செந்துருவை சேரலாம் செந்தழிழ்லை பாடலாம்
இந்திரனைப் போல் வாழந்துண்டு இருக்கலாம்,
மந்திரம்சேர் வெற்பகத்தையூடுஅருத்தவேலவர்க்கு

முன்பிறந்த கற்பகத்தை கை தொழுதார் கால்

மனதின் ஒருமை பாடுதேவைதான


மனதை ஒருமுகப்படுதுதல் :-

மனதை ஒருமுகப் படுத்துதல் என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. இடைவிடாத முயற்சி தேவை.மனதை ஒரு சுட்டி குரங்குக்கு ஒப்பிடலாம்.குரங்கு ஒரு வினாடியாவது ஒய்ந்து ,ஒடிங்கி,அடங்கி, அமைதியாக இருக்கும் ஒரு குரங்கை யாராலும் பார்த்து யிருக்க முடியாது.கிளைக்கு கிளை தாவுவதும் மரத்துக்கு மரம் தாவுவதும் குதித்து கும்மாள்மிடுவதும் கூத்தாடுவதும் கரணம் அடிப்பதும், பல்லை இளித்து செட்டை செய்வதும்,தலையை சொரிவது போன்ற எண்ணற்ற காரியத்தை செய்து கொண்டேயிருக்கும்.இக் குரங்கை கட்டிப் போடுவதாலும், அச்சுறுத்துவதாலும், தண்டனைகள் கொடுப்பதாலும் அதன் செயலை கட்டுப் படுதமுடியாது.நமது மனமும். மனதைச்சார்த்த எண்ணனங்களூம் கிட்டத்தட்ட இதே நிலையில்தான் காண்ப்ப்டுகிறது. எந்நேரமும் ஏதாவது ஒரு விஷயம் குறித்து,ஏதாவது ஒரு சம்பவம் குறித்து அலை மோதிக் கொண்டேயிருப்பது நமது மனதின் இயல்பாகும்.மனதை அதன் போக்கிலேயே விட்டு விட்டால் ஒரு குறிக்கோளையும் அடைய முடியாது.ஒரு நிலையில் மனதை இழுத்துப்பிடித்தால் அது மற்றொரு வழியில் பிய்த்துக் கொண்டு ஒடிவிடும்.மிகுத்த பிராசையுடன் மனதை அடங்கி ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக நாம் நினைத்துப் பெருமிதம் கொள்கிற நேரத்தில், ஒரு அற்பகாரணத்தால் பிறர் கூறும் ஒரு வார்த்தையால் சிறிய சம்பவத்தினால் எண்ணங்கள் நிலை குலைந்து கட்டு அவிழ்த்து சிதறி தாறுமாறாக ஒடிவிடும்.ஆகவே ஐம்புலங்களாகிய கண், காது, மூக்கு, வாய் ,உடம்பு அகிய  இந்த ஐந்தும் மனிதனுக்கு தீவிரமாக பேராசையை ஊட்டக்கூடியதாகவே விளங்குகிறது..நாம் மனம் சோர்வு அடைத்தால்,ஐம்புலங்களும் கட்டுப்பாடு இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட்டு சுக போக வெறியில் நாட்டம் கொண்டு தனது காரியங்களைச்செய்யத்தூண்டுகிறது
ஒருமுனைப்பாங்கு பெறுவது எவ்வாறு
ஒருமுனைப்பாங்கு வேண்டியதுதான். ஆனல் அது எப்படிக்கிட்டும்? அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? பகவான் ஆன்மாவில் மனதை நிறுத்திவேறு எதையும் பற்றி நினைக்காதே என்று சொல்லுகிறார். ஆனால் இது எப்படி கை வரும்? மனதை முற்றிலும் சாந்தமாக்கல் என்பது மிகவும் பெரிய விஷயம். எண்ணங்களின் சக்கரத்தை முழுப்பலத்துடன் தடுத்து நிறுத்தாதவரை சித்தத்தின் ஒருமுனை பாங்க்கு எப்படி கைகூடும்?
புறச்சக்கரத்தை எப்படியோ நிறுத்திவிடுவோமென்றாலும் அகச்சக்கரம் சுழன்றுகொண்டுதான் இருக்கும் சித்ததை ஒருமுனைப்பாங்கு படுத்துவதற்காக,