுள் சிறு வயதில் தலமை நரம்பு மண்டலத்தில் ஏற்படும் இடையுறு.தாய் தந்தையரிடம் இருந்து பிறப்பினால் பெறும் அறிவீனம். சுரப்பிகளின் இயக்கயின்மை போன்ற சில காரணங்களை முதன்மைப்படுத்தி கூறலாம்.
இவர்களை குணப்படுத்துவது என்பது இன்றய விஞ்கான வளர்ச்சியில் சாத்தியம் சிறிது இருந்தாலும்,நிறைய பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது. சராசரியனவர்கள் எப்படி செய்ய இயலும்..அன்பும், பரிவும் காட்டித்தனி கவணம்,தனிப்பயிற்சிகளும் அளிக்க வேண்டும்.பெற்றோரும் மற்றவர்களும் இவர்களிடம் பாதுகாப்பும் அன்பும் செலுத்தி நல் வாழ்வை நல்கவில்லையெனில் இவர்கள் சமுதாய விரோதிகளாகவும், குற்றவாளிகளாகவும் மாறிவிடக்கூடும்.
தனிப் பேதை :-
இவர்கள் பித்தர்களைவிட சற்று அறிவு மிக்கவர்கள் இவர்கள் சுமார் 3-7 வயது வரை உள்ள குழத்தைகளின் நுண்ணரிவு திறனையொத்த உளத்திறமை பெற்றவர்கள்.தாமகவே எவ்வித வேலையும் செய்யும் திறன் அற்றவர்கள்.இவர்கள் பேசக் கற்று இருப்பார்கள் அனால் எழுத இயலாதவர்கள். இவர்கள் திறம்பட்டவர்களின் மேற்பார்வையின் கீழ் சில உபயோகமான வேலைகளைச்செய்யலாம்.ஆயினும் இவர் பிறர் உதவு இன்றி உண்ணவும்,உடுக்கவும் கூடத்திறமையற்றவர்களாய் இருப்பர்.இவர்கள் கல்வி அறிவுபெற தகுதிகஅற்றவர்கள்.தானகவே பேசிக்கொள்ளும் குணம் பெற்ற இவர்கள் மிகச்சாதராண அபாயங்களில் இருந்தும் தம்மை காப்பாற்றிக் கொள்ளும் திறமையுடையவர்கள். இவர்கள் தனிப்பட்ட பள்ளி,விடுதிகளில் மூலம் பண்படுத்தி பாதுகாத்தால் சற்று நிம்மதியான வாழ்வினை மேற் கொள்ள வாய்ப்புகள் உள்ளன.
பேதை :_
இவர்கள் சுமார் 8-10 வயதுவரை உள்ள குழத்தைகளின் நுண்ணரிவுனைப் பெற்றிருப்பர்.ஆயின் தனிப்பேதை,பித்தன் ஆகியவர்களைவிட இவர்கள் நுண்ணரிவுத்திறன் சிறிது மேன்பட்டவர்கள்.ஆனல் சாதாரண வாழ்கை மேற்கொள்ள தையல்,மரவேலை போன்றவற்றைத் திறம்பட செய்வர்.தம் அன்றாட தேவைகளைத் தாமே பூர்த்தி செய்து கொள்வர்.இவர்கள் வாழ்க்கை மேம்பட அக்கரை உள்ளவர்களின் மேற்பார்வை இன்றியமையாததாகும்.எனினும் இவர்கள் கல்வி தகுதி பெறதகுதி அற்றவர்கள்