செந்துருவை சேரலாம் செந்தழிழ்லை பாடலாம்
இந்திரனைப் போல் வாழந்துண்டு இருக்கலாம்,
மந்திரம்சேர் வெற்பகத்தையூடுஅருத்தவேலவர்க்கு

முன்பிறந்த கற்பகத்தை கை தொழுதார் கால்

கனவில் கனவு


காணுகின்ற கனவை விழித்தபின் கூற முடியாதிருந்தல்.எங்கோ போகிற மாதிரி இருந்தது,யாரோ என்னவோ சொன்ன மாதிரி இருத்தது என்று முழுமையாக கூற இயலாவிட்டால் நாம் இருந்த நிலை கனவில் கனவு.
கனவுல் சுகப்தி
 : கானுகின்ற கனவை முற்றிலும் மறந்து கனவே காணவில்லை என்று கூறுவது.அனேகர் கனவே கான்பதில்லை என்பார்கள் கனவற்ற உறக்கம் இதன் காரணம் இல்லை கனவை கவனிக்க இயலாமைதான் காரணமாகும்.இதுதான் கனவில் சுகப்தி.

கனவில் துரியம்
 : கனவு காணுகின்ற போதே இது உண்மையாக நடப்பது இல்லை நாம் கனவு காணுகின்றோம் என்பதை உணர்ந்து கொள்ள இயலுமானால் அது கனவில் துரியம்.
சுகப்தியில் நனவு :
கனவற்ற ஆழ்ந்த உறக்கத்தின் சுகத்தை விழித்த பின்பு ஆஹா சுகமான தூக்கம்  என்று கூறுவதாகும் இந்த உறக்கமே உண்மையான ஒய்வு இதில் இடையூறு ஏற்படுகின்றபோது பகலில் மிகவும் களைப்பய் இருக்கும்.
சுகப்தியில் கனவு:
 கனவற்ற உறக்கத்தின் இடையிடையே தடை உண்டாதல் சுகப்தியை முழுமையாக அனுபவிக்க இயலாத தன்மைக்குப் பெயர் சுகப்தியில் கனவு.
சுகப்தியில் சுகப்தி
: கனவற்ற உறக்கத்தின் சுகானுபவத்தை உடலின் களைப்பினால் முற்றிலு உணராது உறங்கி விழித்தபின்னும் அறியதிருந்தல்.உடல் உழைப்பினால் ஈடுபடும் அத்தனை தொழிலாளர்களும் இந்த சுகமான தூக்கத்தின் தன்மையை உணராது தூங்கி விழித்தபின் மீண்டும் பணியில் ஈடுபடுவார்கள்.
சுகப்ப்தியில் துரியம்;
கனவற்ற உறக்கத்தின் சுகானுபவத்தை உறங்குகின்றபோதே உணர்ந்து அனுபவித்தல்.
துரியத்தில் நனவு;
தவத்தில் ஈடுப்டுகின்ற போது அந்த சுகானுபவத்தை மனது கொண்டு நோக்காது உணர்வில் லயித்திருத்தல்.
துரியத்தில் கனவு;
தவத்தில் ஈடுபடுகின்றபோது இடையிடையே மனம் செயல்பட்டுத்துரிய சுகத்தை பூரணமாக அனுபவிக்காத நிலை.
துரியத்தில் சுகப்தி;
தவத்தில் ஈடுபடுகின்றபோது கிட்டும் சுகானுபவத்தை போதிய அனுபவமின்மை காரனமாக உணராதிருத்தல்
துரியத்தில் துரியம்
தவத்தின் முதிற்சியாம் துரியத்தில் துரியமும் துரியாதீதமூம் ஒன்றே.நாம் எவ்வளவு சுற்றிருந்தாலும் இந்த அனுபவத்தை அறிந்த மொழியின் சொற்கொண்டு விளக்கிடமுடியாது அனுபவிக்க மட்டுமே முடியும்.. ஆகவேதாண் திருமூலர் சொல்லவெண்ணாதே என்கிறார். அதாவது விளக்கிக் கூர இயலாத ஒன்று என்கிறார்.