அவத்தைகளை பற்றியும் அவற்றோடு மனதின் இயல்பாடுகள்
பற்றி கண்டறிவோம்.
பற்றி கண்டறிவோம்.
அவஸ்தை என்கிற வடமொழி சொல்லே தமிழ் ஆக்கப்பட்டு அவத்தை என்று அழைக்க படுகிறது ..இச் சொல்லின் நேர் பொருள் உணர்வின் பரிமானங்கால் எனலாம்.இவ் உணர்வு நிலைகளை மூன்று விதமாக பிரிக்கலாம்.
வ்ழித்திருதல் ,கனவோடு கூடிய உறக்கம் ,கனவற்ற ஆழ்ந்த உறக்கம், என்பது நமக்கு தெரிந்த ஒன்று .
இதை பதஞ்சலி முனிவர் ஐந்து ஆக பிரிக்கிறார்
- விழித்திருதால் -ஜாக்ரதா
- கனவோடு கூடிய உறக்கம்-ஸ்வெப்னா
- கனவற்ற ஆழ்ந்த உறக்கம் -சுகப்தி
- தவநிலை -துரியம்
- தவத்தின் உயர்ந்த நிலை -துரியாதீதம்
- திருமந்திரம் அருளிய திருமூலர் இந்த ஐந்து நிலைகளை மேலும் நுன்னிலை படுத்தி பதினாறு படிகளாக விளக்குகிறார்.முதல் நான்கு உணவுகளில் ஓர் உணர்வின் நிலையிலிருந்து அடுத்த படிக்கு செல்லுகின்றபோது இடையில் ஒன்றுடன் ஒன்று கலந்து நிற்பதால் இந்த நுண்ணிய உணர்வு நிலைகள் தோன்றுகின்றன
- நனவில் நனவு
- நனவில் கனவு
- நனவில் சுகப்தி
- நனவில் துரியம்
விழித்து இருந்து ஆர்வத்தோடு ஒரு காரியத்தில் இடுபடுகின்றபோது புலன்கள் அனைத்தும் ஒரு முகபடுத்தபட்டு ஈடுபடுபதால்
அருகில் என்ன நடந்தாலும் தெரியாது.முழு கவவத்தொடு ஈடுபடல் நனவில் நனவு எனப்படும் .
உதாரணம் : சோதனை சாலையில் ஆயிநது உண்மைகளை கண்டறிய விஞ்ஞானிகள் முற்படுகின்ற போதும் ,தொலைகாட்சி தொடரில் முழ்கி வீட்டில் கண் எதிரே திருடன் திருடுவதை அறிய இயலாதிருக்கும் நிலை
அதாவது தேர்ந்துடுத்த காரியத்தில் மட்டும் கண்ணும் கருத்துமாய் இருப்பது நனவில் நனவு .
நனவில் கனவு :-
ஒரு செயலில் ஈடுபடுகின்ற போது தன்கவனத்தை விட்டு இடை இடையே மற்ற காரியத்தில் மனம் செல்லல்
உதாரணம் :- பள்ளியில் படிக்கும்போது ஆசிரியர் கூறுவதை இடையிடையே கவனிப்பது போன்றது.
நனவில் சுகப்தி :
செய்ய வேண்டிய காரியத்தில் மனதை முழுதாக ஈடுபடுத்தாமல் முற்றிலும் புற நிகழ்ச்சியில் மனம் நாட்டம் கொள்ளுதல் .
உதாரணம் ; ஆசிரியர் பாடம் நடத்தும் போது அதை கவனிக்காமல் எங்கோ ஒலிக்கும் பாட்டை கேட்டு கொண்டு இருத்தல் . என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யமால் முற்றிலும் வேறு ஒரு காரியத்தில் மனதை ஈடுபடசெய்தல்
நனவில் துரியம் :-
விழித்திருந்து நாம் தியானத்தில் ஈடுபடுகின்ற போது உண்டாகும் போது உண்டாகும் ஓர் அற்புதமான சுக அனுபவம் இதையே திருமூலர்
"துரியம் இருப்பது சாக்கிரத்துள்ளே நரிகள் பதினான்கும் நஞ்சுண்டு செத்தன.பாரிய புரவியும் பாரிபறத்தது.துரியம் இறந்திட செல்ல ஒண்ணாதே"
அதாவது மெய் வாய் கண் ,மூக்கு,செவி ஆகிய ஐந்தும் சுவை ,ஒளி,ஊறு,ஓசை ,நார்ற்றம், என்ற ஐந்தும் மனம் புத்தி ,சித்தம் ,அகங்காரம் என்ற அந்த கரணங்கள் நான்கும ஆக மொத்தம் பதினான்கு தத்துவங்களும் செயல்படாமல் போகும் .
ஒரு விநாடி நாம் கரைந்து விட்டதோர் அனுபவத்தோடு தன்முனைப்பு மட்டும் தனித்து நிற்கும் .அவ்வேளையில் மூச்சும் ஓடிக்கிவிடும .(பயப்படதிர்கள் இவ் வேளையில் செத்து போயி விட மாட்டம் .கண்களை மூடுகின்ற போது தெரியும் காரிருள் மாறி மயில் கழுத்தின் நிறத்தை போன்ற நிறத்தை தோற்டுவிக்கும்.இந்த அழகு மிக்க நிறத்தில் மயங்கிய பதினான்கு தத்துவங்களும் செயல் படாமல் போவதை நஞ்சுண்டு இறந்துபோயிவிட்டது என்று நகைசுவை யாக koorukiraar
- கனவில் நனவு
- கனவில் கனவு
- கனவில் சுகப்தி
- கனவில் துரியம்
கனவில் நனவு :உறங்குகின்ற போது காணும் கனவை நன்கு கவனித்து விழித்த பிறகு முழு கனவையும் விடாது கூற முடிந்தால் நாம் உறக்கத்தில் இருந்த நிலைக்கு பெயர் தான் கனவில் நனவு