உலகமே இயற்கை மயமானது.இயற்கையின் ஒரு சின்னஞ்ச்சிறு கூறுதான் மக்கள் சமுதாயம்.இவ்
உண்மையை உணராத சான்றோரில்லை; உணராத புலவர் இல்லை.இயற்கையின் எழில் தோற்றங்கள் மக்களுக்கு பெரும் விருந்தளிப்பவை.
செக்கசிவக்கும் செவ்வாணம், கதிரவன் காலைத்தோற்றம்,தன்மதியின் வெண்ணிலவு,வண்ண வண்ண மலர்கள்,பன்னிறப்பறவைகள்,பச்சைப்பாய் விரிந்தார் போன்ற புல் வெளிகள்,நெல்வயல்கள்,தோகை விரித்தாடும் மயில்கள்போன்ற இயற்கை காட்சிகள் கண்களூக்கு விருந்தாகும்.
பாடும் குயிலின் பண் ஒசை,மது வண்டின் மதுர கீதம்,அலைகடலோசை,அருவி,ஆறுகளின் இன்னோசை முதலிய இயற்கையான ஒலிகள் செவிக்கினிய செல்வங்கள்.
நறுமலர்களின் நறுமணம்,மா,பலா,வாழைக் கனிகளின் மாறா நன் மனம் முதலியவை முகர்வுக்கு நல் விருந்தாகும்.
முக்கனிகளின் தீஞ்சுவையும்,மற்றைய கனிகளின் தீஞ்சுவையும் வாயுணர்வுக்குப்பெரும் விருந்தாகும்.
வண்ணமலர்கள்,பஞ்சவர்ணப் பைக்கிளிகள்,பஞ்சு போன்ற பறவைக்குஞ்சுகள்,வெண்மதியின் தண்ணொளி,தென்றலின் தீண்டல், ஆகியவை மெய்க்கின்பம் பயப்பனவாம்.இவ்வாறு ஜம்புலனுக்கும் விருந்தாய் அமையும் இயற்கைதரும் இன்பம் என்ன என்பது ?.
முற்றும் துறந்த முனிவர்களும்,தமது பற்றற்ற வாழ்க்கையினை நடந்த்த தேர்ந்தெடுக்கும் இடமும்-இயற்கையன்னை -பூத்துக்குலுக்கும் கானகமேயன்றோ ! எனவே பால்,இன,பருவ வேறுபாடுயின்றி மக்கள் அனைவரும் ஈடில்லா இன்பமளிப்பது இயற்கையேயாகும்.
பண்டைக் கால மக்கள் முதன் முதலாக் ஐம்பெரும் பூதங்களாய மண்,தீ,நீர்,காற்று,ஆகாயம் முதய பொருள்களையே தெய்வங்களாக வணங்கினர்..தெய்வவழிபாடே முதன் முதலில் இம் மூலப் பொருள்களிடமிருந்து மக்கள் கொண்ட அச்சத்திற் பிறந்ததெனக் கூறுவர் ஆராச்சியாளர்கள்.இன்னும் ஐம் பூதங்க்களுக்குரிய ஐந்து சிவ தலங்கள் இருக்கப்பார்கலாம்.மண்ணுக்கு- காஞ்சியும்., தீயினுக்கு-
திருவண்ணமலையும் .,நீருக்கு -திருவானைக்காவும்.,- காற்றுக்கு -காளத்திரியும்., ஆகாயத்திற்கு-தில்லையும் அமையும்.இவ் ஐம் பூதங்க்களுக்கு அப்பாற்பட்ட பொருள் ஒன்றும் இல்லை. இறைவன் எங்கும் நிறைந்து இருக்கும் நிலையினையே இது குறிப்பதைப் காணலாம்.
மேலும் நிலந்தை குறிஞ்சி-முல்லை- மருதம்-நெய்தல்-பாலை என் ஐந்தாகப்பரிந்தனர்.இதில் மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சியெனவும்., காடும்-காடு சார்ந்த இடம் முல்லை எனவும்., சமவெளிபிரதேசம் மருதம் எனவும்., கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் எனவும் விளையாத பகுதி பாலை என கணக்கிட்டனர்.மேலும் முல்லை,மருதம்,நெய்தல் பகுதி திரிந்து சதுப்பு வனப் பகுதியாக ஆறாவது பிரிவாக பின் பிரிக்கப்பட்டது.மலைக் கிழவோனாகிய முருகன் குறிஞ்சிக்கு தெய்வம் ஆனான்.பச்சைமா மேனிகொண்ட திருமால் முல்லைக்கு தெய்வம் ஆனான்ன.மழையினை நம்பி வாழும் வயல் நிலமான மருததற்கு மழைமேகங்களின் தலைவனான இந்திரன் இறைவனானன். கடலும் கடல் சார்ந்த இடமான நெய்தலுக்கு வருணன் தெய்வமானார்.அறவடிவாகிய அம்பிகையின் மறவடிவான காளியென்னும் கொற்றவை பாலைக்குத் தெய்வமானார். பிறவா வாழ்க்கைக்குப் பெரியோனாகிய சிவபெருமான் யாதும் ஊரே எனக் கொண்டு நாடெங்கும் மக்களால் வழிபடப்பெறும் தெய்வமானார்.
வானளாவிய மரங்கள், வான்நின்றும் ஒடி வரும் தேனருவி.இன்னிசைப்பாடும் பன்னிறப் பறவைகள், கூட்டங்கூட்டமாய் குரங்குகள்,வண்டுகள் மொய்க்கும் வண்ணமலர்கள், வானளாவிய வளர்ந்த வேங்க்கை மரங்களின் கிளைகள் சொறிந்த சோலையின் எழில் , வேங்கை மரத்துக் கிளைகள் மீது ஒருபுறம் செண்பகக்கொடியேறிப் பூத்து குலுங்குகின்றது.,மற்றொரு புறத்தில் தோட்டத்து முல்லைக் கொடியின் வெள் அரும்பு காணப்படும்.பச்சைபசேரன வேங்கையின் நுடே பசுமை நிற செண்பகமும்,வெள்ளை நிற முல்லையும் மாறி மாறித் தோன்றும் வர்ணசாலந்தான் என்ன?. விளைந்த வாழைக்கனியோடு பலாவின் நறுமனமும் எங்க்கும் வியபித்தி இருக்கிறது. உயர்ந்த மரத்தின் மேல் இருந்து தேன் சொட்டுகிறது. அவ் தேன் ஆனது மாம் மரத்தின் கொம்பில் உள்ள மாங்கனிமீது விழுத்து நறுமனம் கமழ்கிறது.தண்ணீரில் தோன்றும் மலர்களுக்கு குறைவில்லை.சுனை அருகே அந்த நீல நீறத்திற்கு ஏற்ப மயில் தோகை விரிந்தாடும் குரமரத்தின் பாம்புப்பாற்களைப்போன்று உரிய வெண்ணிற அரும்புகள் பார்பதற்கு குரவ மரமாகிய பெண்,தன் சிறிய வெண்பற்களைக் காட்டி அழகுறஸ் சிறிப்பது போன்று காட்சியளிக்கும்.வெண்ணிற அன்னம்,பைம்கிளி மயில் ஆகியவை யின் அழகுதான் என்னென்பது.
இயற்கையோடு அமைந்த விலங்கினம் :-
சிறப்பினம் எனப்படுவது ஒத்த உடலாக்கமும்,வாழ்முறையும்,இனப்பெருக்கில் பங்கு பெறும் உயிரினங்களைப் பொதுவாக ஒன்று சேர்த்து ஒரு சிறப்பினம் என்று அழைக்கப்படுகிறது.இதில் நுண் உயிர்களூம் அடங்கும்.
தாவர சிறப்பினங்கினால் அளிக்கப்படும் மரக்கட்டை,பக்கவேர் ஆகியவை அடிநிலத்தில் வாழ்கின்ற நுண் உயிர்கள் சதுப்பு வன விலங்கினமும் பெரும்பகுதி மேல் வாழ்விகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இவை பெரும் பகுதி மட்குண்ணிக்கள். ஆனால் உள் வாழ்விகள் பெரும் பாலும் அனைந்துண்ணிகல் அல்லது படிவுண்ணிகள்
சதுப்புவனக் கரிம பொருள்களை மட்டும் பொருளாக மாற்றுவதில் பொரும் பங்கு கொள்ளூம் நுண்ணுயர், உருளைபுழுக்களும்,கோடிபாடுகளூம், மண்ணில் காணப்படும் பூஞ்சைகளும்,பாக்டீரியாக்களூம் பெரிய விலங்குக்கு அடிப்படையான உணவுப்பொருளாக அமைகின்றன.சேற்றில் உள்ள நீரிலிருந்து உயிரிணங்களை வடிகட்டி உண்டு வாழ்கின்ற பெரும் விலங்கான புல்சுனைப் புழுக்கள், பட்டானிப்புழுக்கள், இருஒடுடலி முதலியனவைகள் ஆகும்.
தாழ்வான இடக்களில் காணப்படும் நீர்த்தாரைகள் எப்போதும் ஈரமான சுற்றுச்சுழலில் காணப்படுவதாலும், சேறு நீர் நிரம்பியிருப்பதாலும் இப்பகுதியில் அளவில் பெரிய நத்தைகளும், அளவில் சிறிய சிவப்பு நிற நத்தை, நண்டுகள், இருஒடுடலியாக்களும் தாவர மிதவை உணவுகளை உண்டு வாழ்கின்றன. மட்கும் பொருட்களை உண்டு வாழும் வாளை மீன்,செம்மீன்கள் ஆகும்.பெரிய மீன்கள் நத்தைகளையும் ,நண்டுகளையும் உணவாக உட்கொள்கின்றன.மேலும் விலங்கு மிதவிகளும் பாசிகளும் தாவர மிதவைகளும் உணவாக உட்கொள்கின்றன.
மாமரத்தின் மலர்களை நாடி வரும் வான் கூரைப் பறவைகள் வெளவால்கள்,குரங்குகள் மற்றும் பூச்சிகள் அவ் மரங்களை இல்லமாக வைத்துக் கொள்கிறது.கழுகுகளும்,கருடங்களும் இங்கு கூடுகட்டுகின்றன.பறக்கும் நரி எனப்படும் வவ்வாள் இங்கு இனப்பெருக்கம் செய்து வாழ்கின்றன.இவைகள் மரங்களில் உள்ள இலைகளையும்,பூக்களையும்,காய், கனிகளையும் உணவாக உண்டு வாழ்கின்றன.. பல வை வண்டுகளும், எறும்புகளும் தாவரங்களின் இலைகளை மென்று தின்கின்றன.. மின்,மினிப்பூச்சிகளும் இத்தாவரத்தை நம்பி வாழ்கின்றன.
இப் பகுதியில் உணவுக்காகவும்.,தங்குவதற்காகவும் வரும் விலங்குகளின் எண்ணிக்கை ஏராளம்.புலி ,காட்டுப்பன்றி, கரடி, மரநாய்,புனுகுபூனை,குரங்கு, பருந்து,கொக்கு, வெளவால், மரம் கொத்தி,அரனைகள்,சிலத்திகள், பூச்சிகள் ஆகும்
ஆபத்தை விளைவிக்க கூடிய விலங்குகளும் அன பாம்பு,முதலை,புலி,சிங்கம்,சிறுத்தை,சிம்மம்,முதலியவையும் உண்டு வாழ்கின்றன. எண்ணற்ற விலங்குகள் மான், கோழை ஆடு போன்றவை மனிதனுக்கு தீங்க்கு விளைவிக்க தக்கவை மேலும் உணவாக பயன் படுத்தப்ப்டுகிறது.
தாவரம் நுண் உயிர், மெல்லுடலிகள்,சிறு சந்துக்கள், பூச்சிகள், பறவைகளும்,ஊர்வன,மிருகங்கள் ஆகியவைகள் தாவரங்களையும், சிறு உயிர் இனங்களையும் உண்டு வாழ்வியல் நடந்து கின்றன.விலங்கு இனத்தில் இருந்து கிடைக்கும் புரோட்டின் பெரும்பகுதி மனிதனுக்கு கிடைக்கிறது.முட்டை,பால், இறச்சி ஆகியவற்றில் இவ் புரோட்டின் சக்தி மிகவும் கூடுதலாக உள்ளது.ஆகவே தாவரம்,விலங்கு-மனித சமுதாயம் ஒன்றுடன் ஒன்று சார்பு வாழ்க்கை நடந்தி வருகிறது.
தாவரங்களின் பூங்கள், இலைகள்,காய்,கனி,மற்றும் இதரப்பொருள்கள் மனிதன் உடல்வளர்ச்சிக்கு இன்றியமையாததாகவும் உள்ளது.நாம் அன்றாட உணவில் தெரிந்தோ தெரியாமலோ நமக்கு தேவையான சக்திகள் அவ் தாவர , விலங்க்குகளில் இருந்து பொறுகிறோம்.
இயற்கை-தாவரம்-விலங்கு-மனிதன் ஆகியவைகளின் வாழ்வியல் பெரும் பங்கு கொள்வது இடமும்,காலமும்தான், காலநிலையின் தட்ப வெப்ப நிலையும்-பருவகால சுழற்சியும்,வான்வெளி இயற்க்கை யும் தான் நிர்நிற்கப்படுகிறது.இவர்களது வாழ்வு மலர இயற்க்கை சாதகமான சுழ்நிலை இருந்தால் மட்டுமே சாத்தியம்.ஒளி,காற்று,நீர், நில வலிமை மற்றும் உயிர்சக்தியாக வளங்குகிறது. ஆனால் இயற்க்கையின் சீற்றத்தாலும், மனித இனபெருக்கத்தாலும் இயற்கை சூறையாடப்படுகிறது.
இயற்கையொடு பொருத்தி வாழும் மக்களின் உணர்ச்சிகளிலும்-இன்பதுன்பங்களிலும் இயற்கை பங்கு கொண்டதாக புலவர்கள் பாடியது கற்பனை களஞ்சியம் ஆகும். சங்ககாலத்து புள்நிமித்தம் பார்த்தல்,விரிச்சிகேட்டல்-விருந்து வர காகம் கரைதல்,முதலியவைகளும், இடைக்காலத்து மஞ்சு விடும் தூது,கிள்ளை விடுதூது முதலியனவும் இதற்கு எடுத்து க்காட்டு,இயற்கை நிகழ்சிகள் சிறப்பாக்குகின்றன.
மட்கள் வாழ்க்கையில் நேர்விக்கும் துன்ப நிகழ்ச்சிகளை முன் கூடியே அறிவுத்தது இயற்க்கை. சிலம்பு விற்க்க சென்ற கோவன் கொலையுண்ணப்போகிறான் என்ற துன்ப செய்தியை ஆயர்பாடியில் இயல்பாக நிகழும் நிகழ்ச்சிகள் மாறாக திரிந்து அறிவித்தன. குடத்தில்ல் பால் தோயவில்லை,எருதுகளின் கண்கள் காரணமின்றி கண்ணீர் விட்டன.,உருகவைத்த வெண்ணை உருகவில்லை,கன்றும் குட்டிகளும் காலையில் துள்ளி விளையாடவில்லை.,பசுக்கள் நடுங்கின,அவிப்பாரின்றி அவற்றின் கழுத்து மணி கழன்று விழுத்தன.
என ஆயர்படி மக்கள் தெரிவிக்கின்றன.
உண்மையை உணராத சான்றோரில்லை; உணராத புலவர் இல்லை.இயற்கையின் எழில் தோற்றங்கள் மக்களுக்கு பெரும் விருந்தளிப்பவை.
செக்கசிவக்கும் செவ்வாணம், கதிரவன் காலைத்தோற்றம்,தன்மதியின் வெண்ணிலவு,வண்ண வண்ண மலர்கள்,பன்னிறப்பறவைகள்,பச்சைப்பாய் விரிந்தார் போன்ற புல் வெளிகள்,நெல்வயல்கள்,தோகை விரித்தாடும் மயில்கள்போன்ற இயற்கை காட்சிகள் கண்களூக்கு விருந்தாகும்.
பாடும் குயிலின் பண் ஒசை,மது வண்டின் மதுர கீதம்,அலைகடலோசை,அருவி,ஆறுகளின் இன்னோசை முதலிய இயற்கையான ஒலிகள் செவிக்கினிய செல்வங்கள்.
நறுமலர்களின் நறுமணம்,மா,பலா,வாழைக் கனிகளின் மாறா நன் மனம் முதலியவை முகர்வுக்கு நல் விருந்தாகும்.
முக்கனிகளின் தீஞ்சுவையும்,மற்றைய கனிகளின் தீஞ்சுவையும் வாயுணர்வுக்குப்பெரும் விருந்தாகும்.
வண்ணமலர்கள்,பஞ்சவர்ணப் பைக்கிளிகள்,பஞ்சு போன்ற பறவைக்குஞ்சுகள்,வெண்மதியின் தண்ணொளி,தென்றலின் தீண்டல், ஆகியவை மெய்க்கின்பம் பயப்பனவாம்.இவ்வாறு ஜம்புலனுக்கும் விருந்தாய் அமையும் இயற்கைதரும் இன்பம் என்ன என்பது ?.
முற்றும் துறந்த முனிவர்களும்,தமது பற்றற்ற வாழ்க்கையினை நடந்த்த தேர்ந்தெடுக்கும் இடமும்-இயற்கையன்னை -பூத்துக்குலுக்கும் கானகமேயன்றோ ! எனவே பால்,இன,பருவ வேறுபாடுயின்றி மக்கள் அனைவரும் ஈடில்லா இன்பமளிப்பது இயற்கையேயாகும்.
பண்டைக் கால மக்கள் முதன் முதலாக் ஐம்பெரும் பூதங்களாய மண்,தீ,நீர்,காற்று,ஆகாயம் முதய பொருள்களையே தெய்வங்களாக வணங்கினர்..தெய்வவழிபாடே முதன் முதலில் இம் மூலப் பொருள்களிடமிருந்து மக்கள் கொண்ட அச்சத்திற் பிறந்ததெனக் கூறுவர் ஆராச்சியாளர்கள்.இன்னும் ஐம் பூதங்க்களுக்குரிய ஐந்து சிவ தலங்கள் இருக்கப்பார்கலாம்.மண்ணுக்கு- காஞ்சியும்., தீயினுக்கு-
திருவண்ணமலையும் .,நீருக்கு -திருவானைக்காவும்.,- காற்றுக்கு -காளத்திரியும்., ஆகாயத்திற்கு-தில்லையும் அமையும்.இவ் ஐம் பூதங்க்களுக்கு அப்பாற்பட்ட பொருள் ஒன்றும் இல்லை. இறைவன் எங்கும் நிறைந்து இருக்கும் நிலையினையே இது குறிப்பதைப் காணலாம்.
மேலும் நிலந்தை குறிஞ்சி-முல்லை- மருதம்-நெய்தல்-பாலை என் ஐந்தாகப்பரிந்தனர்.இதில் மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சியெனவும்., காடும்-காடு சார்ந்த இடம் முல்லை எனவும்., சமவெளிபிரதேசம் மருதம் எனவும்., கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் எனவும் விளையாத பகுதி பாலை என கணக்கிட்டனர்.மேலும் முல்லை,மருதம்,நெய்தல் பகுதி திரிந்து சதுப்பு வனப் பகுதியாக ஆறாவது பிரிவாக பின் பிரிக்கப்பட்டது.மலைக் கிழவோனாகிய முருகன் குறிஞ்சிக்கு தெய்வம் ஆனான்.பச்சைமா மேனிகொண்ட திருமால் முல்லைக்கு தெய்வம் ஆனான்ன.மழையினை நம்பி வாழும் வயல் நிலமான மருததற்கு மழைமேகங்களின் தலைவனான இந்திரன் இறைவனானன். கடலும் கடல் சார்ந்த இடமான நெய்தலுக்கு வருணன் தெய்வமானார்.அறவடிவாகிய அம்பிகையின் மறவடிவான காளியென்னும் கொற்றவை பாலைக்குத் தெய்வமானார். பிறவா வாழ்க்கைக்குப் பெரியோனாகிய சிவபெருமான் யாதும் ஊரே எனக் கொண்டு நாடெங்கும் மக்களால் வழிபடப்பெறும் தெய்வமானார்.
வானளாவிய மரங்கள், வான்நின்றும் ஒடி வரும் தேனருவி.இன்னிசைப்பாடும் பன்னிறப் பறவைகள், கூட்டங்கூட்டமாய் குரங்குகள்,வண்டுகள் மொய்க்கும் வண்ணமலர்கள், வானளாவிய வளர்ந்த வேங்க்கை மரங்களின் கிளைகள் சொறிந்த சோலையின் எழில் , வேங்கை மரத்துக் கிளைகள் மீது ஒருபுறம் செண்பகக்கொடியேறிப் பூத்து குலுங்குகின்றது.,மற்றொரு புறத்தில் தோட்டத்து முல்லைக் கொடியின் வெள் அரும்பு காணப்படும்.பச்சைபசேரன வேங்கையின் நுடே பசுமை நிற செண்பகமும்,வெள்ளை நிற முல்லையும் மாறி மாறித் தோன்றும் வர்ணசாலந்தான் என்ன?. விளைந்த வாழைக்கனியோடு பலாவின் நறுமனமும் எங்க்கும் வியபித்தி இருக்கிறது. உயர்ந்த மரத்தின் மேல் இருந்து தேன் சொட்டுகிறது. அவ் தேன் ஆனது மாம் மரத்தின் கொம்பில் உள்ள மாங்கனிமீது விழுத்து நறுமனம் கமழ்கிறது.தண்ணீரில் தோன்றும் மலர்களுக்கு குறைவில்லை.சுனை அருகே அந்த நீல நீறத்திற்கு ஏற்ப மயில் தோகை விரிந்தாடும் குரமரத்தின் பாம்புப்பாற்களைப்போன்று உரிய வெண்ணிற அரும்புகள் பார்பதற்கு குரவ மரமாகிய பெண்,தன் சிறிய வெண்பற்களைக் காட்டி அழகுறஸ் சிறிப்பது போன்று காட்சியளிக்கும்.வெண்ணிற அன்னம்,பைம்கிளி மயில் ஆகியவை யின் அழகுதான் என்னென்பது.
இயற்கையோடு அமைந்த விலங்கினம் :-
சிறப்பினம் எனப்படுவது ஒத்த உடலாக்கமும்,வாழ்முறையும்,இனப்பெருக்கில் பங்கு பெறும் உயிரினங்களைப் பொதுவாக ஒன்று சேர்த்து ஒரு சிறப்பினம் என்று அழைக்கப்படுகிறது.இதில் நுண் உயிர்களூம் அடங்கும்.
தாவர சிறப்பினங்கினால் அளிக்கப்படும் மரக்கட்டை,பக்கவேர் ஆகியவை அடிநிலத்தில் வாழ்கின்ற நுண் உயிர்கள் சதுப்பு வன விலங்கினமும் பெரும்பகுதி மேல் வாழ்விகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இவை பெரும் பகுதி மட்குண்ணிக்கள். ஆனால் உள் வாழ்விகள் பெரும் பாலும் அனைந்துண்ணிகல் அல்லது படிவுண்ணிகள்
சதுப்புவனக் கரிம பொருள்களை மட்டும் பொருளாக மாற்றுவதில் பொரும் பங்கு கொள்ளூம் நுண்ணுயர், உருளைபுழுக்களும்,கோடிபாடுகளூம், மண்ணில் காணப்படும் பூஞ்சைகளும்,பாக்டீரியாக்களூம் பெரிய விலங்குக்கு அடிப்படையான உணவுப்பொருளாக அமைகின்றன.சேற்றில் உள்ள நீரிலிருந்து உயிரிணங்களை வடிகட்டி உண்டு வாழ்கின்ற பெரும் விலங்கான புல்சுனைப் புழுக்கள், பட்டானிப்புழுக்கள், இருஒடுடலி முதலியனவைகள் ஆகும்.
தாழ்வான இடக்களில் காணப்படும் நீர்த்தாரைகள் எப்போதும் ஈரமான சுற்றுச்சுழலில் காணப்படுவதாலும், சேறு நீர் நிரம்பியிருப்பதாலும் இப்பகுதியில் அளவில் பெரிய நத்தைகளும், அளவில் சிறிய சிவப்பு நிற நத்தை, நண்டுகள், இருஒடுடலியாக்களும் தாவர மிதவை உணவுகளை உண்டு வாழ்கின்றன. மட்கும் பொருட்களை உண்டு வாழும் வாளை மீன்,செம்மீன்கள் ஆகும்.பெரிய மீன்கள் நத்தைகளையும் ,நண்டுகளையும் உணவாக உட்கொள்கின்றன.மேலும் விலங்கு மிதவிகளும் பாசிகளும் தாவர மிதவைகளும் உணவாக உட்கொள்கின்றன.
மாமரத்தின் மலர்களை நாடி வரும் வான் கூரைப் பறவைகள் வெளவால்கள்,குரங்குகள் மற்றும் பூச்சிகள் அவ் மரங்களை இல்லமாக வைத்துக் கொள்கிறது.கழுகுகளும்,கருடங்களும் இங்கு கூடுகட்டுகின்றன.பறக்கும் நரி எனப்படும் வவ்வாள் இங்கு இனப்பெருக்கம் செய்து வாழ்கின்றன.இவைகள் மரங்களில் உள்ள இலைகளையும்,பூக்களையும்,காய், கனிகளையும் உணவாக உண்டு வாழ்கின்றன.. பல வை வண்டுகளும், எறும்புகளும் தாவரங்களின் இலைகளை மென்று தின்கின்றன.. மின்,மினிப்பூச்சிகளும் இத்தாவரத்தை நம்பி வாழ்கின்றன.
இப் பகுதியில் உணவுக்காகவும்.,தங்குவதற்காகவும் வரும் விலங்குகளின் எண்ணிக்கை ஏராளம்.புலி ,காட்டுப்பன்றி, கரடி, மரநாய்,புனுகுபூனை,குரங்கு, பருந்து,கொக்கு, வெளவால், மரம் கொத்தி,அரனைகள்,சிலத்திகள், பூச்சிகள் ஆகும்
ஆபத்தை விளைவிக்க கூடிய விலங்குகளும் அன பாம்பு,முதலை,புலி,சிங்கம்,சிறுத்தை,சிம்மம்,முதலியவையும் உண்டு வாழ்கின்றன. எண்ணற்ற விலங்குகள் மான், கோழை ஆடு போன்றவை மனிதனுக்கு தீங்க்கு விளைவிக்க தக்கவை மேலும் உணவாக பயன் படுத்தப்ப்டுகிறது.
தாவரம் நுண் உயிர், மெல்லுடலிகள்,சிறு சந்துக்கள், பூச்சிகள், பறவைகளும்,ஊர்வன,மிருகங்கள் ஆகியவைகள் தாவரங்களையும், சிறு உயிர் இனங்களையும் உண்டு வாழ்வியல் நடந்து கின்றன.விலங்கு இனத்தில் இருந்து கிடைக்கும் புரோட்டின் பெரும்பகுதி மனிதனுக்கு கிடைக்கிறது.முட்டை,பால், இறச்சி ஆகியவற்றில் இவ் புரோட்டின் சக்தி மிகவும் கூடுதலாக உள்ளது.ஆகவே தாவரம்,விலங்கு-மனித சமுதாயம் ஒன்றுடன் ஒன்று சார்பு வாழ்க்கை நடந்தி வருகிறது.
தாவரங்களின் பூங்கள், இலைகள்,காய்,கனி,மற்றும் இதரப்பொருள்கள் மனிதன் உடல்வளர்ச்சிக்கு இன்றியமையாததாகவும் உள்ளது.நாம் அன்றாட உணவில் தெரிந்தோ தெரியாமலோ நமக்கு தேவையான சக்திகள் அவ் தாவர , விலங்க்குகளில் இருந்து பொறுகிறோம்.
இயற்கை-தாவரம்-விலங்கு-மனிதன் ஆகியவைகளின் வாழ்வியல் பெரும் பங்கு கொள்வது இடமும்,காலமும்தான், காலநிலையின் தட்ப வெப்ப நிலையும்-பருவகால சுழற்சியும்,வான்வெளி இயற்க்கை யும் தான் நிர்நிற்கப்படுகிறது.இவர்களது வாழ்வு மலர இயற்க்கை சாதகமான சுழ்நிலை இருந்தால் மட்டுமே சாத்தியம்.ஒளி,காற்று,நீர், நில வலிமை மற்றும் உயிர்சக்தியாக வளங்குகிறது. ஆனால் இயற்க்கையின் சீற்றத்தாலும், மனித இனபெருக்கத்தாலும் இயற்கை சூறையாடப்படுகிறது.
இயற்கையொடு பொருத்தி வாழும் மக்களின் உணர்ச்சிகளிலும்-இன்பதுன்பங்களிலும் இயற்கை பங்கு கொண்டதாக புலவர்கள் பாடியது கற்பனை களஞ்சியம் ஆகும். சங்ககாலத்து புள்நிமித்தம் பார்த்தல்,விரிச்சிகேட்டல்-விருந்து வர காகம் கரைதல்,முதலியவைகளும், இடைக்காலத்து மஞ்சு விடும் தூது,கிள்ளை விடுதூது முதலியனவும் இதற்கு எடுத்து க்காட்டு,இயற்கை நிகழ்சிகள் சிறப்பாக்குகின்றன.
மட்கள் வாழ்க்கையில் நேர்விக்கும் துன்ப நிகழ்ச்சிகளை முன் கூடியே அறிவுத்தது இயற்க்கை. சிலம்பு விற்க்க சென்ற கோவன் கொலையுண்ணப்போகிறான் என்ற துன்ப செய்தியை ஆயர்பாடியில் இயல்பாக நிகழும் நிகழ்ச்சிகள் மாறாக திரிந்து அறிவித்தன. குடத்தில்ல் பால் தோயவில்லை,எருதுகளின் கண்கள் காரணமின்றி கண்ணீர் விட்டன.,உருகவைத்த வெண்ணை உருகவில்லை,கன்றும் குட்டிகளும் காலையில் துள்ளி விளையாடவில்லை.,பசுக்கள் நடுங்கின,அவிப்பாரின்றி அவற்றின் கழுத்து மணி கழன்று விழுத்தன.
என ஆயர்படி மக்கள் தெரிவிக்கின்றன.