செந்துருவை சேரலாம் செந்தழிழ்லை பாடலாம்
இந்திரனைப் போல் வாழந்துண்டு இருக்கலாம்,
மந்திரம்சேர் வெற்பகத்தையூடுஅருத்தவேலவர்க்கு

முன்பிறந்த கற்பகத்தை கை தொழுதார் கால்

ஐம்புலன்களை இயக்குவது எப்படி ?

ஐம்புலன்கள் : கண் ,காது ,மூக்கு ,வாய் ,மெய்-பார்வை ,கேட்பது ,முகர்வது ,சுவை ,உணர்வது என்பதாகும் .ஆன்மாவின் படர்க்கை நிலையே மனம் .மனம் தான் ஐம்புலன்களை ஆள்கிறது .மனம் எல்லாவிதமான நிலையையும் ,நிகழ்ச்ளிகளையும் பதிவு செய்கிறது .பொதுவாக மனதின் மூலமாக தான்  செயல் படுகிறோம் .இதையே இந்த உலகம் விரும்புகிறது .சிறுவயதில் இருந்தே  மனனம் , மனப்பாடம் ,மனோசக்தி ,நினைவு கூறுதல் ,பகுத்து ஆரயிதல் , இருந்தாலும் இவை  அனைத்தையும்  மறதி அழித்து விடுகிறது .சுத்தமாக எதுவும் நினைவில் இல்லை என்பதே பதில்.என்னெனில்  இவை யாவும்  மேல் மன ஆற்றலாக  செயல் பட்டதே  இதற்க்கு காரணம் . ஆனால் ஆழ்மனதில் செயல்பாடுகள் யாவும் நினைவில் நிற்கும் என்பது தொன்றுதொட்டு வரும் செயலாகும்  அதுவே பசுமரத்து ஆணிபோல் என்பதாகும் .ஆழ்மனதில் பதிந்தவை யாவும்  திரும்ப நினைவு கூறும்போது ஒவ்வொரு நிகழ்ச்சியும் அடி பிறளாது அப்படியே  மனதில் காட்சி யளிக்கும் .உதாரணத்துக்கு சிறுவயதில் நீச்சல் அடிக்க நண்பர்களோடு கிணறுக்கு  சென்று இருந்தால் அது ஆழ்மனதில் பதிந்து இருந்தால் அப்படியே அந்த இடம் நிகழ்வுகள் அனைத்தும் நினைவில் வரும்  என்பதும்  உண்மையே .
இதுவே நனவில் நனவு : ஆர்வத்தோடு ஒரு காரியத்தில் ஈடுபடுகின்றபோது புலன்கள் அனைத்தும்  ஒருமுகபடுத்தபட்டு ஈடுபடுவதால் நனவில் நனவு எனப்படும் ,அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட காரியத்தில் மட்டும் கண்ணும் கருத்துமாய் இருப்பது நனவில் நனவு . சோதனை சாலையில் விஞ்ஞானிகள் ஆய்ந்து உண்மைகளை கண்டறிய  மனதை முழுவதும் ஈடுபடுவதாகும் .
இதில் மனம் முழு வீச்சில் நடைபெறுகிறது . 
இதில் கலெக்டர் -நீதிபதி போலீஸ் ஆபீசர் -விஞ்ஞானிகள் - டீச்சர் - என அவர்கள் அவர்கள்  தொழிலுக்கு தக்கவாறு  அதாகவே  மாறிவிடுகின்றனர் .இதற்கு மனமே  மூல காரணம் .
பொதுவாக இயக்குபவன் (ஆன்மா) - இயன்குகிறவன்-( மனம் )- பார்க்கப்படும் பொருள்   என மூன்று நிலை உள்ளது . இதில் மனமும்  பொருளும் மட்டும்  சம்பதபடுகிறது  . ஆன்மாவான  இயக்குபவன்  இதில் சம்மந்தம் இல்லை . 
உதரணத்துக்கு : ஒரு நீதிபதி ஒரு நாளில் பெரும்பகுதி நீதி வழங்குவதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார் .மனம் முளுவதும் தொழில் சம்பதமகவே இருக்கிறது . வீட்டுக்கு  வந்தும் இரவில் படுக்கும் போதும் நிதிபதியகவே இருந்தால் குடும்பம்  எப்படி நடக்கும் . தொழிலை  விட்டு மாற மனம் இடம் கொடுக்காமையே இதற்கு காரணம் .குடும்பம் வேறு, தொழில் வேறு என பாகுபாடு  தெரியாமையே இதற்கு காரணம் .முழுவதும் மனம் சம்மதம் மட்டுமே இதற்க்கு காரணம் . ஆன்மாவை (இயங்குபவனை ) முழுவதும் மறந்ததே இதற்கு காரணம் .