செந்துருவை சேரலாம் செந்தழிழ்லை பாடலாம்
இந்திரனைப் போல் வாழந்துண்டு இருக்கலாம்,
மந்திரம்சேர் வெற்பகத்தையூடுஅருத்தவேலவர்க்கு

முன்பிறந்த கற்பகத்தை கை தொழுதார் கால்

அறிமுகம்:-

அறிமுகம்:-

ஒரு தென்றல் தேவைப்பட்டால் கண் இமைக்கும் நேரத்துக்குள் சூறாவளியாக உருவெடுத்து அனைந்தையும் சுருட்டி தள்ளிவிடும் என்பதை பலரும் அறியாமல் இருக்கிறார்கள்.

ஒரே ஒரு சிறிய தீக்குச்சி போதும் மிகப் பெரிய எணனைய் கிடங்க்கையும் கன நேரத்தில் சுவாகா ஆக்கிவிடும் என்பது பலருக்கு ஏனோ தெரியாமல் போய்விட்டது.
கன நேரந்தில் எடுத்த தப்பான முடிவால்,பின்னால் பல பிரசனைகளுக்கு வழிவகுத்து விடுகிறது என்பது உண்மையே.
ஆகவே ஒரு சிறிய தப்பான செயல் பின்னால் பல சிக்கலுக்கு வழிவகுக்கிறது.
அவ்வாறு சிக்கிக்கொண்ட பிரச்சனைக்கு வழிகானமுடியாமல் திணருவதும் உண்டு. ஒரு சில சமயங்களில் தூண்டில் சிக்கிய மீன் கூட தப்பித்துவிடுவதும்,ஒரு சில சமயங்களில் வலையில் சிக்கிய மீன் கூட தப்பித்துவிடுவதும் உண்டு. ஆனால் தண்ணீர் காய்ந்து கொண்டுயிருக்கும் குளந்தில் உள்ள மீன் தப்பமுடியாது என்பது உறுதி.இதே போல் சிக்கிய பிரச்சனையில் தப்பிப்பதற்கு வழி தெரியாமல் நாம் சுழன்று கொண்டுயிருக்கிறோம்.பிரச்சனைகளில் சிக்கி துன்பத்தை அனுபவிக்கிறோம். அத்துன்பத்தை மறக்க பல வருடங்கள் ஆகின்றது.கால சுழற்சிதான் அதற்கு பதில் சொல்கிறது.
அதாம் ஏவால் காலத்தில் இருந்து துன்பங்களுக்கு விடைகான முடியவில்லை.புண்ணிய பூமியில் பல மகான்கள் தோன்றி பல வழிகளை சொன்னாலும்,சீர்திருந்த புஸ்தகங்கள் பல ஆயிரம் தோன்றினாலும் அப்போதைக்கு மாறிவிட்டதாகா நினைந்து ,பல நூறு வருடங்களாக சரியான தீர்வுகான முடியாமால் மனித இனம் அல்லாடிக்கொண்டுதான் இருக்கிறது.பிரச்சனை,பிரச்சனை இதில் சிக்காதவர்கள் இல்லை எனலாம்.அவ் பிரச்சனைக்கு வழிதான் என்ன?.
வாழ்கையில் தாய் தந்தையிடம் பல பாடங்கள் படித்தாலும்,பல வழி செவிகதைகள் கேட்டாலும்,பள்ளியில் படித்தாலும் பிரச்சனையில் தீர்வுகான முடிவதில்லை.இதற்கு தீர்வு காண ஆரம்பித்தால் முடிவு இருக்காது. நாம் யார்? உடல் ரீதியாக என்ன பலம் இருக்கிறது ?. மன ரீதியான சீர்திருத்தம் செய்யதாயாரா?. என்ற பல கேள்விகளை நாம் கேட்டுகொள்ள வேண்டியிருக்கிறது.உடல்-பொருள்-ஆவி பற்றி விரிவாக நாம் தெரிந்தால் மட்டுமே போதது.இதைப் பற்றிய தத்துவம் பற்றி சொல்லியாகிவிட்டது என்பது உண்மையே,ஆனால் தத்துவம் மட்டும் தெரிந்துபயன் இல்லை.அதைபயன் படுத்தகூடிய கலையைப்பற்றிய பயிற்சி நமக்கு தேவை.அதாவது பாட தெரிந்த பாடகனுக்கு இதயத்தில் இருந்துவரும் அனுபவ சுருதி இல்லாவிடில் பயன் என்ன?. ஆகவே தத்துவமும் -கலையும் நம் இரு கண்கள்.அதை பயன் படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.இளைக்கர்களே எழுமின் என்ற சுவாமி விவேகானந்தரின் வாக்கியம் மிகவும் அவசியம் ஆகிறது.
பல நூற்களில் இருந்து மிகபெரிய மெய் வாக்கியங்களை தொகுத்து வழிசெய்ய பட்டு இருக்கிறது பல தலைப்புகளில்..
இவ் தலைப்புகளில் உள்ளே பல அற்புதமான மகாவாங்கியங்கள் இருக்கிறது.சிக்கென பிடித்து கொண்டு வாழ்கையில் வளம் கான கற்றுக்கொள்ளவேண்டும்.எல்லாம் இறைவன் செயல்.அவன் இன்றி ஒரு அனுவும் அசயாது.