நாம் எங்கு இருக்கிறோம்
வருத்தம்,வேதனை,கண்ணிர், கவலை, வெறுப்பு, விரோதம்,குரோதம் எல்லாம் மனம் முழுக்க நிறைந்து இருக்கிற்றன. சந்தோஷம் மட்டும் ஏழு உலகில் தேடியும் கிட்டாத அபூர்வ பொருளாக இருக்கிறது.நழுவும் கானல் நிராக கைக்குஸ் சிக்காத காற்றாக இங்கே அங்கே இதோ,அதோ என எல்லோருக்கும் போக்கு காட்டுவது சந்தோஷம்.
குழந்தைக்கு சாக்லேட், பள்ளி குழந்தைக்கு ஒரு பென்சில், பதின் பருவத்தில் விளையாட்டு சாமங்கள், மீதிவண்டி , கல்லுரி வயதில் ஊர் சுற்றுதல், திரைப்படம், நாண்பர்கள் கூட்டம், காதல் திருமணம், நடுத்திரவயதில் வீடு, வாகணம்,பண உயர்வு, முதிய வயதில் நிம்மதியான ஒய்வு,இப்படியாக பருவம் தோறும் உருவம் மாறுவது சந்தோசத்தின் இயல்பு.
வாழக்கிடைக்கும் ஒவ்வோரு வினாடியும் சந்தோஷத்தை அடையாளம் கண்டு நழுவ விடாமல் சிக்கெனப் பிடிக்கும் இயல்பு அவசியம். ஒவ்வொரு வினாடியும் பெரும் புதயலைப் போல் சொர்க்க மகிழ்வோடு அனுபவித்து வாழவேண்டும்.
கண்ணிரும்,கம்பலையும்,அழுகையும்,ஆற்றாமையுமே நிழலாய் நம்மைத் தொடர்ந்தால் தான் என்ன்?.நாம் அவற்றுக்கு அடிமையாகி சேவகம் செய்து அதன் கட்டுப்பாட்டில் -மனநிம்மதி தொலைத்தால் அவை நம்மை வெற்றி கொண்டதாகிவிடும்.
சோகம் என்னைத் தின்றுவிட அனுமதிக்க மாட்டேன்.கண்ணிர் என்னை கொன்றுவிட அனுமதிக்க மாட்டேன்.வருந்தம்,வேதனையும் என்னை வென்றுவிட அனுமதிக்க மாட்டேன் என்கிற மன உறிதியை இயல்பானதாகக் கொண்டால் கண்ணீர் கான்ல் நீராகலாம்.சறுக்கி விழாமல் சாதனைப் படி ஏறலாம்.
தீராத பிரச்சனை என எதுவுமே கிடையாது. தீர்வு இல்லாத துன்பம் என எதுவுமே கிடையாது.பிரளியமே வந்தாலும் கலங்காதிரு மனமே என மனசுக்கு சொல்லித்தரவேண்டும்.துண்பசுழலில் சிக்கினாலும் வருத்த சுழலில் வாழ்ந்தாலும் என்ன? முகத்திலும் கண்ணீறும் ,சிறிப்பும் மனசிலும் துயர சாயம் இல்லாமல் வாழப்பழக்க வேண்டும்.நாளையும் விடியும் என்கிற நிச்சியமான மனோ நிலையைக் கையகளப்படுத்த வேண்டும்.
பிரச்சனைகள் தான் நம் ஆசிரியர்கள்,அவைதான் அனுபவம் என்னும் பொக்கிஷம் தரும் இலவச போதிமரம். அவைதான் பட்டறிவு விதைக்களமாகும்.
துன்பத்துலும் இன்பம் கானுதல். சறுக்காமலும் சந்தோஷம் பேனுதல், இருட்டிலும் வெளிச்ச வேர் தேடுதல் என மனசை பக்குவப்படுத்தலே தவம். காடுமலை ஏறாமல், காஷாயம் குடிக்காமல்,மக்களோடு மக்களாயிருந்து புரிகின்ற தவம் இது.பிரச்சனையைத் தீர்க்க முடியாமல் தப்பித்து தனிமையில் கூடுகட்டாமல் ஜனரஞ்ச வாழ்வில் இருந்து புரிகின்ற தவம் இது.
இன்னமும் சிறப்பான முன்னேற்றம் வேண்டும் என்பதின் கனவு வேறு. லட்சியம் வேறு.உயர்வு வேறு,வாழும் வாழ்வில் சந்தோஷமின்றி,திருப்தியின்றி இருத்தல் என்பது வேறு.
ஆனல் இன்றைய நடைமுறையில் கல்லுரி படிப்புக்கு பின்.சிறகடித்து பறக்கும் நேரம் ,கற்றவற்றை பகிரவோ,கற்றதை வைத்து பணிபுரிவதோ,வேலைதேடவோ,தொடங்கிய வேளையும் தகுந்த வேளை யில்லை என்பதே உண்மை.இதுஒரு கேள்விக்குறி?. அதைத்தொடர்ந்து கற்றுத் தெரிந்தவர்,தெளிந்தவர் உள்ளத்தில் இழையோடும் பயவுணர்வு,எதிர்பார்த்தது இல்லாத துன்ப் உணர்வு,பொருள்ளை ஈட்டமுடியாமை இவ் அவல நிலை கண்கூடாக தெரிகிறது . அவரைப் பெற்றவரும் இவைபோன்ற உருத்தலுக்கு ஆளாகாமல் இருக்க முடிவதில்லை.வயிற்ரைக் கட்டி வாயினைக்கட்டி சேர்து வைத்த செல்வத்தை கொண்டு பல்கலைப்பண்டிதனாய் மாற்ற நினைத்த தியாக உணர்வு விழலுக்கு இறைத்த நீரா?.
ஆனல் உண்மையில் கல்வியின் பணியும்,கல்வியின் உள்ளிருக்கும் திறங்களை வெளிக்கொனார்வதுதானே?. கல்வியின் நோக்கம். மானிடரை நிறைவு செய்து அறிவொளி தருவதனால் அவர்கள் நன்மைக்கும் , தீமைக்கும் இடைவெளிகளை அகற்றி வாழபயன் அளிப்பதுதானே?.அக கல்வி என்பது தன்னிலே பயனுற வாழப்பயன் அளிப்பதுதானே?.மாறாக கல்வி என்பது வேலைக்கு ஏற்ற வாய்ப்பு அல்ல. ஆனல் நடப்பது என்ன?. கல்வியின் பரந்து விரிந்த உட் பொருளானது குறுகிய வட்டதிற்க்குள் வைக்கப்படுவதால் வருகின்ற சிக்கல்கள் பெருத்த ஏமாற்ற உண்ர்வுகளுக்கு இட்டு செல்வதால் இருந்த சந்தோஷம் துழைத்து விட்டு நிற்கின்றனர். என்ன அவலம் பாரீர் .........
என்று தனியும் இந்த அவல நிலை ?...........
பிறந்த இடம், குலப்பெருமை, வாழ்த்த வாழ்க்கை, படித்த படிப்பு, சுற்றிவந்த சுற்றத்தார்.வலையவந்த நட்பு, கற்ற பண்பு, ஆக எல்லாம் உதவாக்கரையாகிவிட்டது.
பொருள் இல்லாருக்கு இவ் உலகம் இல்லை., அருள் இல்லாருக்கு அவ் உலகம் இல்லை என்பது பழமொழிபோல் பொருள் ஈட்ட தெரியாமல் தினறும் இளைக்ககன் நிலை என்ன?. இனி மறுபடியும் கீதை சென்ன ஆரம்ப நிலைக்குத்தான் வர வேண்டும். அது என்ன?....
இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு " பகவத்கீதையில் சொன்னது போல்-சுதர்மம் கடை பிடித்தல்"..இந்த சுதர்மம் என்றால் என்ன ?. இதை அடைய எங்கும் போகவேண்டியது இல்லை.இது தானகவே கிடைக்ககூடியது..
நாம் புதிதாக இப்பூமியில் வரவில்லை. நமக்கு முன் இவ்பரந்த பூமி இருந்தது.பெற்றோர் இருந்தனர்.அண்டை அயலார் இருந்தனர்......... இவ் ஜன சமுத்திரத்தின் இடையில்தான் பிறந்தோம், வளர்ந்தோம். நாம் நம் பெற்றோருக்கு செய்யவேண்டிய கடமை யுள்ளது.சமுதாயத்திற்கு ஆற்றவேண்டிய கடமையுள்ளது. ஆகவே இதுவே சுதர்மம். இந்த கடமை உணர்வு ஒவ்வொரு மனிதனிடம் பிரதிபலிக்க வேண்டும். அப்போது நாம் எங்கு இருக்கிறோம் என்ற உணர்வு நமக்கு தெரியும்.இதுதான் ஆரம்ப நிலை. இதை முதலில் தேடிக்கண்டு பிடிக்க வேண்டும். எனக்குள் உள்ள உணர்வுதான் தர்மம். அதுதான் சுதர்மம்.நான் என் தம்பி, தங்கைகளுக்க்கு ஆற்ற வேண்டிய கடமை,பொற்றோர்களுக்கு செய்யவேண்டியது என தலை தூக்கும். இது எனக்குள் உள்ள சுதர்மம் இதைநான் செய்ய கடமைப்பட்டவன் ஆவேன்.. ஆனல் அதே தர்மம் இன்னெருவருக்கு இருக்க வேண்டும் என்பது இல்லை?. ஏன்னென்றால் அவன் கூட பிறந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.,தந்தை நிறைய சொத்து சேர்த்து வைத்து இருப்பார். அவன் நிலை வேறு. அவன் சாதாரணமாக அன்றாட தேவைகளை மட்டும் அவன் கவனித்தால் போதும். ஆகவே ஒருவருக்கு இருக்கும் சுதர்மம் இன்னொருவர்க்கு இருக்க வேண்டும் என்பது இல்லை.
மீன்கள் வாழ்வது நீரில் தான். நீர் இல்லாமல் அது ஒரு கணம் கூட இருக்க முடியாது.ஆனால் நீரைவிட பால் உயர்ந்த பொருள். அதற்காக ஏ மீன்களே நீரைவிட்டு பாலில் வாழுங்கள் என்றால் அதனால் உயிர் வாழமுடியுமா ?. சூரியன் அழகாக இருப்பதால் அதன் அருகில் செல்ல முடியுமா? முடியாது. சுட்டு எரித்து விடும். ஆகவே பிறர்க்கு இருக்கும் சுதர்மம் . நமக்கு இருக்கப்வேண்டிய அவசியம் இல்லை.அடுத்தவரைப்பார்த்து வாழ நினைப்பது அரசனை நம்பி புருஷனை கைவிடுவதுபோல் ஆகும்.
வருத்தம்,வேதனை,கண்ணிர், கவலை, வெறுப்பு, விரோதம்,குரோதம் எல்லாம் மனம் முழுக்க நிறைந்து இருக்கிற்றன. சந்தோஷம் மட்டும் ஏழு உலகில் தேடியும் கிட்டாத அபூர்வ பொருளாக இருக்கிறது.நழுவும் கானல் நிராக கைக்குஸ் சிக்காத காற்றாக இங்கே அங்கே இதோ,அதோ என எல்லோருக்கும் போக்கு காட்டுவது சந்தோஷம்.
குழந்தைக்கு சாக்லேட், பள்ளி குழந்தைக்கு ஒரு பென்சில், பதின் பருவத்தில் விளையாட்டு சாமங்கள், மீதிவண்டி , கல்லுரி வயதில் ஊர் சுற்றுதல், திரைப்படம், நாண்பர்கள் கூட்டம், காதல் திருமணம், நடுத்திரவயதில் வீடு, வாகணம்,பண உயர்வு, முதிய வயதில் நிம்மதியான ஒய்வு,இப்படியாக பருவம் தோறும் உருவம் மாறுவது சந்தோசத்தின் இயல்பு.
வாழக்கிடைக்கும் ஒவ்வோரு வினாடியும் சந்தோஷத்தை அடையாளம் கண்டு நழுவ விடாமல் சிக்கெனப் பிடிக்கும் இயல்பு அவசியம். ஒவ்வொரு வினாடியும் பெரும் புதயலைப் போல் சொர்க்க மகிழ்வோடு அனுபவித்து வாழவேண்டும்.
கண்ணிரும்,கம்பலையும்,அழுகையும்,ஆற்றாமையுமே நிழலாய் நம்மைத் தொடர்ந்தால் தான் என்ன்?.நாம் அவற்றுக்கு அடிமையாகி சேவகம் செய்து அதன் கட்டுப்பாட்டில் -மனநிம்மதி தொலைத்தால் அவை நம்மை வெற்றி கொண்டதாகிவிடும்.
சோகம் என்னைத் தின்றுவிட அனுமதிக்க மாட்டேன்.கண்ணிர் என்னை கொன்றுவிட அனுமதிக்க மாட்டேன்.வருந்தம்,வேதனையும் என்னை வென்றுவிட அனுமதிக்க மாட்டேன் என்கிற மன உறிதியை இயல்பானதாகக் கொண்டால் கண்ணீர் கான்ல் நீராகலாம்.சறுக்கி விழாமல் சாதனைப் படி ஏறலாம்.
தீராத பிரச்சனை என எதுவுமே கிடையாது. தீர்வு இல்லாத துன்பம் என எதுவுமே கிடையாது.பிரளியமே வந்தாலும் கலங்காதிரு மனமே என மனசுக்கு சொல்லித்தரவேண்டும்.துண்பசுழலில் சிக்கினாலும் வருத்த சுழலில் வாழ்ந்தாலும் என்ன? முகத்திலும் கண்ணீறும் ,சிறிப்பும் மனசிலும் துயர சாயம் இல்லாமல் வாழப்பழக்க வேண்டும்.நாளையும் விடியும் என்கிற நிச்சியமான மனோ நிலையைக் கையகளப்படுத்த வேண்டும்.
பிரச்சனைகள் தான் நம் ஆசிரியர்கள்,அவைதான் அனுபவம் என்னும் பொக்கிஷம் தரும் இலவச போதிமரம். அவைதான் பட்டறிவு விதைக்களமாகும்.
துன்பத்துலும் இன்பம் கானுதல். சறுக்காமலும் சந்தோஷம் பேனுதல், இருட்டிலும் வெளிச்ச வேர் தேடுதல் என மனசை பக்குவப்படுத்தலே தவம். காடுமலை ஏறாமல், காஷாயம் குடிக்காமல்,மக்களோடு மக்களாயிருந்து புரிகின்ற தவம் இது.பிரச்சனையைத் தீர்க்க முடியாமல் தப்பித்து தனிமையில் கூடுகட்டாமல் ஜனரஞ்ச வாழ்வில் இருந்து புரிகின்ற தவம் இது.
இன்னமும் சிறப்பான முன்னேற்றம் வேண்டும் என்பதின் கனவு வேறு. லட்சியம் வேறு.உயர்வு வேறு,வாழும் வாழ்வில் சந்தோஷமின்றி,திருப்தியின்றி இருத்தல் என்பது வேறு.
ஆனல் இன்றைய நடைமுறையில் கல்லுரி படிப்புக்கு பின்.சிறகடித்து பறக்கும் நேரம் ,கற்றவற்றை பகிரவோ,கற்றதை வைத்து பணிபுரிவதோ,வேலைதேடவோ,தொடங்கிய வேளையும் தகுந்த வேளை யில்லை என்பதே உண்மை.இதுஒரு கேள்விக்குறி?. அதைத்தொடர்ந்து கற்றுத் தெரிந்தவர்,தெளிந்தவர் உள்ளத்தில் இழையோடும் பயவுணர்வு,எதிர்பார்த்தது இல்லாத துன்ப் உணர்வு,பொருள்ளை ஈட்டமுடியாமை இவ் அவல நிலை கண்கூடாக தெரிகிறது . அவரைப் பெற்றவரும் இவைபோன்ற உருத்தலுக்கு ஆளாகாமல் இருக்க முடிவதில்லை.வயிற்ரைக் கட்டி வாயினைக்கட்டி சேர்து வைத்த செல்வத்தை கொண்டு பல்கலைப்பண்டிதனாய் மாற்ற நினைத்த தியாக உணர்வு விழலுக்கு இறைத்த நீரா?.
ஆனல் உண்மையில் கல்வியின் பணியும்,கல்வியின் உள்ளிருக்கும் திறங்களை வெளிக்கொனார்வதுதானே?. கல்வியின் நோக்கம். மானிடரை நிறைவு செய்து அறிவொளி தருவதனால் அவர்கள் நன்மைக்கும் , தீமைக்கும் இடைவெளிகளை அகற்றி வாழபயன் அளிப்பதுதானே?.அக கல்வி என்பது தன்னிலே பயனுற வாழப்பயன் அளிப்பதுதானே?.மாறாக கல்வி என்பது வேலைக்கு ஏற்ற வாய்ப்பு அல்ல. ஆனல் நடப்பது என்ன?. கல்வியின் பரந்து விரிந்த உட் பொருளானது குறுகிய வட்டதிற்க்குள் வைக்கப்படுவதால் வருகின்ற சிக்கல்கள் பெருத்த ஏமாற்ற உண்ர்வுகளுக்கு இட்டு செல்வதால் இருந்த சந்தோஷம் துழைத்து விட்டு நிற்கின்றனர். என்ன அவலம் பாரீர் .........
என்று தனியும் இந்த அவல நிலை ?...........
பிறந்த இடம், குலப்பெருமை, வாழ்த்த வாழ்க்கை, படித்த படிப்பு, சுற்றிவந்த சுற்றத்தார்.வலையவந்த நட்பு, கற்ற பண்பு, ஆக எல்லாம் உதவாக்கரையாகிவிட்டது.
பொருள் இல்லாருக்கு இவ் உலகம் இல்லை., அருள் இல்லாருக்கு அவ் உலகம் இல்லை என்பது பழமொழிபோல் பொருள் ஈட்ட தெரியாமல் தினறும் இளைக்ககன் நிலை என்ன?. இனி மறுபடியும் கீதை சென்ன ஆரம்ப நிலைக்குத்தான் வர வேண்டும். அது என்ன?....
இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு " பகவத்கீதையில் சொன்னது போல்-சுதர்மம் கடை பிடித்தல்"..இந்த சுதர்மம் என்றால் என்ன ?. இதை அடைய எங்கும் போகவேண்டியது இல்லை.இது தானகவே கிடைக்ககூடியது..
நாம் புதிதாக இப்பூமியில் வரவில்லை. நமக்கு முன் இவ்பரந்த பூமி இருந்தது.பெற்றோர் இருந்தனர்.அண்டை அயலார் இருந்தனர்......... இவ் ஜன சமுத்திரத்தின் இடையில்தான் பிறந்தோம், வளர்ந்தோம். நாம் நம் பெற்றோருக்கு செய்யவேண்டிய கடமை யுள்ளது.சமுதாயத்திற்கு ஆற்றவேண்டிய கடமையுள்ளது. ஆகவே இதுவே சுதர்மம். இந்த கடமை உணர்வு ஒவ்வொரு மனிதனிடம் பிரதிபலிக்க வேண்டும். அப்போது நாம் எங்கு இருக்கிறோம் என்ற உணர்வு நமக்கு தெரியும்.இதுதான் ஆரம்ப நிலை. இதை முதலில் தேடிக்கண்டு பிடிக்க வேண்டும். எனக்குள் உள்ள உணர்வுதான் தர்மம். அதுதான் சுதர்மம்.நான் என் தம்பி, தங்கைகளுக்க்கு ஆற்ற வேண்டிய கடமை,பொற்றோர்களுக்கு செய்யவேண்டியது என தலை தூக்கும். இது எனக்குள் உள்ள சுதர்மம் இதைநான் செய்ய கடமைப்பட்டவன் ஆவேன்.. ஆனல் அதே தர்மம் இன்னெருவருக்கு இருக்க வேண்டும் என்பது இல்லை?. ஏன்னென்றால் அவன் கூட பிறந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.,தந்தை நிறைய சொத்து சேர்த்து வைத்து இருப்பார். அவன் நிலை வேறு. அவன் சாதாரணமாக அன்றாட தேவைகளை மட்டும் அவன் கவனித்தால் போதும். ஆகவே ஒருவருக்கு இருக்கும் சுதர்மம் இன்னொருவர்க்கு இருக்க வேண்டும் என்பது இல்லை.
மீன்கள் வாழ்வது நீரில் தான். நீர் இல்லாமல் அது ஒரு கணம் கூட இருக்க முடியாது.ஆனால் நீரைவிட பால் உயர்ந்த பொருள். அதற்காக ஏ மீன்களே நீரைவிட்டு பாலில் வாழுங்கள் என்றால் அதனால் உயிர் வாழமுடியுமா ?. சூரியன் அழகாக இருப்பதால் அதன் அருகில் செல்ல முடியுமா? முடியாது. சுட்டு எரித்து விடும். ஆகவே பிறர்க்கு இருக்கும் சுதர்மம் . நமக்கு இருக்கப்வேண்டிய அவசியம் இல்லை.அடுத்தவரைப்பார்த்து வாழ நினைப்பது அரசனை நம்பி புருஷனை கைவிடுவதுபோல் ஆகும்.