உடம்பும் இடைவிடாமால் மாறுதல் அடைந்து கொண்டுயிருக்கிறது.மனமும் இடைவிடாமல் மாறுதல் அடைந்து கொண்டுயிருக்கிறது.எனினும் நாம் மாறாமல் தொடர்ந்து இருக்கிறோம் என்ற உணர்சி நம்மிடம் இருக்கிறது. மாறாத ஒரு பெருள் நம்முள் இருந்து கொண்டு அந்த உணர்சியைக் கொடுக்கிறது.ஒளியின் கிரணங்கள் பல திசைகளிலிருந்து வந்து ஒரு திரை அல்லது சுவர் அல்லது மாறாத வேறு ஒரு பொருளின் மீது விழும்போது மட்டுமே அவை ஒன்று சேர்ந்து ஒர் உருவத்தை உண்டாக்க முடியும்.,மனிதனிடம் கானும் இந்த மாறுதல்களுக்கிடையில் இவற்றை ஒன்று சேர்பது எது?.அந்த நிலையான பொருள் மனமாக இருக்க முடியாது. ஏனனில் அதுவும் மாறுதல் அடைந்து கொண்டே இருப்பதை நாம் பார்கிறோம்.உடலும் நிமிடந்துக்கு நிமிடம் மாறுதல் அடைகிறது. ஆதலால் உடலையும் மனதையும் தவிற வேறு எதோ ஒன்று என்றும் மாறததாக நித்தியானந்தமாக, இந்த உணர்சிகளை ஒற்றுமைப் படுத்திகொண்டுயிருக்க வேண்டும். அதைதான் மனிதனின் ஆன்மா என்று சொல்கிறோம்.
ஆன்மா -ஜீவன் பிறக்கும் முன் எங்கு இருந்தது