செந்துருவை சேரலாம் செந்தழிழ்லை பாடலாம்
இந்திரனைப் போல் வாழந்துண்டு இருக்கலாம்,
மந்திரம்சேர் வெற்பகத்தையூடுஅருத்தவேலவர்க்கு

முன்பிறந்த கற்பகத்தை கை தொழுதார் கால்

ஆன்மாவின் பாடல்:-


நான் அகங்காரமும் இல்லை,பகுத்தறிவும் இல்லை
நான் மனமும் இல்லை
என்னை காதால் கேட்கவோ,சொற்களால் உருவாக்கவோ
நுகரவோ,காணவோ முடியாது
ஓளியிலும்,காற்றிலும் நான் காணப்படுவதில்லை
மண்ணிலும்,விண்ணிலும் காணப்படுபதில்லை
உண்ர்வுனிலையும் களிப்புமாக உருவெடுத்து
பேரான்ந்தமும் பேராந்த நிறைவுமாய் நான் உள்ளேன்
எனக்கு ஒரு பெயருமில்லை,வாழ்க்கையுமில்லை
உயிர்காற்றை நான் சுவாசிப்பதில்லை
மூலகங்கள் எதுவும் என்னை உருவாக்கவில்லை
எனது இருப்பிடம் உடல் எனும் உறை இல்லை
எனக்கு பேச்சில்லை,கைகளும்,கால்களும் இல்லை
பரிணாம வழிகளும் இல்லை
உணர்வுநிலையும்  களிப்புமாக நான் இருக்கிறேன்
கரைதலில் பேரானந்தமாக இருக்கிறேன்
நான் வெறுப்பையும் காமத்தையும் விலக்கிவைக்கிறேன்
நான் மாயையும் பேராசையும்வெற்றி கொண்டுள்ளேன்
கர்வத்தின் கரம் என்னைத் தீண்டுவதில்லை,எனவே
பொறாமையும் என்னுள் வளர்வதில்லை
எல்லாநம்பிக்கைகளுக்கும் அப்பால் செல்வத்தின்
எல்லையை கடந்து விடுதலையைக் கடந்து ஆசையைக்கடந்து
உணர்வுநிலையும் களிப்புமாக நான் இருக்கிறேன்
பேரானந்தமே எனது ஆடை
நன்மையோ தீமையோ அல்லது இன்பமோதுன்பமோ
எனது பாரம்பரியம் அல்ல
புனிதநூல்களோ,அர்ப்பணங்களோ பிராத்தனையோ
புனிதப்பயணமோ அல்ல
நான் உணவுமல்ல,உண்ணுதலுமல்ல,இன்னும் ,உண்ணுபவனும் அல்ல
உணர்வு நிலையும் களிப்புமாக உருவெடுத்து
பேரானந்தமும் பேரானந்த நிறைவுமாய் நான் உள்ளேன்
எனக்கு மரணத்தைப்பற்றிய கவலை இல்லை
மனித இனங்கள் என்னைப் பிரிப்பதில்லை
பெற்றோர் என்னைப் பிள்ளையென அழைத்ததில்லை
பிறப்பின் தளை என்னை பிணித்ததில்லை
நான் சீடனுமல்ல, குருவுமல்ல எனக்கு உறவினரில்லை,நண்பர்களில்லை
உணர்வுநிலையும்  களிப்புமாக நான் இருக்கிறேன்.
போரானந்தத்தில் கலப்பது எனது முடிவு
அறியப்படுவதும்,அறிவும்,அறிபவனும்  நானில்லை
உருவமற்றதுதான் எனது உருவம்
நான் புலங்களுக்குள் வாழ்கிறேன்,ஆனால்
அவை எனது இல்லமல்ல
எப்போதும் சாந்தமான சமனிலையுடன், நான் விடுபட்டும் இல்லை,கட்டுண்டும் இல்லை
உணர்வு நிலையும் களிப்புமாக நான் இருக்கிறேன்
பேரான்ந்தத்திலே என்னைக் காணலாம்.