செந்துருவை சேரலாம் செந்தழிழ்லை பாடலாம்
இந்திரனைப் போல் வாழந்துண்டு இருக்கலாம்,
மந்திரம்சேர் வெற்பகத்தையூடுஅருத்தவேலவர்க்கு

முன்பிறந்த கற்பகத்தை கை தொழுதார் கால்

எதைதேடினார்கள் துன்பங்களில் இருந்து விடுதலை அடைய

எதைதேடினார்கள் துன்பங்களில் இருந்து விடுதலை அடைய

சென்ற நூறு வருடங்களாகஸ் சீர்திருதங்களைப் பற்றியும், லட்சியங்களைப் பற்றியும் வெறும் வெறும் பேச்சுப் பேசிக் கொண்டுயிருக்கிறோம். ஆனல் அவற்றை செயல் முறையில் கொண்டுவர வேலை வரும் போது நம்மை காண முடியவில்லை. இதை கண்டு உலகமே எள்ளி நகையாடுகிறது. சீர்திருத்தம் என்ற பெயரே கேலிக்கூத்தாகி விட்டது. இதற்கெல்லாம் காரணம் என்ன?. இதற்கு மூல காரணம் என்ன?. இதற்கு மூல காரணம் நாம் பலவீனமாயிருப்ப்தே இவை அனைத்துக்கும் காரணம். நம் உடல் பலவீனமாயிருக்கிறது.நம் மனம் பலவீனமாயிருக்கிறது. நம்மிடம் நமக்கு நம்பிக்கை இல்லை. நம் முதுகெலும்பு உடைந்து விட்டது,இப்போது வெறும் புழுக்கள் போல் ஆகிவிட்டோம்.ஏனெனில் நாம் பலவீனர்களாக மிக மிகப் பலவீனர்களாக இருக்கிறோம்.முதலில் நம் உடல் பலவீனம் நமது துண்பங்களில் மூன்றில் இரண்டு பங்க்கு நமது உடல் பலவீனமே காரணமாயிருக்கிறது. நாம் சோம்பேறிகள், நம்மால் உழைக்க முடியவில்லை. நம்மால் சேர்ந்து வாழமுடிவதில்லை. நாம் ஒருவரை ஒருவர் நேசிப்பது இல்லை.நம்மிடம் சுயநலம் நிறைந்து இருக்கிறது.ஒருவருக்கொருவர் சண்டையிடாமலும்,பொறாமைப்படாமலும், மூன்று பேர்கள் சேர்ந்தும் வாழமுடிவதில்லை.புலங்கள் கட்டுக்கடங்காமல் மதம் பிடித்த குதிரை போல் தறிகெட்டு மனம் போனபடி போகிறது. குழந்தைகள் ஒளிமயமான இன்பக்கனவுகளில் மிதப்பதும், பின்னால் அவையனைந்தும் வீண் எனக் காண்பதும், வயதானவர்கள் தங்கள் கடந்த காலத்தை எண்ணி இமாய வலையில் இருந்து வெளியேறிஸ் செல்ல முடியாமல் திண்டாடுவதும். இதுதான் மனித வாழ்க்கையின் இயல்பாக இருக்கிறது.
ஆகவே தற்போது நமக்கு தேவை வலிமை, அளவற்ற வலிமை இதையே உபநிடதங்கள் ஒவ்வொரு பக்கமும் கூறுகின்றன.இந்த மகத்தான  விஷயத்தை நாம் எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
வாழ்கையின் பெரும் பிரச்சனைகளுக்கு பிற நாடுகள் எங்கனம் முடிவு கானும் முயற்சி புறத்தே நிகழ்த்ததோ. அவ்வாறே நமது முன்னோர்களும் தேடினர்.  பிறநாட்டவர் எங்கனம் தங்கள் முயற்சியில் தோல்வி கண்டன்ரோ அங்கனமே நம் நாட்டவரும் தோல்வி கண்டனர். ஆனல் நம் நாட்டவர் அந்துடன் நில்லாமல் வாழ்வின் பெரும் பிரச்சனைகளுக்கும்-பிறப்பு- இறப்பு- பிரசனைகளுக்கும் நமது புலங்களால் இந்த பிரசனைகளுக்கு முடிவு காண முடியாது என்பதை துணிவுடன் கூறினர்.இதையே உபநிடங்கள்
"எங்கே வாக்கும், மனமும் செல்ல முடியாமல் திரும்பி விடுகின்றனவோ, அங்கே பார்வை செல்லாது.பேச்சும்செல்லாது-புலனறிவின் இயலாமையை விளக்கும் வாக்கியங்கள் பல அங்கே உள்ளன."அந்துடன் நிற்காமல் மனிதனின் அக இயல்பை ஆராய்ந்தார்கள். தங்கள் ஆன்மாவிடமே விடை காண விரும்பினார்கள். அகக்கண் கொண்டு தேடினார்கள். வெளியில் தேடுவது பயனற்றது அங்கு எதுவும் செய்ய இயலாது, விடைகான முடியாது என்பதை உணர்ந்தார்கள். ஒளியிளழ்ந்த சடப்பொருளால் உண்மையைக் காட்டமுடியாது என்று தெளிந்தனர்.விடைகண்டனர்.
மேலும அனைந்தும்  ஆன்மாவிலேயே இருக்கிறது என்னும் கோட்பாடே அது. அதாவது ஆன்மாவைத் தூண்டுவது எதுவும் இல்லை. ஆன்மாவே எல்லவற்றையும் தூண்டுகிறது என்பதே அது. சக்கிகள் அனைத்தும் ஆன்மாவிலேயே இருக்கிறது. உண்மையில் அடையவேண்டியது எதுவும் இல்லை. ஒன்றும் இல்லை.அனைத்தும் ஏற்கனவே ஆன்மாவில் உள்ளன என்று யோகி சொல்கிறார்கள். இவற்றை வெளிப்படுத்துவதே நமது செயல்.
வேற்றுமையை உண்டாக்குவது உடலே. ஏற்ற உடலைப் பெற்றதும் இந்த ஆற்றல்கள் வெளிப்படுகின்றன. ஆனல் ஆற்றல்கள் ஏற்கனவே அதில் உள்ளன.நல்ல செயல்களோ, தீய செயல்களோ இயற்கையின் மாறுதல்களுக்கான நேரடிக்காரணம் அல்ல.அந்த செயல்கள் மாறுதல்களுக்குத் தடையாக உள்ளவற்றை நீக்குகின்றன அவ்வளவே. வயலுக்கு நீர் பாயும்போது தடையாக உள்ளவற்றை உழவன் நீக்கும் போது நீர் தானவே பாய்கிறதே. அது போல் ஏரி நீரை வயல்லுக்கு உழவன் பாய்ச்சுவதை உதராணம் காட்டுகிறார். ஏரியில் நீர் நிறைந்துள்ளது. கண நேரந்தில் அது வயலில் பாய்ந்து விடும். அதைத்தடுத்து நிற்பது எது? ஒருமண்கரை அந்த கரையை ஒருபகுதியை உடைந்து விட்டால் போதும் தண்ணீர் வேகமாக ஒடி வயல்களில் பாய்கிறது. இத்தகைய  ஆற்றல் தூய்மையும் நிறைநிலையும் ஆன்மாவிடம் உள்ளன.ஆனல் தடுத்து நிற்பது அதை மூடியுள்ள ஆவரணமே. திரையே. திரையை நீக்கி விட்டால் ஆன்மா தூய்மையாக விளங்க்குகிறது தெரிகிறது.அதன் சக்தி வெளிப்படுகிறது.ஆன்மாவை மறைப்பது நமது மனதின் திரையே.

அமைதியை தேடி....................?.
இந்த உடல்-உணர்வின் மூலம் மகிழ்சியை உணர முடியும். இந்த மனம்- எண்ணங்களின் மூலமாக மகிழ்சி அடையமுடியும். இதயம் - அன்பு, மற்றும் கருணை மூலமாக மகிழ்சியடையும்.உயிர்த்தனமையானது பேரமைதியாக உங்கள்  உள்ளே இயங்குகிறது.அந்த பேரமைதிப் பெரும்கடலில் எந்த மாற்றமும் இருக்காது.அதுதான் உங்களது உண்மையான  அமைதி நிலை.அது தான் உண்மையான நீங்கள்.ஆனல் இப்போது செல்லும்  நீங்கள் அல்லது நான் என்பது உங்கள் மனதைத்தவிர வேறல்ல.இது தவறன கொள்கை.ஆகவே அந்த உயிர்த்தன்மை உங்களுக்கு கட்டுப்பட்டது அல்ல.ஆனால் நீங்கள் அதனால் கட்டுப்படுத்த படுகிறேர்கள்.அதுதான் அதனுடைய தனித்தன்மையும்.பெருமையும் ஆகும்.அந்த அமைதி மிகவும் அழமானது.அத்துடன் மிகனுண்மையானதும் கூட.அதில் மனம் சிறிது புகுத்தாலும் அதன் அமைதி தன்மை முழுவதும் கொட்டுவிடும்.அந்த பேரமைதிமைய நிலைதான் உங்களுக்கு உண்மையும்,அன்பு மற்றும் கருணை தைரியம் போன்ற அநேக தன்மைகளை உண்மையாக வாழங்க்குவது.ஏனனில் அதனுடைய ஆற்றல் அளப்பரியது.உங்களுடைய ஆற்றல் மிக்க மனம் அதனால் உண்டாகப்பட்டதுதான்.
இந்த உயிர்த்தன்மையை பொருத்த அளவில் நாமும்,இந்த பிரபஞ்சமும் ஒன்றுதான்.பிரபஞ்சத்தில் எது இயக்கமாக இருக்கிறோதோ,அதுதான் உங்களிடம் இயக்கமாக இருக்கிறது.இந்த உணர்வு உங்களிடம் வளரும் பொழுது ஒரு புல்,இலைகூட உங்களுக்கு அதி அற்புதமாக தோன்றும்.அதை உங்களால் அலட்சிய படுத்தமுடியாது.எந்த விதமான மையமும் இல்லாமல் யாராலேயும் உயிர் வாழ முடியாது.அது ஏற்கனவே உங்களிடம் இருக்கிறது.இயற்கையோ-கடவுளோ கொடுத்த அந்தக் கரு அல்லது சாராம்சம் தான் அந்த மையம்.ஒவ்வொரு சூறாவளிக்கும் ஒருமையம் உண்டு அந்த சூறாவளியின் வெளித்தன்மை எவ்வள்வுக்கெவளவு அமைதியற்று சுழன்று கொண்டு இருக்கிறதோ அவ்வளவுக்களவு அதன் மையம் அமைதியோடு நிலையோடு இருக்கும்.நாம் உள்ளே உள்ள உயிர்ச்சக்தி மேலே கிளம்பி தன் மையத்தை அடையும்பொழுது அதில் எந்த சலனமும் இருக்காது.அதுதான் நாம் ஆத்மீகத்தில் அடையவேண்டிய முடிவான தன்மை.அந்த தன்மையை அடைய நம் உள்ளே மிக ஆழமாக செல்லவேண்டும்.அது வெகு துரத்தில் இருக்கிறது.ஆனல் அதை நாம் இந்தக்கணத்தில் அடையலாம் .ஆனால் அது அவ்வளவு சுலபத்தில் நடக்காது, ஏனெனில் நம் மனம் நமக்கு அதற்கு இடம் தராது.ஆகவேதான் இப்பொழுது அடையமுடியும் என்று சொல்லும்பொழுது அதை நாம் அடைய முடியாது என்றும் செல்ல வேண்டியிருக்கிறது.அது தான் நம் ஆன்மா.

மனிதன் விலங்கை விட சிறந்தவன்

மனிதன் விலங்கை விட சிறந்தவன்

இயற்கையும் உயிரினமும்

இயற்கையும் உயிரினமும் 

உலகமே இயற்கை மயமானது.இயற்கையின் ஒரு சின்னஞ்ச்சிறு கூறுதான் மக்கள் சமுதாயம்.இவ்
 உண்மையை உணராத சான்றோரில்லை; உணராத புலவர் இல்லை.இயற்கையின் எழில் தோற்றங்கள் மக்களுக்கு பெரும் விருந்தளிப்பவை.

செக்கசிவக்கும் செவ்வாணம், கதிரவன் காலைத்தோற்றம்,தன்மதியின் வெண்ணிலவு,வண்ண வண்ண மலர்கள்,பன்னிறப்பறவைகள்,பச்சைப்பாய் விரிந்தார் போன்ற புல் வெளிகள்,நெல்வயல்கள்,தோகை விரித்தாடும் மயில்கள்போன்ற இயற்கை காட்சிகள் கண்களூக்கு விருந்தாகும்.

பாடும் குயிலின் பண் ஒசை,மது வண்டின் மதுர கீதம்,அலைகடலோசை,அருவி,ஆறுகளின் இன்னோசை முதலிய இயற்கையான ஒலிகள் செவிக்கினிய செல்வங்கள்.

நறுமலர்களின் நறுமணம்,மா,பலா,வாழைக் கனிகளின் மாறா நன் மனம் முதலியவை முகர்வுக்கு நல் விருந்தாகும்.

முக்கனிகளின் தீஞ்சுவையும்,மற்றைய கனிகளின் தீஞ்சுவையும் வாயுணர்வுக்குப்பெரும் விருந்தாகும்.

வண்ணமலர்கள்,பஞ்சவர்ணப் பைக்கிளிகள்,பஞ்சு போன்ற பறவைக்குஞ்சுகள்,வெண்மதியின் தண்ணொளி,தென்றலின் தீண்டல், ஆகியவை மெய்க்கின்பம் பயப்பனவாம்.இவ்வாறு ஜம்புலனுக்கும் விருந்தாய் அமையும் இயற்கைதரும் இன்பம் என்ன என்பது ?.

முற்றும் துறந்த முனிவர்களும்,தமது பற்றற்ற வாழ்க்கையினை நடந்த்த தேர்ந்தெடுக்கும் இடமும்-இயற்கையன்னை -பூத்துக்குலுக்கும் கானகமேயன்றோ ! எனவே பால்,இன,பருவ வேறுபாடுயின்றி மக்கள் அனைவரும்  ஈடில்லா இன்பமளிப்பது இயற்கையேயாகும்.

பண்டைக் கால மக்கள் முதன் முதலாக் ஐம்பெரும் பூதங்களாய மண்,தீ,நீர்,காற்று,ஆகாயம் முதய பொருள்களையே தெய்வங்களாக வணங்கினர்..தெய்வவழிபாடே முதன் முதலில் இம் மூலப் பொருள்களிடமிருந்து மக்கள் கொண்ட அச்சத்திற் பிறந்ததெனக் கூறுவர் ஆராச்சியாளர்கள்.இன்னும் ஐம் பூதங்க்களுக்குரிய ஐந்து சிவ தலங்கள் இருக்கப்பார்கலாம்.மண்ணுக்கு- காஞ்சியும்., தீயினுக்கு-
திருவண்ணமலையும் .,நீருக்கு -திருவானைக்காவும்.,- காற்றுக்கு -காளத்திரியும்., ஆகாயத்திற்கு-தில்லையும் அமையும்.இவ் ஐம் பூதங்க்களுக்கு அப்பாற்பட்ட பொருள் ஒன்றும் இல்லை. இறைவன் எங்கும்  நிறைந்து இருக்கும்  நிலையினையே இது குறிப்பதைப் காணலாம்.

மேலும் நிலந்தை குறிஞ்சி-முல்லை- மருதம்-நெய்தல்-பாலை என் ஐந்தாகப்பரிந்தனர்.இதில் மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சியெனவும்., காடும்-காடு சார்ந்த இடம் முல்லை எனவும்., சமவெளிபிரதேசம் மருதம் எனவும்., கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் எனவும் விளையாத பகுதி  பாலை என கணக்கிட்டனர்.மேலும் முல்லை,மருதம்,நெய்தல் பகுதி திரிந்து சதுப்பு வனப் பகுதியாக  ஆறாவது பிரிவாக பின் பிரிக்கப்பட்டது.மலைக் கிழவோனாகிய  முருகன் குறிஞ்சிக்கு தெய்வம் ஆனான்.பச்சைமா மேனிகொண்ட திருமால் முல்லைக்கு தெய்வம் ஆனான்ன.மழையினை நம்பி வாழும் வயல் நிலமான மருததற்கு மழைமேகங்களின் தலைவனான இந்திரன்  இறைவனானன். கடலும் கடல் சார்ந்த இடமான நெய்தலுக்கு  வருணன்  தெய்வமானார்.அறவடிவாகிய அம்பிகையின் மறவடிவான காளியென்னும் கொற்றவை பாலைக்குத் தெய்வமானார். பிறவா வாழ்க்கைக்குப் பெரியோனாகிய சிவபெருமான் யாதும் ஊரே எனக் கொண்டு நாடெங்கும் மக்களால் வழிபடப்பெறும் தெய்வமானார்
.

வானளாவிய மரங்கள், வான்நின்றும் ஒடி வரும் தேனருவி.இன்னிசைப்பாடும்  பன்னிறப் பறவைகள், கூட்டங்கூட்டமாய் குரங்குகள்,வண்டுகள் மொய்க்கும்  வண்ணமலர்கள், வானளாவிய வளர்ந்த வேங்க்கை மரங்களின் கிளைகள்  சொறிந்த சோலையின் எழில் , வேங்கை மரத்துக் கிளைகள் மீது ஒருபுறம் செண்பகக்கொடியேறிப் பூத்து குலுங்குகின்றது.,மற்றொரு புறத்தில் தோட்டத்து முல்லைக் கொடியின்  வெள் அரும்பு காணப்படும்.பச்சைபசேரன வேங்கையின் நுடே பசுமை நிற செண்பகமும்,வெள்ளை நிற  முல்லையும் மாறி மாறித் தோன்றும்  வர்ணசாலந்தான் என்ன?. விளைந்த வாழைக்கனியோடு பலாவின் நறுமனமும்  எங்க்கும் வியபித்தி இருக்கிறது.  உயர்ந்த மரத்தின் மேல் இருந்து தேன் சொட்டுகிறது. அவ் தேன் ஆனது மாம் மரத்தின் கொம்பில் உள்ள  மாங்கனிமீது விழுத்து நறுமனம் கமழ்கிறது.தண்ணீரில் தோன்றும் மலர்களுக்கு குறைவில்லை.சுனை அருகே அந்த நீல நீறத்திற்கு ஏற்ப மயில் தோகை விரிந்தாடும் குரமரத்தின் பாம்புப்பாற்களைப்போன்று உரிய வெண்ணிற அரும்புகள்  பார்பதற்கு குரவ மரமாகிய பெண்,தன் சிறிய வெண்பற்களைக் காட்டி அழகுறஸ் சிறிப்பது போன்று  காட்சியளிக்கும்.வெண்ணிற அன்னம்,பைம்கிளி மயில் ஆகியவை யின் அழகுதான் என்னென்பது.
இயற்கையோடு  அமைந்த விலங்கினம் :-
சிறப்பினம் எனப்படுவது ஒத்த உடலாக்கமும்,வாழ்முறையும்,இனப்பெருக்கில் பங்கு பெறும் உயிரினங்களைப் பொதுவாக ஒன்று  சேர்த்து ஒரு சிறப்பினம் என்று அழைக்கப்படுகிறது.இதில் நுண் உயிர்களூம் அடங்கும்.
தாவர சிறப்பினங்கினால் அளிக்கப்படும் மரக்கட்டை,பக்கவேர் ஆகியவை அடிநிலத்தில் வாழ்கின்ற நுண் உயிர்கள் சதுப்பு  வன விலங்கினமும் பெரும்பகுதி மேல் வாழ்விகளால்  ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இவை  பெரும்  பகுதி  மட்குண்ணிக்கள். ஆனால் உள் வாழ்விகள் பெரும் பாலும்  அனைந்துண்ணிகல் அல்லது  படிவுண்ணிகள்
சதுப்புவனக் கரிம பொருள்களை மட்டும் பொருளாக மாற்றுவதில் பொரும் பங்கு  கொள்ளூம் நுண்ணுயர், உருளைபுழுக்களும்,கோடிபாடுகளூம், மண்ணில் காணப்படும் பூஞ்சைகளும்,பாக்டீரியாக்களூம் பெரிய விலங்குக்கு  அடிப்படையான உணவுப்பொருளாக அமைகின்றன.சேற்றில் உள்ள நீரிலிருந்து உயிரிணங்களை வடிகட்டி உண்டு வாழ்கின்ற பெரும் விலங்கான  புல்சுனைப் புழுக்கள், பட்டானிப்புழுக்கள், இருஒடுடலி முதலியனவைகள் ஆகும்.
தாழ்வான இடக்களில் காணப்படும் நீர்த்தாரைகள் எப்போதும் ஈரமான சுற்றுச்சுழலில் காணப்படுவதாலும், சேறு நீர் நிரம்பியிருப்பதாலும்  இப்பகுதியில் அளவில் பெரிய நத்தைகளும், அளவில் சிறிய சிவப்பு நிற நத்தை, நண்டுகள், இருஒடுடலியாக்களும் தாவர மிதவை உணவுகளை உண்டு வாழ்கின்றன. மட்கும் பொருட்களை உண்டு வாழும் வாளை மீன்,செம்மீன்கள் ஆகும்.பெரிய மீன்கள் நத்தைகளையும் ,நண்டுகளையும்  உணவாக உட்கொள்கின்றன.மேலும் விலங்கு மிதவிகளும் பாசிகளும் தாவர மிதவைகளும்  உணவாக உட்கொள்கின்றன.
மாமரத்தின் மலர்களை நாடி வரும் வான் கூரைப் பறவைகள் வெளவால்கள்,குரங்குகள் மற்றும் பூச்சிகள் அவ் மரங்களை இல்லமாக வைத்துக் கொள்கிறது.கழுகுகளும்,கருடங்களும் இங்கு கூடுகட்டுகின்றன.பறக்கும் நரி எனப்படும் வவ்வாள் இங்கு இனப்பெருக்கம் செய்து வாழ்கின்றன.இவைகள் மரங்களில் உள்ள இலைகளையும்,பூக்களையும்,காய், கனிகளையும் உணவாக உண்டு வாழ்கின்றன.. பல வை வண்டுகளும், எறும்புகளும் தாவரங்களின் இலைகளை மென்று தின்கின்றன.. மின்,மினிப்பூச்சிகளும் இத்தாவரத்தை நம்பி வாழ்கின்றன.
இப் பகுதியில் உணவுக்காகவும்.,தங்குவதற்காகவும் வரும் விலங்குகளின் எண்ணிக்கை ஏராளம்.புலி ,காட்டுப்பன்றி, கரடி, மரநாய்,புனுகுபூனை,குரங்கு, பருந்து,கொக்கு, வெளவால், மரம் கொத்தி,அரனைகள்,சிலத்திகள், பூச்சிகள் ஆகும்
ஆபத்தை விளைவிக்க கூடிய விலங்குகளும் அன  பாம்பு,முதலை,புலி,சிங்கம்,சிறுத்தை,சிம்மம்,முதலியவையும் உண்டு வாழ்கின்றன. எண்ணற்ற விலங்குகள்  மான், கோழை ஆடு போன்றவை மனிதனுக்கு தீங்க்கு விளைவிக்க தக்கவை மேலும் உணவாக பயன் படுத்தப்ப்டுகிறது.
தாவரம் நுண் உயிர், மெல்லுடலிகள்,சிறு சந்துக்கள், பூச்சிகள், பறவைகளும்,ஊர்வன,மிருகங்கள் ஆகியவைகள் தாவரங்களையும், சிறு உயிர் இனங்களையும் உண்டு வாழ்வியல் நடந்து கின்றன.விலங்கு இனத்தில் இருந்து கிடைக்கும்  புரோட்டின் பெரும்பகுதி மனிதனுக்கு கிடைக்கிறது.முட்டை,பால், இறச்சி ஆகியவற்றில் இவ் புரோட்டின் சக்தி மிகவும் கூடுதலாக உள்ளது.ஆகவே தாவரம்,விலங்கு-மனித சமுதாயம் ஒன்றுடன் ஒன்று சார்பு வாழ்க்கை நடந்தி வருகிறது.
தாவரங்களின்  பூங்கள், இலைகள்,காய்,கனி,மற்றும் இதரப்பொருள்கள் மனிதன் உடல்வளர்ச்சிக்கு இன்றியமையாததாகவும் உள்ளது.நாம் அன்றாட உணவில் தெரிந்தோ தெரியாமலோ நமக்கு தேவையான சக்திகள் அவ் தாவர , விலங்க்குகளில் இருந்து  பொறுகிறோம்.
இயற்கை-தாவரம்-விலங்கு-மனிதன் ஆகியவைகளின்  வாழ்வியல் பெரும் பங்கு கொள்வது இடமும்,காலமும்தான், காலநிலையின் தட்ப வெப்ப நிலையும்-பருவகால சுழற்சியும்,வான்வெளி இயற்க்கை யும் தான் நிர்நிற்கப்படுகிறது.இவர்களது வாழ்வு மலர இயற்க்கை சாதகமான சுழ்நிலை இருந்தால் மட்டுமே சாத்தியம்.ஒளி,காற்று,நீர், நில வலிமை மற்றும் உயிர்சக்தியாக வளங்குகிறது. ஆனால் இயற்க்கையின் சீற்றத்தாலும், மனித இனபெருக்கத்தாலும்  இயற்கை சூறையாடப்படுகிறது.
இயற்கையொடு பொருத்தி வாழும் மக்களின் உணர்ச்சிகளிலும்-இன்பதுன்பங்களிலும் இயற்கை பங்கு கொண்டதாக புலவர்கள் பாடியது கற்பனை களஞ்சியம் ஆகும். சங்ககாலத்து   புள்நிமித்தம் பார்த்தல்,விரிச்சிகேட்டல்-விருந்து வர காகம் கரைதல்,முதலியவைகளும், இடைக்காலத்து மஞ்சு விடும் தூது,கிள்ளை விடுதூது முதலியனவும் இதற்கு எடுத்து க்காட்டு,இயற்கை நிகழ்சிகள் சிறப்பாக்குகின்றன.
மட்கள் வாழ்க்கையில்  நேர்விக்கும் துன்ப நிகழ்ச்சிகளை முன் கூடியே அறிவுத்தது இயற்க்கை. சிலம்பு விற்க்க சென்ற கோவன்  கொலையுண்ணப்போகிறான்  என்ற துன்ப செய்தியை ஆயர்பாடியில் இயல்பாக நிகழும் நிகழ்ச்சிகள் மாறாக திரிந்து அறிவித்தன. குடத்தில்ல் பால் தோயவில்லை,எருதுகளின் கண்கள் காரணமின்றி  கண்ணீர் விட்டன.,உருகவைத்த வெண்ணை உருகவில்லை,கன்றும் குட்டிகளும் காலையில் துள்ளி விளையாடவில்லை.,பசுக்கள் நடுங்கின,அவிப்பாரின்றி அவற்றின் கழுத்து  மணி கழன்று விழுத்தன.
என ஆயர்படி மக்கள் தெரிவிக்கின்றன.

தியானத்தின் திறவு கோல்

தியானத்தின் திறவு கோல்

ஆக தியானம் என்பது ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டு இருந்தால் அது எப்படிப் பேருண்மையைத் தொட முடியும்?.  இந்த வின எழுவது இயற்கை.ஐம்புலங்களின் பல்வேறு அலைக்கழிப்புகளிலிருந்து மீண்டும் ஆதாரமான ஒரு சக்தியைத் தேடி ஒடிவரும் மனசுக்கு.   தியானத்திலேயே இப்படிப் பல வேறுபாடுகள் இருப்பது மேலும் மருச்சியைத்தான் அளிக்கும். எந்த பாதையை தேர்த்து எடுப்பது என்ற ஐயத்தில் சித்தம் குழம்பி பழைய அலைபாயும் நிலையே மேல் என்று திரும்பி ஒடச்செய்யும்.
எல்லா பாதைகளும் ரோமபுரிக்கே கொண்டு செல்கின்றன என்பது பழமொழி.ரோம் சாம்ராஜ்யத்தின் ஆதிக்க வல்லமையையும் அதிகாரத்தையும் குறிக்கும் பழமொழிதான் அது என்றும் அதில் ரோமபுரி என்ற சொல்லை நீக்கிப் பரபிரமம் என்ற சொல்லை போட்டுவிட்டால் அந்த பழமொழி சரி. ஆம் தியானத்தின் எல்லா பாதைகளும் நம்மை பரம்பொருள் அல்லது மொய்ப்பொருளிடமே அழைத்து செல்கின்றன.

உயிர் சக்தி-


உயிர் என்பது ஆன்மா-ஜீவன்- என்று பலவாறாக அழைக்கிறோம். இதன் ஆற்றல் பெறிது.அதை நீங்கள் உண்டாக வில்லை. உண்டாக்கவும் முடியாது.அது நாம் பிறக்கும் போது இருந்து இருக்கிறது.இதைத்தான் இது நாள் வரை மனம் என்று எண்ணியிருந்து கொண்டுயிருகிறேர்கள்.அது தவறு. உயிர் என்பது வேறு.மனம் என்பது வேறு. உயிர் விபுவாக இருக்கிறது. மனம் சற்று வஸ்துவாக இருக்கிறது.
 நீங்கள் தனிமையில் உட்கார்ந்து உங்களிடமே கேள்வி கேளுங்கள்.உங்கள் மனதின் எண்ணங்கள் அனைத்தும் எவ்வளவு தூரம் கடன் வாங்கப் பட்டவை என்றும.அவை எவ்வளவு பொய்மையானது என்பதும் மெல்ல புரிய ஆரம்பிக்கும்.பலப்பல எண்ணங்கள் புற்றீடல் போல் கிளம்பி மேலே வரும். அவற்றை பயப்படமால் அப்படியே பாருங்கள். கவனியுங்கள். இவையெல்லாம் என்கிருந்து வருகின்றன என்று ஆராயுங்கள். அப்பொழுது அவற்றுடைய ஆரம்பம் எங்கே என்பது புரியும். பல கருத்துக்கள்,உங்கள் தாயாரிடம் இருந்து வந்தவையாக இருக்கும். சில கருந்துகள் தந்தையிடம் இருந்தும்,பள்ளி ஆசிரியர்கள், நண்பர்கள் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும்.,இதையெல்லாம் கவணியுங்கள்.
இவற்றில், எதுவுமே உங்களுடையதாக இருக்காது என்பதை அறிந்து ஆச்சிரியப்படுவீர்கள்! ஒருசதவீதம் கூட இருக்காது!  உங்களைப் பற்றிய அடையாளம் இதுவென்றால் இதைப்பற்றி சொல்ல என்ன இருக்கிறது?. நாம் பிறரிடமிருந்து சேகரிக்கும் அபிப்பிராயம் ஒரு தனித் தகுதியை (personality). உண்டாக்கும்.இந் தனித்தகுதி என்பது சமூகம் அங்கீகரித்தது, அது பொய்மையை அடிப்படையாக கொண்டது.
இந்த சமூகம் எப்படி பொய்மையில் வளர்ந்து வந்திருக்கிறது என்பதை ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய தாயார்,தகப்பனார் மற்றும் உறவினர்கள் எல்லாம் இந்த சமூகப் பொய்மையில் அடிமையாக வாழ்ந்தவர்கள், அதைப்போலவேதான் அவர்களது தாயார், தகப்பனார் மற்றும் உறவினர்கள் அனைவரும் அடிமையாக வாழ்ந்தார்கள்.இந்த அடிமைத்தனத்தைதான் உங்களுடைய பொற்றோர்கள்,உங்களிடம் திணிக்க முற்ப்டுகிறார்கள்,நாளை இதைத்தான்,நீங்கள் உங்கள் பிள்ளையிடம் திணிக்கப்போகிறீர்கள்.ஏனனில் இந்த உலகம் போட்டியும்,பொறமையும் நிறைந்தது.நீங்கள் எப்பொழுதும் போராடும் தன்மையில் இல்லாவிட்டால் எப்படியும் முன்னேற வேண்டும்,ஜெயிக்க வேண்டும் என்ற குணம் பெற்று இருக்காவிட்டால்,உங்களால் இந்த உலகத்தில் நல்ல விதமாக வாழமுடியாது என்று உங்களூடைய நாகரிக படிப்பும்,மனநல வைத்தியர்களும் வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.உங்கள் மனம் வலுவுற்றதாக,எதையும் எதிர்க்கும் தன்மையில் இருக்க வேண்டும்..சிறிய வயதில், நீ உன் வகுப்பில் முதன்மையாக வரவேண்டும் என்று அடிக்கடி ஊக்கப்டுத்துவதாக எண்ணி அவர்களது அகங்காரத்தை வலுப்ப்டுத்துகிறோம்.நீங்கள் மிகவும் அடக்கமானவராக இந்த அகங்காரம் இல்லாமல் இருந்தால் இந்த உலகம் உங்களை மூலைக்கு தள்ளிவிடும்.
இப்படி ஒரு சமூகம் பொய்மையிலும்,மூடக் கொள்கையிலும்,மற்றும் அடிமைத்தனத்திலும் வாழையடி வாழையாக சென்று கொண்டுயிருந்தால், ஒரு தனிமனிதன் தன்னைப்பற்றி உணமையாக எப்பொழுது எப்படி அறித்து கொள்வது?.
நல்ல அறிவுள்ள, புத்திசாலிமிக்க பெற்றோர்கள் இந்த போலியான அடையாள அட்டையைப் பற்றித் தெளிவாக,நம் குழத்தைகளுக்கு உரிய வயதில் எடுத்து சொல்வார்கள்,அது அவசியம் அவர்கள் ஆமாம் இது போலியானதுதான்.உங்களை இந்த உலகத்துக்கு அடையாளம் காட்டதான் இதை தற்காலிகமாக வழங்கி இருக்கிறோம்.,ஆனால் இதுவே உண்மையள்ள இது ஒரளவுக்குத்தான் உதவியாக இருக்கும். உண்மையில் உங்களது தனிப்பட்ட அடையாளத்தை நீங்களேதான் உங்கள் உள்ளே சென்று கண்டுபிடிக்கவேண்டும்.அதுதான் உங்களது உண்மையான அடையாளம் என்று தெளிவாக சொல்லவேண்டும்.
உங்கள் உண்மையான தன்மையை நீங்கள் உங்கள் உள் உணர்வாக புரிந்து கொள்வதுதற்கான ஒர் ஏற்பாடுதான் தியானம்.அதனுடன் தான்  நீங்கள் பிறந்தேர்கள்.உங்கள் மனதை உண்டாக்கியது போல் அதை நீங்கள் உண்டாக்கவில்லை உண்டாக்கவும் முடியாது.அதை நீங்கள் இப்பொழுது தேடிக்கண்டுபிடிக்க வேண்டும்.
நீங்கள் உங்கள் உள்ளே செல்லும் யாத்திரை என்பது அந்த தனிமையைத் தேடி செல்லும் யாத்திரைதான்.அப்பொழுது நீங்கள் யாரையும், எந்த கொள்கை கோட்பாடுகளையும்,மத சட்ட திட்டங்களையும் உங்களுடன் எடுத்து செல்ல முடியாது. உங்கள் அன்பிற்கு உரிய மனைவி அல்லது காதலி கூட உங்களுடன் வர முடியாது. நீங்கள் எப்பொழுது உள்ளே செல்ல  காலடியை எடுத்து வைக்கிறீர்களோ அப்பொழுது உங்களூடிய வெளிதொடர்பு அனைத்தும் உங்களை விட்டு அகலுகின்றன.உண்மையில்,இந்த உலகமே மறைந்து விடுகிறது.இந்த உலகம் பொய் என்று அர்த்தம் இல்லை. இதில் உள்ள ஒவ்வொரு பொருளூம் உண்மையே. ஆனால்,தியானத்தில் ஆழ்ந்து தன் உள்ளே செல்பவனுக்கு,இந்த உலகம் மறைந்து விடும்.அந்த ஆழ்ந்த அமைதியான நிலையில்,இந்த உலக உருவங்களோ அல்லது சப்தங்களோ ஊடுருவ முடியாது. ஆனால்,அந்த அமைதியான நிலைக்கு நீங்கள் செல்ல,உங்களுக்கு மிகவும் தைரியம் வேண்டும்.அந்த ஆழமான அமைதியில் இருந்து அந்தபேராணந்தம் சொர்க்கம் அனைந்தும் வெளிப்படுகின்றன.அதுதான் கடவுள் தன்மை அனுபவம்.
உங்கள் உள்ளே உள்ள உயிர்ச்சக்தி மேலே கிளம்பி,தன் மையத்தை அடையும்பொழுது,அதில் எந்த சலனமும் இருக்காது.அதுதான் நீங்கள் ஆத்மீகத்தில் அடைய வேண்டிய முடிவான தன்மை.அந்தன்மையை அடைவதற்கு தியானம் மிகவும் அவசியம் .ஓஷோ அவர்கள் தியானம் என்ற புத்தகத்தில் விரிவாக எளிமையாக பல தியான முறைகளை சொல்லியிருக்கிறார்.



உயிர் சக்தி-


உயிர் என்பது ஆன்மா-ஜீவன்- என்று பலவாறாக அழைக்கிறோம். இதன் ஆற்றல் பெறிது.அதை நீங்கள் உண்டாக வில்லை. உண்டாக்கவும் முடியாது.அது நாம் பிறக்கும் போது இருந்து இருக்கிறது.இதைத்தான் இது நாள் வரை மனம் என்று எண்ணியிருந்து கொண்டுயிருகிறேர்கள்.அது தவறு. உயிர் என்பது வேறு.மனம் என்பது வேறு. உயிர் விபுவாக இருக்கிறது. மனம் சற்று வஸ்துவாக இருக்கிறது.
 நீங்கள் தனிமையில் உட்கார்ந்து உங்களிடமே கேள்வி கேளுங்கள்.உங்கள் மனதின் எண்ணங்கள் அனைத்தும் எவ்வளவு தூரம் கடன் வாங்கப் பட்டவை என்றும.அவை எவ்வளவு பொய்மையானது என்பதும் மெல்ல புரிய ஆரம்பிக்கும்.பலப்பல எண்ணங்கள் புற்றீடல் போல் கிளம்பி மேலே வரும். அவற்றை பயப்படமால் அப்படியே பாருங்கள். கவனியுங்கள். இவையெல்லாம் என்கிருந்து வருகின்றன என்று ஆராயுங்கள். அப்பொழுது அவற்றுடைய ஆரம்பம் எங்கே என்பது புரியும். பல கருத்துக்கள்,உங்கள் தாயாரிடம் இருந்து வந்தவையாக இருக்கும். சில கருந்துகள் தந்தையிடம் இருந்தும்,பள்ளி ஆசிரியர்கள், நண்பர்கள் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும்.,இதையெல்லாம் கவணியுங்கள்.
இவற்றில், எதுவுமே உங்களுடையதாக இருக்காது என்பதை அறிந்து ஆச்சிரியப்படுவீர்கள்! ஒருசதவீதம் கூட இருக்காது!  உங்களைப் பற்றிய அடையாளம் இதுவென்றால் இதைப்பற்றி சொல்ல என்ன இருக்கிறது?. நாம் பிறரிடமிருந்து சேகரிக்கும் அபிப்பிராயம் ஒரு தனித் தகுதியை (personality). உண்டாக்கும்.இந் தனித்தகுதி என்பது சமூகம் அங்கீகரித்தது, அது பொய்மையை அடிப்படையாக கொண்டது.
இந்த சமூகம் எப்படி பொய்மையில் வளர்ந்து வந்திருக்கிறது என்பதை ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய தாயார்,தகப்பனார் மற்றும் உறவினர்கள் எல்லாம் இந்த சமூகப் பொய்மையில் அடிமையாக வாழ்ந்தவர்கள், அதைப்போலவேதான் அவர்களது தாயார், தகப்பனார் மற்றும் உறவினர்கள் அனைவரும் அடிமையாக வாழ்ந்தார்கள்.இந்த அடிமைத்தனத்தைதான் உங்களுடைய பொற்றோர்கள்,உங்களிடம் திணிக்க முற்ப்டுகிறார்கள்,நாளை இதைத்தான்,நீங்கள் உங்கள் பிள்ளையிடம் திணிக்கப்போகிறீர்கள்.ஏனனில் இந்த உலகம் போட்டியும்,பொறமையும் நிறைந்தது.நீங்கள் எப்பொழுதும் போராடும் தன்மையில் இல்லாவிட்டால் எப்படியும் முன்னேற வேண்டும்,ஜெயிக்க வேண்டும் என்ற குணம் பெற்று இருக்காவிட்டால்,உங்களால் இந்த உலகத்தில் நல்ல விதமாக வாழமுடியாது என்று உங்களூடைய நாகரிக படிப்பும்,மனநல வைத்தியர்களும் வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.உங்கள் மனம் வலுவுற்றதாக,எதையும் எதிர்க்கும் தன்மையில் இருக்க வேண்டும்..சிறிய வயதில், நீ உன் வகுப்பில் முதன்மையாக வரவேண்டும் என்று அடிக்கடி ஊக்கப்டுத்துவதாக எண்ணி அவர்களது அகங்காரத்தை வலுப்ப்டுத்துகிறோம்.நீங்கள் மிகவும் அடக்கமானவராக இந்த அகங்காரம் இல்லாமல் இருந்தால் இந்த உலகம் உங்களை மூலைக்கு தள்ளிவிடும்.
இப்படி ஒரு சமூகம் பொய்மையிலும்,மூடக் கொள்கையிலும்,மற்றும் அடிமைத்தனத்திலும் வாழையடி வாழையாக சென்று கொண்டுயிருந்தால், ஒரு தனிமனிதன் தன்னைப்பற்றி உணமையாக எப்பொழுது எப்படி அறித்து கொள்வது?.
நல்ல அறிவுள்ள, புத்திசாலிமிக்க பெற்றோர்கள் இந்த போலியான அடையாள அட்டையைப் பற்றித் தெளிவாக,நம் குழத்தைகளுக்கு உரிய வயதில் எடுத்து சொல்வார்கள்,அது அவசியம் அவர்கள் ஆமாம் இது போலியானதுதான்.உங்களை இந்த உலகத்துக்கு அடையாளம் காட்டதான் இதை தற்காலிகமாக வழங்கி இருக்கிறோம்.,ஆனால் இதுவே உண்மையள்ள இது ஒரளவுக்குத்தான் உதவியாக இருக்கும். உண்மையில் உங்களது தனிப்பட்ட அடையாளத்தை நீங்களேதான் உங்கள் உள்ளே சென்று கண்டுபிடிக்கவேண்டும்.அதுதான் உங்களது உண்மையான அடையாளம் என்று தெளிவாக சொல்லவேண்டும்.
உங்கள் உண்மையான தன்மையை நீங்கள் உங்கள் உள் உணர்வாக புரிந்து கொள்வதுதற்கான ஒர் ஏற்பாடுதான் தியானம்.அதனுடன் தான்  நீங்கள் பிறந்தேர்கள்.உங்கள் மனதை உண்டாக்கியது போல் அதை நீங்கள் உண்டாக்கவில்லை உண்டாக்கவும் முடியாது.அதை நீங்கள் இப்பொழுது தேடிக்கண்டுபிடிக்க வேண்டும்.
நீங்கள் உங்கள் உள்ளே செல்லும் யாத்திரை என்பது அந்த தனிமையைத் தேடி செல்லும் யாத்திரைதான்.அப்பொழுது நீங்கள் யாரையும், எந்த கொள்கை கோட்பாடுகளையும்,மத சட்ட திட்டங்களையும் உங்களுடன் எடுத்து செல்ல முடியாது. உங்கள் அன்பிற்கு உரிய மனைவி அல்லது காதலி கூட உங்களுடன் வர முடியாது. நீங்கள் எப்பொழுது உள்ளே செல்ல  காலடியை எடுத்து வைக்கிறீர்களோ அப்பொழுது உங்களூடிய வெளிதொடர்பு அனைத்தும் உங்களை விட்டு அகலுகின்றன.உண்மையில்,இந்த உலகமே மறைந்து விடுகிறது.இந்த உலகம் பொய் என்று அர்த்தம் இல்லை. இதில் உள்ள ஒவ்வொரு பொருளூம் உண்மையே. ஆனால்,தியானத்தில் ஆழ்ந்து தன் உள்ளே செல்பவனுக்கு,இந்த உலகம் மறைந்து விடும்.அந்த ஆழ்ந்த அமைதியான நிலையில்,இந்த உலக உருவங்களோ அல்லது சப்தங்களோ ஊடுருவ முடியாது. ஆனால்,அந்த அமைதியான நிலைக்கு நீங்கள் செல்ல,உங்களுக்கு மிகவும் தைரியம் வேண்டும்.அந்த ஆழமான அமைதியில் இருந்து அந்தபேராணந்தம் சொர்க்கம் அனைந்தும் வெளிப்படுகின்றன.அதுதான் கடவுள் தன்மை அனுபவம்.
உங்கள் உள்ளே உள்ள உயிர்ச்சக்தி மேலே கிளம்பி,தன் மையத்தை அடையும்பொழுது,அதில் எந்த சலனமும் இருக்காது.அதுதான் நீங்கள் ஆத்மீகத்தில் அடைய வேண்டிய முடிவான தன்மை.அந்தன்மையை அடைவதற்கு தியானம் மிகவும் அவசியம் .ஓஷோ அவர்கள் தியானம் என்ற புத்தகத்தில் விரிவாக எளிமையாக பல தியான முறைகளை சொல்லியிருக்கிறார்.

குண்டலிக சக்தியின் பயன்

குண்டலிக சக்தியின் பயன் 

குண்டலிக சக்தியை எழுப்புவது எப்படி

குண்டலிக சக்தியை எழுப்புவது எப்படி 

நோக்கம் சித்தர் தானா

நோக்கம் சித்தர் தானா 

முக்தி அல்லது மோட்சம்

முக்தி அல்லது மோட்சம் 

உணர்வு நிலைகள்

அவத்தைகளை பற்றியும் அவற்றோடு மனதின் இயல்பாடுகள்
பற்றி  கண்டறிவோம்.
அவஸ்தை என்கிற  வடமொழி சொல்லே தமிழ் ஆக்கப்பட்டு அவத்தை என்று அழைக்க படுகிறது ..இச் சொல்லின் நேர் பொருள் உணர்வின் பரிமானங்கால்  எனலாம்.இவ் உணர்வு நிலைகளை  மூன்று விதமாக பிரிக்கலாம்.
வ்ழித்திருதல் ,கனவோடு கூடிய உறக்கம் ,கனவற்ற ஆழ்ந்த உறக்கம், என்பது நமக்கு தெரிந்த ஒன்று . 
இதை பதஞ்சலி  முனிவர் ஐந்து ஆக பிரிக்கிறார்
  • விழித்திருதால் -ஜாக்ரதா 
  • கனவோடு கூடிய உறக்கம்-ஸ்வெப்னா
  • கனவற்ற ஆழ்ந்த உறக்கம் -சுகப்தி 
  • தவநிலை -துரியம் 
  • தவத்தின் உயர்ந்த நிலை -துரியாதீதம்
  • திருமந்திரம் அருளிய திருமூலர்  இந்த ஐந்து நிலைகளை மேலும்  நுன்னிலை படுத்தி பதினாறு படிகளாக  விளக்குகிறார்.முதல் நான்கு உணவுகளில் ஓர் உணர்வின் நிலையிலிருந்து அடுத்த படிக்கு செல்லுகின்றபோது இடையில் ஒன்றுடன் ஒன்று கலந்து நிற்பதால் இந்த நுண்ணிய உணர்வு  நிலைகள்  தோன்றுகின்றன
  • நனவில் நனவு 
  • நனவில் கனவு 
  • நனவில் சுகப்தி 
  • நனவில் துரியம் 
நனவில் நனவு :-
விழித்து இருந்து ஆர்வத்தோடு ஒரு காரியத்தில் இடுபடுகின்றபோது புலன்கள் அனைத்தும் ஒரு முகபடுத்தபட்டு ஈடுபடுபதால்
அருகில் என்ன நடந்தாலும் தெரியாது.முழு கவவத்தொடு ஈடுபடல் நனவில் நனவு  எனப்படும் .
உதாரணம்  : சோதனை சாலையில் ஆயிநது உண்மைகளை கண்டறிய விஞ்ஞானிகள்  முற்படுகின்ற போதும் ,தொலைகாட்சி தொடரில் முழ்கி வீட்டில்  கண் எதிரே  திருடன்  திருடுவதை அறிய  இயலாதிருக்கும் நிலை
அதாவது தேர்ந்துடுத்த காரியத்தில் மட்டும்  கண்ணும் கருத்துமாய்  இருப்பது நனவில் நனவு .

நனவில் கனவு :-
ஒரு செயலில்  ஈடுபடுகின்ற போது  தன்கவனத்தை விட்டு இடை இடையே மற்ற  காரியத்தில் மனம் செல்லல்
உதாரணம் :- பள்ளியில் படிக்கும்போது ஆசிரியர்  கூறுவதை இடையிடையே கவனிப்பது  போன்றது.
நனவில் சுகப்தி :
செய்ய வேண்டிய காரியத்தில் மனதை முழுதாக ஈடுபடுத்தாமல் முற்றிலும் புற நிகழ்ச்சியில் மனம் நாட்டம் கொள்ளுதல் .
உதாரணம் ; ஆசிரியர் பாடம் நடத்தும் போது அதை கவனிக்காமல்  எங்கோ ஒலிக்கும் பாட்டை கேட்டு கொண்டு இருத்தல் . என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யமால் முற்றிலும் வேறு ஒரு காரியத்தில் மனதை ஈடுபடசெய்தல்
நனவில் துரியம் :-
விழித்திருந்து நாம் தியானத்தில் ஈடுபடுகின்ற போது உண்டாகும் போது உண்டாகும் ஓர் அற்புதமான சுக அனுபவம் இதையே திருமூலர்

 "துரியம் இருப்பது சாக்கிரத்துள்ளே  நரிகள் பதினான்கும் நஞ்சுண்டு செத்தன.பாரிய புரவியும்  பாரிபறத்தது.துரியம் இறந்திட செல்ல ஒண்ணாதே"
அதாவது மெய் வாய் கண் ,மூக்கு,செவி  ஆகிய ஐந்தும் சுவை ,ஒளி,ஊறு,ஓசை ,நார்ற்றம், என்ற ஐந்தும் மனம் புத்தி ,சித்தம் ,அகங்காரம் என்ற அந்த கரணங்கள்  நான்கும ஆக மொத்தம் பதினான்கு தத்துவங்களும்  செயல்படாமல் போகும் .
ஒரு விநாடி நாம் கரைந்து விட்டதோர் அனுபவத்தோடு தன்முனைப்பு மட்டும் தனித்து நிற்கும் .அவ்வேளையில் மூச்சும் ஓடிக்கிவிடும .(பயப்படதிர்கள் இவ் வேளையில் செத்து போயி விட மாட்டம் .கண்களை மூடுகின்ற போது தெரியும் காரிருள்  மாறி மயில் கழுத்தின் நிறத்தை போன்ற நிறத்தை தோற்டுவிக்கும்.இந்த அழகு மிக்க நிறத்தில் மயங்கிய பதினான்கு தத்துவங்களும்  செயல் படாமல் போவதை நஞ்சுண்டு  இறந்துபோயிவிட்டது  என்று நகைசுவை யாக koorukiraar
  • கனவில் நனவு 
  • கனவில் கனவு 
  • கனவில் சுகப்தி 
  • கனவில் துரியம் 
கனவில் நனவு :உறங்குகின்ற போது காணும் கனவை நன்கு கவனித்து விழித்த பிறகு முழு கனவையும் விடாது கூற முடிந்தால் நாம் உறக்கத்தில் இருந்த நிலைக்கு பெயர் தான் கனவில் நனவு 

ஆன்மா ஒன்று இருப்பதை எப்படி நப்புவது

உடம்பும் இடைவிடாமால் மாறுதல் அடைந்து கொண்டுயிருக்கிறது.மனமும் இடைவிடாமல்  மாறுதல் அடைந்து கொண்டுயிருக்கிறது.எனினும் நாம் மாறாமல் தொடர்ந்து இருக்கிறோம் என்ற உணர்சி நம்மிடம் இருக்கிறது. மாறாத ஒரு பெருள் நம்முள் இருந்து கொண்டு அந்த உணர்சியைக் கொடுக்கிறது.ஒளியின் கிரணங்கள் பல திசைகளிலிருந்து வந்து ஒரு திரை அல்லது சுவர் அல்லது மாறாத வேறு ஒரு பொருளின் மீது விழும்போது மட்டுமே  அவை ஒன்று சேர்ந்து  ஒர் உருவத்தை உண்டாக்க முடியும்.,மனிதனிடம் கானும் இந்த மாறுதல்களுக்கிடையில் இவற்றை ஒன்று சேர்பது எது?.அந்த நிலையான பொருள் மனமாக இருக்க முடியாது. ஏனனில் அதுவும் மாறுதல் அடைந்து கொண்டே இருப்பதை நாம் பார்கிறோம்.உடலும் நிமிடந்துக்கு நிமிடம் மாறுதல் அடைகிறது. ஆதலால் உடலையும் மனதையும் தவிற வேறு எதோ ஒன்று என்றும் மாறததாக நித்தியானந்தமாக, இந்த உணர்சிகளை ஒற்றுமைப் படுத்திகொண்டுயிருக்க வேண்டும். அதைதான் மனிதனின் ஆன்மா என்று சொல்கிறோம்.
ஆன்மா -ஜீவன் பிறக்கும் முன் எங்கு இருந்தது

நாம் எங்கு இருக்கிறோம்

நாம் எங்கு இருக்கிறோம்


வருத்தம்,வேதனை,கண்ணிர், கவலை, வெறுப்பு, விரோதம்,குரோதம் எல்லாம் மனம் முழுக்க நிறைந்து இருக்கிற்றன. சந்தோஷம் மட்டும் ஏழு உலகில் தேடியும் கிட்டாத அபூர்வ பொருளாக இருக்கிறது.நழுவும் கானல் நிராக கைக்குஸ் சிக்காத காற்றாக இங்கே அங்கே இதோ,அதோ என எல்லோருக்கும் போக்கு காட்டுவது சந்தோஷம்.
குழந்தைக்கு சாக்லேட், பள்ளி குழந்தைக்கு ஒரு பென்சில், பதின் பருவத்தில் விளையாட்டு சாமங்கள், மீதிவண்டி , கல்லுரி வயதில் ஊர் சுற்றுதல், திரைப்படம், நாண்பர்கள் கூட்டம், காதல் திருமணம், நடுத்திரவயதில் வீடு, வாகணம்,பண உயர்வு, முதிய வயதில் நிம்மதியான ஒய்வு,இப்படியாக பருவம் தோறும் உருவம் மாறுவது சந்தோசத்தின் இயல்பு.
வாழக்கிடைக்கும் ஒவ்வோரு வினாடியும் சந்தோஷத்தை அடையாளம் கண்டு நழுவ விடாமல் சிக்கெனப் பிடிக்கும் இயல்பு அவசியம். ஒவ்வொரு வினாடியும் பெரும் புதயலைப் போல் சொர்க்க மகிழ்வோடு அனுபவித்து  வாழவேண்டும்.
கண்ணிரும்,கம்பலையும்,அழுகையும்,ஆற்றாமையுமே நிழலாய் நம்மைத் தொடர்ந்தால் தான் என்ன்?.நாம் அவற்றுக்கு அடிமையாகி சேவகம் செய்து அதன் கட்டுப்பாட்டில் -மனநிம்மதி தொலைத்தால் அவை நம்மை வெற்றி கொண்டதாகிவிடும்.
சோகம் என்னைத் தின்றுவிட அனுமதிக்க மாட்டேன்.கண்ணிர் என்னை கொன்றுவிட அனுமதிக்க மாட்டேன்.வருந்தம்,வேதனையும் என்னை வென்றுவிட அனுமதிக்க மாட்டேன் என்கிற மன உறிதியை இயல்பானதாகக் கொண்டால் கண்ணீர் கான்ல் நீராகலாம்.சறுக்கி விழாமல் சாதனைப் படி ஏறலாம்.
தீராத பிரச்சனை என எதுவுமே கிடையாது. தீர்வு இல்லாத துன்பம் என எதுவுமே கிடையாது.பிரளியமே வந்தாலும் கலங்காதிரு மனமே என மனசுக்கு சொல்லித்தரவேண்டும்.துண்பசுழலில் சிக்கினாலும் வருத்த சுழலில் வாழ்ந்தாலும் என்ன? முகத்திலும் கண்ணீறும் ,சிறிப்பும் மனசிலும் துயர சாயம் இல்லாமல் வாழப்பழக்க வேண்டும்.நாளையும் விடியும் என்கிற நிச்சியமான மனோ நிலையைக் கையகளப்படுத்த வேண்டும்.
பிரச்சனைகள் தான் நம் ஆசிரியர்கள்,அவைதான் அனுபவம் என்னும் பொக்கிஷம் தரும் இலவச போதிமரம். அவைதான் பட்டறிவு விதைக்களமாகும்.
துன்பத்துலும் இன்பம் கானுதல். சறுக்காமலும் சந்தோஷம் பேனுதல், இருட்டிலும் வெளிச்ச வேர் தேடுதல் என மனசை பக்குவப்படுத்தலே தவம். காடுமலை ஏறாமல், காஷாயம் குடிக்காமல்,மக்களோடு மக்களாயிருந்து புரிகின்ற தவம் இது.பிரச்சனையைத் தீர்க்க முடியாமல் தப்பித்து தனிமையில் கூடுகட்டாமல் ஜனரஞ்ச வாழ்வில் இருந்து புரிகின்ற தவம் இது.
இன்னமும் சிறப்பான முன்னேற்றம் வேண்டும் என்பதின் கனவு வேறு. லட்சியம் வேறு.உயர்வு வேறு,வாழும் வாழ்வில் சந்தோஷமின்றி,திருப்தியின்றி இருத்தல் என்பது வேறு.
ஆனல் இன்றைய நடைமுறையில் கல்லுரி படிப்புக்கு பின்.சிறகடித்து பறக்கும் நேரம் ,கற்றவற்றை பகிரவோ,கற்றதை வைத்து பணிபுரிவதோ,வேலைதேடவோ,தொடங்கிய  வேளையும் தகுந்த வேளை யில்லை என்பதே உண்மை.இதுஒரு கேள்விக்குறி?. அதைத்தொடர்ந்து கற்றுத் தெரிந்தவர்,தெளிந்தவர் உள்ளத்தில் இழையோடும்  பயவுணர்வு,எதிர்பார்த்தது இல்லாத துன்ப் உணர்வு,பொருள்ளை ஈட்டமுடியாமை இவ் அவல நிலை கண்கூடாக தெரிகிறது . அவரைப் பெற்றவரும் இவைபோன்ற உருத்தலுக்கு ஆளாகாமல் இருக்க முடிவதில்லை.வயிற்ரைக் கட்டி வாயினைக்கட்டி சேர்து வைத்த செல்வத்தை கொண்டு பல்கலைப்பண்டிதனாய் மாற்ற நினைத்த தியாக உணர்வு விழலுக்கு இறைத்த நீரா?.
ஆனல் உண்மையில் கல்வியின் பணியும்,கல்வியின் உள்ளிருக்கும் திறங்களை வெளிக்கொனார்வதுதானே?. கல்வியின் நோக்கம். மானிடரை நிறைவு செய்து அறிவொளி தருவதனால் அவர்கள் நன்மைக்கும் , தீமைக்கும் இடைவெளிகளை அகற்றி வாழபயன் அளிப்பதுதானே?.அக கல்வி என்பது தன்னிலே பயனுற வாழப்பயன் அளிப்பதுதானே?.மாறாக கல்வி என்பது வேலைக்கு ஏற்ற வாய்ப்பு அல்ல. ஆனல் நடப்பது என்ன?. கல்வியின் பரந்து விரிந்த உட் பொருளானது குறுகிய வட்டதிற்க்குள் வைக்கப்படுவதால் வருகின்ற சிக்கல்கள் பெருத்த ஏமாற்ற உண்ர்வுகளுக்கு இட்டு செல்வதால் இருந்த சந்தோஷம் துழைத்து விட்டு நிற்கின்றனர். என்ன அவலம் பாரீர் .........
என்று தனியும் இந்த  அவல நிலை ?...........
பிறந்த இடம், குலப்பெருமை, வாழ்த்த வாழ்க்கை, படித்த படிப்பு, சுற்றிவந்த சுற்றத்தார்.வலையவந்த நட்பு, கற்ற பண்பு, ஆக எல்லாம் உதவாக்கரையாகிவிட்டது.
பொருள் இல்லாருக்கு இவ் உலகம்  இல்லை., அருள் இல்லாருக்கு அவ் உலகம் இல்லை என்பது பழமொழிபோல் பொருள் ஈட்ட தெரியாமல் தினறும் இளைக்ககன் நிலை என்ன?. இனி மறுபடியும் கீதை சென்ன ஆரம்ப நிலைக்குத்தான் வர வேண்டும். அது என்ன?....
இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு " பகவத்கீதையில் சொன்னது போல்-சுதர்மம் கடை பிடித்தல்"..இந்த சுதர்மம் என்றால் என்ன ?. இதை அடைய எங்கும் போகவேண்டியது இல்லை.இது தானகவே கிடைக்ககூடியது..
 நாம் புதிதாக இப்பூமியில்  வரவில்லை. நமக்கு முன் இவ்பரந்த பூமி இருந்தது.பெற்றோர் இருந்தனர்.அண்டை அயலார் இருந்தனர்......... இவ் ஜன சமுத்திரத்தின் இடையில்தான் பிறந்தோம், வளர்ந்தோம். நாம் நம் பெற்றோருக்கு செய்யவேண்டிய கடமை யுள்ளது.சமுதாயத்திற்கு ஆற்றவேண்டிய கடமையுள்ளது. ஆகவே இதுவே சுதர்மம். இந்த கடமை உணர்வு ஒவ்வொரு மனிதனிடம் பிரதிபலிக்க வேண்டும். அப்போது நாம் எங்கு இருக்கிறோம்  என்ற உணர்வு நமக்கு தெரியும்.இதுதான் ஆரம்ப நிலை. இதை முதலில் தேடிக்கண்டு பிடிக்க வேண்டும். எனக்குள் உள்ள உணர்வுதான் தர்மம். அதுதான் சுதர்மம்.நான் என் தம்பி, தங்கைகளுக்க்கு ஆற்ற வேண்டிய கடமை,பொற்றோர்களுக்கு செய்யவேண்டியது என தலை தூக்கும். இது எனக்குள் உள்ள  சுதர்மம் இதைநான் செய்ய  கடமைப்பட்டவன் ஆவேன்.. ஆனல் அதே தர்மம் இன்னெருவருக்கு இருக்க வேண்டும் என்பது இல்லை?. ஏன்னென்றால்  அவன் கூட பிறந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.,தந்தை நிறைய சொத்து சேர்த்து வைத்து இருப்பார். அவன் நிலை வேறு. அவன் சாதாரணமாக அன்றாட தேவைகளை மட்டும் அவன் கவனித்தால் போதும். ஆகவே ஒருவருக்கு இருக்கும் சுதர்மம் இன்னொருவர்க்கு இருக்க வேண்டும் என்பது இல்லை.
மீன்கள் வாழ்வது நீரில் தான். நீர் இல்லாமல் அது ஒரு கணம் கூட இருக்க முடியாது.ஆனால் நீரைவிட பால் உயர்ந்த பொருள். அதற்காக ஏ மீன்களே  நீரைவிட்டு பாலில் வாழுங்கள் என்றால் அதனால் உயிர் வாழமுடியுமா ?.  சூரியன்  அழகாக இருப்பதால் அதன் அருகில் செல்ல முடியுமா? முடியாது. சுட்டு  எரித்து விடும். ஆகவே பிறர்க்கு இருக்கும் சுதர்மம் . நமக்கு இருக்கப்வேண்டிய அவசியம் இல்லை.அடுத்தவரைப்பார்த்து வாழ நினைப்பது அரசனை நம்பி புருஷனை கைவிடுவதுபோல் ஆகும்.

உயிர்வாழ் மண்டலங்களின் முக்கிய பகுதிப்பொருட்கள்

உயிர்வாழ் மண்டலங்களின் முக்கிய பகுதிப்பொருட்கள் ஆக்சிஜன்,கார்பன்,ஹைட்ரஜன்,நைட்ரஜன், ஆகிய நான்கு தனிமங்களும்,இந் நான்கிற்கு அடுத்த நிலையில் உள்ளவை பாஸ்பரஸ்,கால்சியம்,பொட்டாசியம்,கந்தகம்,சோடியம்,குளொரின் ஆகும்.இவற்றைத்தவிர கீழ்காணும் தனிமங்களும் மிக,மிக குறைந்த அளவில் உயிர்களில் காணப்படுகின்றன. இரும்பு,மாங்கனீஸ்,தாமரம், அயோடின்,கோபால்ட், துத்தநாகம்,சிலினியம்,மாலிப்டினம்,போரியம்,,ஸ்ட்ரான்ஸீயம்,காரியம்,டைட்டானியம்,ரூபிடியம்,லீதியம்,ஆர்சனிக்,புரோமின்,உயிர்வாழ் மண்டலங்களை உருவாக்கும் இத்தனிமங்கள் எந்தவொரு சூழ்நிலை மண்ட்லத்திலும் தொடர்ந்த மறு சுழற்சிக்கு (recycling) உட்படுகின்றன.தனக்குத்தானே உணவூட்டம் பெறுகின்ற தாவரங்களின் முதன்மை உற்பத்தியால்(primary productivity) தோன்றும் பொருட்கள்,உயிரற்ற (abiotic) மற்றும் உயிருள்ள(biotic) தொடர்செயல்களால் ஒரு சுழ்நிலை மண்டலத்திற்குள் சுழன்றுகொண்டே இருப்பதால்தான் ஒரு சுழ்நிலை மண்டலம் நிலைநிறுத்தப்படுகிறது என்பது அறிவியல் உலகம் ஐயம்திரிபற ஏற்றுக்கொண்ட உண்மையாகும்.

உயிர் சக்தி மையம்:

உயிர் சக்தி மையம்:

தூல உடலையும் சூக்கும உடலையும் இனைத்து ஆறு ஆதாரங்கள் எணப்படும் உயிர் சக்தி மையங்கள் ஆன வட்டங்கள் உள்ளன அவையாவன
1.மூலாதாரம் 2. சுவாதிஷ்டானம் 3.மணிபுரம் 4.அனாஹதம் 5. விசுத்தி 6. ஆக் ஞா சக்ரம்
1. மூலாதாரம் :   மண்  -  கால் எலும்புகள் இரண்டும்,கதிரெலும்பும் கூடும் ஆண்குறி என்ற மர்மஸ்தானத்திற்கும் குதத்திற்கும் நடுவே குண்டலி வட்டமாய் வட்டத்திற்குள் 4 இதழ்களூக்குள்ள ஒரு மலர் வட்டமாய் கடம்பம் பூ போல அமைந்து இருக்கும். இவை மூலாதரம் என்று பெயர்.
இதன் நடுவில் பிரணவ ஒங்கார எழுத்து ஒலி ஒலிக்கும். 4 இதழ்களில் "வ","ஸ",ஸ்ரீ, "ஷ" எழுத்து ஒலிக்கும்.
எண்டோக்கான் சுரப்பி  அதாவது சிறுநீரகம், மூத்திரைப்,முதுகு தண்டு இதன் கட்டுப்பாட்டில் உள்ளது.
கிழமை : செவ்வாய் கிழமை -நிறம் - சிவப்பு 
தன்மை : மூலாதார சக்கரம்  பலவினமாக இருந்தால்  எதிலும் நாட்டம் இருக்காது . உடம்பில் சக்தி அற்ற நிலை உண்டாகும்.செய்யும் தொழில் தவறுகள் ஏற்படும்.,மன தடுமாற்றம் ,பயம் ,சிற்றின்ப குறைபாடு , கருப்பப்பை கோளறு மக்கள் பேருண்மை ,போன்றவை  காணப்படும் . மூலாதார சக்கரத்தை முறையாக செயல்பட செய்தால் மேற்கொண்ட குறைபாடுகளை சரி செய்யலாம் 
சிவப்பு நிறம் அதிக அளவில் பயன்படுத்தவும் 
தெளிவுரை : மூலாதாரம்  என்பது  மூலம் +ஆதாரம் . மூலம் =உற்பத்தி ஆதாரம் =இடம் . உற்பத்தியான இடம் .அது அதன் உற்பத்தி ஸ்தானத்தில் ஒடுங்கின போது மனதிற்கு ஒன்றும் தெரிவதில்லை.அது மனதிற்கு சொப்பனம் ஆகிறது .-அகங்காரம் சொந்த ஸ்தானத்தில் சேர்த்தபோது மனதிற்கு வெளியிலுள்ள யாதொன்றையும் சங்கற்பிக்கவோ அறியவோ ,நிதனிக்கவோ,முடிவதில்லை .ஸ்தாபிகவோ,அறியவோ ,நிதனிக்கவோ செய்வதற்கு எல்லாம்  அகங்காரம் இருந்தால் தான் முடியும் .ஆகவே அகங்காரம் தான் உற்பத்தி ஸ்தானமான மனதில் போயி சேர்கின்ற இடம் 

2.சுவாதிஷ்டானம் :  அக்கினி - மூலாதரத்திற்கு 2 விறற்கட்டை மேல் உள்ளது. இது 6 இதழ் கமலம்.நாற்சதுரம். அச்சதுரத்துள் நடுவே 6 இதழ் கமலம்.
இதன் நடுவில் -"ந்"  ஆறு இதழ்களில் ப3,ப4,ம,ய,ர,வ எழுத்து ஒலிக்கும்.
எண்டோக்கரான் சுரப்பி ஆணின் விதைகள்-உடல் உறவு திறன் மையம் , அதன் உணர்வுகள்-(ஜனனேந்திரியத் திறன்)
நிறம் -ஆரஞ்சு
சுவாதிட்டமான சக்கரம்  பலவினமாக ,குறைபாடு உடையதகவோ இருந்தால்  கற்பனை திரானும்,படைப்புதிரனும் குறையும் .சுயநல எண்ணம் அதிகரிக்கும் .பிராருடன் உறவுகள் பலவினமாகும்.எதையும் கற்றுக்கொள்ள கூடிய ஆர்வம் இருக்காது .
பப்பாளி -தர்பூசணி -ஆரஞ்சு மாம்பலம்  உண்ணலாம் .
ஆம்பர் கற்கள் அணிய வேண்டியது -ஆரஞ்சு நிற உடை உடுத்தலாம்
தெளிவுரை : சுவாதிஷ்டானம் என்றால் தன்னுடைய அடி ஸ்தானம்  அதாவது சொந்த ஸ்தானம்  அல்லது தன்னுடைய இருப்பிடம் .அகக்கரம் மனதில் அடங்கும் போது மனதின் செய்கைகள் அற்று அதன் சொந்த ஸ்தானத்தில் அடங்குகிற தருணம் .மனதிற்கு சுழுத்தி நிலையாகிறது .அதாவது நான் என்கிற  அகன்கர நிலைமை மனதில் சேரும்போது மனம் வெளியிலுள்ளவற்றை  எல்லாம்  விட்டகன்று தன் சொந்த ஸ்தானத்தில் பிரவேசிக்கிறது .அப்போது மனதிற்கு யாதொரு பிரகசமோ அறிவோ இல்லாமல் சுத்த இருளாக ஒன்றுமே அறியாமலிருக்கும்  நிலைமை உண்டாகிறது .இதுவே சுவாதிஷ்டானம்

3.மணிபூரகம் :-        சுவாத்திஷ்டனத்திற்கு எட்டு விறகட்டை மேலே தொப்புளின் இடத்தில் பத்து இதழ் கமலம் .
நடுவில் பஞசாசரத்தின் "ம" .  மூன்றாம் பிறை வடிவம்.உ,உ2 உ3,உ4,ண,த,த2,த3,த4, ந,ப,ப2  ஆகியவை ஒலிக்கும்.
வயிறு ,கல்லிரல்,மண்ணிரல்,பித்தப்பை,யை சார்ந்தது
அட்ரினல் என்னும் நாளமில்லா சுரப்பி(இரத்தத்தில் சக்கரை அளவு உயர்த்துவது.) ஆகியவை ஆடங்கும்
வயிற்றின் உள்ளே இருக்கும் கல்லிரல் ,மன்னிறல்,பித்தப்பை ,கணையம் ,வயிறு குடல்கள்  ஆகிய உறுப்புக்கள்  மனிபூரகத்தின் சக்கரத்தின் ஆளுமையில் இயக்கப்படுகின்றன . மணிபூர சக்கரம் வலுவாக இருக்கும் போது நுண்ணறிவு வளரும் ,நல்லதையும் ,தீயதையும் பகுதுணர்வு அறியும்  ஆற்றல்  வளரும் ,மனம் விட்டு பேச தூண்டும் .கலகலப்பும் உற்சாகமும் இருக்கும் .மனிபூரத்தில்  குறைபாடுகள் இருந்தால் மேற்சொன்னவைகள் இல்லாமல் புதியவனா கற்கும் ஆவல் இல்லாமல் போகும் .மனம் அலைபாயும் ,மந்தத்தன்மை இருக்கும் ,,புத்தி கூர்மையும் ,நினைவாற்றல் குறைந்து காணப்படும் .
நிறம் மஞ்சள் உடுத்தலாம் -மக்காசோளம் ,மஞ்சள் முட்டை ,பருப்பு வகைகள் ,எலுமிச்சை ,வாழைபழம் ,சேர்க்கவும் .புஷ்பராகம் அணிகலன் அணியலாம் .
தெளிவுரை : மணிபூரம் என்றால் மணி என்பது மனம் பூரகம் என்றால் நிறைதல் -மனதை பூரிபித்தல் .அப்போது மனியயிருக்கின்ற மனம் வேறொன்றும் இல்லமால்  ஜீவனுடன் தானாய் நிற்கின்றது .அபோது அவ்விடம் மிகவும் பிரகாசமாக ஜொலிக்கும் .அச்சமயம் அவ்விடம் நல்ல சுகமான வெளிப்பட்டு காணவும் ,அறியவும் செய்கிறது .அது மனதின் ஜாக்கிரதை நிலையாகும் .

4.அனாஹதம் :- - வாயு- மணிபூரகத்திற்க்கு 10 விரற்கட்டை மேல் இதய மைய கமலம். 12 இதழ். முக்கோணம்.நடுவில் பஞ்சசக்கரம்.
நடுவில் "சி" .12 இதழ் ஒலிக்கும். க,க2,க3,க4,க்,ச,ச2,ச4,ஞ,ட,ட2
தைமஸ் எண்டோக்ரைன் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில். இதயம் ,பம்புசம்,கல்லிரல்,இரத்த சுழச்சி மண்டலம்
அனாகதம்  இதயத்துடன் தொடர்பு உடையது என்பதால் இச் சக்கரம் வலுவு இழந்தால் எவரிடமும் அன்பு ,பாசம் ,இல்லாத நிலை தோன்றும் .எண்ணத்திற்கும் செயலுக்கும் ஞானம் இராது .தனக்குதானே ஒரு அரனை உருவாக்கி கொள்ளும் நிலை உருவாகும் .
நுண்கலைகளில் நாட்டம் உடையவர்கள் ,எழுத்தாளர்கள் பேச்சாளார்கள்,தங்கள் திறமையை நன்கு வளர்த்து கொள்ள வலுவுடையதாக இருத்தல் வேண்டும் .
பச்சை நிறம் சிறப்பு உடையது .-புதன் கிரகம் என்பதால் புதன் கிரகத்தின் அதிர்வு அலைகள் வெளிவரும் சக்தி அலைகளும் பெறக்கூடும் .
ஒவ்வாமைகளால் ஏற்படகூடிய ஆஷதுமா,சைனீஸ் ,நோயிகள் வராமல் தடுக்க  இதயம் வலுவடைய செய்யவும் மேலும் அன்பு ,பாசம் உடையவர்களாக மாறும் வாய்ப்பு அதிகம் .
தெளிவுரை : அனா =அக்கினி ., ஹதம் -நாசம் . அதாவது அக்கினி சொருபமாகி பிரகாசிக்கின்ற மனம் தன் உற்பத்தி ஸ்தானமான ஜீவனில் லயமகிறது .அப்போது ஜீவனுக்கு கனவாகிறது .எப்படிஎன்றால் பிரகசமாயி இருக்கின்ற மனம்  ஜீவனில் லயித்தபோது அதுவரை இருந்த பிரகாசம் பிரகாசம் இன்னதென்று  அறியமுடியாமல் கனவு போல் இருக்கும் .இது ஜீவனுடைய கனவாகும் .இதுவே அனஆகாதமென சொலப்படுகிறது .








.
5.விசுத்தி :- ஆகாயம் -அனாஹதத்திற்கு மேலே நெஞ்சுக்குழியில் உள்ளது. அறுகோணம்.16 இதழ்கமலம். அகரம் முதல் அ என்ற எழுத்து ஒலிக்கும்.
பஞ்ச சக்கரத்தில் "வ" என்ற எழுத்து .
தைராட் -தொண்டை-அதன் கீழ் பகுதி
பேச்சுத்திறன் ,கேக்கும் திறன் அறியும் திறன் தொடையில் உள்ள தசைகள்,குரல் நான்கள்,காது நரம்புகள் ஆகியவை விசுத்தி சக்கரத்தின் ஆளுமையில் உள்ளது
விசுத்தி சக்கரத்தின் செயல்பாடுகள் குறைந்து காணப்பட்டால் தொண்டை நோய் ,டான்சில் ,மூச்சு இரைப்பு ,படபடப்பு ,தூக்கம் இன்மை ,தைராடு,நமச்சல் ,அழற்சி,,காமாலை ,பால்வினை நோயிகள் ,தலைவலி ,வழுக்கை ,இரத்த அழுத்தம் ,பக்கவாதம் போன்ற நோயிகள் உருவாகலாம் .
கிழமை -வியாழகிழமை -நீல நிறம் சிறப்பு உடையது
கடல் உணவுகள் ,பிளபலம் நல்லது .
தெளிவுரை ; வி +சுத்தி ., வி = விஷேசம் ., அதாவது அறிவு ,சுத்தி =நிர்மலம்  அதாவது அறிவு நிர்மலமகிறது .அப்போது ஒன்றும் தெரியாமல் யாதொரு அறிவும் இல்லாமல் சலனமில்லாமல் ஜீவன் மட்டுமாய் இருக்கிற நிலைமை .அது ஜீவனுடைய சுழுத்தி .அந்த ஜீவனிலிருந்து உற்பித்த மனதில் உண்டான எல்லா  கலக்கங்களும் நாசம் அடைந்து ஜீவனில் மனம் லயித்து ஜீவன் மட்டுமாய்  ஒன்றும் அறியாமல் இருகின்ற நிலை .ஜீவனின் சுழுத்தி .இதுவே விசுதியாகும் .
6. ஆக்ஞா சக்கரம் :- விசுத்திகு மேலே புருவமையம் இடத்தில் உள்ளது. அறைவட்ட மூன்றிதழ் கமலம் -மனோதத்துவம்.
ஹ,ஹா,ஸ என்ற எழுத்து ஒலிக்கும் . நடுவில் 'ய்".
மூளை மையத்தில் உள்ள பிட்யூடர்- சுரப்பி-.ஜீவ அனுக்கள் பெருகும் இடம்.. தானியங்க்கு உறுப்புகள் செயல் திறன் -(இரத்தம்-மூச்சு குழல்)
இச் சக்கரம் மிக மிக உன்னதமான உயிர் நிலை சக்கரம் ஆகும் .இதன் வலிமையில் தான் ஞானம் அடைகிறான் .ஆற்றல் கலை மேலோங்க செய்வதில்  இச்சக்கரம்  முதன்மை பெறுகிறது .இச்சக்கரத்தின் ஆளுமையால் உடலிலும் ,மனதிலும் ஏற்படக்கூடிய மாசுகள் அகற்றபடுகின்றன ..மனதில் தோன்றும் தீய எண்ணங்கள் அகற்ற படுகின்றன
இச்சக்கரதுக்கு மூன்றாவது கண் திறக்கும் போது முக்காலமும் அறியும் சக்தி பிறக்கிறது .எதிமறையான தீய விளைவுகளை தருகின்ற அனைத்தையும் எரிக்கின்ற  தன்மை கொண்டது .
நிறம் -இண்டிகோ -சனி கிரகம்
காய் கறி-கதிரிகாயி ,நாவல் ,முட்டைகோசு
தெளிவுரை ; ஜீவன் ஜீவனாய் உற்பத்தி ஸ்தானத்தில் ஆனதத்தில் லயித்து வெருன்றும் இல்லமால் ஆனந்த நிலையில் இருக்கிறது .இது ஜீவனின் ஜாகிரதையாகும் இதுவே ஆக்ஞை  சக்கரம் ஆகும்


இதைத்தவிர இன்னும் ஓன்று  உள்ளது . அது தலையாதது. அது தான் சஹஸ்சாரம்.
சஹஸ்சாரம் - பிரம கமலத்தில் மூலதாரதிற்கு நேர் மேல்-புருவமையத்திற்கு மேல் நடுவில் ஆயிரம் இதழ் விரிந்து உள்ளது.
இங்கு மேலான எழுத்து ஒலிக்கும் . இந்த இடத்தில் நம் உயிர் நிலையான ஆன்மா கால் அங்குலம் அளவில் இருக்கிறது
இதுவே அணைத்து சக்கரங்களுக்கும் தலைமை சக்கரம் ஆகும்  இச்சகரத்தின் நிறம் ஊதா
உயிர் உருவாகும்போது இந்த சக்கரத்தின் வழியாக உயிர் உள்ளே நுழைகிறது .அதே போல் இந்த சக்கரத்தின் வழியாக உயிர் வெளியேறினால் அந்த உயிருக்கு மறுபிறவி கிடையாது என்று ஞான நூல்கள் கூறுகின்றன .
பிறப்பில் இருந்து இறப்புவரை இச்சக்கரம் திறந்தே இருக்கிறது .பிற சக்கரத்தில் ஏற்படுகின்ற தடைகளோ தேக்கமோ வலிமை குன்றுவதோ இதற்க்கு ஏற்பட்டது
இச்சக்கரம் விரிய விரிய ஞான நிலை உருவாகும் .ஞானம் என்பது பிரபஞ்சத்தில் இருந்து பெறபடுவது.இதனை பெற்று தரும் இச்சக்கரம்  சகஸ்ரா சக்கரம்  என்று பெயர் பெற்றது .
படைபற்றல் கொண்டவர்களாக  ஆக முடியும்
கிரகம் -கேது -காயி-கத்தரிகயி,திராட்சை ,நாவல் ,முட்டைகோசு

உலகமே இயற்கை மயமானது

உலகமே இயற்கை மயமானது.இயற்கையின் ஒரு சின்னஞ்ச்சிறு கூறுதான் மக்கள் சமுதாயம்.இவ்
 உண்மையை உணராத சான்றோரில்லை; உணராத புலவர் இல்லை.இயற்கையின் எழில் தோற்றங்கள் மக்களுக்கு பெரும் விருந்தளிப்பவை.

செக்கசிவக்கும் செவ்வாணம், கதிரவன் காலைத்தோற்றம்,தன்மதியின் வெண்ணிலவு,வண்ண வண்ண மலர்கள்,பன்னிறப்பறவைகள்,பச்சைப்பாய் விரிந்தார் போன்ற புல் வெளிகள்,நெல்வயல்கள்,தோகை விரித்தாடும் மயில்கள்போன்ற இயற்கை காட்சிகள் கண்களூக்கு விருந்தாகும்.

பாடும் குயிலின் பண் ஒசை,மது வண்டின் மதுர கீதம்,அலைகடலோசை,அருவி,ஆறுகளின் இன்னோசை முதலிய இயற்கையான ஒலிகள் செவிக்கினிய செல்வங்கள்.

நறுமலர்களின் நறுமணம்,மா,பலா,வாழைக் கனிகளின் மாறா நன் மனம் முதலியவை முகர்வுக்கு நல் விருந்தாகும்.

முக்கனிகளின் தீஞ்சுவையும்,மற்றைய கனிகளின் தீஞ்சுவையும் வாயுணர்வுக்குப்பெரும் விருந்தாகும்.

வண்ணமலர்கள்,பஞ்சவர்ணப் பைக்கிளிகள்,பஞ்சு போன்ற பறவைக்குஞ்சுகள்,வெண்மதியின் தண்ணொளி,தென்றலின் தீண்டல், ஆகியவை மெய்க்கின்பம் பயப்பனவாம்.இவ்வாறு ஜம்புலனுக்கும் விருந்தாய் அமையும் இயற்கைதரும் இன்பம் என்ன என்பது ?.

முற்றும் துறந்த முனிவர்களும்,தமது பற்றற்ற வாழ்க்கையினை நடந்த்த தேர்ந்தெடுக்கும் இடமும்-இயற்கையன்னை -பூத்துக்குலுக்கும் கானகமேயன்றோ ! எனவே பால்,இன,பருவ வேறுபாடுயின்றி மக்கள் அனைவரும்  ஈடில்லா இன்பமளிப்பது இயற்கையேயாகும்.

பண்டைக் கால மக்கள் முதன் முதலாக் ஐம்பெரும் பூதங்களாய மண்,தீ,நீர்,காற்று,ஆகாயம் முதய பொருள்களையே தெய்வங்களாக வணங்கினர்..தெய்வவழிபாடே முதன் முதலில் இம் மூலப் பொருள்களிடமிருந்து மக்கள் கொண்ட அச்சத்திற் பிறந்ததெனக் கூறுவர் ஆராச்சியாளர்கள்.இன்னும் ஐம் பூதங்க்களுக்குரிய ஐந்து சிவ தலங்கள் இருக்கப்பார்கலாம்.மண்ணுக்கு- காஞ்சியும்., தீயினுக்கு-
திருவண்ணமலையும் .,நீருக்கு -திருவானைக்காவும்.,- காற்றுக்கு -காளத்திரியும்., ஆகாயத்திற்கு-தில்லையும் அமையும்.இவ் ஐம் பூதங்க்களுக்கு அப்பாற்பட்ட பொருள் ஒன்றும் இல்லை. இறைவன் எங்கும்  நிறைந்து இருக்கும்  நிலையினையே இது குறிப்பதைப் காணலாம்.

மேலும் நிலந்தை குறிஞ்சி-முல்லை- மருதம்-நெய்தல்-பாலை என் ஐந்தாகப்பரிந்தனர்.இதில் மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சியெனவும்., காடும்-காடு சார்ந்த இடம் முல்லை எனவும்., சமவெளிபிரதேசம் மருதம் எனவும்., கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் எனவும் விளையாத பகுதி  பாலை என கணக்கிட்டனர்.மேலும் முல்லை,மருதம்,நெய்தல் பகுதி திரிந்து சதுப்பு வனப் பகுதியாக  ஆறாவது பிரிவாக பின் பிரிக்கப்பட்டது.மலைக் கிழவோனாகிய  முருகன் குறிஞ்சிக்கு தெய்வம் ஆனான்.பச்சைமா மேனிகொண்ட திருமால் முல்லைக்கு தெய்வம் ஆனான்ன.மழையினை நம்பி வாழும் வயல் நிலமான மருததற்கு மழைமேகங்களின் தலைவனான இந்திரன்  இறைவனானன். கடலும் கடல் சார்ந்த இடமான நெய்தலுக்கு  வருணன்  தெய்வமானார்.அறவடிவாகிய அம்பிகையின் மறவடிவான காளியென்னும் கொற்றவை பாலைக்குத் தெய்வமானார். பிறவா வாழ்க்கைக்குப் பெரியோனாகிய சிவபெருமான் யாதும் ஊரே எனக் கொண்டு நாடெங்கும் மக்களால் வழிபடப்பெறும் தெய்வமானார்.

வானளாவிய மரங்கள், வான்நின்றும் ஒடி வரும் தேனருவி.இன்னிசைப்பாடும்  பன்னிறப் பறவைகள், கூட்டங்கூட்டமாய் குரங்குகள்,வண்டுகள் மொய்க்கும்  வண்ணமலர்கள், வானளாவிய வளர்ந்த வேங்க்கை மரங்களின் கிளைகள்  சொறிந்த சோலையின் எழில் , வேங்கை மரத்துக் கிளைகள் மீது ஒருபுறம் செண்பகக்கொடியேறிப் பூத்து குலுங்குகின்றது.,மற்றொரு புறத்தில் தோட்டத்து முல்லைக் கொடியின்  வெள் அரும்பு காணப்படும்.பச்சைபசேரன வேங்கையின் நுடே பசுமை நிற செண்பகமும்,வெள்ளை நிற  முல்லையும் மாறி மாறித் தோன்றும்  வர்ணசாலந்தான் என்ன?. விளைந்த வாழைக்கனியோடு பலாவின் நறுமனமும்  எங்க்கும் வியபித்தி இருக்கிறது.  உயர்ந்த மரத்தின் மேல் இருந்து தேன் சொட்டுகிறது. அவ் தேன் ஆனது மாம் மரத்தின் கொம்பில் உள்ள  மாங்கனிமீது விழுத்து நறுமனம் கமழ்கிறது.தண்ணீரில் தோன்றும் மலர்களுக்கு குறைவில்லை.சுனை அருகே அந்த நீல நீறத்திற்கு ஏற்ப மயில் தோகை விரிந்தாடும் குரமரத்தின் பாம்புப்பாற்களைப்போன்று உரிய வெண்ணிற அரும்புகள்  பார்பதற்கு குரவ மரமாகிய பெண்,தன் சிறிய வெண்பற்களைக் காட்டி அழகுறஸ் சிறிப்பது போன்று  காட்சியளிக்கும்.வெண்ணிற அன்னம்,பைம்கிளி மயில் ஆகியவை யின் அழகுதான் என்னென்பது.
இயற்கையோடு  அமைந்த விலங்கினம் :-
சிறப்பினம் எனப்படுவது ஒத்த உடலாக்கமும்,வாழ்முறையும்,இனப்பெருக்கில் பங்கு பெறும் உயிரினங்களைப் பொதுவாக ஒன்று  சேர்த்து ஒரு சிறப்பினம் என்று அழைக்கப்படுகிறது.இதில் நுண் உயிர்களூம் அடங்கும்.
தாவர சிறப்பினங்கினால் அளிக்கப்படும் மரக்கட்டை,பக்கவேர் ஆகியவை அடிநிலத்தில் வாழ்கின்ற நுண் உயிர்கள் சதுப்பு  வன விலங்கினமும் பெரும்பகுதி மேல் வாழ்விகளால்  ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இவை  பெரும்  பகுதி  மட்குண்ணிக்கள். ஆனால் உள் வாழ்விகள் பெரும் பாலும்  அனைந்துண்ணிகல் அல்லது  படிவுண்ணிகள்
சதுப்புவனக் கரிம பொருள்களை மட்டும் பொருளாக மாற்றுவதில் பொரும் பங்கு  கொள்ளூம் நுண்ணுயர், உருளைபுழுக்களும்,கோடிபாடுகளூம், மண்ணில் காணப்படும் பூஞ்சைகளும்,பாக்டீரியாக்களூம் பெரிய விலங்குக்கு  அடிப்படையான உணவுப்பொருளாக அமைகின்றன.சேற்றில் உள்ள நீரிலிருந்து உயிரிணங்களை வடிகட்டி உண்டு வாழ்கின்ற பெரும் விலங்கான  புல்சுனைப் புழுக்கள், பட்டானிப்புழுக்கள், இருஒடுடலி முதலியனவைகள் ஆகும்.
தாழ்வான இடக்களில் காணப்படும் நீர்த்தாரைகள் எப்போதும் ஈரமான சுற்றுச்சுழலில் காணப்படுவதாலும், சேறு நீர் நிரம்பியிருப்பதாலும்  இப்பகுதியில் அளவில் பெரிய நத்தைகளும், அளவில் சிறிய சிவப்பு நிற நத்தை, நண்டுகள், இருஒடுடலியாக்களும் தாவர மிதவை உணவுகளை உண்டு வாழ்கின்றன. மட்கும் பொருட்களை உண்டு வாழும் வாளை மீன்,செம்மீன்கள் ஆகும்.பெரிய மீன்கள் நத்தைகளையும் ,நண்டுகளையும்  உணவாக உட்கொள்கின்றன.மேலும் விலங்கு மிதவிகளும் பாசிகளும் தாவர மிதவைகளும்  உணவாக உட்கொள்கின்றன.
மாமரத்தின் மலர்களை நாடி வரும் வான் கூரைப் பறவைகள் வெளவால்கள்,குரங்குகள் மற்றும் பூச்சிகள் அவ் மரங்களை இல்லமாக வைத்துக் கொள்கிறது.கழுகுகளும்,கருடங்களும் இங்கு கூடுகட்டுகின்றன.பறக்கும் நரி எனப்படும் வவ்வாள் இங்கு இனப்பெருக்கம் செய்து வாழ்கின்றன.இவைகள் மரங்களில் உள்ள இலைகளையும்,பூக்களையும்,காய், கனிகளையும் உணவாக உண்டு வாழ்கின்றன.. பல வை வண்டுகளும், எறும்புகளும் தாவரங்களின் இலைகளை மென்று தின்கின்றன.. மின்,மினிப்பூச்சிகளும் இத்தாவரத்தை நம்பி வாழ்கின்றன.
இப் பகுதியில் உணவுக்காகவும்.,தங்குவதற்காகவும் வரும் விலங்குகளின் எண்ணிக்கை ஏராளம்.புலி ,காட்டுப்பன்றி, கரடி, மரநாய்,புனுகுபூனை,குரங்கு, பருந்து,கொக்கு, வெளவால், மரம் கொத்தி,அரனைகள்,சிலத்திகள், பூச்சிகள் ஆகும்
ஆபத்தை விளைவிக்க கூடிய விலங்குகளும் அன  பாம்பு,முதலை,புலி,சிங்கம்,சிறுத்தை,சிம்மம்,முதலியவையும் உண்டு வாழ்கின்றன. எண்ணற்ற விலங்குகள்  மான், கோழை ஆடு போன்றவை மனிதனுக்கு தீங்க்கு விளைவிக்க தக்கவை மேலும் உணவாக பயன் படுத்தப்ப்டுகிறது.
தாவரம் நுண் உயிர், மெல்லுடலிகள்,சிறு சந்துக்கள், பூச்சிகள், பறவைகளும்,ஊர்வன,மிருகங்கள் ஆகியவைகள் தாவரங்களையும், சிறு உயிர் இனங்களையும் உண்டு வாழ்வியல் நடந்து கின்றன.விலங்கு இனத்தில் இருந்து கிடைக்கும்  புரோட்டின் பெரும்பகுதி மனிதனுக்கு கிடைக்கிறது.முட்டை,பால், இறச்சி ஆகியவற்றில் இவ் புரோட்டின் சக்தி மிகவும் கூடுதலாக உள்ளது.ஆகவே தாவரம்,விலங்கு-மனித சமுதாயம் ஒன்றுடன் ஒன்று சார்பு வாழ்க்கை நடந்தி வருகிறது.
தாவரங்களின்  பூங்கள், இலைகள்,காய்,கனி,மற்றும் இதரப்பொருள்கள் மனிதன் உடல்வளர்ச்சிக்கு இன்றியமையாததாகவும் உள்ளது.நாம் அன்றாட உணவில் தெரிந்தோ தெரியாமலோ நமக்கு தேவையான சக்திகள் அவ் தாவர , விலங்க்குகளில் இருந்து  பொறுகிறோம்.
இயற்கை-தாவரம்-விலங்கு-மனிதன் ஆகியவைகளின்  வாழ்வியல் பெரும் பங்கு கொள்வது இடமும்,காலமும்தான், காலநிலையின் தட்ப வெப்ப நிலையும்-பருவகால சுழற்சியும்,வான்வெளி இயற்க்கை யும் தான் நிர்நிற்கப்படுகிறது.இவர்களது வாழ்வு மலர இயற்க்கை சாதகமான சுழ்நிலை இருந்தால் மட்டுமே சாத்தியம்.ஒளி,காற்று,நீர், நில வலிமை மற்றும் உயிர்சக்தியாக வளங்குகிறது. ஆனால் இயற்க்கையின் சீற்றத்தாலும், மனித இனபெருக்கத்தாலும்  இயற்கை சூறையாடப்படுகிறது.
இயற்கையொடு பொருத்தி வாழும் மக்களின் உணர்ச்சிகளிலும்-இன்பதுன்பங்களிலும் இயற்கை பங்கு கொண்டதாக புலவர்கள் பாடியது கற்பனை களஞ்சியம் ஆகும். சங்ககாலத்து   புள்நிமித்தம் பார்த்தல்,விரிச்சிகேட்டல்-விருந்து வர காகம் கரைதல்,முதலியவைகளும், இடைக்காலத்து மஞ்சு விடும் தூது,கிள்ளை விடுதூது முதலியனவும் இதற்கு எடுத்து க்காட்டு,இயற்கை நிகழ்சிகள் சிறப்பாக்குகின்றன.
மட்கள் வாழ்க்கையில்  நேர்விக்கும் துன்ப நிகழ்ச்சிகளை முன் கூடியே அறிவுத்தது இயற்க்கை. சிலம்பு விற்க்க சென்ற கோவன்  கொலையுண்ணப்போகிறான்  என்ற துன்ப செய்தியை ஆயர்பாடியில் இயல்பாக நிகழும் நிகழ்ச்சிகள் மாறாக திரிந்து அறிவித்தன. குடத்தில்ல் பால் தோயவில்லை,எருதுகளின் கண்கள் காரணமின்றி  கண்ணீர் விட்டன.,உருகவைத்த வெண்ணை உருகவில்லை,கன்றும் குட்டிகளும் காலையில் துள்ளி விளையாடவில்லை.,பசுக்கள் நடுங்கின,அவிப்பாரின்றி அவற்றின் கழுத்து  மணி கழன்று விழுத்தன.
என ஆயர்படி மக்கள் தெரிவிக்கின்றன.

ஐம்புலன்களை இயக்குவது எப்படி ?

ஐம்புலன்கள் : கண் ,காது ,மூக்கு ,வாய் ,மெய்-பார்வை ,கேட்பது ,முகர்வது ,சுவை ,உணர்வது என்பதாகும் .ஆன்மாவின் படர்க்கை நிலையே மனம் .மனம் தான் ஐம்புலன்களை ஆள்கிறது .மனம் எல்லாவிதமான நிலையையும் ,நிகழ்ச்ளிகளையும் பதிவு செய்கிறது .பொதுவாக மனதின் மூலமாக தான்  செயல் படுகிறோம் .இதையே இந்த உலகம் விரும்புகிறது .சிறுவயதில் இருந்தே  மனனம் , மனப்பாடம் ,மனோசக்தி ,நினைவு கூறுதல் ,பகுத்து ஆரயிதல் , இருந்தாலும் இவை  அனைத்தையும்  மறதி அழித்து விடுகிறது .சுத்தமாக எதுவும் நினைவில் இல்லை என்பதே பதில்.என்னெனில்  இவை யாவும்  மேல் மன ஆற்றலாக  செயல் பட்டதே  இதற்க்கு காரணம் . ஆனால் ஆழ்மனதில் செயல்பாடுகள் யாவும் நினைவில் நிற்கும் என்பது தொன்றுதொட்டு வரும் செயலாகும்  அதுவே பசுமரத்து ஆணிபோல் என்பதாகும் .ஆழ்மனதில் பதிந்தவை யாவும்  திரும்ப நினைவு கூறும்போது ஒவ்வொரு நிகழ்ச்சியும் அடி பிறளாது அப்படியே  மனதில் காட்சி யளிக்கும் .உதாரணத்துக்கு சிறுவயதில் நீச்சல் அடிக்க நண்பர்களோடு கிணறுக்கு  சென்று இருந்தால் அது ஆழ்மனதில் பதிந்து இருந்தால் அப்படியே அந்த இடம் நிகழ்வுகள் அனைத்தும் நினைவில் வரும்  என்பதும்  உண்மையே .
இதுவே நனவில் நனவு : ஆர்வத்தோடு ஒரு காரியத்தில் ஈடுபடுகின்றபோது புலன்கள் அனைத்தும்  ஒருமுகபடுத்தபட்டு ஈடுபடுவதால் நனவில் நனவு எனப்படும் ,அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட காரியத்தில் மட்டும் கண்ணும் கருத்துமாய் இருப்பது நனவில் நனவு . சோதனை சாலையில் விஞ்ஞானிகள் ஆய்ந்து உண்மைகளை கண்டறிய  மனதை முழுவதும் ஈடுபடுவதாகும் .
இதில் மனம் முழு வீச்சில் நடைபெறுகிறது . 
இதில் கலெக்டர் -நீதிபதி போலீஸ் ஆபீசர் -விஞ்ஞானிகள் - டீச்சர் - என அவர்கள் அவர்கள்  தொழிலுக்கு தக்கவாறு  அதாகவே  மாறிவிடுகின்றனர் .இதற்கு மனமே  மூல காரணம் .
பொதுவாக இயக்குபவன் (ஆன்மா) - இயன்குகிறவன்-( மனம் )- பார்க்கப்படும் பொருள்   என மூன்று நிலை உள்ளது . இதில் மனமும்  பொருளும் மட்டும்  சம்பதபடுகிறது  . ஆன்மாவான  இயக்குபவன்  இதில் சம்மந்தம் இல்லை . 
உதரணத்துக்கு : ஒரு நீதிபதி ஒரு நாளில் பெரும்பகுதி நீதி வழங்குவதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார் .மனம் முளுவதும் தொழில் சம்பதமகவே இருக்கிறது . வீட்டுக்கு  வந்தும் இரவில் படுக்கும் போதும் நிதிபதியகவே இருந்தால் குடும்பம்  எப்படி நடக்கும் . தொழிலை  விட்டு மாற மனம் இடம் கொடுக்காமையே இதற்கு காரணம் .குடும்பம் வேறு, தொழில் வேறு என பாகுபாடு  தெரியாமையே இதற்கு காரணம் .முழுவதும் மனம் சம்மதம் மட்டுமே இதற்க்கு காரணம் . ஆன்மாவை (இயங்குபவனை ) முழுவதும் மறந்ததே இதற்கு காரணம் .